பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மே 2025

ஒலியும், ஒளியும்

 


     ஒலி, ஒளி.

     ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.

29 மார்ச் 2024

அ.ச.ஞா

 



     1925 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் நடைபெற்ற, சைவர்கள் மகாநாட்டில் மேடையேறி, மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசி, அனைவரையும் வியக்க வைத்தபோது, அச்சிறுவனின் வயது ஒன்பது.

26 பிப்ரவரி 2024

காந்தியின் நிழல்

     


 ஆண்டு 1942.

     ஆகாகான்அரண்மனை.

     மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், எரவாடா பகுதியில், 1892 ஆம் ஆண்டு, சுல்தான் முன்றாம் முகமது ஷா அவர்களால் கட்டப்பெற்ற அரண்மனை.

     மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர்.

     சுல்தான் தனக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையை, ஆங்கிலேய அரசு சிறைச்சாலையாக மாற்றி இருந்தது.

      மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.

     ஆங்கிலேய அரசு வெகுண்டு எழுந்தது.

     காந்தியைக் கைது செய்தது.

     ஆகாகான் அரண்மனையில் காவலில் வைத்தது.

     காந்தியை மட்டுமல்ல, காந்தியோடு, காந்திய இயக்கவாதிகள் பலரையும் கைது செய்து, இங்குதான் வைத்தது.

     1942 ஆகஸ்ட் 15.

     திடீரென்று அரண்மனை பரபரப்படைந்தது.

19 ஜூலை 2023

மருந்தே ஆயினும்

ஈதல் அறம்  தீவினைவிட்டு  ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

16 மே 2023

எழுதுகோலில் மிளகாய் பொடி

 


     வீரபாண்டிய கட்டபொம்மன்.

     வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

     ஒவ்வொரு நாளும், திருச்செந்தூர் கோயிலில், முருகனுக்குப் பூசை செய்யும் அதே நேரத்தில், பாஞ்சாலங்குறிச்சியில், தன் அரண்மனையில் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

15 ஏப்ரல் 2023

பாதிரி

 


     காளையார் கோயில்.

     காளையார் கோயிலுக்கு மிகப் பெரியத் தேர் ஒன்றினைச் செய்ய விரும்பினார்கள் மருது சகோதரர்கள்.

     திறமை மிகுந்த தச்சர்களை வரவழைத்தனர்.

     தேர் செய்வதற்குத் தேவையான மரங்கள் மற்றும் பிற பொருள்களை எல்லாம் சேகரித்து முடித்தனர்.

     ஆயினும் ஒரு பொருள் மட்டும் கிடைக்கவில்லை.

13 ஜனவரி 2023

சங்கறுத்தவர்

 


அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி

பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்

கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என் கவியை

ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

17 டிசம்பர் 2022

சிங்கத் தமிழ்

மூவேந்தர் முத்தமிழ் முனைகூடக் குறையாது

பாவேந்தி இதழ்சிரிக்கும் நாடு – இது

நான்வாழ வகைசெய்து என்போலப் பலபேரை

மேலோங்கச் செய்தநன் னாடு.

                                                        கவிஞர் ப.திருநாவுக்கரசு

 

     ஆண்டு 1819.

     சுல்தான் ஹுசைன் ஷா.

     மலேசியாவின் தென்கோடியில் உள்ள, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான்.

     சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்.

     ஓர் ஆங்கிலேயர்.

12 அக்டோபர் 2022

காட்டுயானம்

     ஆண்களுக்குத் தனி.

     பெண்களுக்குத் தனி.

     குழந்தைகளுக்குத் தனி.

     பூப்படைந்த மற்றும் கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்குத் தனி.

     தனி, தனி.

     தனி, தனி என்றால், எது தனி?

24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்



     ஆண்டு 1906.

     திருவல்லிக்கேணி.

     சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம் நோக்கிச் சென்ற பொழுது, வழியில் ஒரு பெரிய வீட்டைப் பார்க்கிறார்.

     இந்தியா என்னும் வார இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் வீடு என்பதை அறிகிறார்.

      இதழின் உரிமையாளரைச் சந்திக்க எண்ணி, வீட்டிற்குள் நுழைகிறார்.

      அவர் மாடியில் இருக்கிறார் என்கிறார்கள்.

      மாடிக்குச் செல்கிறார்.

      உரிமையாளரைச் சந்திக்கிறார்.

      தனது ஊரையும், பெயரையும் கூறுகிறார்.

      மகிழ்ந்து போன உரிமையாளர், மாடியின் உள் பக்கம் நோக்கி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார், வந்து பாருங்கள் என யாரையோ அழைக்கிறார்.

     

15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

 


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம்

வெள்ளரிக்காய்.

காசுக்கு நாலாய்

விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம்

வெள்ளைக்காரன்.

    

17 ஆகஸ்ட் 2022

வலவன் ஏவா வான வூர்தி

 


     ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் ஏடுத்துரைப்பவையே இலக்கியங்களாகும்.

     மேல்நாட்டு அறிவியல் சிந்தனையின் பயனாய், புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகளும், புத்தம் புது அறிவியல் கோட்பாடுகளும் தோற்றம் பெறுவதற்கு, வெகு காலத்திற்கு முன்னரே, இக்கண்டுபிடிப்புகளுக்கான, கோட்பாடுகளுக்கான வித்துக்கள், நம் சங்க இலக்கியங்களில் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

16 ஜூன் 2022

கோளி

 


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய் பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்னும் தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே, இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.

15 ஏப்ரல் 2022

தீ இனிது



இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

என்று பாடியவர், கங்கை ஆற்று நீரை, நறு நீர் கங்கை, நல்ல தூய்மையான நீரை உடைய கங்கை என்று புகழ்கிறார்.

     ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆறுதானே?.

    

17 மார்ச் 2022

விண்ணில் மறைந்தவர்

 


     நீ எங்கே அமர்ந்தாலும், அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் அமர்கிறாய். இடத்தை துடைப்பதற்கான துணி கிடைக்காவிட்டாலும், வாயால் ஊதியாவது, அவ்விடத்தை சுத்தம் செய்த பிறகுதான் அமர்கிறாய்.

     நீ அமரும் இடம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, உன் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    

16 ஜனவரி 2022

ஊகம் வேய்ந்த தமிழர்

 


உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்

எச்சம் பிரிவாய் இருபதுபோல் – தச்சளவு

மண் கொள்ளக்கொண்ட கோல் என்கொல் வளவர்கோன்

கண் கொள்ளக் கண்ட கரை.

     கரை புரண்டோடும் காவிரியின் வெள்ளப் பெருக்கை, கட்டுப்படுத்த நினைத்த கரிகாலன், காவிரியுடன் கொள்ளிடம் இணையும் இடத்தில், கொள்ளிடப் படுகை, காவிரியைவிடத் தாழ்வாக இருப்பதைக் கண்டு, அவ்விடத்தில் அணை கட்ட முடிவெடுத்து, காவிரியின் கரைகளை உயர்த்தி, அணை கட்டினான்.

    

08 அக்டோபர் 2021

உயில்



     தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு, ஐந்து மாத வீட்டு வாடகை ரூ.135 தரவேண்டி இருக்கிறது.

     தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் கடையில், ஜவுளி வாங்கிய வகையில் ரூ.30  நிலுவை தரவேண்டும்.

     வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ரூ.30 தர வேண்டும்.

     சில்லறைக் கடன்கள் ரூ.60 மீதமிருக்கினறன.

     இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20

     சோமநாத்துக்கு ரூ.16

     வேதவல்லிக்கு ரூ.50 பாக்கி இருக்கிறது.

    

17 செப்டம்பர் 2021

ஓப்பிலா செந்தமிழ்ச் செல்வன்

 

 

     அன்பார்ந்த ஐயா,

     நமஸ்காரம்.

     எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும், தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில், வேறு தஞ்சம், ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.

     நான் இனிமேல், அதிக காலம், ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை.

04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்



     மருந்து.

     வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.

     உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம்.

     நமது இன்றைய வாழ்வு, மருந்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வாகி விட்டது.

     மருந்தில் இருந்து, நமக்கு விடுதலையே கிடையாதா?

     உண்டு.

    

29 ஆகஸ்ட் 2021

ஒரே நலம்


 

     காங்கோ.

     மத்திய ஆப்பிரிக்காவின் நடுப் பகுதி.

     காங்கோ காட்டில், குரங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

     ஒரு சில நாட்களிலேயே ஆய்வாளர்கள் அதிர்ந்தனர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல.

     ஒரு நூறு, இரு நூறு அல்ல.

     முழுதாய் ஐந்தாயிரம் சிம்பன்சிகளைக் காணவில்லை.