சொற்களை அழைத்து
மொழி
சொல்லி வைத்தது,
மனிதர்களிடம் கவனமாக
இருங்கள்.
பித்தளை உலோகத் தட்டில், புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன்
அமைந்த செம்பு, வெள்ளி உலோகத் தகடுகளைப் பதிப்பார்கள்.
இப்பொருளின் தனித்தன்மையே, ஓர் உலோகத்தின் மீது இருவேறு உலோகங்களைப் பதிப்பதே ஆகும்.
இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும், சீற்றமும் ஆதிகால
மனிதர்களுக்கு அளவிலா அச்சத்தைக் கொடுத்தன.
காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஐந்தும்
அவ்வப்பொழுது தனது ஆற்றலை வெளிப்படுத்திய பொழுது, மனிதர்கள் தங்களைக் காத்துக் கொள்ள
கடவுளை நாடினர்.
காலப் போக்கில், பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையில் இருந்து சிறிது மாறினர்.
தசரா பண்டிகை.
இராவணனைக் கொன்று, இராமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடும்
பண்டிகை தசரா.
இந்தியாவில் தசரா பண்டிகைக் கொண்டாடப்படும் காரணம்
இதுதான்.
ஆனால், ஒரு மாநிலத்தில் மட்டும், தசரா இராமனுக்காகக் கொண்டாடப் படுவதில்லை.
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்
அப்பாவைப் போலில்லை …
அப்பாவிடம் அவர்கள் உதவிபெற்று
உயிர்வாழ்ந்த தருணங்களை ஒருபோதும்
அப்பா அனுபவித்ததேயில்லை ….
இதுதாண்டா
மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும்,
இந்த சாமியும்தான் எங்களுக்கு வழி காட்டுச்சு.
பாப்பாவுக்கு ஆவணியில கல்யாணம் வச்சுருக்கிறேன்.
முத பத்திரிக்கையை அய்யனாருக்கு வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.
செல்வி அக்காவும், முருகேசன் மாமாவும் பத்திரிக்கையை
வச்சு, சாமி கும்பிட்டுவிட்டு சென்ற பிறகு, அந்த கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப்
பிரித்துப் பார்த்தேன்.
பெண்ணின் தாய் மாமன் பெயராக, எங்கள் ஊரில் உள்ள ஏழு சாதி மக்களும் இருந்தார்கள்.
ஈதல் அறம் தீவினைவிட்டு
ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
இவர்தான் இராமானுஜன்.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.
அவர் ஒரு புலவர்.
வரகுண பாண்டியனின் அவையை அலங்கரித்தப் புலவர்.
பாண்டியனுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப்
புலவர்.
பாண்டியனின் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப்
புலவர்.
பாண்டியனின் பேரன்பைப் பெற்றவர்.
பாண்டியன் தன் மகளை, சோழனுக்கு, குலோத்துங்கச்
சோழனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.
பாண்டியன் மகள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்ட
பொழுது, பொன்னும், மணியும், வைரமும் அள்ளி அள்ளிச் சீதனமாகக் கொடுத்து அனுப்புகிறார்.
சீதனத்தோடு சீதனமாய், தனக்கும், தன் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவரையும் அனுப்பி வைக்கிறார்.
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்
என்ற வாசகம், என் கல்லறையில் இடம்பெற வேண்டும்.
என்னை அடக்கம் செய்யும் பொழுது, நான் மொழிபெயர்த்த
திருக்குறளையும், திருவாசகத்தையும் என்னுடன் வைக்க வேண்டும்.
எனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில், ஒரு சிறு பகுதியாவது, தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.
வீரபாண்டிய கட்டபொம்மன்.
வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனின்
தீவிர பக்தர்.
ஒவ்வொரு நாளும், திருச்செந்தூர் கோயிலில், முருகனுக்குப் பூசை செய்யும் அதே நேரத்தில், பாஞ்சாலங்குறிச்சியில், தன் அரண்மனையில் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
ஐயிரண்டு
திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற
போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில்
ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற்
காண்பேன் இனி.
-
பட்டினத்தார்
சகுந்தலா.
என் தாய்.
84 வயது.
கடந்த 19.4.2023 புதன் கிழமை அதிகாலை, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.
காளையார் கோயில்.
காளையார் கோயிலுக்கு மிகப் பெரியத் தேர் ஒன்றினைச்
செய்ய விரும்பினார்கள் மருது சகோதரர்கள்.
திறமை மிகுந்த தச்சர்களை வரவழைத்தனர்.
தேர் செய்வதற்குத் தேவையான மரங்கள் மற்றும் பிற
பொருள்களை எல்லாம் சேகரித்து முடித்தனர்.
ஆயினும் ஒரு பொருள் மட்டும் கிடைக்கவில்லை.
ஆண்டு 1911.
ஜுன் மாதத்தில் ஓர் நாள்.
வங்காள விரிகுடா கடல்.
புதுச்சேரியின் கரையில் இருந்து புறப்பட்ட ஒரு சிறு கட்டுமரம், கடல் அலையின் ஏற்ற இறக்கங்களில், ஏறியும் இறங்கியும் தத்தளித்தவாறு, செல்கிறது.
நாங்க
என்ன பாவம் பண்ணினோம்.
யார் பண்ணின பாவமோ திருநங்கையா பிறந்துட்டோம்.
எங்களுக்கும் ஆசை இருக்குயா புருஷன், புள்ளைங்கன்னு
வாழறத்துக்கு …
முடிஞ்சா வேண்டிக்குங்க. அடுத்த பிறவியிலாவது,
உங்கள மாதிரி பொறக்கனும்னு…
நாளைக்கே உங்களுக்கு இப்படியொரு புள்ள பொறந்தா அப்ப தெரியும்யா வலியும் வருத்தமும்.
அண்மையில்.
மிக அண்மையில்.
இரு மாதங்களுக்கு முன்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி அவர்களின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஒரு பெரு ஆய்வினை மேற்கொண்டு, பூம்புகார் பற்றிய ஆய்வு அறிக்கையினை வெளியிட்டனர்.
இசைத் தமிழ்.
இசைத் தமிழின் ஆய்வுப் பரப்பானது, பெரிதினும்
பெரிது.
நிலத்தினும் பெரிது.
நீரினும் ஆழமானது.
வானத்தினும் அகன்றது.
ஆண்டு 2023.
பிப்ரவரி 19 ஆம் தேதி.
ஞாயிற்றுக் கிழமை.
காலை 9.00 மணி.
இவருக்கு வயது 81.
மனைவியை இழந்தவர்.
வாழவேண்டிய வயதுள்ள மகனையும் இழந்தவர்.
ஒரு மகள்.
பிரிவுத் துயர் வாட்டியபோதும், தமிழால் வாடாமல்
வாழ்ந்து வருபவர்.
இன்னும் சற்று நேரத்தில், இவரது தங்கையின் பெயரனுக்குத் திருமணம்.
உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும்.
தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி
மூவர்
தமிழ் ஓதி, நாலாயிரம் சொல்லி
தாள்
வடங்களாக முச்சங்கத் தமிழ் அணிந்து
தீவினை
நீக்கும் திருமந்திரம் சொல்லி
காவிய
மாமணி கம்ப முடி கவித்து
ஆவி
உருக்கும் அருட்பாவால் அர்ச்சித்து
கூவித்
திருப்புகழைக் கூத்தாடிக் கும்பிட்டு
தேவாதி
தேவனடி
சேர்ந்திடுவோம்
எம்பாவாய்.
---
தொண்ணூறு வயது முதியவர் மடியில்
முன்னூறு நிமிடத்திற்கு முன்
பிறந்த குழந்தை ஒன்று
சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது
முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து
மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து
இறையை நிறைய துதிக்கிறது.
பொ.ஆ.பி.12 ஆம் நுற்றாண்டு.
கவிஞர்.
இக்கவிஞருக்கு ஒரு வித்தியாசமானப் பழக்கம்.
விசித்திரமானப் பழக்கம்.
அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்
கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என்
கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?