27 ஜனவரி 2018

முதுகுன்றனார்



     ஆண்டு 1957,

     தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி

     ஒரு கிராமத்துச் சிறுவன், தன் தந்தையுடன் அலுவலகத்தில் காத்திருக்கிறான்.

      திருவையாறு, சீனிவாசராகவா உயர்நிலைப் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன். பூண்டி கல்லூரியில், புதுமுக வகுப்பில் சேருவதற்காகக் காத்திருக்கிறான்.

       அலுவலர் ஒருவர், இம்மாணவனது, மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்துவிட்டு, முகம் சுழித்து, இந்த மார்க்குக்கு இங்கே இடம் கிடையாது என்கிறார்.

        தந்தையோ, அலுவலரிடம் கெஞ்சுகிறார், என் மகனைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என மன்றாடுகிறார்.

        முடியாது  உறுதியாய் மறுத்துவிடுகிறார் அலுவலர்.

        சிறிது நேரம் யோசித்த தந்தை, தன் மகனைப் பார்த்தார்.

வாடா, இந்த காலேஜ் இப்ப வந்ததுதாண்டா. இது வராததற்கு முன்பிருந்தவன் எல்லாம், செத்தா போயிட்டான். ஏர் இருக்கு, கலப்பை இருக்கு. நீ நல்ல மனுசனா பிழைச்சுக்கலாம்டா. கவலைப் படாதே வா.

18 ஜனவரி 2018

இந்திர விழா



     பொங்கல்.

     பொங்கல் விழாவானது, இன்று தமிழர் திருநாளாகவும், திராவிடர் திருநாளாகவும் போற்றிப் புகழப் படுவதை நாம் அறிவோம்.

      ஆனால், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை பொங்கல் என்ற வார்த்தையே, தமிழில் பயன்பாட்டில் இல்லை என்பது நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும்.

11 ஜனவரி 2018

தமிழைத் துறக்காத துறவி



     ஆண்டு 1931.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

     26 எண் அறை.

     நேரம் காலை மணி 11.05

     பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     பேராசிரியர்தான்.

     ஆனாலும் துறவிகளுக்கு உரிய உடையினை அணிந்திருக்கிறார்.

     குரலோ காந்தக் குரல்

     மாணவர்கள் அனைவரும், பேராசிரியரின் தெள்ளத் தெளிந்த நீரோடை போன்ற உரையில், சொக்கிப் போய் அமர்ந்திருக்கிறார்கள்.

     பணியாளர் ஒருவர், மெல்ல வகுப்பறையினை எட்டிப் பார்க்கிறார்.

06 ஜனவரி 2018

உதிரிலைகள்



என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப் பட்டது……..