30 டிசம்பர் 2017

உணர்வு விழா



     கரந்தை.

     மாலை 5.30 மணி

     24.12.2017 ஞாயிற்றுக் கிழமை

     மூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.

     வாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.

23 டிசம்பர் 2017

கவி ஆயிரம்



பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீர்த்துக் கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால்

எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசு படாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்

     1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.

16 டிசம்பர் 2017

காசு




    சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.

    இன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

    ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.

     இபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

02 டிசம்பர் 2017

பதிவர் திருவிழா





அறிவியக்கம் கண்ட தமிழ்நாடே
ஈதேகாண் யாம்கண்ட பாதைக்கு ஏறுநீ
ஏறுநீ, ஏறுநீமேலே
                  . பாவேந்தர்

அடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.

     கேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     சொல்லியவர் யார் தெரியுமா?