ஆண்டு 1897.
சென்னை.
இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த
உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.
மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.
நீண்ட வெண்ணிற மேலங்கி.
எட்டு முழ வேட்டி
ஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத்
தலைப் பாகை.
கம்பீரமான முகம்
அடர்ந்த மீசை
கனிவானப் பார்வை
இளகிய மனம்
அள்ள அள்ளக் குறையாத செல்வம்
சில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின்
கோடுகள்.
இப்பெருமகனார் வாழ்ந்த பகுதியிலும், அதன் சுற்று
வட்டாரங்களிலும் வாழ்ந்த, குடும்பங்களைச் சாரந்த சிறுவர், சிறுமிகள் எந்நேரமும் தெருவிலேயே
சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
ஏன் பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றுகிறார்கள்.
விசாரித்தார்.
வண்ணாரப்
பேட்டையில் இருந்த சீனிவாச ராகவாச்சாரியார் கீழ் நிலை செகண்டரிப் பள்ளி என்னும் தொடக்கப்
பள்ளியை, இழுத்து மூடிவிட்டார்கள்.
காரணம், போதிய நிதி வசதி இன்மை.
யோசித்தார்
வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை, சஞ்சீவிராயன்
பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய பகுதியினைச் சார்ந்த மாணவர்களின் கல்வி. இப்பள்ளியை
மூடியதால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.
என்ன செய்யலாம்?
யோசித்தார்
நாமே
ஒரு பள்ளிக் கூடத்தைத் தொடங்கினால் என்ன?
முடிவெடுத்தார்.
1897 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மூன்றாம் நாள்,
தன் இல்லத்திலேயே, தன் தமையனாருடன் இணைந்து, ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
வட
சென்னை இந்து செகண்டரிப் பள்ளி
ஏழை மாணவர்களுக்காகத்தான் தொடங்கினார்.
கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் படித்தால்
போதும் என்று எண்ணினார்.
ஆனாலும் மிகக் குறைவான மாணவர்களே பள்ளிக்கு
வந்தனர்.
பள்ளியில் படிப்பதற்குத்தான் கட்டணம் எதுவுமே
வாங்குவதில்லையே? அப்படியிருந்தும், ஏன் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகிறார்கள்?
விசாரித்தார்.
ஏழ்மையில்
வாடும் குடும்பங்கள்.
சாப்பாட்டிற்கே வழியில்லாத போது படிக்கவா
வருவார்கள்.
இளகிய மனமும், வள்ளல் குணமும் படைத்த அம்மனிதர்,
அன்றே முடிவெடுத்தார்.
இனி
ஒவ்வொரு நாளும், மாணவர்கள் அனைவருக்கும், பள்ளியிலேயே மதிய உணவு வழங்கப்படும்.
பிள்ளைகளை அனுப்புங்கள்.
படிப்பும்
தருகிறோம், சோறும் போடுகிறோம்.
சொந்தப் பணத்தை வாரி இறைத்து உணவிட்டு, கல்வியை
ஊட்டினார்.
கர்மவீரர் காமராசருக்கும் முன்னே, மதிய உணவுத்
திட்டத்தை அறிமுகப் படுத்தி வெற்றி கண்ட, மாமனிதர் இவர்.
பின்னாளில், நீதிக் கட்சியைத் தொடங்கிய போதும்,
இவர் அதிகம் வலியுறுத்தியது கல்வியைத்தான்.
அன்பர்களே,
நம்மை நாமே எவ்வாறு உயர்த்திக் கொள்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
நமது
தேவைகளில் முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் நிற்பது கல்வியே.
நமது
சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு
கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு
ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.
பள்ளிக்குச்
செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.
நண்பர்களே, 1897 இல் இவர், தன் இல்லத்தில் தொடங்கிய
பள்ளி, மெல்ல மெல்ல வளர்ந்து, கல்லூரியாய் உயர்ந்து, இன்று இவரது பெயரையேத் தாங்கி,
நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றது..
தியாகராயர்
கல்லூரி
இவர்தான்
வெள்ளுடை வேந்தர்
சர் பிட்டி தியாகராயர்
சென்னையில் டி.நகர், டி.நகர் என்று நாம் செல்லமாக
அழைக்கிறோமல்லவா? முழுப் பெயரினையும் உச்சரிக்க மறந்தோ அல்லது முழுப் பெயரையே மறந்தோ,
உச்சரிக்கிறோமல்லவா, அந்த டி.நகர், இவரது பெயரைத்தான் தாங்கி நிற்கின்றது.
தியாகராய
நகர்
டி.நகர், டி.நகர் என்று கூறிக் கூறி, தியாகராயரை
நாம் மறந்தே போய்விட்டோம்.
வார்த்தைகளை சுருக்கி பழகிய நாம் அவ்வகையில் வரலாறுகளையும் மறந்தே போகிறோம் என்பது கொடுமைதான் நண்பரே
பதிலளிநீக்குஆம், வரலாறு முக்கியம்.
பதிலளிநீக்குதம நான்காம் வாக்கு.
அருமை
பதிலளிநீக்குநாம் பழம் பெருமைகளைப் பேசுவோமே தவிர
பதிலளிநீக்குபாதுகாக்க விரும்பமாட்டோம்..
அந்த வகையில் இதுவும் ஒன்று..
தியாகராயர் புகழ் வாழ்க..
அருமையான பகிர்வு!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குநல்லமனிதரை நினைவூட்டியது அற்புதம்.
கல்வி தந்தவரை நாளும் நினைவில் கொள்வோம்.
நல்ல மனிதர் புகழ் வாழ்க!
உங்களுக்கு நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆச்சரியத்தை தந்தது உங்கள் பதிவு பாராட்டுக்கள் .
பதிலளிநீக்குகல்வி கொடுத்த தியாகராயர் செய்தி பற்றி புது தகவல் அறிந்தேன்.
பதிலளிநீக்குஉண்மையே.. ஒருவருக்கு எதுவும் தேவையில்லை.. படிப்பிருந்தால் அனைத்தையும் பெற்று விடலாம்.. நிறையத் தகவல்கள் தெரிந்து கொண்டேன் இங்கு வந்து...
பதிலளிநீக்குமுதலில் பசியைப் போக்கினால்தான் எதுவும் செய்ய முடியும்.
நல்ல பகிர்வு ..நீங்கள் சொல்வது சரி ..தியாகராய நகர் என்று முழுமையாக குறிப்பிட்டால்தான் பிற்கால சந்ததிக்கும் அவர் புகழ் செல்லும் ..
பதிலளிநீக்குகாமராசரின் முன்னோடியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. பாட புத்தகத்தில் இடம் பெறாத வரலாற்று உண்மைகளை தெரியப்படுத்தமைக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குyes I too read about him. good post
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே !
பதிலளிநீக்குஅற்புதமானவர்கள் வாழ்ந்தார்கள் அன்று ஆனால் இப்போ பணப்பேய்கள் மட்டுமே வாழ்கின்றன ...! இனியாவது அந்த மகானின் முழுப்பெயரையும் இந்தத் தி நகர் அறியட்டும் வாழ்த்துகள் !
தம +1
நல்ல பதிவு.வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குவெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் அவர்களது அறப்பண்பை பற்றி சிறப்பாக எழுதியமைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅவர் என்றும் வாழ்வார் த ம11
பதிலளிநீக்குஅருமையான பதிவு!! கல்வி தந்த நல்ல மனிதரை இங்குச் சிறப்பித்துப் பதிவு இட்டமைக்கு வாழ்த்துகள்! நாங்களும் தெரிந்து கொண்டோம்!
பதிலளிநீக்குதியாக உள்ளங்கள் இருக்கிறது வரை
பதிலளிநீக்குமண்ணும் மனிதரும் நன்றாக இருக்கும்/
அவர்கள் நினைவு போற்றுவோம்/
அ்றிமுகத்துக்கு நன்றி!!!
பதிலளிநீக்குதியாகராயரைப் பற்றியும் அவருடைய சேவைகளைப் பற்றியும் அறிந்தேன். எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு. கல்விக்காக தம் சொத்தையே செலவு செய்தவர்கள் இருந்த இடத்தில், கல்வி இப்போது வியாபாரமாகி இருக்கிறது..... :(
பதிலளிநீக்குத.ம. +1
மறக்கக்கூடாத மாமனிதரைச் சிறப்பிக்கும் பதிவு.
பதிலளிநீக்குபாராட்டுகள் ஜெயக்குமார்.
தமிழ்மணம் 19
பதிலளிநீக்குநல்ல பதிவு.
https://kovaikkothai.wordpress.com/
சென்னையில் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அதில் ஒன்றை நினைவுபடுத்தியதற்குப் பாராட்டுகள். த ம
பதிலளிநீக்குஉண்மையை உலகுக்கு சொன்ன தங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்றி நண்பரே
பதிலளிநீக்குஅரிதான தகவல். நன்றி சகோதரரே!
பதிலளிநீக்கு