ஆண்டு 1904
ஜுலை 15
கட்டிலில் அம்மனிதர் கண் மூடிப் படுத்திருக்கிறார்.
அருகினில் அவர் மனைவி
காதல் மனைவி
நாள்தோறும் இவரைப் பார்ப்பதற்காக, பூங்கொத்துடன்
வரும் ஒரு சிறுவன், இதோ இன்றும் வருகிறான்.
இன்று
மட்டும அந்தப் பூங்கொத்தை, நீயே அவரது தலைமாட்டில் வைத்துவிடு.
இன்று அவர் தானேஎழுந்து, வழக்கம்போல், வாங்கும்
நிலையில் இல்லை
சிறுவன் திகைத்துப் போகிறான்
ஆம், அம்மனிதர் மீளா உறக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
அன்று இரவு, வீட்டில், கணவனின் உடல் அருகில்,
யாரையும் அனுமதிக்கவில்லை, அவர் மனைவி.
நிறையப்
பேச வேண்டியிருக்கிறது
இன்று இரவு இவரோடு, என்னைத் தனிமையில் விடுங்கள்
அன்று இரவு முழுவதும், தனது கணவனின் உயிரற்ற
உடலோடு, அவர் தனித்தே இருந்தோர்.
காதலின் உச்சம் என்பதே இதுதானோ?
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
இவருக்குப் பல பெண் நண்பர்கள் உண்டு
எனினும் இறுதியில் இவரைத்தான் காதலித்துத் திருமணமும்
செய்து கொண்டார்
இவரது காதலி ஒரு நாடக நடிகை
ஒல்கா
நிப்பர்
திருமணத்திற்குத் தயார்
ஆனால்
ஒரு நிபந்தனை விதித்தார்
ஒல்கா
எப்பொழுதும் போல், மாஸ்கோவிலேயே வசிக்க வேண்டும்
இவரோ எப்போதும்போல் யால்டாவில் வசிப்பார்
கணவன் ஒரு ஊர்
மனைவி ஒரு ஊர்
இருவரில் எவர், எப்போது விரும்பினாலும், மற்றவரைத்
தேடி வரலாம்.
சில நாட்கள் தங்கலாம்
ஆனால் ஒரே வீட்டில் வசிப்பது என்பது மட்டும்
கூடவே கூடாது.
விசித்திரமாக இருக்கிறது அல்லவா?
ஒரே வீட்டில், பல காலம் வசிக்கும் கணவனும்,
மனைவியும், ஒருவருக்கு ஒருவர், மேசை நாற்காலி போல் அலுப்பூட்டும் பொருளாகி விடுவார்கள்.
சேர்ந்து வாழ்ந்தால், ஒருவருக்கு ஒருவர், நிரம்ப
விட்டுக் கொடுக்க வேண்டும்
நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டும்
இருவரின் சுதந்திரமும் பறிபோகும்
என் மனைவி, கடைசி வரை என் காதலியாகவே இருக்க
வேண்டும்
இதற்குத் தனித்து வாழ்வதுதான் வழி
காதலி ஏற்றுக் கொண்டார்
மனைவியானார்
காதலியாகவே வாழ்ந்தார்
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
மாபெரும் எழுத்தாளர்
இவர் தனது அனைத்துப் படைப்புகளிலும், மொத்தமாக
எட்டாயிரம் கதை மாந்தர்களைப் படைத்துளளார் எனில், இவரது எழுத்திக் வீச்சு புரிகிறதல்லவா
இவர்தான்,
முழுமையான
மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை
சமூகத்
தடைகளும், பண்பாட்டு ஒடுக்கு முறைகளும், சமய அதிகாரமும் இருக்கும் வரை, மனிதர்கள் பிளவுபட்டுததான்
இருப்பார்கள்
நெருக்கடிக்குள்
மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள்,
சகமனிதன்
மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறார்கள்,
என்பதை
அடையாளம் காட்டுவதே
கலை,
இலக்கியத்தின் பணியாகும் என்றவர்.
இவர்தான்
மாபெரும்
ரஷ்ய எழுத்தாளர்
ஆன்டன்
செகாவ்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமிக அருமை. ஆன் டன் செகாவை பற்றி தெரிந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. நன்றி.
பதிலளிநீக்குஅரிய மனிதரைப்பற்றிய தகவல் களஞ்சியம் நன்றி நண்பரே...
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு மனிதர். உங்கள் மூலம் பல தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
பதிலளிநீக்குவீச்சு மிகவும் சிறப்பான வீச்சு....
பதிலளிநீக்குஅருமை... அருமை ஐயா...
சுவாரஸ்யமான, அறியாத தகவல்.
பதிலளிநீக்குஆன்டன் செகாவ் பற்றி இன்னும் அதிக விவரங்கள் தந்திருக்கலாம். அவரது சிறுகதைகள் இன்றும் நியூ யார்க் சென்டிரல் பார்க்கில்தெரு நாடகமாக வசந்த கால விடுமுறை நாட்களில் நடைபெறுகின்றன. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் உண்டு. எனினும் மனைவியைப் பிரிந்தே வாழ்ந்தார் என்பதை நான் இதுவரை அறிந்ததில்லை.
பதிலளிநீக்குவித்தியாசமான மனிதர்கள்.
பதிலளிநீக்குபுதிய தகவல்.
காதல் பற்றிய பல நிலைகளில் பிரிந்து இருப்பதும் ஒன்று என்று அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குவிசித்திரமான காதல் கதை. உள்ளங்கள் ஒன்றை ஒன்று விரும்புவது காதல் என்று கேள்விப்பட்டுள்ளேன். உடல் சுகம் தேடுவது வேறு கதை. இளமை இளமையை ஈா்ப்பது இயற்கை. இன்று உங்கள் எழுத்தில் இன்னொரு வித்தியாசமான இணைப்பை உணர்ந்து கொண்டேன்.
பதிலளிநீக்கு" இரவு முழுவதும், தனது கணவனின் உயிரற்ற உடலோடு, அவர் தனித்தே இருந்தோர். காதலின் உச்சம் என்பதே இதுதானோ? :
பதிலளிநீக்குஇந்த அன்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. அருமையான பதிவு!
//சேர்ந்து வாழ்ந்தால், ஒருவருக்கு ஒருவர், நிரம்ப விட்டுக் கொடுக்க வேண்டும்
பதிலளிநீக்குநிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டும்///
இதை கூட செய்யாத காதல் என்ன காதல்?
This is different kind of love
நீக்குhttps://ta.wikipedia.org/s/aig என்ற பக்கத்தில் அவரைக்குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக தமிழ் கட்டுரைகள் சிறுதுளி பெருவெள்ளமாக வளர்க்கப்படுவதில்லை. பெரும்பான்மையானவர்கள் மதிப்பீடு மட்டுமே செய்கின்றனர். இக்கட்டுரையில் உள்ளவை என அறியத்தந்தால். அக்கட்டுரையில் இணைக்க ஏதுவாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இதுபோன்ற வலைப்பதிவுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதை உணருங்கள். அரும்பாடுபட்டு படித்த செய்திகளை விக்கியிலும் எழுதுவதால் அது என்றும் காக்கப்படும். விருப்பம் உள்ளவர் எனது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும். முந்தைய இரசிய கூட்டாச்சியில் இருந்து, வெளிவந்த படைப்புகளை தமிழ் விக்கியில் பேண சட்ட அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நமது நாட்டுடைமை நூல்களை பேணுவதைப்போல.. https://ta.wikisource.org/s/4l2 அவற்றில் மேம்படுத்திய நூல்கள்;https://ta.wikisource.org/s/430w விரும்பம் உள்ளவர் தொடர்பு கொள்க. தமிழ் படைப்புகளைக் காப்போம். வாரீர். வணக்கம்.
பதிலளிநீக்குபோச்சே போச்சே. 20 வருஷம் முன்னால இது தெரியாம போச்சே
பதிலளிநீக்குபுதுத்தகவல்!
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கிறது
கதையில் ஒருவர் பற்றியோ சொல்லப்பட்டிருக்குது.. எனக்கு படிக்கும்போது குழப்பமாகிவிட்டது.
பதிலளிநீக்குஇரு கதைகள்போல புரிஞ்சது. எனக்கு ஒழுங்காக புரியவில்லை உங்கள் எழுத்து. மேலே பூங்கொத்தை வை எனச் சொல்லியபின் குழப்பமாக இருக்கு வசனம்..
//காதலின் உச்சம் என்பதே இதுதானோ?
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
இவருக்குப் பல பெண் நண்பர்கள் உண்டு///
மனைவியைப் பற்றிக் கூறிவிட்டு.. இவ்வசனம் ஆரம்பித்தது என்னைக் குழப்பமாக்கிவிட்டது..
கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவிலான அன்பு.
பதிலளிநீக்குஇது ஒரு வித்தியாசமான வாழ்க்கைதான். ஆனால் செகோவ் எழுத்தாளர். அதனால் தனியாக வாழ நினைத்திருப்பார். இல்லைனா, திருமணம் செய்துகொண்ட பிறகு, எப்போ வேணுமோ அப்போ பார்த்துக்கலாம்னா அது என்ன மாதிரியான காதல்னு எனக்குப் புரியலை.
பதிலளிநீக்குநேர்த்தியான பதிவு அய்யா
பதிலளிநீக்குஆன்டன் செகாவின் மண வாழ்க்கை பற்றி அறியவும் அவரைப் பற்றித் தெரியவும் செய்த சிறப்பான கட்டுரை ஐயா.
பதிலளிநீக்குஆன் டன் செகாவ் மனம் விரும்பும் எழுத்தாளர். இது
பதிலளிநீக்குஉண்மையான காதலே.
கணவன் மனைவி வெவ்வேறு தொழில்களைத் தொடர்பவர்கள்.
அன்பில்லாமல் வெறும் வாழ்க்கை வாழ்வதற்குப் பிரிந்திருந்து காதலர்களாக இருப்பது உயர்த்தி என்றே தோன்றுகிறது.
மிக அருமையான பதிவு. மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
வல்லிம்மா உங்க கருத்து எனக்கு மிகவும் பிடித்தது..
நீக்குகீதா
வித்தியாசமான மனிதர் எழுத்தாளர் அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி. ஸ்வாரஸ்யம் புதிய தகவல்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா