வாழ்கநீ எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்மாநீ வாழ்க வாழ்க
- மகாகவி பாரதி
நண்பர்களே, நம் பாரதத் திருநாடானது, தனது
68 வது சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு தியாகி, கரந்தை காந்தி அவர்களைத்
தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.
ச.அ.சாம்பசிவம் பிள்ளை அவர்கள். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே
பொறியியல் பட்டம் பெற்று, பொதுப் பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.
![]() |
தமிழவேள் உமாமகேசுவரனார் |
சாம்பசிவம் அவர்கள் சேலம், திருச்சி முதலிய
நகரங்களின் பணியாற்றியவர். திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவர்
உள்ளத்தில் ஓர் உறுத்தல் நிரந்தரமாய் குடியேறியது.
நம்மை அடிமைப் படுத்தி அரசாளும், ஆங்கிலேயர்களின்
கீழ் சேவகம் செய்வதா? என்ற ஓர் எண்ணம், சாம்பசிவம் பிள்ளை அவர்களின் உள்ளத்தில்,
வேர் விட்டு வளரத் தொடங்கியது.
பெருங்கொலை
வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர்
மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ யறிந்தாய்
நெருங்கிய
பயன்சேர் ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு
பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே
- மகாகவி பாரதி
மகாத்மா காந்தி அவர்கள் 1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தை
அறிவிக்கிறார்.
நண்பர்களே, அன்றே தன் பொறியாளர் பணியினைத்
துறந்தார். பொறியாளர் பணியினை மட்டுமல்ல, அதுநாள் வரை பத்திரமாய் பாதுகாத்து வந்த,
அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும், கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.
காற்றில் பறந்த சான்றிதழ்களின் ஒவ்வொரு துண்டும், சுதந்திரப் புறா
பறப்பதைப் போல் தோன்றியது. அக்கணமே, இந்தியாவே சுதந்திரம் பெற்றுவிட்டதைப் போல்
ஓர் உணர்வு. நடக்கத் தொடங்கினார். திருச்சியில் இருந்து நடந்தார், நடந்தார்,
நடந்து, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் காலடி எடுத்து வைத்ததும்தான், நடையை
நிறுத்தி ஓய்வெடுத்தார்.
அன்று முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கமே,
இவரது இல்லமாய் மாறியது.
தமிழ்த் தலமாம் கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின், கருவறையாம், தமிழ்ப் பெருமன்றத்தை, சிலப்பதிகாரத்தில், மாதவி
நடனமாடிய மேடையைப் போலவே, அதே அளவினதாய், பாங்குற, எழிலுற கட்டியெழுப்பியவர்
இவர்தான்.
நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி
நிலையங்களுக்கும், விளையாட்டுத் திடலுக்கும் இடையே ஓர் ஆறு ஓடுகிறது. இவ்வாற்றின்
பெயர் வடவாறு.
வடவாற்றினைக் கடந்திட, இரு நீண்ட இரும்புக்
கயிறுகளை வரவழைத்து, அழகியதோர் தொங்கு பாலத்தை அமைத்துக் கொடுத்தவரும் இவர்தான்.
கரந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில்,
மிகவும் தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குத் தினமும் செல்வார். அங்குள்ள
சிறுவர்களை எல்லாம், அழைத்துக் கொண்டு வெண்ணாறு சென்று, அவர்களைக் குளிப்பாட்டி,
தலைக்கு எண்ணெய் தடவி, தலைச் சீவி விடுவார். சுத்தமாய் இருப்பது, தாம் இருக்கும்
இடத்தில் தூய்மையைப் பேணிப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்குப் போதிப்பார். ஒரு நாள்,
இரு நாள் அல்ல. நாள்தோறும் அவர் ஆற்றிய பணி இது. அந்நாளில் மிகவும் மகத்தான் பணி
இது. மிகவும் தாழ்த்தப் பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் காலடி எடுத்து வைப்பதே
மிகவும் பாபகரமான செயலாய் கருதப் பட்ட அக்காலத்தில், இத்தகு பணியினைச் செய்ய
எத்தனை நெஞ்சுரம் வேண்டும். அதனைத்தான் இவர் செய்தார்.
மதுரை.
காந்தியின் வாழ்விலும், தோற்றத்திலும்
மாற்றத்தைக் கொடுத்த ஊர் மதுரை. மேல் அங்கியைக் கழற்றி எறிந்து விட்டு, அரை ஆடை உடுத்தி, ஆண்டியின் கோலத்தில்,
அவர் ஐக்கியமடைந்தது மதுரையில்தான்.
மதுரையில் காந்தி, தன் மேலாடையைத் துறந்ததும்.
கரந்தையில் சாம்பசிவமும், தன் மேலாடையைத் துறந்தார்.
இறுதிவரை இடுப்பில் ஒரு வேட்டி, மேலே ஒரு
சிறு துண்டு.
கரந்தையில் ஆறு மாதம், சிறையில் ஆறுமாதம்
என இவர்தம் வாழ்வு கழிந்தது. சாம்பசிவம் என்னும் பெயர் மெல்ல, மெல்ல மறைந்தது.
கரந்தை காந்தி, கரந்தை காந்தி என்னும் பெயரே, இவர்தம் பெயராய் நிலைத்தது.
சுதந்திரத்
திருநாளாம்
இந் நன்நாளில்,
பொறியாளர்
பதவியைத்
துச்சமெனத்
தூக்கி எறிந்த
சுதந்திரப்
போராட்ட வீர்ர்
கரந்தை
காந்தி
சாம்பசிவம்
பிள்ளை
அவர்களைப்
போற்றி
வணங்குவோம்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
காலத்துக்கு தகுந்த மாதிரி பதிவு எழுதிய விதம் கண்டு மகிழ்ந்தேன் அறியாத வரலாற்றுப்பதிவு ஐயா சிறப்பாக எடுத்துரைத்துள்ளீர்கள் இவர்கள்அன்று சிந்திய இரத்தின் விளைவுதான் இப்போது உள்ள சமூதாயம் நன்றாக வாழ்கிறது வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம் நண்பரே,இவர்களின் அன்றைய தியாகத்தைத்தான் ,இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
நீக்குநன்றி நண்பரே
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கரந்தை காந்தி சாம்பசிவம் பிள்ளை
பதிலளிநீக்குஅவர்களைப்போற்றிவணங்குவோம்.
நன்றி சகோதரியாரே
நீக்குஇந்தநாளில் இவரை நினைவுகூர்வது சாலச்சிறந்தது நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு//காற்றில் பறந்த சான்றிதழ்களின் ஒவ்வொரு துண்டும், சுதந்திரப் புறா பறப்பதைப் போல் தோன்றியது. அக்கணமே, இந்தியாவே சுதந்திரம் பெற்றுவிட்டதைப் போல் ஓர் உணர்வு.//
பதிலளிநீக்குமிகவும் அருமையான ரஸிக்க வைக்கும் உணர்வாக உள்ளது.
கரந்தை காந்தி சாம்பசிவம் பிள்ளை
அவர்களைப் போற்றி வணங்குவோம்.
சுதந்திரத் திருநாளில் - கரந்தை காந்தி திரு.சாம்பசிவம் பிள்ளை
பதிலளிநீக்குஅவர்களைப் போற்றி வணங்குவது சிறப்பு..
அவர் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மகிழ்ச்சி..
சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்..
அவர் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்ந்திருக்கிறோம்
நீக்குநன்றி ஐயா
திரு சாம்பசிவம் பிள்ளை பற்றி இன்றுதான் அறிந்தேன். நன்றி நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதேவையான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமதுரையிலும் ,மதுரை காந்தி என்று போற்றப் பட்டவரை மக்கள் மறந்து விட்டார்கள் ,நீங்கள் கரந்தை காந்தி அவர்களை நினைவு கூர்ந்து இருப்பது பாராட்டத் தக்கது !
பதிலளிநீக்குத ம 3
கரந்தை காந்தி அவர்களைப்பற்றி அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குசுதந்திர தின நல் வாழ்த்துக்கள். இந்த சமயத்தில் அவரை வணங்குவது சிறப்பு.
கரந்தை காந்தி அவர்களை வணங்குகிறேன்.
நன்றி சகோதரியாரே
நீக்குஐயா,
பதிலளிநீக்குதிரு கரந்தை காந்தி சாம்பசிவம் பிள்ளை
அவர்களை இந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்குகிறேன்.
நன்றி ஐயா
நீக்குகரந்தை காந்திக்கு வணக்கம்.
பதிலளிநீக்குதகுந்த நேரப்பதிவு.
இனிய சுதந்திர தின வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரியாரே
நீக்குகரந்தை காந்தி அவர்களை பற்றிய புதிய அரிய தகவல்களை தந்தமைக்கு மிக்க பாரட்டுக்கள் அய்யா.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபடிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது. எத்தகைய பெருந்தகை! எத்தகைய தியாகி!
பதிலளிநீக்குகரந்தை காந்தியை வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு ஜெயக்குமார் ஐயா.
கரந்தை காந்தி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்!
பதிலளிநீக்குஅன்னார் போன்ற பல்லாயிரக் கணக்கானோர் செய்த தியாகம்,இன்று நம்மிடையே சுதந்திரம் வாய்த்திருக்கின்றது.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே
நீக்குஅருமையான பதிவு! சுதந்திரத்திருநாளில் தியாகிகளின் பொன்னடி போற்றி நினைவுகூர்வோம்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகரந்தை காந்தி பற்றி அறியத் தந்ததற்கு நன்றி சகோதரரே.
பதிலளிநீக்குத.ம.7
நீக்குநன்றி சகோதரியாரே
நீக்குகரந்தை காந்தி சாம்பசிவம் பிள்ளை பற்றி இன்றுதான் அறிந்தோம். அவரைப் போற்றிக் கொண்டாட வேண்டும். மிக்க நன்றி
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாலத்திற்கேற்ற பதிவு அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
கரந்தைமண் காத்திட்ட காந்தியின் வாழ்க்கை
சிரங்கொள்ள சேரும் சிறப்பு !
வாழ்க வளமுடன்
நல்ல வரலாற்றுத் தகவல். நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல வரலாற்றுத் தகவல். நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்லதொரு அறிமுகம் நண்பரே.
பதிலளிநீக்குஅருமையான அவசியமான பதிவு புதிய தகவல் அறியத் தந்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅன்புள்ள ஜெயக்குமார்
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு.
காலத்தின் அழியாத பதிவு.
ஒரு வேண்டுகோள்.
இதுபோன்று கரந்தையிலுள்ள எல்லோரையும் தொகுத்து தாருங்கள் நான் புத்தகமாக உங்கள் பெயரில் வெளியிடுகிறேன்.
நல்ல பணிக்கு நான் துணை நிற்கிறேன்.
அவசியம் அனைவரைப் பற்றியும் தொகுத்துத் தருகிறேன் ஐயா
நீக்குநன்றி ஐயா
திரு. சாம்பசிவ பிள்ளை அவர்களைப் பற்றி இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குசுதந்திர தின வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குஒரு மாமனிதரைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. இவ்வாறான பதிவுகள் தமிழக வரலாற்றில் தங்களின் முக்கிய பங்களிப்பு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதெரியாத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கரந்தைவாழ் காந்தியின் கட்டுரையைக் கண்டு
வரைந்தேன் கருத்தை மகிழ்ந்து!
சும்மா கிடைத்ததா இந்தச் சுதந்தரம்
அம்மா! அளத்தல் அரிது!
நாட்டின் விடுதலையை நாடிய நல்லோரைப்
பாட்டில் தொழுதேன் பணிந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பதிலளிநீக்குதமிழ்மணம் 13
நன்றி ஐயா
நீக்குதிரு சாம்பசிவம் பிள்ளையை கரந்தை காந்தியாக அறிமுகம் செய்ததற்கு நன்றி ஐயா. சரியான அறிமுகம் இல்லாதோர் இன்னும் எத்தனை பேரோ. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅதிக எண்ணிக்கையில்தான இருப்பார்கள் ஐயா
நீக்குநன்றி ஐயா
மக்கள் மறந்து போன சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியவாதி ச.அ.சாம்பசிவம் பிள்ளையின் தியாகத்தினை எல்லோரும் அறியச் செய்த கட்டுரை. எனது உளங்கனிந்த 68 ஆவது இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம.14
நன்றி ஐயா
நீக்குஇனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎண்ணற்ற வீரர்கள் இவரை போன்று
பதிலளிநீக்குதன்னலமற்று ஆற்றிய போரில் பெற்ற சுதந்திரம்
நன்றி ஐயா
நீக்குஇதுபோன்ற தியாகிகளின் வரலாறை நீண்டு எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஅவசியம் எழுதுவேன் தோழர்
நீக்குநன்றி தோழர்
அருமையான கட்டுரை...
பதிலளிநீக்குநிறைய அறியத் தந்தீர்கள் ஐயா...
நன்றி நண்பரே
நீக்குசிறந்த சுதந்திரநாள் பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி நண்பரே
நீக்குகரந்தை காந்தியைப்போன்ற , இன்னும் வெளியுலகம் அறியவேண்டிய, ,பலரும் மறக்கப்பட்டிருப்பது துயரமான ஒன்று!
பதிலளிநீக்குவெளிச்சத்திற்கு வராதோர் அதிகம் ஐயா
நீக்குதங்கள் வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகின்றேன் ஐயா
பயணக் கட்டுரையினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
நன்றி ஐயா
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ’கரந்தை காந்தி’ திருமிகு.சாம்பசிவம் பிள்ளை அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு என்னை வேறொரு தளத்திற்கு சிந்திக்க வைத்துள்ளது. நமது பள்ளியின் மாணவர் பேரவைக் கூட்டத்தில் வாரந்தோறும் ஒரு மாமனிதரைப் பற்றி தாங்கள் சிறிய உரை ஆற்ற வேண்டும், அதுவும் கரந்தை காந்தியிலிருந்து தொடங்குங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். நாளை 18.08.2014 முதல் புதிய தலைமுறைக்கு ஒரு புதிய அனுபவத்தினையும் தியாகம் செய்தோரை, பெரியோரை மதிக்கும் பண்பினையும் வழங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். தங்களின் இப்பணி சிறக்க என்றும் உறுதுணையாக நம் இணைய தள நண்பர்கள் இருப்பார்கள். நமது கரந்தை ஹரணி அவர்கள் ஒரு புத்தகம் தயார் செய்து தருகிறேன் என்று குறிப்பிட்டிருப்பதே அதற்கு சான்று
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமாணவர்களிடம் பேசுவதைவிட மகிழ்ச்சி தருவது வேறு எது
சரியான நேரத்தில் முறையான பதிவு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகரந்தை காந்திக்கு சூட்டிய நல்லாபரணம் தங்களின் இந்த அருமையான கட்டுரை!!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநாட்டுக்குழைத்து தியாகம் செய்த பலரைப் பற்றி சரியாக அறியாமல் இருக்கிறோம். அப்படிப் பட்ட ஒருவரை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி . சாம்பசிவம் பிள்ளை அவர்களை நினவு கூர்ந்தது மிகவும் பொருத்தமானது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு