27 நவம்பர் 2021

அரசு கவிதைகள்

 


நீ …

எங்கள் வியப்புகளின்

குறியீடு.

மாதச் சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?

  

21 நவம்பர் 2021

தமிழறம்



     அறம்.

     தமிழ் மொழியைத் தங்கள் தாய்மொழியாய் பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

     இவர்கள் பள்ளியில், முதல் வகுப்பில் நுழைந்தவுடன், முதல் நாள், தங்கள் செவி குளிர கேட்கும் ஔவையின் அமுதமொழி, ஆத்திசூடி.

    

10 நவம்பர் 2021

திருநாவுக்கரசர்

 


 

     ஆண்டு 1975.

     கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன் கல்வி பயின்ற கல்லூரி.

     சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவுடன் இயங்கி வந்த காலம்.

     இளங்கலை மாணவர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெளியிடப் பெற்ற நாள்.

     வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று முழக்கமிடுகின்றனர்.

     கல்லூரி வளாகம் முழுமையும் ஒரே பரபரப்புடன் காணப்படுகிறது.

     ஆனால் ஒரு மாணவர் மட்டும், முகத்தில் கவலையின் ரேகைகள் படர, மகிழ்வின்றி, ஆழ்ந்த யோசனையோடு திரும்பிச் செல்கிறார்.

    

06 நவம்பர் 2021

சொர்க்கம்

 

     சொர்க்கம் மதுவிலே,

     சொக்கும் அழகிலே.

     சொர்க்கம் மதுவிலே என்னும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, மெய்ப்பித்து வருகிறது இன்றைய தமிழகம்.

     ஊரெங்கும் மதுக் கடைகள்.

     மதுவே சொர்க்கமாகிப் போனது, பல இலட்சம் மனிதர்களுக்கு.