20 மார்ச் 2014

வரலாறு என்னை விடுவிக்கும்

     
நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.


     என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

     நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது சகோதரர்களின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல நான்.

நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.
History Will Absolve Me

     நண்பர்களே, கியூபா, மொன்கடா இராணுவ முகாம் மீதானத் தாக்குதலைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதியின் முன் நின்று முழங்கிய வார்த்தைகள்தான் இவை.

     காஸ்ட்ரோ தனது வாதத்தை முடிக்கும் வரை பொறுமையோடு காத்திருந்த நீதிபதி, பதினைந்து ஆண்டுகால சிறை தண்டனையை விதித்தார்.

    

பைன்ஸ் தீவுச் சிறையில் காஸ்ட்ரோ அடைக்கப் பட்டார். க்யூபாவின் வரலாற்றை மாற்றி எழுதிய சிறைச் சாலை இது. காஸ்ட்ரோவின் குரு ஹொசே மார்த்தி சிறை வைக்கப் பட்டதும் இங்குதான்.

பைன்ஸ் தீவு சிறைச்சாலை
தனிமைச் சிறையில் காஸ்ட்ரோ. ஆனால் புத்தகங்கள் சூழ இருந்தார். தத்துவம், வரலாறு, எனத் தேடித் தேடிப் படித்தார். பரிட்சைக்காகப் படிக்கிறாரா அல்லது புரட்சிக்காகப் படிக்கிறாரா என சிறைக் காவலர்களே குழம்பிப் போகும் வகையில், கட்டுக் கட்டாய் அறையெங்கும் புத்தகங்கள்.

     ஒரு சமயம் ஜேக் லண்டன், ஜுலியஸ் சீசர் எனப் படிப்பார். திடீரென்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் என்று மூழ்கிப் போவார்.

     சிறையில் நாள்தோறும், வானொலிச் செய்திகளைக் கேட்டு வந்த காஸ்ட்ரோவிற்கு ஒரு நாள், ஒரு வானொலிச் செய்தி அதிர்ச்சியை வாரி வழங்கியது.

மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

     மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாரா? அப்படியானால், இத்தனை காலமும், இந்த அரசாங்கத்திற்காகவா அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்? அதுவும் பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? தன்னையும், தன்னுடைய தோழர்களையும் சிறையில் அடைத்த, பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? தன்னுடைய புரட்சிகரத் தோழர்களைச் சுட்டுப் பொசுக்கிய பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? காஸ்ட்ரோ உண்மையாகவே கலங்கித்தான் போனார்.

     நண்பர்களே, மிர்தா யார் என்று தெரிகிறதா? ஃபிடல் காஸ்ட்ரோவின் காதல் மனைவி.

     ஃபிடல் காஸ்ட்ரோ மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர். கல்லூரிக் காலத்திலேயே, புரட்சி, துப்பாக்கி, பாட்டாளி வர்க்கம் என அனல் பறக்கப் பேசக் கூடியவராய் இருந்த போதிலும், இளம் பெண்களைக் கண்டவுடன் வாய் மூடி மௌனியாய் மாறிவிடுவார்.

      ஒரு முறை நண்பர்கள் ஒன்று சேர்ந்து, கல்லூரி மாணவிகளுடன் இணைந்து, கடற்கரைக்குச் செல்ல முடிவு செய்தனர். காஸ்ட்ரோ நானும் வருகிறேன் என்றார். நண்பர்கள் ஒரே ஒரு நிபந்தனை விதித்தனர். காஸ்ட்ரோ, தன்னுடன் வரும், பெண்ணுடன், அரசியல் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாது. காஸ்ட்ரோ சம்மதித்தார்.

     ஆச்சரியம். காஸ்ட்ரோவும் அந்தப் பெண்ணும், கடற்கரையில் தனியாக பிரிந்து சென்று மணிக் கணக்கில் பேசினர். அடுத்த நாள், அந்தப் பெண்ணைச் சந்தித்த நண்பர்கள், அப்படி காஸ்ட்ரோ என்னதான் பேசினார் எனக் கேட்டனர்.

    அடப் போங்கப்பா. புரட்சி, புரட்சி, புரட்சி என்று புரட்சி பற்றி மூன்று மணி நேரம் அறு, அறு என்று அறுத்து விட்டார்.

     ஆனாலும் காஸ்ட்ரோ, ஓர் அழகிய பெண்ணின் காதல் வலையில் விழத்தான் செய்தார். அப்பெண்ணின் பெயர் மிர்தா பிலார்ட். இருவரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். காஸ்ட்ரோவைப் போலவே, அப்பெண்ணும் பெரும் செல்வந்தரின் மகள்.

     1948 இல் இருவருக்கும் திருமணம் நடந்தது. காஸ்ட்ரோவிற்கு வயது 22. மிர்தாவிற்கு 21.

     நண்பர்களே, புதுமணத் தம்பதிகளாய் இருவரும், தேனிலவிற்கு எங்கு சென்றார்கள் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அமெரிக்காவிற்குச் சென்றார்கள்.

     அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஒரு விடுதியில் அறையெடுத்துத் தங்கினார்கள். மிர்வைப் பொறுத்தவரை, தேனிலவு அத்தனை மகிழ்ச்சியாக இருந்ததென்று கூற முடியாது. காரணம், காஸ்ட்ரோ, மிர்தாவை விடுதியிலேயே விட்டுவிட்டு, தனியாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்.

     பல மணி நேரம் கழித்துக் காஸ்ட்ரோ, அறைக்குத் திரும்பும் பொழுது, கை நிறைய பூக்கள் இருக்காது. புத்தகங்கள் இருக்கும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என கை நிறைய புத்தகங்கள் இருக்கும். காரல் மார்க்ஸ்ஸின் டாஸ் காபிடல் தொகுதிகளை முதன் முறையாக, காஸ்ட்ரோ, இங்குதான், தனது தேனிலவின்போதுதான் வாங்கினார்.

      இவர்களின் காதலின் நினைவுப் பரிசாய் ஓர் மகன். ஃபிடலிட்டா.

      நண்பர்களே, திருமணம் முடிந்து, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில்தான், சிறையில் இருந்த வானொலி அறிவித்தது.

மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

     மிர்தாவின் செயல், காஸ்ட்ரோவை முற்றிலுமாக நிலைகுலையச் செய்தது. ஒரு புரட்சியாளரின் மனைவி எப்படி அராஜக அரசாங்கத்திற்காக பணியாற்ற முடியும்? எப்படி தன் மனைவியால் பணியாற்ற முடிந்தது?.

     நொடிப் பொழுதும் வீடு தங்காமல், கட்சி, கூட்டம், புரட்சி, திட்டம் எனறு சுற்றிக் கொண்டிருந்தாரே தவிர, வீட்டைப் பற்றி நினைக்கவே காஸ்ட்ரோவிற்கு நேரமில்லை.

     மிர்தா விவகாரத்தில், காஸ்ட்ரோவின் மீது சில விமர்சனங்களை முன் வைப்பாரும் உள்ளனர். மிர்தாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, எத்தனை காலம் அவரோடு இணைந்து வாழ்ந்தார்? மிர்தாவின் சுக துக்கங்களில் கலந்து கொண்டிருக்கிறாரா? குடும்பத்தை நடத்த, செலவுகளைச் சமாளிக்க அவர் என்ன செய்தார், என்ன செய்கிறார் என்று என்றேனும், எப்பொழுதேனும் கவலைப் பட்டிருப்பாரா? மகன் ஃபிடலிட்டாவின் அறுவை சிகிச்சையின்போது கூட, தன் கையில் இருந்த காசை, மனைவியிடம் கொடுக்காமல், ஆயுதம் வாங்கத்தானே கொடுத்தார்.

     பொது வாழ்வில் ஈடுபடும் பலர், தங்களது சொந்த வீட்டைப் புறக்கணிப்பது புதிதல்ல. காஸ்ட்ரோவும் இதற்கு விதிவிலக்கல்ல.

     வானொலி செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே, தனது வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டார். மிர்தாவை அந்தக் கணமே விவாகரத்து செய்ய விரும்புவதாக அறித்தார்.

      மிர்தாவை விவாகரத்தும் செய்தார். ஆயினும் தன் மகன் ஃபிடலிட்டாவை மட்டும் அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

நண்பர்களே,
இவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.
நாடுதான்
பெரிது, பெரிது
என்று வாழ்ந்தவர்,
இன்றும் வாழ்ந்து வருபவர்.
ஃபிடல் காஸ்ட்ரோ.



71 கருத்துகள்:

  1. ’’ கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன்.’’

    நாடுதான் பெரிது, - என தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  2. புத்தகங்கள் எந்தளவு உயர்த்தி உள்ளது...!!! ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி அறியாத பல தகவல்களுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகங்கள் மட்டும் இல்லையேல், உலகம் இன்று பயணிக்கும் பாதையே வேறாக அல்லவா இருந்திருக்கும்.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  3. நாடுதான் பெரிது என்று வாழ்ந்தவர் சிலர் என்றாலும், அதில் ஒருவராக இருக்கும் காஸ்ட்ரோ பாராட்டப்பட வேண்டியவரே . மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா காஸ்ட்ரோ பாராட்டப்பட வேண்டியவர், போற்றப்பட வேண்டியவர்.
      நன்றி ஐயா

      நீக்கு
  4. தலைவனாக காஸ்ட்ரோ உயர்ந்தவர்தான். நல்லவேளை மிர்தா அரசாங்க பணிபுரிந்தார். இல்லாவிட்டால் மிர்தாவின் ஞாபகம் இல்லமாலே போய் கடைசிவரை புரட்சியாளனின் பொம்மை மனைவியாக வாழ்ந்து,
    மடிந்திருப்பார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே, தனிப்பட்ட முறையில் , மிர்தாவின் வாழ்க்கை அனுதாபத்திற்கு உரியதே.
      வருகைக்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
  5. ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன். பயனுள்ள‌ பதிவு!

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பதிவு. பிடல்காஸ்ட்ரோவ் இந்த உலகத்தின் புரட்சியாளர்களின் ஒரு விடிவெள்ளி. சேகுவரா ஒரு சமநிலைவாதி(மக்கள் அனைவரும் சமம்),இருவரும் அடிமை வர்க்கத்தை உலகை விட்டு நீக்கி அனைவரும் சமம் என்று நிலைநாட்டியவர்கள். காஸ்ட்ரோ வாழ்க பல்லாண்டு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு. பிடல்காஸ்ட்ரோவ் இந்த உலகத்தின் புரட்சியாளர்களின் ஒரு விடிவெள்ளி. சேகுவரா ஒரு சமநிலைவாதி(மக்கள் அனைவரும் சமம்),இருவரும் அடிமை வர்க்கத்தை உலகை விட்டு நீக்கி அனைவரும் சமம் என்று நிலைநாட்டியவர்கள். காஸ்ட்ரோ வாழ்க பல்லாண்டு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. CIAயின் கொலை வலையில்இருந்து பலமுறை தப்பித்து ,வாழும் போதே வரலாற்றில் இடம் பிடித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ புரட்சி தலைவன் என்பதில் சந்தேகமே இல்லை !
    த ம +1

    பதிலளிநீக்கு
  9. “பரிட்சைக்காகப் படிக்கிறாரா அல்லது புரட்சிக்காகப் படிக்கிறாரா என சிறைக் காவலர்களே குழம்பிப் போகும் வகையில், கட்டுக் கட்டாய் அறையெங்கும் புத்தகங்கள்“ - புத்தகங்களில் மட்டுமல்ல வரலாற்றிலும் வாழும் காஸ்ட்ரோவைப் பற்றிய அரிய செய்திகளுடன் மிக அரிய படங்களையும் தேடித் தொகுத்த பணி மிகவும் நெகிழவைத்தது. நன்றி அய்யா, அந்தச் சிங்கத்தின் முன் அமெரிக்கா சுண்டெலியானது!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா21 மார்ச், 2014

    வணக்கம்
    ஐயா....

    வரலாற்று கட்டுரை படிக்கப் படிக்க படிக்கத்தான் சொல்லுது ஐயா.....
    அவரைப்பற்றி அறிய முடியாத தகவல்கள் .அறிந்தேன் ஐயா.... அருமையாக உள்ளது.... வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று நாயகனின் வாழ்க்கை வரலாறை விவரித்த விதம் அருமை.
    உங்களைப் போன்றவர்கள் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களாய் இருந்தால் மாணவர்கள் அப்பாடத்தை விரும்பிப் படிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் சுவாரஸ்யமாகவும் புதிய தகவலாகவும் இருந்தது.. நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  13. //வரலாறு என்னை விடுவிக்கும்.//
    அருமையான வார்த்தைகள்..இரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அருமையான வார்த்தைதான்.
      காஸ்ட்ரோ அவர்கள் நீதி மன்றத்தில் முழுங்கிய பிறகு, உலகப் புகழ் பெற்ற வாக்கியம் அது

      நீக்கு
  14. தங்கள் பதிவில் வரும் புரட்சியாளர்கள் வரிசையில் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ஏற்கனவே இவரை பற்றியும், சேகுவாரே பற்றியும் படித்திருக்கிறேன். உங்களுடைய பதிவுக்கும் நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. விந்தை மனிதரின் வரலாற்று சருக்கமே சிந்தை நெகிழச் செய்தது!
    நன்றி! கரந்தை!

    பதிலளிநீக்கு
  17. பாராட்டுக்குறிய செய்திகள் ! பாராட்டுக்குறிய பணி ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  18. இரண்டு சந்தேகங்கள். காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்தபின் நாட்டின் நிலையில் மாற்றம் நிகழ்ந்ததா. ? மனைவி எந்தப் பணியில் இருந்தார் என்று அறியாத கணவரா காஸ்ட்ரோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் அதிகம் ஐயா. இன்று கியூபாவில் எழுத்தறிவு அற்றவர்களே கிடையாது.கல்வி அனைத்தும் இலவசம் . ஒலிம்பிக் முதலான பல போட்டிகளில் பதங்கங்களை கியூபர்கள் அள்ளுகிறார்கள். மருத்துவத்துறையில் முன்னோடி நாடுகளின் கியூபாவும் ஒன்று.
      தங்களின் இரண்டாவது ஐயத்தைப் பொறுத்தவரையில் அதுதான் உண்மை ஐயா. வீட்டில் இருந்தால்தானே, மனைவி என்ன செய்கிறார் என்று தெரிந்திருக்கும். புரட்சி புரட்சி என அலைந்து கொண்டிருந்தவர், குடும்பத்தைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
      இன்றைய அவரது குடும்ப நிலைமை யாருக்குமே தெரியாதது ஐயா. குடும்பம் பற்றிய கேள்விக்க பிடல் கேஸ்ட்ரோவின் பதிலைப் பாருங்கள்

      எனக்கென்று நான் வைத்துக் கொண்டிருப்பது, எனது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும்தான். என்னிடம் அதைத் தவிர வேறு இல்லை. அதனை, நான் என் சொந்த பாதுகாப்பில் வைத்துள்ளேன். ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை, விளம்பரத்துக்காகவோ, அரசியலுக்காகவோ பயன்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கின்றேன்.

      நீக்கு
    2. தன் குடும்பம் மறந்து, பொது நலன் கருதி உழைப்பவனே தலைவன். அதற்கான 100 சதவீதம் தகுதியானவர் ஃப்டல் காஸ்ட்ரோ!.

      நீக்கு
    3. ஆம் ஐயா , முழுக்க முழுக்கத் தகுதியானவர்

      நீக்கு
  19. பல செய்திகள் புதிது..படங்களும் அருமை..நன்றி சகோதரரே.

    நீங்கள் தான் இப்பொழுது பரீட்சைக்கா பதிவிற்கா என்று கேட்கும் அளவிற்குப் படிக்கிறீர்கள் போல, :) வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கு நன்றி சகோதரியாரே.
      பரிட்சையின்போது இதுபோலப் படித்திருந்தால், வாழ்க்கை முறையே மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. காலம் கடந்த ஞானம்.

      நீக்கு
  20. நன்றி .இதுவரை அறியாத தகவல்கள் .
    தொகுப்பு நன்றாக கோர்வையாக இருந்தது.
    தகவல்களைத் தெரிந்தெடுத்து பதிவிடுவதின் பின் உள்ள உழைப்பு புரிகிறது.

    பதிலளிநீக்கு
  21. இதுவரை அறியாத பல தகவல்களை உங்களது பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்..... நன்றி.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  22. என் இனிய ஜெயக்குமார் அவர்களுக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய இரத்தின சுருக்கமான பதிவானது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு சான்றாக உள்ளது. அவரைப் போன்ற ஒரு சிலரின் இரும்பு போன்ற கொள்கைப் பிடிப்பால்தான் இந்த உலகில் உள்ள பல நாடுகளின் அடிமைத்தளை அகற்றப்பட்டது என்பதை உலக வரலாறு உரைக்கிறது. வரலாற்று நாயகர்கள் என்ற தலைப்பில் தங்களின் தனி மனித சாதனையாளர்களின் பதிவுகளை புத்தகமாக வெளியிட இத்தருணத்தில் வேண்டுகோள் வைக்கிறேன். நன்றிகள் பல பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தாங்கள் சொல்லிய பிறகு செய்யாமல் இருப்பேனா, சாதனையாளர்களின் பதிவுகளை தனியொரு நூலாக வெளிக்கொணட அவசியம் முயல்வேன் நண்பரே

      நீக்கு
  23. மெய் சிலிர்த்துப் போனேன்.
    பாரதியைப் பதிலக்கும் போதெல்லாம் ஏற்படும் ஒருவித சிலிர்ப்பு , காஸ்ட்ரோவைப் படிக்கும் பொது ஏற்பட்டது.
    நன்றி

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
    ஆனால்
    வரலாறு என்னை விடுவிக்கும்.
    History Will Absolve Me //

    ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய சுவாரஸ்யமான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  25. பிடல் ஒரு உயர்வான மனிதர். அவரைப் பற்றி படிப்பதென்பது மிகவும் உவப்புக் குறியது. பகிர்வுக்கு நன்றி அய்யா!.

    பதிலளிநீக்கு
  26. பிடல் காஸ்ட்ரோ.பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும், தங்களது தொகுப்பு மிகவும் அருமையாக, எளிதாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதியிருக்கின்றீர்கள்!

    அருமையான பதிவு! பகிர்வு!

    நன்றி!

    த.ம.

    பதிலளிநீக்கு
  27. புதிதான தகவல்களை வழங்கியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. பிடல் காஸ்ட்ரோவை படிக்கையில் சேக்குவாரேவும்,சேக்குவாரேவைப்படிக்கையில்
    பிடல் காஸ்ட்ரோவும் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலாதது,நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  29. வணக்கம்!

    நாடும் மொழியும் நமதிரு கண்களெனப்
    பாடும் படைப்பிது பார்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு

  30. அமிழ்தமணம் கொண்ட அருமையொளி ஆக்கம்!
    தமிழ்மணம் தந்தேன் தழைத்து

    பதிலளிநீக்கு
  31. இதுவரை நான் படித்து அறியாத தகவல்.



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  32. விந்தை மனிதர்களைப் போற்றி நிற்கும் தங்களின் சிறப்பான
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்களும் என் இனிய வாழ்த்துக்களும் சகோதரா !

    பதிலளிநீக்கு
  33. பிடல் காஸ்ட்ரோ பற்றி அறியாத தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. பீடல் காஸ்ட்ரோவைப் பற்றி எழுதும்போது சே வந்துவிடுவார். அவ்வாறே சேகுவாரைப் பற்றி எழுதும்போது பீடலைத் தவிர்க்கமுடியாது. வரலாற்று நூல்களில் அஞ்சாநெஞ்சனாக அனைவர் மனதிலும் பதிந்தவர் பீடல். வாய்ப்பிருப்பின் Granma இதழில் Reflections of Fidel என்ற தலைப்பில் அவர் எழுதிய கடிதங்களைக் காண உங்களை அன்போடு அழைக்கிறேன். அண்மையில் அவர் எழுதிய கடிதம் 16.8.2013இல் வெளியாகியுள்ளது. மாபெரும் தலைவனைப் பற்றிய தங்களின் பகிர்வுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரான்மா இதழினை அவசியம் பார்க்கின்றேன் ஐயா.நன்றி

      நீக்கு
  35. பெயரில்லா25 மார்ச், 2014

    பங்குனி 5 இலங்கை சென்று 24 தான் வந்தேன்.
    கருத்துகளிட முடிவயில்லை
    இன்னும் களைப்புத் தீரவில்லை..
    பதிவு மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் களைப்பிலும், வலைக்கு வருகை தந்தமை மிக்க மகிழ்வினை அளிக்கின்றது.
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  36. தொடக்க வரிகளை படிக்கும் போதே ச்சும்மா ஜிவ்வென்று இருந்தது. நீதிபதி என்ன மாதிரியான மனோநிலையில் இருந்திருப்பார் என்று யோசித்து பார்க்க வைத்தது. உண்மையிலேயே இது போன்ற தகவல்களை அதிகம் உங்களிடமிருந்து எதிர்பாக்கின்றேன்.

    இதில் உள்ள பல தகவல்கள் நான் இதுவரையிலும் அறியாத தகவல் களஞ்சியம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன ஐயா நன்றி

      நீக்கு
  37. காஸ்ட்ரோ பற்றி அழகாக தொகுத்து அளித்தமை சிறப்பே தன் புதல்வனின் அறுவை சிகிச்சைக்கு கூட பணம் கொடுக்காமல் ஆயுதம் வாங்க கொடுத்துள்ளமை நாட்டுபற்றை காட்டினாலும் மனைவிக்கும் குழந்தைக்கும் துன்பமான வாழ்வு என்றே புலப்படுத்துகிறது.
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  38. மிக்க நன்றி சார்.. பிடல் காஸ்ட்ரோ பற்றிய உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  39. முதலில் எனக்கு ஃபிடல் காஸ்ட்ரோ யாரென்றே தெரியாது. அவரை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு