30 செப்டம்பர் 2017

ஆஞ்சநேயர்




     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

     அந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.

      கடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.

23 செப்டம்பர் 2017

ஒத்திகை





     நான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.

     முதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

     அதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

     சொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.

16 செப்டம்பர் 2017

கடுக்கன்




      ஆண்டு 1851.

      அவருக்கு வயது 31

     வயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.

      இலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.

      வாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.

      பேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.

11 செப்டம்பர் 2017

சில விவாதங்கள்




     மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.

     மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.

06 செப்டம்பர் 2017

ஆசிரியர் தினம்



     அம்மாகிட்ட ஒன்று சொல்லுவேன்
      டீச்சர்கிட்ட ஒன்று சொல்லுவேன்
ஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்

   எங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.

   அதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.

   நானும் உங்களைப் போலவே வருவேன்.

02 செப்டம்பர் 2017

படிக்கச் சோறிட்டவர்




    ஆண்டு 1897.

    சென்னை.

     இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.

     மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.

     நீண்ட வெண்ணிற மேலங்கி.

     எட்டு முழ வேட்டி

     ஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.

      கம்பீரமான முகம்

      அடர்ந்த மீசை

      கனிவானப் பார்வை

      இளகிய மனம்

      அள்ள அள்ளக் குறையாத செல்வம்

      சில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.