28 நவம்பர் 2014

கடிதத்தில் வந்த பாராட்டு


கரந்தையில் பிறந்தவர் இவர். கரந்தையிலேயே வசித்தும் வருபவர். நான் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், எனக்கு முன்னரே பயின்றவர். இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்.

     400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திற்கும் மேற்பட்ட குறு நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட சிறு கதைத் தொகுப்புகள், 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆங்கிலத்தில் பல கவிதைகள், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் என இவரது எழுத்துப் பணி, பல தளங்களில் விரிந்து கொண்டே செல்லும்.

23 நவம்பர் 2014

விருது

     

நண்பர்களே, வணக்கம். நலம்தானே. வலைப் பூ என்னும் எழுத்து உலகில், மகிழ்ச்சி உலகில் காலடி எடுத்து வைத்து, மூன்றாண்டுகள் ஆகப் போகின்றன.

     மூன்று ஆண்டுகளுக்குள் எத்தனை, எத்தனை புதுப் புது உறவுகளைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது, மனம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறது.

16 நவம்பர் 2014

கனவில் வந்த காந்தி 2


நண்பர்களே நாம், எண்ணற்ற நட்புகளோடு பழகியிருப்போம், பழகிக் கொண்டே வருகின்றோம். ஆயினும் சிலரைப் பார்த்த உடனேயே, பேசத் தோன்றும், நட்பாய்ப் பழகத் தோன்றும். உண்மைதானே.

தேவகோட்டை கில்லர்ஜி

12 நவம்பர் 2014

சுவாசிப்போம்


ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

      படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய புத்தகம்.

நாளை காலை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.

06 நவம்பர் 2014

என் ஆசான்

நண்பர்களே, 
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு
வருமாறு
தங்களை அன்போடு அழைக்கின்றேன்
வருக      வருக



என் ஆசான்


பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
     தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
     எளிமையை என்றும்நான் மறக்கேன்
                             - திருவிசைப்பா

     நண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.

     ஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர் எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள் அல்லவா நாம்.

     ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.

01 நவம்பர் 2014

சிம்பனி


ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள்.