18 செப்டம்பர் 2014

நண்பா, விரைந்து முன்னேறு



 சங்கங்களால் – நல்ல
சங்கங்களால் – மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள் போல் – இளஞ்
சிங்கங்கள் போல் – பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

எங்கும் சொல்க – கொள்கை
எங்கும் சொல்க – இதில்
எது தடைவந்த போதிலும் அஞ்சற்க
                         - பாரதிதாசன்

     நண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு. முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான், கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும் நிலைத்து நிற்கிறது நம் மொழி.

     சங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால், எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல் உழைப்பு வேண்டும்.


    திரையில் தோன்றி, பெரும் பணம் குவித்து, புகழேணியின் உச்சியில் இருக்கும், நடிக நடிகையர்க்கு, சங்கம் கண்டு, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும், கனவுலக நாயகருக்கேக் காணிக்கையாக்கி, தன் குடும்பம் காணாது, தன் சுற்றம்  நோக்காது, நம் மொழியின் பெருமை அறியாது, உழைக்கும் இளைஞர்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார் நம் நாட்டில்.

     இதுபோன்ற இளைஞர்களுக்கு மத்தியில், திரையுலகு கண்டு மயங்காது, தொலைக் காட்சியே சரணம் எனத் தங்கள் வாழ்வைத் தொலைத்திடாது, தாங்கள் வியர்வை சிந்தி உழைத்துப் பெருக்கிய, வருவாயினைக் கூட, சமூக அக்கறையோடு, சமுதாய முன்னேற்றத்திற்காகச் செலவிடும், அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்று நினைத் தாயோ?

என வீறு கொண்டு எழுந்து முழங்குவானே, முண்டாசுக் கவிஞன் மகா கவி பாரதி, அப் பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, வீழ்ந்து விடாமல்,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
   சம்பாத்யம் இவையுண்டு தானுன்டு

என்று இருந்து விடாமல், சமூக அக்கறையோடு, தாங்கள் உழைத்துச் சம்பாதித்த செல்வத்தை முன்னிறுத்தி, அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, அரும் பணியாற்றிவரும், எனது நண்பர்களைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.

     நான் பயின்ற, தற்பொழுது நான் பணியாற்றி வருகின்ற, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின், முன்னாள் மாணவர்கள் இவர்கள். என்னைவிட வயதில் இளையோர். மனதிலோ மூத்தோர்.    
இராஜராஜன், அருண் குமார்

ஐந்தே, ஐந்து நண்பர்கள், ஒன்றிணைந்து ஒரு நாள் பேசினார்கள். நாம் அனைவருமே நன்கு படித்தோம், நன்கு உழைத்தோம், நன்கு பொருளீட்டியும் வருகிறோம். ஆனால் மனதில் ஓர் நிறைவில்லையே, மகிழ்ச்சி இல்லையே, மனம் வெறுமையாக , வெற்றிடமாக இருக்கின்றதே, என்ன காரணம் என விவாதித்தனர்.


     நாம் பயின்றதும், பொருளீட்டுவதும், நமக்கும், நம் குடும்பத்திற்கும் மட்டும்தானா? அல்லது படித்ததே, பணம் சேர்க்கத்தானா என்று சிந்தித்தனர்.

     படிக்கும் காலத்தில், நம்மோடு உற்ற துணையாய், ஆரூயிர் தோழனாய், கூடவே வந்து, நம்மோடு பழகியது வறுமை மட்டும்தானே.

     நாம் வறுமையோடு உறவாடிய போது, கைக் கொடுத்து மீட்க, யாரும் முன் வராத போது, எப்படித் தவித்தோம்?. அன்று நாம் இருந்த நிலையில், இன்று பல மாணவர்களைக் காணும் பொழுதெல்லாம் நெஞ்சு துடிக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

     சங்கம் ஒன்று தொடங்கலாம், ஆனால் ஒரு சிலர் மட்டும் கூடிச் சங்கம் தொடங்குவதா? வேண்டாம். சங்கம் என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் பணி. நாமோ நால்வர்தான் இருக்கின்றோம். எனவே அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவோம், நம்மால் இயன்ற அரும் பணிகளைச் ஆற்றுவோம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர்.
     
மணிமாறன், ராஜன், சதீஷ்

நண்பர்களே, சொன்னால் நம்பமாட்டீர்கள், சகோதரர்கள் இருவர், நண்பர்கள் ராஜன், சதீஷ் மற்றும் மணிமாறன்  என, ஐவரும் இணைந்து, ஆறாவதாய் ஒருவரைத் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர். அவர் யார் தெரியுமா? அருமைச் சகோதரர்களின் அன்புத் தந்தையார் திருவாளர் பாலசுப்பிரமணியன்.
     
திருமிகு பாலசுப்பிரமணியன்

தனது குலம் தழைக்கத் தோன்றிய அன்பு மகன்களின், பாசமிகு தொண்டினை, நேசத்தோடு நோக்கி, நெகிழ்ந்து நிற்கிறார் இவர்களின் தந்தை. எந்தத் தந்தைக்குக் கிடைக்கும் இப்படி ஓர் பேரானந்தம். கொடுத்து வைத்த தந்தைதான்.


ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை

     இராஜராஜன், அருண்குமார் இருவரும் சகோதரர்கள். இவர்களின் சொந்த ஊர், தியாகராசரின் ஆராதனை விழாவினைக் காணும், திருவையாற்றிற்கு அருகில் உள்ள திருப்பழனம்.

     இவர்களின் தாத்தா, மிகப் பெரிய பக்திமான். ஒரு காலத்தில் வளமையுடன் திருப்பானத்தில் கொடி கட்டிப் பறந்தவர். ஆனால் இவரது தந்தையோ வறுமையினையே சுவாசித்தவர். அரசுப் பணியில் எழுத்தராய் சேர்ந்து, தன் பிள்ளைகளைக் கரை சேர்த்தவர்.

     நண்பர்களே, இராஜராஜனும், அருண் குமாரும் இளமையில் இருந்தே, வறுமையோடு உறவாடியவர்கள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, இவர்களுக்குக் கல்விச் செல்வத்தை வாரி, வாரி வழங்கியது.

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு, கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர்மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் யாவும்
அமைபவன் நூலுறை ஆசிரியனே

என நன்னூல், நல்லாசிரியருக்கான இலக்கணத்தைக் கூறும்.

     இத்தகு நல்லாசிரியர்கள் பலர், இவர்களுக்கு ஆசிரியராய் வாய்த்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கமல்லவா.

     புலவர் மீ.இராமதாசு, புலவர் சிவ.திருஞான சம்பந்தம், ஆங்கில ஆசிரியர் திரு டி.சச்சிதானந்தம், தாவரவியல் ஆசிரியை திருமதி ஆண்டாள், வேதியியல் ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இந்நாள் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் எனப் பல ஆசிரியர்கள் இவர்களைச் செதுக்கி, செம்மைப் படுத்தி, நல் வழி காட்டினர்.

     ஆசிரியர்கள் காட்டிய பாதையில் பயணித்து இருவரும் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றனர்.

     வற்றாத கல்விச் செல்வத்தைப் பெற்றதால், வளம் கொழிக்கும் நாடுகளில் பணியாற்றும் வாய்ப்புகள் பலவும், இருவரையும் நாடி வந்தன.

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
     யிருந்தது மிந்நாடே – அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
     முடிந்தது மிந்நாடே – அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
     சிறந்தது மிந்நாடே – இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
     வாயுற வாழ்த்தேனோ? – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
     என்று வணங்கேனோ?

                           - மகா கவி பாரதி

     அசைந்து கொடுக்கவில்லை இருவரும். கரந்தை எம் மண். எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் கரந்தையே என்று முடிவு செய்து,
ருத்ரன் கணினியகம், ருத்ரன் இசைப் பள்ளி
என இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

நண்பர்களே, இவர்களின் உழைப்பால், செல்வத்தால் உருவானதுதான்
ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை

கோயில் திருப்பணி என்பர் – அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே

வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
தாயென்ற பாவனை யோடும் – உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். சகோதரர்கள் இருவரும் தங்களின் உழைப்பின் பயனை கோயிலுக்கும் ஈந்து வருகின்றனர், ஏழைகளையும் காத்து வருகின்றனர்.

     நண்பர்களே, இவர்கள் இருவருமே மிகப் பெரிய பக்தியாளர்கள், ஆன்மீகவாதிகள். நான் இவர்களை வியந்து நோக்குவதுண்டு. எப்படி இத்துனை சிறுவயதிலேயே, இத்துனை பெரும் பக்தி என்று?

     பிறகுதான் தெரிந்தது, இவர்களது தாய் வழித் தாத்தாவும், தந்தை வழித் தாத்தாவும், பக்தியில் கரை கண்ட ஆன்மீகச் செம்மல்கள் என்று. ஆன்மீகம் இவர்கள் உதிரத்தோடு உதிரமாய் இரண்டறக் கலந்த உணர்வாகிவிட்டது.
    









ஏழைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களிடையே, மழை நீர் சேகரிப்பு, நீர் நிர்வாகம், ஓசோன் படலம் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பசுமை பாரதத்தை உருவாக்கிட, மரம் நடுதல். மரங்களின் இன்றியறியாமையை மக்களுக்கு எடுத்துரைத்து சுற்றுச் சூழலைக் காத்தல் என இவர்களின் பணி விரிவடைந்து கொண்டே செல்கிறது.

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம், ஆங்கே
    சண்டையில்லை, தன்னலந்தான் தீர்ந்ததாலே

என்னும் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, அன்புள்ளத்தோடு, தாயுள்ளத்தோடு பணியாற்றும் சகோதரர்கள் இருவரையும், இச் சகோதரர்களுக்குத் துணை நிற்கும், ஆருயிர் நண்பர்கள் இருவரையும், பிள்ளைகளோடு இணைந்து, நெகிழ்ந்துப் பணியாற்றும் இவர்களின் தந்தையையும் வாழ்த்துவோமா நண்பர்களே, இவர்களின் சீரிய பணி தொடர போற்றுவோமா நண்பர்களே.

ஏறு முன்னேறுதி ராவிடனே
இன்னலை நீக்குதல் உன்கடன் – விரைந்தேறு
வீறுகொண் டேறுவி ரைந்துமுன் னேறுவி
ழாக்கண்ட பிள்ளையைப் போல் மகிழ்ந்தேறு.
                                   - பாவேந்தர் பாரதிதாசன்..





      


67 கருத்துகள்:

  1. ஒன்றே செய்யவேண்டும்... நன்றே செய்ய வேண்டும், இன்றே செய்ய வேண்டும், இன்னே செய்ய வேண்டும். நல்ல செய்தி. எடுத்து எழுதியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வியக்கின்றேன் நண்பரே,,,, இந்த தந்தை என்ற மகானையும், மகன்களையும் கண்டு... வளரட்டும் இவர்கள் தொண்டு...

    திருமிகு பாலசுப்பிரமணியன்
    திரு. இராஜராஜன்,
    திரு. அருண் குமார்
    திரு. மணிமாறன்,
    திரு. ராஜன்,
    திரு. சதீஷ்

    இவர்களை பாராட்ட எமக்கு வயதோ பக்குமோ இல்லையென்றே கருதி வணங்குகிறேன்.

    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    பதிலளிநீக்கு
  3. ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளையை நடத்தும் ஐவர் குழுவினருக்கு வாழ்த்துகள்!
    நல்ல வழி காட்டியுள்ளார்கள் அவர்கள் பணிசிறக்கவும் வாழ்த்துகள்!
    த ம +1

    பதிலளிநீக்கு
  4. நல்லாரைக் காண்பதுவும் நன்றே!..
    நல்லோர் தம் பணியால் மண் பயனுறுகின்றது..

    இனிய பதிவில் - நல்லதொரு தொண்டுள்ளங்களை அறிமுகம் செய்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  5. ஆச்சர்யமும் ஆனந்தமும் ஏற்படுகிறது ஐயா !! வளர்க அவர்களின் தொண்டுள்ளம், அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா !! மேற்கொள்கள் அனைத்தும் வெகு பொருத்தம் ஐயா !! குறிப்பாக வீழ்வேனென்று நினைத்தாயோ மனதை பலப்படுத்தும் ஒரு வீர வசனம் ஐயா... வாழ்த்துகள்...தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல மனம் கொண்ட இந்த அறுவர் சேர்ந்த தொண்டு நிறுவனம்
    மென் மேலும் வளர்ந்து மக்களுக்குப் பயன் தர வாழ்த்துக்கள்.

    அருமையான மனங்களை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அய்யா
    `அன்புள இனி நாம் ஓர் அறுவர் உளரானோம்` எனும் ராமனின் மொழிக்கேற்ப அறுவர் இணைந்த தொண்டு நிறுவனமும் அவர்களின் பணிகளும் கண்டு இவர்கள் போன்ற நல்லோர்கள் இருப்பதனால் தான் இவ்வுலகம் இன்னும் உயிர்ப்போடு சுழல்வதாகத் தோன்றுகிறது. பாரதியின் வரிகள் நெஞ்சுக்கு உரம் அய்யா. நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த வழிகாட்டல் செயலமர்வுகள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான அறிமுகங்கள்!
    இப்படி நல்ல மனங்களைக் காண்பதே அரிதான உலக வாழ்க்கையில்
    இவர்களின் தொண்டு பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. நல்மனம் படைத்தோர்...
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அவர்களை...
    அறியச் செய்தமைக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலை வழி தங்களை மீண்டும் சந்திக்கிறேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  11. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை தொடங்கி சிறப்பாக நடத்தி வரும் என் மாணவர்கள் உட்பட்ட ஆறு நல் உள்ளங்களுக்கும் அந்த தொண்டினை அற்புதமாக விளக்கமாக பதிவிட்ட தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள். சிறு வயதிலேயே அவர்கள் தொடங்கிய நற்பணிகள் நிச்சயம் அவர்களுக்கு நாளை ஒரு நல்ல முகவரியை தரப்போகிறது. நாம் அனைவரும்அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதிக்கூறுவோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்
      நம்மால் இயன்ற பங்களிப்பை ஆற்றுவோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  12. இந்த இளைஞர்களை கண்டால் நாளைய இளைய சமுதாயம் நலம் பெறும் என்ற நம்பிக்கை வருகிறது. இவர்களின் சமுதாய தொண்டு வாழ்க!
    பிள்ளைகளோடு இணைந்து, நெகிழ்ந்துப் பணியாற்றும் இவர்களின் தந்தையையும் வாழ்க!
    மேலும், மேலும் இவர்கள் பணிதொடர வாழ்த்துக்கள்.

    நல்லமனம் படைத்தவர்களை அறிய தந்தமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற இளைஞர்களால்தான் சமுதாயம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  13. "பெய்யெனப் பெய்யும் மழை"

    எங்கள் பாஸிட்டிவ் செய்திகளுக்கு இந்தச் சுட்டியை எடுத்துக் கொள்கிறேன் - உங்கள் அனுமதியோடு. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் நன்றி நண்பரே

      நீக்கு
  14. என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா.

    நல்ல உள்ளங்கள் பற்றி அறியத்தந்மைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. வள்ளுவன் குறளுக்கு எடுத்துக்காட்டு!தந்தையும் மக்களும்! வாழ்க அவர் தொண்டு!

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமையான செயல்...
    ஐவருக்கும் ஐவரோடு தோள் கொடுத்து அறுவரான தந்தைக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. நிச்சயமாக இவர்களைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது
      நன்றி நண்பரே

      நீக்கு
  19. ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளையை நடத்தும் ஐவர் குழுவினருக்கு வாழ்த்துகள்! உலகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்குவது இவர்களைப் போன்ற நல்லோர் ஆங்காங்கே இருப்பதுனால் தானோ?!!! நிச்சயமாக! தந்தைக்கும் ஐவருக்கும்க் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. சில நல்லவர்களைப்பற்றி அறிந்துகொள்ளச்செய்த நன்மை தரும் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களைப் பற்றி எழுது ஓர் வாய்ப்பு கிடைத்தமைக்காக மகிழ்கின்றேன் நண்பரே

      நீக்கு
  22. ருத்ரன் கல்வி & தொண்டு அறக்கட்டளை மேலும் மேலும் நன்கு வளர்ந்து சிறப்புடன் பணியாற்றிட எனது வாழ்த்துக்கள்!
    த.ம.11

    பதிலளிநீக்கு
  23. மிகச் சீரிய முறையில் தொண்டாற்றிவரும் நண்பர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவர்களை அறிமுகப்படுத்தி தாங்களும் சிறந்த தொண்டாற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. உண்மையிலேயே வாழ்த்த வேண்டிய தொண்டு அண்ணா!! அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கஸ்தூரி (மது)யின் மாணவர்களும் இது போலவே நண்பா எனும் அறக்கட்டளை ஒன்று நிறுவி சிறப்பாக தொண்டாற்றி வருகிறார்கள்:) உங்களை போன்ற ஆசிரியர்களிடம் படித்த பிள்ளைகள் இப்படி செயல் படுவதில் வியப்பே இல்லை:) தொடரட்டும் உங்கள் சிறந்த பணி:)

    பதிலளிநீக்கு
  25. இது போன்ற பாசிட்டிவ் மனிதர்கள் தான் இன்னமும் இந்த தேசத்தில் அன்பு இருக்கிறது என்பதை உணர்த்துகிறார்கள்.

    சீரிய பணியாற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. ஆறுமுகம் படைத்த ஐயா போற்றி என்று வணங்குகிறேன். அருமையான தொண்டை உலகத்துக்கு எடுத்து உரைத்த உங்களுக்கும் என் நன்றிகள் ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  27. பணம் இருப்பது மட்டுமல்ல அதனை அடுத்தவருக்கு தேவைப்படும் போது கொண்டு சேர்க்கும் உங்கள் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள். அதனை அனைவருக்கும் எடுத்துக்காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் என்பதே அடுத்தவர்களுக்கு உதவத்தான் என்று நினைப்பவ்ர்கள் இவர்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  28. அறக்கட்டளையை நடத்தும் ஐவர் குழுவினருக்கு வாழ்த்துகள்!
    நல்ல வழி காட்டியுள்ளார்கள் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  29. அன்பின் ஜெயக்குமார் - அருமையான பதிவு - படித்தேன் - மகிழ்ந்தேன்

    ருத்ரன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை - தோன்றிய விதமும், தோற்றுவித்து - இன்று வரை நல்வேறு பணிகளை அயராமல் செய்துவரும் - அற்க்கட்டளை நடத்தி வரும் அறுவரும் பாராட்டுக்குரியவர்கள் -

    மேன் மேலும் பல தொண்டுகளை மேன் மேலும் செய்து வர நல்வாழ்த்துகள்

    என்னால் எப்படிப் பட்ட உதவியாயினும் ஓரளவிற்கு ச் செய்யத் தயாரெனவும் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும் எனவும் தங்கள் மூலமாக அறுவருக்கும் இச் செய்தியினைப் பரப்ப அன்புடன் வேண்டுகிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனம் நான் அறிவேன் ஐயா
      தங்களின் செய்தியினை தெரியப்படுத்தி விட்டேன்
      நண்பர்கள் தங்களைத் தொடர்வு கொள்வார்கள் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  30. ருத்ரன் அறக் கட்டளை மென்மேலும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  31. தலை வணங்குகிறேன் அய்யா .. அவர்களின் தொண்டிற்கு

    பதிலளிநீக்கு
  32. அறிவு என்னும் அட்சய பாத்திரம் தங்களுக்கு பரிவு என்னும்(தொண்டு ) பரிவட்டத்தைக் கட்டி அழகு பார்க்கிறது.
    புதுவை வேலு (KUZHALINNISAI.BLOGSPOT.COM)

    பதிலளிநீக்கு
  33. மிக அருமையான பதிவு.ருத்ரன் அறக்கட்டளையின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. தெய்வங்களைத் தேடி இன்னமும் சமூகம் அலைகின்றது இருப்பினும்
    தெய்வங்கள் இப்படியும் மனித ரூபத்தில் வரும் என்று உணர்ந்தால் போதும் அலைய வேண்டிய அவசியமே கிட்டாது !இந்தக் குழுவினரால் நாடும் மக்களும் நலன் பெற அவர்களும் தீர்காயுசுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன் தங்களுக்கும் இதே வாழ்த்துக்களைச் சொல்லி !மிக்க நன்றி அன்புச் சகோதரனே பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனமார்ந்த வாழ்த்திற்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
  35. ஐவர் குழுவிற்கு பாராட்டுக்கள். அதனை பகிர்ந்துக்கொண்டதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. என்னென்று சொல்லி இவர்களை வாழ்த்துவேன்

    விந்தை புரிய விளைகின்ற நல்மக்கள்
    முந்தையர் ஈந்த கரு !

    எல்லாம் பிறப்பின் குணம் அன்றி வேறில்லை இவர்களின் பணிசிறக்க இறைவன் அருள்பாலிக்கட்டும் நீண்ட ஆயுளும் தேகாரோக்கியமும் கொண்டு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  37. பெயரில்லா22 செப்டம்பர், 2014

    நல்ல தொகுப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
    வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
    தாயென்ற பாவனை யோடும் – உன்
    சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்

    என்ன அருமையான வரிகள்
    ருத்ரன் அறக்கட்டளைக்கு பொருத்தமானதே..
    தம ஒன்று கூடுதல்

    பதிலளிநீக்கு
  39. வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து முன்னேறியவருக்குத்தான் தெரியும் இல்லாமைஎனும் கொடுமை பற்றிய அனுபவம் அப்படியும் இருந்த இருப்பை மறந்து சிந்தனை ஏதும் இல்லாமல் முன்னேறும் உலகில் இவர்களின் பணி பாராட்டுக்குரியது. வளரட்டும் இவர்கள் தொண்டு. அறிமுகப் படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. மிகச்சிறந்த பணி ..வாழ்த்துகள் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு