30 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 5


தக்ஷின் கங்கோத்ரி


தக்ஷின் கங்கோத்ரி.

       கர்னலும் மற்றவர்களும், கப்பலில் இருந்து இறக்கப் பட்ட வண்டிகளில், தக்ஷின் கங்கோத்ரி நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

        வாருங்கள், அவர்களுக்கு முன்னே சென்று, தக்ஷின் கங்கோத்ரியை ஒரு முறை நன்றாக பார்த்து விடுவோம்.

27 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 4


வெயிலில் வாடும் இரவு
     

நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிறது.

     என்ன இரவு 8.30 மணிக்கு, சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்ததா? யாரிடம் கதை விடுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை.

24 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 3


அண்டார்டிகா



      உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.

      அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற் பகுதி ஆகும்.

        தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

     ஆனாலும் அனைவரின் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.

     கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் ட்ரேக்  (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.

     உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக் அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.

     எனவே இப்பகுதி இன்றும்  ட்ரேக் பாதை ( Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.

22 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 2


கொந்தளிக்கும் கடலில்
     

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

     சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.

18 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில்

    நண்பர்களே, வணக்கம். நலம்தானே.

     நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

     நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது.

    ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.

     நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்கின்றன அல்லவா?

12 ஆகஸ்ட் 2015

ஒளி பிறந்தது


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
                                   பாரதியார்



    நண்பர்களே, என் அலைபேசி அழைத்தது.

சார், நல்லா இருக்கீங்களா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குரலில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா கூறினார்கள்.

மகிழ்வினும் பெரு மகிழ்வு, தன் குழந்தையின் குரலினைக் கேட்பதில் அல்லவா இருக்கிறது.

   பிறந்த நாள் என்றால் என்ன? என்று கேட்கப் பெற்ற கேள்விக்கு, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வழங்கிய, பதில் இருக்கிறதே, அது ஒன்றே போதும்.

05 ஆகஸ்ட் 2015

அக்னிக் குஞ்சு


இனிய எண்ணங்களே, போய்விடுங்கள்
கவலை கொண்ட நெஞ்சமும் இனி வேண்டாம்
விழித்திருக்கும் இரவுகளுக்கு
வேலை காத்திருக்கிறது.
பகற் பொழுதுகள்
பரபரப்பாக இருப்பினும்
எனது நினைவுகள் எல்லாம்
இராமேசுவரம் கடற்கரையில்
நிலைகுத்தி நிற்கின்றன.

                                ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்


     ஆண்டு 1946. அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன், பள்ளியில் இருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.

     இப்பள்ளியில் படித்து முடித்தாகிவிட்டது. இனி படிப்பைத் தொடர, வேறு ஊருக்குத்தான் சென்றாக வேண்டும். பாசமிகு தாய், தந்தையை விட்டுப் பிரிந்தாக வேண்டும். குடும்பத்தை விட்டுவிட்டு, தனியனாய், தன்னந் தனியனாய், ஓர் புத்தம் புதிய ஊரில், ஓர் புத்தம் புதிய பள்ளியில்தான், இனி படித்தாக வேண்டும்.

01 ஆகஸ்ட் 2015

கனவின் நாயகன்

        

 நாள் 30.7.2015 வியாழக் கிழமை காலை 8.00 மணி. இராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை. சுப்பையா நகர், நான்கு ரோடு சந்திப்பு.

      நாங்கள் சென்ற மகிழ்வுந்து, காவலர்களால் தடுத்து நிறுத்தப் படுகிறது.