22 ஜனவரி 2014

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்



     நண்பர்களே, தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். நூலின் பெயர் மட்டுமல்ல, நூலின் முகப்பு அட்டையும் கூட, நம்மை, நமது கடந்த கால நினைவலைகளுக்கு, கைப்பிடித்து இழுத்துச் செல்லும் வல்லமை வாய்ந்தவை.  மீண்டும் ஒரு முறை அந்த வசந்தம் திரும்பி வாராதா, என ஒவ்வொருவரையும், எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.


    


இந்நூலின் ஆசிரியர் கவிஞர் இராய. செல்லப்பா அவர்கள் ஒரு நவீன நாடோடி. ஆம் நவீன நாடோடிதான். இவர் இதுவரையிலான தனது வாழ்க்கையின், முக்கால் பகுதியை, தமிழகத்திற்கு வெளியிலேயே செலவிட்டவர். 

  
  இப்பொழுது மட்டுமென்ன, காடாறு மாதம், நாடாறு மாதம் என்று சொல்வார்கள் அல்லவா? அதைப் போலத்தான் வாழ்கிறார். காடு என்பதில் மட்டும் ஒரு சிறு மாற்றம். சென்னையில் ஆறுமாதம், நியூஜெர்சியில் ஆறுமாதம் என விமானத்தில் பறக்கிறது இவரின் வாழ்க்கை. கொடுத்து வைத்தவர்.

     பள்ளி ஆசிரியராய் சில காலம், சென்னை சிட்டி யூனியன் வாங்கி அதிகாரியாய் சில காலம், கார்ப்பரேசன் வங்கியில், கணினித் துறையில், உதவிப் பொது மேலாளராய் பல காலம் எனப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

      கையெழுத்து மட்டுமே இட்டு, வாழ்ப் பழகிவிட்ட வங்கி அதிகாரிகளுக்கு மத்தியில், கவிதை எழுதுத் தொடங்கியவர் இவர்.


    மூன்றே ஆண்டுகள்தான் டெல்லி வாசம். அதற்குள் எத்தனை, எத்தனைக் கவியரங்களுகள். அதன் விளைவு, எட்டயபுரத்து மீசைக்காரன், தலைநகரில் தமிழ்க் குயில்கள் என்னும் இரு கவிதை நூல்கள்.

     தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் புலமை பெற்றும், இவரது மொழித் தாகம் இன்னும் அடங்கவில்லை. தற்போது மலையாளமும், வங்காளமும் கற்று வருகிறார்.

     நியூஜெர்சியில் மகள் வீட்டிலும், அட்லாண்டாவில் மகன் வீட்டிலும், நிம்மதியாய் ஓய்வெடுக்க வேண்டியவர், கணினியில் கை வைத்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மனதில் சுமந்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் நினைவுகளையும், எதிர் கொண்ட அனுபவங்களையும், அந்த அனுபவம் புகட்டியப் பாடங்களையும், ஒவ்வொன்றாய், மனத்தில் இருந்து, கணினியில் இறக்கி வைக்கத் தொடங்கினார்.

     கதை, கட்டுரை, கவிதை, புத்தக விமர்சனம், பயணக் கட்டுரை என பல தளங்களிலும் பயணிக்கின்றன இவரது வலைப் பூக்கள். நாமெல்லாம், ஒரு வலைப் பூவில் எழுதுவதற்கே, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் நிலையில் இருக்க, இந்த 64 வயது இளைஞரோ, இரண்டு வலைப் பூக்களை அநாசாயமாய் நடத்தி வருகிறார்.

இமயத் தலைவன்
செல்லப்பா தமிழ் டைரி
http://chellappatamildiary.blogspot.com/

     கவிஞர் இராய. செல்லப்பா அவர்களின் கவிதை நூல்கள் வெளிவந்து, இருபத்தியிரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவரது தாத்தா தோட்டத்தில் வெள்ளரிக்காய் முளைத்திருக்கிறது.

     புத்தகத்தைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது, இவரின் அன்புள்ளம்.
என் இரண்டாவது தாயும்,
என் மனைவியின் உயிர்த் தாயுமான
திருமதி இராஜலட்சுமி சீதாராமன்அவர்களுக்கு
இந்நூல்.
யாருக்கு வரும் இம்மனது? இதற்காகவே இந்நூலாசிரியரக்கு ஒரு தனி வணக்கம்.
    


சென்னையில், புத்தக வெளியீட்டு விழாவில், வலையுலக உறவுகளுடன்
இந்நூல் இவரின் முதல் தொகுப்பு என்பதையே நம்ப முடியவில்லை. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சொற்பிரவாகங்கள் பொங்கி வழிகின்றன. கவிஞரின் கதைகளுக்குள் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம்தான்.

      இந்நூலில் இருப்பதை சிறு கதைகள் என்று கூறுவது கூடத் தவறுதான். தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக் கொண்டதை, அதன் இயல்பான போக்கில், உணர்வென்னும் நூலில், எழுத்து என்னும் உன்னதப் பூக்களைக் கோர்த்து, நறுமனம் வீசும் புத்தகமாக உருவாக்கியுள்ளார்.

     அன்பின் மேன்மையை உணர்த்தும் சிறுவன். வாழ்க்கை என்பது நம்பிக்கைகளால் ஆனது என்பதை உணர்த்தும் ஓர் உள்ளம்.  உள்ளத்தனையது உயர்வென்ற வள்ளுவனின் வாய்மையைப் புலப்படுத்தும் சாஸ்திரீயின் வாய்மையும், ஒழுக்கமும். குடும்ப அமைப்பின் முறிந்து விடாத அச்சாணியை உணர்த்தும் முடிவற்ற தேடல், என ஒவ்வொரு சிறுகதையும் நம்மை முழுமையாய் ஆட்கொள்ளும்.

      மானுடத் தோட்டத்தில், எப்பொழுதும் பூச்சியரித்தலுக்கு ஆளாகாமல், விளைந்திருக்கும் வெள்ளரிக் காய்கள் இவை.

     தாத்தா என்னவோ நினைத்துக் கொண்டவராக, ஒரு நிமிஷம் நில்லு என்று வயக்காட்டிற்குள் ஓடினார். திரும்பி வரும்பொழுது, கை நிறைய வெள்ளரிப் பிஞ்சுகள், இந்தாடா, இதைச் சாப்பிட்டுக் கொண்டே போ. சந்தோஷமாக இரு என்று ஒரு பிஞ்சை என் வாயிலிட்டார். இவ்வளவு நாள் இல்லாத இனிப்பை உணர்ந்தேன். அதன் பெயர்தான் பாசம் என்று தெரிந்து கொள்ள பல வருடம் ஆனது.

     பல வருடங்களுப்குப் பிறகு, கடைசி தடவையாக நான் தாத்தாவைப் பார்க்கப்போன போது, எனக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. அவர் இறந்து போய் பத்து நாட்கள்.


     நண்பர்களே, இந்த வெள்ளரிக்காயை, நீங்களும் சுவைத்துத்தான் பாருங்களேன். ஒரு முறை சுவைத்தால், இதன் சுவையும், மனமும், குணமும், உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களுடனே நிழல்போல் இணைந்தே வரும்.


-------------------------------

எம். ஜி. ஆர் வாழ்கிறார்


உன் கண்ணில் ஒரு துளி - நீர்
வந்தாலும் உலகம் அழ வேண்டும்.

     நண்பர்களே, 17.1.2014 வெள்ளிக் கிழமை. பிற்பகல் 2.00 மணி, எம் பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு தமிழரசு அவர்களின் தலைமையில், முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான, மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு ஜெயராஜ், கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு டி.அண்ணா பிள்ளை  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     தஞ்சை மாவட்டம் முழுமையும் இருந்து 130க்கும் மேற்பட்ட, முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் , இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மீளாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்.

     சங்க வளாகத்தில் இயங்கும் தேநீரகத்தில் அனைவருக்கும், தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். பிஸ்கட் வாங்க வேண்டியிருந்தது. நானும், நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு ஜி.கோவிந்தராஜ் அவர்களும், பிஸ்கட் வாங்குவதற்காக, பள்ளிக்கு வெளியே, கடைத் தெருவிற்குச் சென்றோம். ஓம் சக்தி கடையில் பிஸ்கட் வாங்கினோம்.

     அருகிலேயே நண்பர் பாலுவின் தேநீர் கடை. சாலையினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்தினோம். அன்று மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 97 வது பிறந்த நாள்.

     பாலு தேநீர் கடைக்கு எதிரில், நண்பர் வக்கீல் முருகேசன் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினை, ஒரு மண மேடையில் அலங்கரித்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப் படப் பாடல், ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது.


நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை – அவர்
கண்ணீர் கடலிலே விழமாட்டார் – அவர்
கண்ணீர் கடலிலே விழமாட்டார்

     பாடலை ரசித்தபடியே தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது, எதிரில் ஒருவர், முதியவர் என்று கூற முடியாது, ஐம்பது வயது இருக்கும். ஒரு தட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார்.

     நண்பர்களே, தட்டு வண்டி என்றால், மூன்று மிதிவண்டிச் சக்கரங்களின் மீது, ஒரு பலகையினைப் பொறுத்தி வைத்திருப்பார்கள் அல்லவா,  தள்ளு வண்டியில் தினமும் பழங்களையும், பூக்களையும், தெருவோரங்களில் நின்று விற்பனை செய்வார்களே, அது போன்ற வண்டி.

     வண்டி முழுதும் ஜவ்வந்திப் பூக்கள். தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்தில் விற்பனை செய்வதற்காகத், தள்ளிக் கொண்டு வந்தார்.

    எம்.ஜி.ஆர் படத்தினையும், பாடலையும் கேட்டவுடன், அவரையும் அறியாமல், வண்டியினைத் தள்ளுவதை நிறுத்தி, சில நொடிகள் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தனது வண்டியில் இருந்து, இரு கைகளாலும் பூக்களை அள்ளி, எம்.ஜி.ஆர் படத்திற்கு, பூக்களால் அபிசேகம் செய்தார்.

     மீண்டும் வண்டியிடம் வந்தவர், ஏதோ ஓர் சிந்தனையின் வயப்பட்டவராக, வண்டியைத் தள்ளாமல், மீண்டும் எம்.ஜி.ஆர் படத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்.

     நண்பர்களே, அடுத்து அவர் செய்த செயலைக் கண்டு மலைத்துப் போய்விட்டோம். நாங்கள் மட்டுமல்ல, அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், போய்க் கொண்டிருந்தவர்கள் என, அக்காட்சியைக் கண்டவர்கள் அனைவரும் பேச்சற்றுப் போய்விட்டார்கள். கண்கலங்கித்தான் போய்விட்டோம்.



    கை நிறைய பூக்களை எடுத்து, எம்.ஜி.ஆர் படத்திற்கு  அபிசேகம் செய்தபிறகும், அவர் மனம் திருப்தி அடையவில்லை. வண்டியின் அருகிலேய நின்று ஒரு நொடி யோசித்தார்.

     அடுத்த நொடி, தனது மூன்று சக்கரத் தள்ளு வண்டியைத், தலை கீழாகப் புரட்டிப் போட்டார். வண்டியில் இருந்த பூக்கள் அனைத்தும், எம்.ஜி.ஆர் படத்தின் காலடியில் கொட்டிச் சிதறின.

வண்டிக்காரரின் முகத்தில் இப்பொழுது ஓர் மகிழ்ச்சி.
வணக்கம் தலைவா
அன்றைய வியாபாரத்திற்குச் செல்லாமல், மீண்டும் வண்டியை, வந்த வழியாகவே திருப்பிக் கொண்டு சென்றார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பொருள் விளங்கியது.

வணக்கம் தலைவா.


43 கருத்துகள்:

  1. கவிஞர் இராய. செல்லப்பா அவர்களைப் பற்றிய தகவல்கள் உங்கள் பகிர்வின் அறிய முடிந்தது ஐயா...

    ஒரு ஒரு வெள்ளரிக் காயை மட்டும் தான் இதுவரை சுவைத்துள்ளேன்... நூல முழுவதையும் இன்னும் படிக்க வேண்டும்...

    எந்தளவு தலைவர் அவரது மனதை கவர்ந்திருப்பார்... இன்றும் பலரின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் தலைவர்...

    பதிலளிநீக்கு
  2. தலைவரின் சிறந்த பாடல்களில் ஒன்று :

    நான் ஏன் பிறந்தேன்...
    நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்...
    என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
    நினைத்திடு என் தோழா...
    நினைத்து செயல்படு என் தோழா...
    உடனே செயல்படு என் தோழா...

    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு - என
    கேள்விகள் கேட்பது எதற்கு...?
    நீயென்ன செய்தாய் அதற்கு - என
    நினைத்தால் நன்மை உனக்கு...! (2)

    (நான் ஏன் பிறந்தேன்)

    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது...
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது... (2)
    கொடியில் பிறந்த மலரால்
    எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால்
    என்ன பயன் தான் விளைந்தது...?

    (நான் ஏன் பிறந்தேன்)

    பத்துத் திங்கள் சுமந்தாளே
    அவள் பெருமைப் படவேண்டும்...
    உன்னைப் பெற்றதனால் அவள்
    மற்றவராலே போற்றப்பட வேண்டும்...
    க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌
    த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்...
    உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
    உல‌க‌ம் அழ‌ வேண்டும்...

    (நான் ஏன் பிறந்தேன்)

    பதிலளிநீக்கு
  3. திரு.கவிஞர் /கதையாசிரியர்.
    இராய.செல்லப்பாஅவர்களைப்பற்றி சரியானத் தகவல்களைத் தந்தமைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. எனது அபிமான பதிவாளர் நண்பர்\
    ராய செல்லப்பா அவர்களின் நூல் அறிமுகமும்
    எனதுமனம் நிறைந்த மக்கள் திலகம் அவர்களின்
    பிறந்த நாள் சிறப்புப் பகிர்வும் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கவிஞர் இராய. செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்தில் முளைத்த சுவையான பாசத்தில் தோய்ந்த வெள்ளரிக்காய் பற்றிய -
    ரசனையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. நூலை முழுமையாகப் படித்த திருப்தி. மிகவும் சிறப்பாக தாங்கள் நுணுக்கமாக மதிப்பீடு செய்துள்ள விதம் பாராட்டத்தக்கது. புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நூல் அறிமுகம் மட்டுமல்ல ,நூல் ஆசிரியர் அறிமுகமும் நன்று !
    த .ம 3

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா22 ஜனவரி, 2014

    ''..சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மனதில் சுமந்து கொண்டிருந்த ஆயிரமாயிரம் நினைவுகளையும், எதிர் கொண்ட அனுபவங்களையும், அந்த அனுபவம் புகட்டியப் பாடங்களையும், ஒவ்வொன்றாய், மனத்தில் இருந்து, கணினியில் இறக்கி வைக்கத் தொடங்கினார்...'' அருமை...எனக்கு இவர் கருத்திட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
    இமயத் தலைவன் என்ற பெயரை ஆச்சரியமாக நோக்கியுள்ளேன்.
    இனிய வாழ்த்து இருவருக்கும்.
    இதைக் கொண்டு வந்த தங்களிற்கும் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    .

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா22 ஜனவரி, 2014

    சிறப்பான நூல் அறிமுகம் !
    நன்றி. படங்கள் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. மதிப்பிற்குரிய கவிஞர் திரு இராய செல்லப்பா அவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா...

    பொன்மனச் செம்மலுக்கு இருக்கும் இத்தனை அன்பான கூட்டம் வேறு யாருக்கும் இல்லை என அடித்துச் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  11. அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு

    கவிஞருக்கு பொருத்தமான வரிகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா23 ஜனவரி, 2014

    வணக்கம்
    ஐயா.

    கவிஞர் இரா.செல்லப்பா(ஐயா) பற்றி மிகச் சிறப்பாக சொல்லியும் அவரின் முயற்சியால் உருவான சிறுகதை புத்தகம் பற்றி சொல்லிய விதம். அனைவரையும் படிக்க தூண்டுகிறது.. ஐயா. ...

    மக்கள் திலகம் பற்றி சொல்லியும் அந்த பூக்காரன் பற்றியும் அவன் செய்த செயல் பிரமிக்கவைத்தது ...எங்கள் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் சாமிபடங்கள் இருப்பதைப்போல மக்கள் திலகதின் படம் கட்டாயம் இருக்கும்... ஐயா.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா.
    த.ம 7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. எம்.ஜி,யார் அவர்கள் உடல்நலக்குறைவாய் இருந்த போது நான் ஒன்றவதோ ?இரண்டாவது படித்திக்கொண்டிருந்தேன் எங்கள் தெருவில் எங்கு திரும்பினாலும் இறைவா உன் மாளிகையில் பாடல் எங்கும் ஒலிக்கும் ,அவர் வாழ்கிறார் !

    பதிலளிநீக்கு
  15. அன்பின் ஜெயக்குமார் - தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - இராய செல்லப்பாவின் நூலின் அறிமுகமும் - நூலாசிரியர் அறிமுகமும் அருமை. வங்கிகளீல் கணினித்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் கவிதைகளூம் எழுதுவதற்கு நேரம் ஒஉதுக்கியவர் என்றால் - என்னவென்று சொல்வது .... அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. அன்பின் ஜெயக்குமார் - புரட்சித்தலைவர் எம் ஜி ஆரின் பிறந்த தினத்தன்று கண்ட நிகழ்வினைப் பற்றிய பதிவு அருமை. எம் ஜி ஆரின் இரசிகரான முதியவரின் - தட்டு வண்டியினைக் கவிழ்த்து அத்த்னை பூக்களையும் எம்ஜிஆரின் கலடியில் சமர்ப்பித்த்த அவரது செயல் பிரமிக்க வைக்கிறது. நல்லதொரு பகிர்வு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  17. அன்புடையீர்..
    கவிஞர் இராய. செல்லப்பா அவர்களைப் பற்றிய விவரமான செய்திகளை உங்கள் பகிர்வின் அறிய முடிந்தது..

    தன் மூலதனத்தையே புரட்சித் தலைவருக்கு அர்ப்பணிக்கின்றார் என்றால் - பெரியவர் மனதில் எந்தளவுக்கு நிறைந்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.

    வழக்கம் போல அருமையான பதிவினை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. செல்லப்பா அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டேன். புத்தகம் வெற்றி அடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்

    கவிஞர் இராய. செல்லப்பா அவர்களின் நூல் அறிமுகம், மொழி ஆர்வம், உயர் அதிகாரியாய் இருந்தும் எழுத்தில் நாட்டம், தாத்தா பாசத்தை பார்த்த பரவசம் மொத்தத்தில் இந்த கட்டுரை அற்புதம்.

    ஐயா, தோட்டம் என்றவுடன் எனக்கு ஒரு யோசனை வருகிறது.

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஆபிரஹாம் பண்டிதர் தோட்டம் 1961 வரை இருந்தது. தோட்டத்திற்கு பொது மக்கள் செல்லலாம். வேண்டிய காய்,கனிகளை உண்ணலாம். ஆனால் வெளியே எடுத்துச்செல்ல முடியாது. இப்போது காங்கிரீட் வளாகங்களாக ஆகி வி்ட்டன.

    ஆபிரஹாம் பண்டிதர் கருணாசாகரம் எனும் இசைநூலை வெளிக்கொணர்ந்து தஞ்சை தரணிக்கு பெருமை சேர்த்தவர். அவர் பெயரில் இருந்த ..........................ஏக்கருக்குமேல் இருந்தது தோட்டம், இன்றும் அவரது வாரிசுகள் தஞ்சையில் உள்ளனர். மங்களபுரம் பாம்பே சுவிட் ஸ்டால் எதிரில் வீடு வாரிசுகளைக் கண்டு பேட்டி எடுங்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

    தோட்டம் போய் கட்டடம் என்றும் தலைப்பு கொடுங்கள்.

    முயலுங்கள்!!

    இன்றைய தலைமுறைக்கு தஞ்சையில் பெரிய காய்கனி தோட்டம் இருந்ததைப்பற்றியும், ஆபிரஹாம் பண்டிதரின் கருணாசாகரம் நூல் பற்றியும் அறிய வேண்டும் என்ற நோக்கில் தெரிவித்துள்ளேன்.

    நன்றி
    வணக்கம்

    அன்பன்
    இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  20. நண்பரே! திருமிகு செல்லப்பா அவர்களின் நூல்பற்றிய விமர்சனம்
    அருமை! நானும் படித்தேன்! அதனை வெளியிடும் வாய்ப்பும் எனக்குக்
    கிடைத்தது உங்கள் இருவருக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
  21. கவிஞர் இராய செல்லப்பா ஒரு சுவாரசியமான மனிதர். அவரது எட்டயபுரத்து மீசைக்காரன் படித்திருக்கிறேன். வெள்ளரிக்காய் படிக்க வேண்டும். மக்கள் எம்.ஜீ.ஆர் மீது பக்தி மிகுந்த அன்பௌ கொண்டு செயல்படுவதை இன்றும் காண்கிறேன். சுவையான பதிவு, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. புத்தகம் வெற்றியடைய என் வாழ்த்துகளும்!!

    பதிலளிநீக்கு
  23. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும் புத்தகமாக இருக்கும் என நம்புகிறேன்....

    எம். ஜி. ஆர் வாழ்கிறார் - என்றென்றும் மக்கள் மனதில்!! பதிவாக்கியதற்கு மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
  24. கவிஞர் இராய செல்லப்பா அவர்களைப் பற்றியும், அவரது தமிழார்வம் குறித விவரங்களையும், பன்மொழிப் புலமை குறித்தும் தங்கள் பதிவின் வழியே அறிந்து கொண்டேன்.

    // நண்பர்களே, இந்த வெள்ளரிக்காயை, நீங்களும் சுவைத்துத்தான் பாருங்களேன். ஒரு முறை சுவைத்தால், இதன் சுவையும், மனமும், குணமும், உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களுடனே நிழல்போல் இணைந்தே வரும். //

    கவிஞரின் நூல் திருச்சியில் கிடைத்தால் வாங்கி படிக்கிறேன்.

    = = = = =

    மேலும் இந்த பதிவினில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பொருள் என்று ஒரு இணைப்பைத் தந்துள்ளீர்கள். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..நானும் எம்ஜிஆர் ரசிகன்தான்! ஆனால் கட்சி அவரது கட்சியில் இருந்ததில்லை!

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீ ரெங்கம் குடமுழுக்கு விழாவில் எம்.ஜி.யார் மக்களை கட்டுப்படுத்திய காவல் துறையை அடக்கி, மக்களை நோக்கி கையசைக்க ஒரு அலை மாதிரி வந்ததாக அருகிலிருந்து பார்த்த ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்ட பொழுது வியப்பு என்னை மூழ்கடித்தது ...
    மக்கள் ஒரு பேரலையாக வந்து தடுப்புக் கட்டைகளை மோதியதை இன்றும் நினைவுகூர்கிறார் அவர்... தோஸ் டேய்ஸ் ஆர் கான்

    பதிலளிநீக்கு
  26. திரு செல்லப்பா அவர்களின் நூல்பற்றிய விமர்சனம்
    அருமை புத்தகம் வெற்றியடைய என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கவிஞர் இராய.செல்லப்பா அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு இரத்தின சுருக்கமாக இருந்து இரத்தினமாக பிரகாசம் செய்து படிப்போரை மிகவும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கவிஞரைப் போன்ற பல நல்முத்துக்களையும் பல வைரங்களையும் இந்த வலைத்தளத்திற்கு தாங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., இந்த மூன்றெழுத்தில் பலரது மூச்சிருக்கிறது என்பதை மேலும் உறுதி செய்துள்ளது தாங்கள் விவரித்த நிகழ்வு. ஆனால் ஒரு குடும்பத்தலைவனாக பார்க்கும் பொழுது அந்த தொண்டனின் வீட்டில் அன்றைய உணவிற்கு என்ன செய்திருப்பார்கள்? என்று எண்ணும் பொழுது மனது சற்று வலித்தது.

    பதிலளிநீக்கு
  28. அருமையான பதிவிற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  29. செல்லப்பா ஐயா அவர்களைப் பற்றிய செய்திகளும் அவரது நூல் விமர்சனமும் அருமை.
    மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் எம்ஜிஆர். நிகழ்வை உங்கள் எழுத்து நேரில் பார்ப்பதுபோல் காட்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
  30. மானுடத் தோட்டத்தில், எப்பொழுதும் பூச்சியரித்தலுக்கு ஆளாகாமல், விளைந்திருக்கும் வெள்ளரிக் காய்கள் இவை.//

    அருமையான வரிகள்.
    தாத்தா, பேரன் பாசம் அருமை.
    செல்லப்பா அவர்கள் புத்தக விமர்சனம் அருமை.

    தட்டுவண்டிக்காரரின் பாசம் மிகுந்த பூசொரிதல் நம் தலைவர் என்பதால் தான். தொழிலாளி சினிமாவில் வண்டி இழுத்து பாடும் காட்சி அவர் மனதில் பதிந்திருக்கும்.
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  31. அடுத்த தமிழகப் பயணத்தின் போது வாங்க நினைத்திருக்கும் புத்தகங்களில் கவிஞர் செல்லப்பா அவர்களின் இப்புத்தகமும் ஒன்று.

    எம்.ஜி. ஆர். படத்திற்கு பூக்களால் அர்ச்சனை - படித்தேன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ஐயா
    திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதை நூலை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகப்படுத்தியமையும் சிறப்பான விமர்சனம் செய்தமையும் மிகவும் ரசிக்க வைத்தது. சக பதிவரின் படைப்பை பெருந்தன்மையோடு அழகான வரிகளால் அலங்கரித்து வெளியிட்டமைக்கு நன்றிகள் ஐயா
    -------
    என்.ஜி.ஆர் வாழ்கிறார். நிச்சயம் அந்த மூன்றெழுத்து மந்திரம் இன்று வரை மாயாஜாலம் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. மக்களைக் கவர்ந்த தலைவர்களின் என்றும் முதலிடத்தில் இருப்பவர் எம்.ஜி.ஆர் தான்.

    பதிலளிநீக்கு
  33. இந்நூல் இவரின் முதல் தொகுப்பு என்பதையே நம்ப முடியவில்லை. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சொற்பிரவாகங்கள் பொங்கி வழிகின்றன. கவிஞரின் கதைகளுக்குள் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம்தான்.//

    படங்களும் அறிமுகமும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  35. அன்றைய வருமானம் பற்றி கவலை இன்றி பூக்களை வாரி இறைத்து விட்டுப் போன உழைப்பாளிக்கும் பொன் மனம்தான் !

    பதிலளிநீக்கு
  36. கவிஞர் இராய. செல்லப்பா எழுதிய 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' புத்தகத்திற்கான, விமர்சனத்தை விட அவரைப் பற்றிய தகவல் சுவையாக இருந்தது. தகவலுக்கு நன்றி அய்யா. வாங்கிவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  37. கவிஞர் செல்லப்பா பற்றிய தகவல்கள் அறிந்தேன். புரட்சி தலைவர் மறைத்த தாக்கம் இன்னும் பலர் மத்தியில் இருக்கின்றது .இவர்கள் போல் இன்னும் பலர் பிறக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. ஒரு சிலருக்கே இப்படிப்பட்ட புகழ் கிடைக்கும்.
    அதன் பின் உள்ள உழைப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. அருமையான நூல் பதிவு! ராய செல்லப்பா அவர்களின் எழுத்தப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா என்ன? புகுந்து விளையாடுகிறார்! மனிதர்!!

    புரட்சித் தலைவரின் தாக்கம் இன்னும் பல கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது! மட்டுமல்லா, இன்னும் பலர் அவர் இன்னும் உயிருடந்தான் இருக்கிறார் என்றும் நம்புகின்றார்கள்!! அந்த அளவுக்கு அவரது தாக்கம்!

    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  41. அன்புள்ள ஜெயககுமார்.

    கவிஞர் ராயப்பா அவர்களின் சிறுகதைத் தொகுதிக்கான விமர்சனம் நன்று.

    நல்ல தேர்ந்த கதைசொல்லி அவர்.

    சிறுவயதில் அப்பாதான் என்னை எம்ஜிஆர் ரசிகர் ஆக்கினார். இன்றுவரை அவரின் ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். அவர் ஒரு சகாப்தமாக வாழ்ந்துவிட்டுபோனவர்.

    எம்ஜிஆரை முழுமையாக எல்லாக் கோணங்களிலும் வாசிக்கலாம். அற்புதமான மனிதர். என்றைக்கும அவர்தான் புரட்சித் தலைவரும்கூட.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு