நண்பர்களே, இந்த தமிழ் மகள்
நம் நில மகள் யார் தெரியுமா?
-----
ஆண்டு 1972.
சித்திரை முதல் நாள்.
ஈரோடு மாவட்டம், திங்களூர் என்னும் சிற்றூர்.
நிலமகள் பிறந்தார்.
தந்தை மாரிமுத்து, தாய் சரசுவதி.
பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
செல்வ மகள் பிறந்திருக்கிறார். செல்ல மகள்
பிறந்திருக்கிறார்.
மழலையைக் கொஞ்சிக், கொஞ்சி, சீராட்டி,
தாலாட்டி மகிழ்ந்தனர்.
ஆனாலும் ஆறு மாதங்களுக்குமேல் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
ஆறு மாதங்கள் கடந்த பிறகுதான்
தெரிந்தது, தங்கள் மகளால் இனி எப்போதும் நடக்க முடியாது என்பது புரிந்தது.
மழலையின் இரு கால்களும், இளம் பிள்ளை வாதத்திற்கு
இறையாகி இருந்தன.
தெருவில் பிள்ளைகள், ஓடி ஆடி விளையாடுவதை,
வீட்டுச் சன்னலின் கம்பிகளைப் பிடித்தவாரே, ஏக்கத்தோடு பார்ப்பார்.
எழு, ஓடு என மனம் சொல்லும்.
எழுந்தால், உடல் தானே கீழே விழும்.
எழுந்து நிற்கக் கூட முடியவில்லை.
தன் மகள் விளையாடக் கூட முடியாமல்,
மூலையில் முடங்கித் தவிக்கிறாரே, என தந்தை, தவியாய் தவித்தார்.
தன்
மகளும் விளையாட வேண்டும்
விளையாடியேத் தீர வேண்டும்
அதனை நான் கண்களால், என் இரு கண்களால் பார்த்தே
ஆக வேண்டும்.
தீவிரமாய் யோசித்தவர், இறுதியில்
தன் மகளை விளையாட வைத்தார்.
தமிழோடு,
தன் மகளை விளையாட வைத்தார்.
தலைமையாசிரியர், அதுவும் தமிழாசிரியர்
அல்லவா, இவர் தந்தை.
எனவே,
தமிழையே விளையாட்டு பொம்மையாக்கி, தன் மகளோடு விளையாட விட்டார்.
உயிர் எழுத்து 12
மெய்யெழுத்து 18
உயிர்மெய் எழுத்து 216
என இரண்டு வயதிலேயே, இவருக்கு
246 நண்பர்கள், விளையாடக் கிடைத்தனர்.
நண்பர்களை, மாற்றி மாற்றி இணைத்து, இணைத்து
சொல் சொல்லாய் சொல்லி மகிழ்ந்தார்.
இரண்டரை
வயதிலேயே, எழுதுகோலை எடுத்து, அழுத்தம் திருத்தமாய் எழுதத் தொடங்கினார்.
நான்கு வயதில், பாரதியார் கவிதைகளை,
முதல் பக்கத்தின் முதல் வரியில் தொடங்கி, கடைசிப் பக்கத்தின் கடைசி வரி வரை, தடங்கலின்றி,
தடுமாற்றமின்றி, மூச்சுவிடாமல், தெளிவாய் வாசிக்கும், தமிழ் மகளானார்.
தமிழ் உதிரத்தோடு கலந்தது
தமிழ் உறுதியைக் கொடுத்தது
உள்ளத்தில்
வலிமையைக் கொடுத்தது.
நம்பிக்கையை
வளர்த்தது.
உன்னால் முடியும், எழு, நட
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்கு400ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! தீந்தமிழில் நீங்கள் எழுதும் பதிவுகள் மேன்மேலும் பெருகவும் சிறக்கவும் நானூறு ஐநூறாகி, ஆயிரத்தையும் கடந்து தமிழின், தமிழர்களின் பெருமையை என்றும் இது போல கவிதைத்தமிழ்பாட இனிய நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநானூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு400 பதிவிற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகிய எழுச்சியூட்டும் பகிர்வு
பதிலளிநீக்குநானூறாவது பதிஸுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அருமை...தொடருகிறேன்....
பதிலளிநீக்குமிகச் சிறப்பான பகிர்வு....
பதிலளிநீக்கு400-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தாய் தமிழை எழுத்துக்களை மகளுக்கு நட்புக்களாகிய அந்த தந்தையும் நிலமகளும் யாரென அறிய ஆவல் அதிகரிக்குது ,தொடர்கிறேன் .
பதிலளிநீக்கு400 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
400ஆவது பதிவைக் கடந்தும் தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு400 பதிவிற்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குதமிழ் மகள் நில மகளாக மாறியதை அறிய தொடர்கிறேன்.
அருமையான பதிவு.
ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா...
பதிலளிநீக்கு400 ! வாழ்த்துகள் பல...
246 நண்பர்கள்..மொழியின்பால் உள்ள ஈர்ப்பால் அமைந்த சொல்லாடல் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன். 400க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநிலமகள் வியக்க வியக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலுடன் தொடர்கிறோம்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
400 வது பதிவுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
ஆஆஅ இது என்ன இங்கேயும் புதிர்... அடுத்த பதிவை ஆவலோடு காக்க வைக்கிறீங்க.
பதிலளிநீக்கு400 ஐத் தொட்டுவிட்டமைக்கு இனிய வாழ்த்துக்கள்... இனிதே தொடரட்டும் உங்கள் வலைப் பயணம்.
well
பதிலளிநீக்கு400-> 4000 ஆகட்டும் நண்பரே வாழ்த்துகள் !!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு400வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா. தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு400 ஆவது பதிவு கண்ட தங்கள் சீரிய பணிக்கு பாராட்டுகள் வருங்காலத்தில் தங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு400 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு400 பதிவிற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குvery
helpful
வரும் சோதனைகள் வேதனைகள் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து சாதனை நிகழ்த்த வைக்கும் தமிழ் மொழியை வணங்குவோம்
பதிலளிநீக்கு