Babar Ali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Babar Ali லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 பிப்ரவரி 2015

16 வயது தலைமையாசிரியர்


ஆண்டு 2002 இல் ஓர் நாள். மேற்கு வங்கத்தின் பெர்காம்பூரில் உள்ள, ராஜ் கோவிந்தா சுந்தரி வித்யாபீத் அரசுப் பள்ளி. பிற்பகல் 2.00 மணி. பள்ளியின் அன்றைய அலுவல் முடிவடைந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் மணி ஓசை ஒலிக்கின்றது. அரை நாள் மட்டுமே செயல் படும் பள்ளி அது.

     மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளியை விட்டு, தங்கள் வீடுகளை நோக்கி, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.

      ஒரு மாணவன் மட்டும், புத்தகப் பையினை தோளில் சுமந்தபடி, அவ்வூரையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான். ஒன்பது வயதே நிரம்பிய மாணவன் அவன்.