28 மார்ச் 2014

நல்லாரைக் காண்பதுவும் நன்றே

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

     நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

20 மார்ச் 2014

வரலாறு என்னை விடுவிக்கும்

     
நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

14 மார்ச் 2014

இரோம் சர்மிளா

     
அது ஒரு பேரூந்து நிற்குமிடம். அதிகாலையின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி, பேரூந்திற்காகப் பலர் காத்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் கலந்து நிற்கிறார்கள். அப்பொழுது, அவ்வழியாகச் சென்ற பச்சை நிற இராணுவ வாகனம், பேரூந்து நிறுத்தத்திற்கு முன் வந்ததும் நிற்கிறது. இரண்டு இராணுவ வீரர்கள் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள். இருவர் கைகளிலும் இயந்திரத் துப்பாக்கிகள். பேரூந்திற்காகக் காத்திருப்பவர்களை நோக்கி இருவரும் சரமாரியாகச் சுடுகிறார்கள்.

07 மார்ச் 2014

கிளாரா

அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
ஆயிரக் கணக்கான இருட்டு சமையலறைகளும்
சாம்பல் நிறத்தில் ஓங்கிநின்ற இயந்திரங்களும்
ஒரு திடீர்ச் சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற,
எங்களைக் கேட்கின்ற மக்களுக்காக
பிரட் அண்ட ரோசஸ், பிரட் அண்ட் ரோசஸ்
                                  -- ஜேம்ஸ் ஓப்பன்ஹிமின்

    

பெண் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில், கொதித்தெழுந்து, வாக்குரிமை கோரியும், தொழிலாளர்களின் உரிமையினை வற்புறுத்தியும், போர்க் குணமுள்ள ஓர் ஆர்ப்பாட்டத்தை முதன் முதலில் நடத்திய நாள்தான் மார்ச் 8.

01 மார்ச் 2014

காலத்தினாற் செய்த நன்றி


அழிவின் அவநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
                            - குறள்

     நண்பர்களே, நான் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற, தஞ்சாவூர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், சாரணர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், இண்ட்ராக்ட் கழகம், நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவர் படை போன்ற பல்வேறு அமைப்புகள் சிறப்புடன் இயங்கி வருகின்றன.

     இண்ட்ராக்ட் கழகமானது மாணவர்களுக்கு ஒரு பிரிவும், மாணவிகளுக்கு ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகின்றது.

     மாணவர்களுக்கான உமாமகேசுவர இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி ஆசிரியராக, நண்பரும் முதுகலை ஆசிரியருமான திரு டி.பாபு அவர்களும், மணவியருக்கான, இராதாகிருட்டின இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி அசிரியையாக, பட்டதாரி ஆசிரியை சகோதரி திருமதி பா.மகேசுவரி அவர்களும் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.