07 செப்டம்பர் 2019

குளம் தொட்டுக் கோடு பதித்து




மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய் தினார்.

     இம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும், கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.