29 ஜூன் 2021

காந்தி கணக்கு



     காந்தி கணக்கு.

     இந்தச் சொல்லாடலை, நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

     காந்தி கணக்கு.

     இதன் உண்மைப் பொருளை, இச் சொல்லாடல் உருவான கதையை அறிந்திருப்போர் குறைந்த அளவிலேயே இருப்பர்.

     மகாத்மா காந்தி அவர்கள் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தபோது, பெரும்பாண்மையான வணிகர்கள், செல்வர்கள், இப்போராட்டத்தை ஆதரித்த போதிலும், இப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுக்க விரும்பவில்லை.

     இருப்பினும், சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு உதவ விரும்பினர்.

     காற்று வெளியில், ஒரு செய்தியை ரகசியமாய் உலாவ விட்டனர்.

    

23 ஜூன் 2021

திசைக் கூடல்

 



     ஆண்டு 1928.

     திருச்சி.

     உடன் பிறப்புகள் மூவர்.

     மூவரில் இளையவர் காலமானார்.

     வழக்கறிஞராய் பணியாற்றி, பெரும் சொத்து சேர்த்தவர்.

     மனைவி இல்லை.

     பிள்ளைகள் இல்லை.

     உயிலும் இல்லை.

    

13 ஜூன் 2021

பரமேசுவர மங்கலம்


     1400 ஆண்டுகளுக்கும் முன்.

     அம்மன்னனின் உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.

     பெருகி வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனை மலர்ந்தது.

    

06 ஜூன் 2021

ஆண்டிப்பட்டி சமீன்

 


     ஆண்டு 1924.

     சனவரி மாதத்தில் ஓர் நாள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களும், வள்ளல், வள்ளல் என்றால் பெரு வள்ளல் ஒருவரும், சாரட் வண்டியில் பயணித்தவாறு, தஞ்சாவூர் முழுவதையும் ஒரு சுற்று சுற்றினர்.