27 செப்டம்பர் 2016

புதிய கல்விக் கொள்கை - சில கருத்துக்கள்




கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான். இன்றைய பள்ளிக் கல்வி முறையானது, மதிப்பெண்களை மட்டுமே மையப் படுத்திய கல்வி முறையாக மாறிவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

   படிப்பு என்பதே வேலை வாய்ப்பிற்காகத்தான் என்று எண்ணி, மதிப்பெண்களை மட்டுமே நாடிச் செல்லும் மாணவர்கள், தங்கள் வாழ்வியலை, வாழ்வின் மேன்மையை உணராதவர்களாகவே மாறிப் போகிறார்கள்.

21 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 9



           

 பல்கலைக் கழகத்தின் சார்பில் குடிக்கும் கூட்டமா என நீங்கள் வியப்பது புரிகிறது.

     குடிப் பழக்கம் தொடர்பாக, நமக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள, ஒரு சில வேறுபாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ளவது அவசியம்.

     குடிக்கும் கூட்டங்களில் குடிப்பவர்கள், குடிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே கலந்து கொள்கிறார்கள்.

14 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 8

           

 எனது தாத்தா குடும்பத்தினர், சிறு வயது முதலே என் நலனில், அதிக அக்கறை கொண்டு உதவி வருபவர்கள். அவர்கள் மட்டும் என்னைக் கைத் தூக்கி விடாமல் இருந்திருப்பார்களேயானால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

09 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 7



பல்கலைக் கழக நிர்வாகமானது, பல்கலைக் கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே உதவியாளரை வழங்கி உதவும்

    படித்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. நான் தங்கியிருந்த விடுதியின் உதவியாளர், என்னைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் செல்வது, அருகிலுள்ள தெருக்களைச் சுற்றிக் காட்டுவது போன்ற செயல்களில் எனக்கு உதவியாக இருந்ததார். அது பல்கலைக் கழக நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது.

05 செப்டம்பர் 2016

தியாகத் திருநாள்


    

ஆண்டு 1936, நவம்பர் மாதம் 18 ஆம் நாள்.

     இரவு மணி 11.15

     தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகம்.

     இரவு நேரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

      அலுவலகத்தின் மைய அறையில் அம் மனிதர் ஓர் கட்டிலில் கண்மூடிப் படுத்திருக்கிறார். கட்டிலைச் சுற்றிலும் கவலை தோய்ந்த முகங்கள்.

     அம் மனிதர் உறுதியாகக் கூறிவிட்டார். என்னால் வீட்டில் படுத்திருக்க முடியாது. என் இறுதி மூச்சு, காங்கிரஸ் அலுவலகத்தில்தான் பிரிய வேண்டும். தூக்கிச் செல்லுங்கள் என்னை அலுவலகத்திற்கு. உறுதியாகக் கூறிவிட்டார்.