26 ஆகஸ்ட் 2017

முலாய்



      ஆண்டு 2008.

      அஸ்ஸாம்.

      ஜோஹார்ட் மாவட்டம்.

      கோஹிலா முக்.

      பிரம்மபுத்ரா நதிக்கரையோரம்.

      கடும் கோடைக் காலத்தின் ஒரு நாள் இரவு.

      சிறு குடிசையினுள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த, அம்மனிதர், திடீரென்று கண் விழித்தார்.

     ஏதோ ஒரு சலசலப்பு, ஒரு ஒலி அவரது உறக்கத்தைக் கலைத்திருந்தது.

19 ஆகஸ்ட் 2017

குண்டாறு



அது ஒரு கரடு முரடான மலைப் பாதை.

     பத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள மலைப் பாதை.

     வளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.

     வழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.

     நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.

12 ஆகஸ்ட் 2017

கீழடி




மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.

     பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.

06 ஆகஸ்ட் 2017

பண்பெனப்படுவது



     
      ஆண்டு 2008.

      செப்டம்பர் மாதம்.

      அகமதாபாத்

      இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்

      I.I.M
 
     எம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.