26 ஜூலை 2016

நூலும் விருதும்




வாழி தமிழ்த்தாய் வளர்க தமிழ்க் கலைகள்
வாழி கரந்தைத் தமிழ்ச் சங்கம்- வாழி புகழ்
பாரோங்கு வண்தமிழ வேள் உமாம கேசுவரன்
சீரோங்கு தொண்டாற் செழித்து

தண்டமிழ் காத்த தொண்டர், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் திருப் பெயர் தாங்கி நிற்கும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியும்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியும்
தோற்றம் பெற்று ஆண்டுகள் 75 நிறைவடைந்திருக்கின்றன.

15 ஜூலை 2016

கர்மவீரர்


எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்?  எல்லோரும் வாழ. எப்படி வாழனும்? ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழனும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக் கூடங்களிலேயே சாப்பாடு போடனும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை. முக்கியமான வேலையும் கூட.

05 ஜூலை 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.

     விழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.

     தமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.

    விழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.