28 டிசம்பர் 2020

தமிழவள் இருக்கை

 


     ஆண்டு 1944.

     மார்ச் மாதம் 28 ஆம் நாள்.

     தஞ்சாவூர்.

     இராஜகோபாலசாமி கோயில் தெரு.

     2659 என்ற எண்ணுள்ள மாடி வீடு.

     வீட்டுத் திண்ணையில், மறுநாள் நடக்க இருக்கும் தேர்விற்கான நுழைவுச் சீட்டில், தங்கள் கல்லூரி முதல்வரிடம் கையொப்பம் பெறுவதற்காக வந்த, மாணவர்கள் சிலர் காத்திருக்கின்றனர்.

     மாடியில் உள்ள தாழ்வாரத்தில், கிழக்கு நோக்கி இருந்த நாற்காலியில், மிகுந்த களைப்புடன் அமர்ந்திருக்கிறார் முதல்வர்.

   

22 டிசம்பர் 2020

உதிரம் உறைந்த பூமி

 


     கி.பி.,ஒன்பதாம் நூற்றாண்டு.

     காவிரிக்கும் மேற்கே தொடங்கி, திருவேங்கடத்தையும் தாண்டியப் பெருநிலப் பரப்பில் பல்லவப் பேரரசும், காவிரிக்கு தெற்கே தொடங்கி, குமரியின் அடிமுனை வரையிலானப் பெரும் பரப்பை பாண்டியரும் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     முத்தரையரிடம் போரிட்டு கைப்பற்றிய சிறு பகுதிகளை மட்டுமே, பல்லவர்களின் துணையோடு, சோழர்கள், குறு நில மன்னராய் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     எப்படியும் பல்லவர்களை அழித்தே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த, இரண்டாம் வரகுண பாண்டியன், சற்றேறக்குறைய ஒன்றரை இலட்சம் படை வீரர்களோடு புறப்பாட்டான்.

   

16 டிசம்பர் 2020

உண்பது நாழி உடுப்பவை இரண்டு

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

     இந்த உலகு முழுவதையும் ஆளுகின்ற மன்னனாக இருந்தாலும், கல்வி அறிவில்லாத மூடராக இருந்தாலும், உண்ணப்படும் பொருள் நாழி அளவே ஆகும். உடுத்தும் உடையும், மேலே ஒன்றும், இடையிலே ஒன்றுமாய் இரண்டே ஆகும்.

06 டிசம்பர் 2020

தஞ்சையார்



நம்பினா நம்புங்க

நம்பாட்டி போங்க

எனப் பாட்டின் பல்லவியைப் பாடலாசிரியர் கூற, இயக்குநர் பதறிப் போனார்.

     வாத்தியாரய்யா, பாட்டை கேட்டுட்டு, படத்தை யாரும் வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது? வேற ஒரு பாட்டு, ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக் கொடுங்க என்றார்.