ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.
ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.
மேவல் எளிது, அரிது மெய்போற்றல் – ஆவதன்கண்
சேறல் எளிது, நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது, அரிது சொல்.
நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா?
உங்கள் படைப்புகளைப் பத்திரிக்கைகள், புத்தக
நிலையங்கள், பண்டித, புலவ, வித்வசிரோன்மணிகள் மறுக்கின்றனரா?
இதோ குயுக்தம் வெளியிடக் காத்திருக்கிறது.
எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.
பிப்ரவரி 28.
திங்கள் கிழமை.
உடல்நிலை நலிவுற்று படுக்கையில் முடங்கிக் கிடந்த
நான், உடல் நலம் தேறி, 18 நாட்களுக்குப் பின், அன்றுதான் பள்ளிக்குச் சென்றேன்.
சக ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் நேரில்
பார்த்த பிறகு, உடலிலும், மனதிலும் ஒரு புத்துணர்ச்சி
பிறந்தது.
காலை மணி 11.00
ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த பொழுது, என்
அலைபேசி ஒலித்தது.
ஹலோ
என்றேன்.
நீங்கள்
யார்?
செந்தமிழ்ப் புராணங்களை,
தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை,
செந்தேன் சிந்திடும் தனிப் பாடல்களை, கேட்போர்
உளம் குளிர எடுத்துரைக்கும் பாங்கு.
சிலப்பதிகாரச் செல்வத்தின், செந்தமிழ்ப் பாடல்களை,
தாளத்தோடும், இராகத்தோடும் பாடி, கேட்போரை மதுரைக்கே அழைத்துச் செல்லும் திறமை.
நீ
…
எங்கள்
வியப்புகளின்
குறியீடு.
மாதச்
சம்பளம் எல்லாம்
வட்டியில்
வடிந்தபோது
அம்மா
மட்டும்
பரவாயில்லை
முதல்
இருக்கிறதே
என்றது
யாரை?
ஆண்டு 1975.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் கல்வி பயின்ற கல்லூரி.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவுடன் இயங்கி
வந்த காலம்.
இளங்கலை மாணவர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெளியிடப்
பெற்ற நாள்.
வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று
முழக்கமிடுகின்றனர்.
கல்லூரி வளாகம் முழுமையும் ஒரே பரபரப்புடன் காணப்படுகிறது.
ஆனால் ஒரு மாணவர் மட்டும், முகத்தில் கவலையின்
ரேகைகள் படர, மகிழ்வின்றி, ஆழ்ந்த யோசனையோடு திரும்பிச் செல்கிறார்.
சொர்க்கம்
மதுவிலே,
சொக்கும் அழகிலே.
சொர்க்கம் மதுவிலே என்னும் கவியரசு கண்ணதாசனின்
பாடல் வரிகளை, மெய்ப்பித்து வருகிறது இன்றைய தமிழகம்.
ஊரெங்கும் மதுக் கடைகள்.
மதுவே சொர்க்கமாகிப் போனது, பல இலட்சம் மனிதர்களுக்கு.
வாணியம்பாடி முத்தமிழ் மன்ற விழா.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
விருதும், பரிசாய் ஒரு தொகையும் வழங்கப் பெற்றது.
விருதைப் பெற்றுக்
கொண்டவர், தொகையை முத்தமிழ் மன்றத்திற்கே மீண்டும் வழங்கினார்.
இதை காணிக்கை என்று சொல்ல மாட்டேன்.
ஏனென்றால், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் இப்பகுதியில்,
இக்கவிஞர் அவர்களால், ஒரு அரசாட்சியே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
எனவே, அதற்கு நான் கப்பம் கட்டிவிட்டுப் போகிறேன்
என்றார்.
ஆண்டு 1924.
சனவரி மாதத்தில் ஓர் நாள்.
கரந்தைத் தமிழ்ச் சங்க முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களும், வள்ளல், வள்ளல் என்றால் பெரு வள்ளல் ஒருவரும், சாரட் வண்டியில் பயணித்தவாறு, தஞ்சாவூர் முழுவதையும் ஒரு சுற்று சுற்றினர்.
ஆண்டு 1924.
அந்த இளைஞனின்
வயது 22.
நகராட்சி அலுவலகத்தில்
உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitory Inspector) பணி.
பணியில் அமர்ந்து
ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
ஆனாலும் மனதில்
நிம்மதியில்லை.
ஆண்டு 1932.
செந்தமிழ்க் கைத்தொழிற் கலாசாலை.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி.
கல்லூரி என அழைக்கப் பட்டாலும், இது ஒரு தொடக்கப் பள்ளிதான்.
1916 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றப் பள்ளி.
ஆண்டு 1920.
ஏப்ரல் 6 ஆம் நாள்.
தமிழறிஞரின், தமிழ்ப் பெருவள்ளலின் மூச்சு மெல்ல,
மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிறது.
மனைவியையும், தன்னைச் சூழ்ந்திருந்த உற்றார்,
உறவினர்களையும், நண்பர்களையும் கண் திறந்து பார்த்தார்.
உதடுகள் மெல்லத் துடித்தன.
திருவள்ளுவர்
படம்.
திருவள்ளுவர்
படத்திற்கு ஒரு மாலை.
மங்கல நாண்.
மணமாலை இரண்டு.
பெற்றோர்களுக்கான
மாலை நான்கு.
குத்து விளக்கு
ஒன்று.
விளக்கிற்கான
எண்ணெய், திரிகள்.
மெழுகுவர்த்தி
ஒன்று.
தீப்பெட்டி ஒன்று.
உதிரிப் பூக்கள்.
பட்டியல்
அவ்வளவுதான்.
செயின்
கழன்றுவிடும்.
பெடலுடைந்த
சைக்கிளில்
என்னைப்
பள்ளியில் இறக்கிவிட்டு
தேநீர்
கடைக்கு வேலைக்குப் போவார்
என்
அண்ணன்.
குலன் அருள் தெய்வம்
கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை
வன்மை
நிலம்மலை நிறைகோல்
மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம்
இணையவும்
அமைபவன் நூலுரை யாசிரி
யன்னே.
ஓர் ஆசிரியர் என்பவர், உயர் குடியில் பிறந்தவராகவும், பல நூல்களைக் கற்றறிந்த
அறிவும், அவ்வறிவை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், எடுத்துக் கூறத்
தகுந்த ஆற்றல் உடையவராகவும், நாவன்மை கொண்டவராகவும், நிலத்தையும், மலையையும், தராசுவையும்,
மலரையும் ஒத்த குணங்கள் உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள்
பலவற்றை உடையவராகவும் இருக்க வேண்டும் என்பது நன்னூலாரின் கருத்தாகும்
அன்புநிறை சிவா,
அளவு கடந்த மகிழ்ச்சி.
எண்ணிலடங்காத் துறைகளில் தேர்ச்சி, திறமை உடையவர்
நீங்கள்.
கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பைப் போலவே
இருந்து கொண்டிருந்தீர்கள்.
ஒரு பரிசு, எப்படியோ, திடுக்கிட்டு விழித்து,
உங்களை கட்டி அணைத்திருக்கிறது.
ஓர் ஆறுதல், அவ்வளவே.
பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம் கடலை கிடைத்திருக்கிறது.
எனினும் இது உங்களோடு உள்ளவர்களுக்கு, உவப்பைக்
கொடுத்து, உங்களை உணர சிறு வாய்ப்பு.
ஆயினும், பெரு மகிழ்ச்சி.
வாழ்க சிவா.