06 செப்டம்பர் 2017

ஆசிரியர் தினம்



     அம்மாகிட்ட ஒன்று சொல்லுவேன்
      டீச்சர்கிட்ட ஒன்று சொல்லுவேன்
ஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்

   எங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.

   அதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.

   நானும் உங்களைப் போலவே வருவேன்.


----

   உங்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களுக்குப் படிக்கச் கொடுப்பதையே, …………, ………………, …………, போன்ற பிள்ளைகளுக்கும் கொடுக்காதிங்க.

   ஏன் என்றால், நாங்கள் படித்து விடுவோம். ஆனால் அவர்களுக்குப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இதைத் தவிர உங்களிடம் குறை சொல்ல எதுவும் இல்லை.

---

     இவர் நடத்தும் பாடம் கணிதம், ஆங்கிலம் எனக்கு பசுமரத்தாணி போல், என் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. இவர் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறார். ஆனால் சார், உங்களுக்கு கோபம் ரொம்ப வருகிறது. அதனால் நீங்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

----

     இவர் சொல்லுக்கிணங்க, நான் என் படிப்பில் மிகவும் ஆர்வம் செலுத்தி, இனி நடக்கும் தேர்வுகளில், என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

     என் பெற்றோரின் நம்பிக்கையையும், எனது ஆசிரியரும் தந்தையும் ஆகிய ஜெயக்குமார் அவர்களின் ஆசையையும் நிறைவேற்றுவேன் என்று, நான் இன்றிலிருந்து உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

-----

     நண்பர்களே, இவையெல்லாம் என் வகுப்பு மாணவிகள் எழுதியவை.

     ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, என் வகுப்பில், பேச்சுப் போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும் நடத்தினேன்.

     எனது ஆசிரியர் என்பது கட்டுரைப் போட்டியின் தலைப்பு.

    ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, உங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களுள், உங்கள் மனதிற்குப்  பிடித்த ஆசிரியரைப் பற்றி, ஆசிரியையைப் பற்றி எழுதுங்கள் என்று கூறினேன்.

     வாழ்வில் முதன் முறையாக, பாடப் புத்தகத்தில் படித்ததை எழுதாமல், மனதில் படிந்திருந்த எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை, வார்த்தைகளால் கோர்த்து எழுதி அசத்திவிட்டார்கள்.

      உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போய்விட்டேன்.

       மாலை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்கானப் பரிசளிப்பு விழா.






















நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், முதுகலை உதவித் தலைமையாசிரியர் திரு ஜி.விஜயக்குமார், பட்டதாரி நிலை உதவித் தலைமையாசிரியை திருமதி அ.இராணி, முதுகலை ஆசிரியர் திரு எஸ்.சரவணன், திரு ஆர்.லெனின்., உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன், உடற்கல்வி இயக்குநர் திரு கே.திவாகர், பட்டதாரி ஆசிரியர் திரு அ.சதாசிவம், திரு ஜெ.கிருட்டின மோகன், ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராசன், பட்டதாரி ஆசிரியைகள் திருமதி ப.உஷாராணி, திருமதி எஸ்.கவிதா, திருமதி எஸ்.தமிழ்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

        நண்பர்களே, ஒரு செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன்.

       கடந்த 3.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில், நாகப்பட்டினம், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில், நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம் ஏற்று நடத்திய, பன்னாட்டு லயன்ஸ் சங்க, மாவட்ட ஆசிரியர் தின விழா சிறப்புடன் நடைபெற்றது.

      தந்தி தொலைக் காட்சி, தலைமை செய்தி ஆசிரியர் திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

      இவ்விழாவின்போது, 93 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திலகம் என்னும் விருது வழங்கப்பெற்றது.

      இவ்விருதினைப் பெற்றவர்களுள் அடியேனும் ஒருவன்.





ஆசிரியர் திலகம் விருதிற்கு என்னைத் தேர்வு செய்த மண்டலத் தலைவர் திரு ராஜன் அவர்களுக்கும், தஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்கத் தலைவர் திரு ரமேஷ், செயலாளர் திரு அண்ணாசாமி, பொருளாளர் திரு அப்துல்லா, இணைப் பொருளாளர் திரு க.பால்ராஜ், உறுப்பினர் திரு ஜெகதீசன் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


      இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, புறப்பட்ட எங்களை, ஆர்வத்தோடு, தனது மகிழ்வுந்தில், தானே மகிழ்வுந்தினை ஓட்டியபடி அழைத்துச் சென்று, அழைத்து வந்த, என் முன்னாள் மாணவர் திரு.பா. மணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்வு அடைகின்றேன்.

33 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ,ஆசிரியர் தினத்தன்று குருவுக்கு சிறப்பு செய்த பா .மணிக்கும் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் திலகம் என்னும் அரிமா விருது பெற்றமைக்குப் பாராட்டுகள். அதற்கு நீங்கள் முற்றிலும் பொருத்தமானவர்.
    ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற உணர்வு ஏற்பட்டது. தலைமையாசிரியர் திரு.சரவணன் வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. //ஆசிரியர் திலகம் என்னும் விருது வழங்கப்பெற்றது.//

    வாழ்த்துக்கள் சகோ. பழைய மாணவர் சிறப்பு செய்கிறார் என்பதே மிகவும் சிறப்பு.
    பழைய மாணவர் பா. மணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் !இன்னும் பல விருதுகள் உங்களை அலங்கரிக்கட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை, விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள். ஸ்கூல் யூனிஃபோம் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் நண்பரே !

    ஆசிரியர் திலகம் பொருத்தமான பட்டம் மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க நலம்

    தம +1

    பதிலளிநீக்கு
  7. ஆசிரியர் திலகம் விருதுக்கு வாழ்த்துகள். மதுரை சரவணன் கூட இது போன்ற விருதுகளுக்கு தகுதியானவர். உங்களைப்போன்ற சிறந்த ஆசிரியர்களால் மாணவர்கள் பயன் அடைகிறார்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. உணர்வுகள் கிளர்ந்து எழுந்து செயலாக்கமாக பதிவாகும்போது அந்த செயல் ஈடு இணையற்றதாக போற்றப்படுகிறது.தலைவன் கட்டளை இடுபவனாக மட்டுமில்லாமல் வழி நடத்துபவனாகவும் தன்னவர்கள் உச்சத்தைத் தொட உதவும் ஏணிப்படிகளாகவும் இருக்கும்போது புகழும் பாராட்டுதல்களும் அவன் பாதத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் புதுமை இல்லை நண்பரே.
    வாழ்த்துகள் !.

    பதிலளிநீக்கு
  9. தாமதமான ஆசிரியர் தின வாழ்த்துகள். விருது பெற்றமைக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மாணவர்களின் திறமையைக் கண்டு வியந்தோம், அருமை. ஆசிரியர் திலகமான நீங்கள் மென்மேலும் பல விருதுகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது உழைப்புக்கும், எழுத்துக்கும் கிடைத்த வெற்றி கண்டு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. விருது பெறறமைக்கு வாழ்த்துகள்.
    தங்களின் வழியில் நல்ல மாணாக்கர்கள் உருவாகின்றார்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. >>> ஆசிரியர் திலகம் என்னும் விருது வழங்கப் பெற்றது..<<<

    தாங்கள் இன்னும் பல விருதுகளைப் பெறவேண்டும்..

    தங்களுக்கும் தாங்கள் வழி நடாத்தும் மாணவச் செல்வங்களுக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துகள் தோழர். என் மாணவர்கள் எழுதிய கடிதங்களையும் எண்ணங்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். மகிழ்ச்சியான பதிவு தோழர்

    பதிலளிநீக்கு
  14. ஆசிரியர் திலகத்துக்கு வாழ்த்துகள் எனிரு மருமகள்களும் ஆசிரியைகள் ஆசிரியர் தினத்தன்று அவர்களுக்கு மாணவ மாணவியர் அளிக்கும்பரிசே இம்மாதிரியான பூங்கொத்துகள்தான்

    பதிலளிநீக்கு
  15. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
    மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.பெற்றோர் இவ்வுலகத்திற்கு கொடுத்த குழந்தைகளுக்கு தாங்கள்தாங்க இவ்வுலகத்தையே கொடுக்கிறீர்! நிலம்,மலை,நிறைகோல்,மலர்நிகர் மாட்சியும்.,உலகியல் அறிவோடு உயர்குணம் இயையவும்.,அமைவன நூலுரை ஆசிரியர்! என்னும் நன்னூலாம் சங்க இலக்கியநூலின் அறிவுறுத்தலுக்கேற்ப நிலம் போன்று பொறுமையுடனும்,மலை போன்ற உயர்வான நற்குணங்களுடனும்,நிறைகோல் போன்று அனைத்து மாணவக்குழந்தைகளுக்கும் நடுநிலையாகஅரவணைத்து,மலர்போன்ற முகமலர்ச்சியுடனும் கற்றல்&கற்பித்தலின் ஊடாக அறிவைத்தந்து மதிப்பெண்கள் பெறுவதோடு மதிப்போடு வாழவும் கற்றுக்கொடுக்கும் தாங்களே தங்களது மாணவக்குழந்தைகளின் சொற்படி இனி நடப்பதாக தெரிவித்துள்ளீர்! சிறப்பான வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியர் தின வாழ்த்துகள்! த ம 7

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் சார். தங்களின் சேவை மென்மேலும் வளர்ந்து இன்னும் பல விருதுகளை பெறவேண்டும் என்று வணங்குகிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஆசிரியர் திலகம் - மகிழ்ச்சி ஐயா.. மேலும் பல சிறப்புகளை நீங்கள் பெற எனது வாழ்த்துகள்....

    ஆசிரியர் தின வாழ்த்துகளும்.....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் உங்களிடம் பயிலும் மாணாக்கருக்கும் .

    கோ

    கோ

    பதிலளிநீக்கு
  21. ஓட்டுப்பெட்டியை காணாததால் ஓட்டு போடவில்லை..அய்யா..

    பதிலளிநீக்கு
  22. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான பதிவு. மாணவர்களின் உள்ளத்தில் இருப்பவற்றை ஆசிரியர்களாகிய நாம் அறிந்து கொள்ளும் பொழுது ஆசிரியர்களின் பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துகள் நண்பரே!/சகோ!!! கொஞ்சம் தாமதமாகிவிட்டது வருந்துகிறோம்..

    மேலும் மேலும் தாங்கள் பல சிறப்புகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  24. ஆகா சூப்பர் வாழ்த்துக்கள்!ஆசிரியப்பணியும் அதை ஒட்டிய எ ண்ணங்களுக்கும் அதற்கு கிடைத்த வெகுமதிக்குமாய் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. விருது பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. விருது பெற்றமைக்கு எனது நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. பொருத்தமானவருக்குத் தான் விருதளித்துக் கௌரவித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சகோதரரே!

    மாணவர்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வது மிகவும் சிறப்பான விடயம். எம் நிறைகள் தெரிய வருவது போல் குறைகளும் தெரியவரும். திருத்திக் கொள்ளலாம்.

    இங்கு அடிக்கடி மாணவர்களிடமிருந்து ரகசியமாக feedback எடுப்பார்கள். ஒரு தடவை யாரோ ஒரு மாணவ ஆசிரியர் பற்றி, 'அதிகம் கைபேசியைப் பயன்படுத்தாதிருந்தால் நல்லது,' என்று எழுதியிருந்தார்கள். :-)

    பதிலளிநீக்கு
  28. உங்கள் அனுபவங்களையும் எழுத்தையும் படிக்கின்றபோது உங்களை நேரில் எப்போது சந்திக்க சந்தா்ப்பம் சரிவரும் எனக் காத்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு