27 ஜனவரி 2017

தேவகோட்டை தேவதை



நடிகர்களுக்கு ரசிகனாய் இருப்பதில் பலன் உண்டா?
நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதைவிட,
அரசியல்வாதிக்குத் தொண்டனாய் இருப்பதைவிட
ஒரு எழுத்தாளருக்கு வாசகனாய் இரு

நீங்கள் தண்டிக்க நினைக்கும் மனிதர்கள் ?
அனாதைக் குழந்தைகள் உருவாகக் காரணமானவர்களை
குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களை
குழந்தைகளை பாலியல் வன்முறை செய்பவர்களை
அப்பாவிப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்களை
மனநலம் குன்றியோரைத் துன்புறுத்தும் பைத்தியக்கார மனிதர்களை

தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களைப் பற்றி?
பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களைவிட
தேர்தலைப் புறக்கணிப்பவன் உயர்ந்தவனே

     நண்பர்களே, கேள்விகளும், பொட்டில் அறைந்தாற்போல், தெறித்து வெளிவரும் பதில்களும் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன அல்லவா.

மாட்டு வண்டி பூட்டி வந்தார்  மாமன் மகன் ஐலசா
மாட்டு வண்டி பூட்டி வந்தார்  மாமன் மகன் ஐலசா
மணப்பாறை சந்தைக்கு நானும் போறேன் ஐலசா
மணப்பாறை சந்தைக்கு நானும் போறேன் ஐலசா

பஞ்சு மூட்டை எல்லாத்தையும் கூவி விற்போம் ஐலசா
பஞ்சு மூட்டை எல்லாத்தையும் கூவி விற்போம் ஐலசா
பொழுது சாயும் நேரத்துக்குள் முடிச்சிடுவோம் ஐலசா
பொழுது சாயும் நேரத்துக்குள் முடிச்சிடுவோம் ஐலசா

ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா
ஏலோ …. ஏலே….. ஏலே …… ஏலோ ….. ஏலே …. ஏலோ ….. ஐலசா

    நாம் சிறுவயதில், வயல் வெளிகளில், மக்கள் கூட்டம் கூட்டமாய் வேலை பார்க்கும் இடங்களில், கேட்டுக் கேட்டு மகிழ்ந்த இதுபோன்ற காட்சிகளை, பாடல்களை, நமது நாளைய சந்ததிகளால், காணத்தான் இயலுமா? கேட்டு ரசிக்கத்தான் முடியுமா?

     நாட்டுப்புறப் பாடல்களை இவரது எழுத்துக்கள் வெளிச்சமிட்டுக் காட்டும் அழகே அழகு.

இன்ஸ்பெக்டர்   யோய் ஏட்டு, யாருங்யா இவங்க? என்ன பிரச்சினை?
ஏட்டு            சார், அழகாபுரி நடுததெருவுல ரெண்டு பேர் கலாட்டா  
                 செய்யுறதா தகவல் வந்துச்சி. போய் பார்த்தா இவங்க சண்டை
                 போட்டுக்கிட்டு இருந்தாங்க. அள்ளிக்கிட்டு வந்துட்டோம்.
இன்ஸ்          இங்கே வாடா, உன் பெயரென்ன?
முதலாமவர்     துரை பாண்டி சார்
இன்ஸ்            உன் அப்பா பெயரென்ன?
முதலாமவர்      பாண்டி துரை சார்
இன்ஸ்           நீ வாடா, உன் பெயரென்ன?
இரண்டாமவர்   துரைசாமி சார்
இன்ஸ்          உன் அப்பா பெயர் என்ன?
இரண்டாமவர்   சாமி துரை சார்

      படிக்கப் படிக்க நம்மையும் அறியாமல் சிரிப்பு பீறிட்டுக் கிளம்புகிறது அல்லவா.

      சிரிப்பு

     உலகத்து உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு அற்புத உணர்வின் வெளிப்பாடு.

     மனிதனின் வேதனைகளை, மன அழுத்தங்களை, ஒரே நொடியில் மாற்றும் போக்கும் வல்லமை வாய்ந்தது சிரிப்பு.

      வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பர் நம் முன்னோர்.

      நம்மை வாய்விட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நடிகர், நடிகையர் பலரை திரையில் நாம் சந்தித்திருக்கிறோம்.

      ஆனால் எழுத்தில் நகைச் சுவையாய் எழுதி நம்மைச் சிரிக்க வைப்பவர்கள், சிந்திக்க வைப்பவர்கள் மிகவும் குறைவு.

      அதிலும், இணையத்தில் எழுதுபவர்களுள் நகைச்சுவையாய் எழுதுபவர்கள் மிக மிகக் குறைவு.

      பகவான்ஜி, தளிர் சுரேஷ் போன்ற ஒரு சிலரே, இணையத்தில் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

       இவர்களின் வரிசையில் பாசக்கார, மீசைக்கார நண்பரும் இணைந்து, தன் எழுத்துக்களால், நம்மைச் சிரிக்க வைக்கிறார். மேலும் மேலும் சிந்திக்கவும் வைக்கிறார்.

       நான் பலமுறை எண்ணிப் பார்ப்பதுண்டு.

      ஒருவரது தோற்றத்திற்கும், அவரது எழுத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று பலமுறை யோசித்தது உண்டு.

      உருவமும் எழுத்தும் முரண்பட்டே நிற்கின்றன.

      உருவமும் எழுத்தும் மட்டுமல்ல, இவரது பெயரும் எழுத்தும்கூட ஒரு அழகிய முரண்தான்.

கி ல் ல ர் ஜி

       கேட்கும்போதே நம்மை பயமுறுத்தும் பெயர்.

       பெயர் மட்டுமா, உருவமும்தான்.

       மிகப்பெரும் மீசைக்குள் ஒளிந்திருக்கும் முகம்.

       நின்று நிதானித்து, இரத்தினச் சுருக்கமாய் வெளிவரும் வார்த்தைகள்.

       ஆனால் நகைச் சுவையோ, அலைகடலென ஆர்ப்பரித்து எழுகிறது இவரது எழுத்தில்.


தேவகோட்டை தேவதை தேவகி

      நண்பர் கில்லர்ஜி அவர்களின் முதல் புத்தகக் குழந்தை.

      ஆரோக்கியமாய் பிறந்திருக்கிறது.

      கையில் தூக்கி, பக்கம் பக்கமாய்ப் புரட்டி, கண்களால் அரவணைத்துப் பாருஙகள்.

      உள்ளம் மகிழும், உதடு சிரிக்கும், மன அழுத்தம் விலகும்.

---

நேசமிகு நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு
பாசத்தோடு ஒரே ஒரு வேண்டுகோள்

தங்கள் நூலில், தங்கள் உரையில்
நான் சிரிக்கத் தெரியாதவன் அல்ல
சிரிப்பை இழந்தவன்
என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

படித்தவுடன் நெஞ்சத்தில் ஒரு பாரம்
சுயமாய் வந்து அமர்கிறது நண்பரே.

தங்களின் சோகம் பெரிதினும் பெரிது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும் இவ்வுலகில் யாருக்குத்தான் வேதனை இல்லை, வருத்தம் இல்லை, சோதனை இல்லை.

எங்களை எல்லாம் சிரிக்க வைக்கும்
தாங்கள்
இனிமேலாவது சிரிக்க வேண்டும்
அதனை
நாங்கள்
பார்க்க வேண்டும்
வாருங்கள்
வேதனை மறந்து சேர்ந்து சிரிப்போம்.






36 கருத்துகள்:

  1. கில்லர்ஜிக்கு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  2. வேதனை மறந்து சேர்ந்து சிரிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. படிக்க ஆவலாக இருக்கிறேன் இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு அறிமுகம். கில்லர்ஜிக்கு வாழ்த்துகள். பகிர்ந்தஉங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. சிரிப்பை இழந்த கில்லர்ஜியை சிரிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிடும் நண்பர்க்கு வாழ்த்துகளும்..வணக்கமும்.....

    பதிலளிநீக்கு
  6. சிரிப்பை இழந்த கில்லர்ஜியை சிரிக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிடும் நண்பர்க்கு வாழ்த்துகளும்..வணக்கமும்.....

    பதிலளிநீக்கு
  7. கில்லர்ஜி தோற்றத்திற்கு நான் ரசிகன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜிக்கு வாழ்த்துகள்!அவரது நூல் அறிமுகத்திற்கு நன்றி, வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவு மென்மையான மனதை கொண்ட மனிதரை... எனது அன்பான நண்பரை... வலை மூலம் கொண்ட நட்பிற்கு ஈடு இனணயில்லை...

    வாழ்த்துகள் ஜி...

    பதிலளிநீக்கு
  10. புத்தக விமர்சனம் மிக அருமை! வழக்கம்போல் தமிழ் துள்ளி விளையாடுகிறது உங்கள் எழுத்தில்! புத்தக விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு நல்லெண்ண‌த்துடன் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள் மனதை நெகிழ்த்துகிறது!

    பதிலளிநீக்கு
  11. சிரிப்பை இழந்த கில்லர்ஜி மீண்டும் சிரிக்கப் பிரார்த்தனைகள். விமரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் அறிமுகமே படிக்கத் தூண்டுகிறது !வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  13. எங்கள் பாசமிகு தோழர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் பாசமிகு தோழர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. எங்கள் பாசமிகு தோழர் கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் அறிமுகம் மிக அருமை.கில்லர்ஜி அவர்கள் துன்பத்தை விரட்டி இன்பத்தை அல்ல வாழ்த்துக்கள்.புத்தகம் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நண்பருக்கு வணக்கம்...
    பதிவு கண்டு மனம் சிலிர்க்கிறது வார்த்தை ஜாலம் அருமை

    இறுதியில் தங்களது கோரிக்கை கண்டேன் இதுவரை எனது சிரிப்பை தடுத்தவன் இறைவன் என்றே நினைத்திருந்தேன் தற்போது நான் நிரந்தரமாக இந்தியா வந்து விட்டதால் சில மனிதர்கள் அதை முற்றிலும் தடுப்பதற்கு புது அவதாரம் எடுத்து இருக்கின்றார்கள் அவர்கள் மூன்றாம் மனிதர்கள் அல்ல... உடன்பிறப்புகளே,,,,

    இருப்பினும் இனி வாழ்வில் எதிர் நீச்சலிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவேன் தங்களது அன்புக்கு கடன்பட்டு நிற்கின்றேன்.

    இதுவரை வாழ்த்திய உங்களுக்கும், இனி வாழ்த்த வரும் நட்பூக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியோடு உங்கள் கில்லர்ஜி

    நண்பரே இப்பதிவு இன்றுதான் எனது டேஷ்போர்டில் வந்தது ஆகவே வருகைக்கு தாமதம் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  19. தேவகோட்டை போனறு பல படைப்புகள் படைக்க இறைவனை வேண்டுகிறேன்.
    சரவணன்

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு அறிமுகம்.

    நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. நான் பலமுறை யோசித்ததுண்டு இந்த மனிதருக்குள் ஏதோ வேதனை/ அதை மறைக்க மற்றவரை சிரிக்க வைக்கிறார் சர்லி சாப்லின் நினைவு. வாழ்க்கையில் சோகத்தை அனுபவித்த அவர் பிறர் சிரிப்பதற்காகவே வாழ்ந்தார் கில்லர் ஜிக்கு வாழ்த்துகள் அதை வெளிச்சமிட்டுக் காட்டும் உங்களுக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  22. தேவகோட்டை ஜி அவர்கள் நூல் விமர்சனம் அருமை.
    அவரைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    குழந்தைகளுடன் சந்தோஷமாய் இருக்க வேண்டும் ஜி.
    உடன்பிறந்தவர்கள் இவரின் அன்பான உள்ளத்தை தெரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. தேவக்கோட்டை படைப்பாளிகள் கருப்பையில் சுமக்கும் பூமி. இதோ இன்னொரு குழந்தை..... வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு
  24. கில்லர் ஜீக்கு வாழ்த்துக்கள் .நூல்கள் பல இன்னும் வெளிவரட்டும்.

    பதிலளிநீக்கு
  25. கில்லர்ஜி சகோ அருமையான நண்பர். அவரைப் பற்றிய உங்கள் பதிவும் அருமை , நன்றி அண்ணா. எழுத்தில் விளையாடும் நகைச்சுவை சகோவின் வாழ்விலும் நிறையட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. கில்லர்ஜி சகோ அருமையான நண்பர். அவரைப் பற்றிய உங்கள் பதிவும் அருமை , நன்றி அண்ணா. எழுத்தில் விளையாடும் நகைச்சுவை சகோவின் வாழ்விலும் நிறையட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  27. அருமை அண்ணன் கில்லர்ஜியின் புத்தகம் குறித்து ஐயாவின் பகிர்வு அருமை....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. நூல் அறிமுகம் வழக்கம்போல் அசத்தலாக இருந்தது. கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். அவருடைய நூல் எங்கே கிடைக்கும்?
    கில்லர்ஜி அவர்களிடம் சொல்லுங்கள். நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

    பதிலளிநீக்கு
  29. good encouragement.its our duty to encourage new writers

    பதிலளிநீக்கு
  30. சிரிப்பு மனிதனை புதுப்பிக்கிறது என்பார்கள்,
    வாழ்த்துக்கள் கில்லர்ஜி அவர்களுக்கு,,,/

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள் சகோ,,

    தங்களுக்கும் நன்றிகள் சகோ,, அருமையான விமர்சனம்,, இது போல் இன்னும் பல நூல்கள் இயற்றுங்கள்.வாழ்த்துககள்,

    பதிலளிநீக்கு
  32. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. ...தேவக்கோட்டையாரின் நூலைப் பற்றிய தங்களின் பகிர்வு அவருடைய அரிய குணங்களை எங்கள் முன் கொணர்ந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  33. கில்லர்ஜிக்கு வாழ்த்துகள்!அவரது நூல் அறிமுகத்திற்கு நன்றி, வாழ்த்துகள்
    தமிழ் மணம் 7.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  34. சிரிப்புக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது...சிரித்து வாழப் பழகிக் கொண்டால் வேறொன்றும் வேண்டாம்......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு