பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்.
     வழிப்பறியும், கூட்டுக் கொள்ளையும், பல சிற்றூர்
வணிகர்களைப் பாடாப் படுத்திய காலம்.
     அது ஒரு கடை வீதி
     இருபுறமும் கடைகள் நிரம்பி வழிகின்றன.
     மக்கள் கூட்டம் அலை மோதுகிறது
     திடீரெனக் கூட்டத்தினரிடையே ஒரு பரபரப்பு
     கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், கையில் அரிவாளைத்
தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.



