யாதும் ஊரே, யாவரும்
கேளீர்
என்றார் கனியன் பூங்குன்றனார். இப்பெருமகனாரின் வாக்கு, இணையத்தால், வலைப்
பூவால் இன்று உண்மையாகி இருக்கிறது.
வலைப் பூ நமக்கு, உலகெங்கினும்
உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. முகமறியா நம் நட்பு, எல்லைகளற்று, பரந்து
பரட்ட இவ்வுலகு முழுவதும் பரவியிருக்கிறது.
நம் அனைவரையும் இணைப்பது,
நமது தொப்புள் கொடி உறவான தமிழ் அல்லவா.
தமிழால் இணைந்த நாம், இவ்வுலகில்
நாமும் வாழ்ந்தோம், என்பதற்கு அடையாளமாக, எதையாவது விட்டுச் செல்ல வேண்டாமா.
வாழ்நாள் முழுதும் அலைந்து,
அலைந்து, உழைத்து, உழைத்து சேமித்த செல்வத்தையோ அல்லது வறுமையின் பிடியில் சிக்கி
உழன்று, மீள வழி தெரியாது, வாங்கி, வாங்கிச் சேர்த்த கடன் சுமையினையோ, நம்
வாரிசுகளுக்கு விட்டுச் செல்லத்தான் போகிறோம்.
ஆனால், வலையுலக உறவுகளான,
சகோதர, சகோதரிகளுக்கு விட்டுச் செல்ல, நமது நினைவாய் பகிர்ந்து மகிழ, நம்மிடம்
என்ன இருக்கிறது.
நண்பர்களே, யோசித்துப்
பார்த்தால், ஒன்றே ஒன்று மட்டும் மிஞ்சியிருக்கிறது. அதுதான் நமது எண்ணங்கள், நமது
எழுத்துக்கள்.
நம்முடனேயே, நமது
எண்ணங்களையும், உயர் சிந்தனைகளையும், சிந்தனையின் விளைவாய் தோன்றிய
எழுத்துக்களையும், குழி தோண்டிப் புதைக்கத்தான் போகிறோமா அல்லது தீ மூட்டி
எரிக்கத்தான் போகிறோமா.
நம் காலத்திற்குப்
பிறகும், நமது எண்ணங்களை, நமது எழுத்துக்களை, நீரூற்றி வளர்க்க, ஓர்
வழியிருக்கிறது.
அவ்வழியினை நமக்குக் காட்ட,
தயாராய் இருக்கிறார் ஒரு அற்புத மனிதர். அவருடைய பெயரே சொல்லும் அவரின் பெருமையை,
அருமையை.
என்னவொரு பெயரினைத்
தேர்ந்தெடுத்தருக்கிறார் பார்த்தீர்களா. இவரின் அறிமுகத்திற்கு இப்பெயர் ஒன்றே
போதும். இவர் காட்டிய வழிதான்,
கிரியேட்டிவ் காமன்ஸ்
படைப்பாக்கப்
பொதுமங்கள்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா
அவர்கள், அலையாய் அலைந்து, பாதம் தேயத் தேய நடையாய் நடந்து, ஓலைச் சுவடிகளைக்
கண்டு பிடித்து, அச்சிலேற்றி, நமது முன்னோரின் சீரிய சிந்தனைகளை, வாழ்வியல்
நெறிகளை எல்லாம் நூலாக்கி, இறந்து படாமல் காத்தார்.
இன்று மின்னூல்
வந்துவிட்டது. இணையத்தில், தமிழ் அரியணை ஏறிவிட்டது. உலகைச் சுற்றி வலம் வரத்
தொடங்கிவிட்டது.
நண்பர்களே, நாம் தொடர்ந்து
எழுதிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நமது எழுத்துக்கள் அத்தனையும், நூல் வடிவம்
பெறுகின்றனவா?
நூல் வடிவம் பெறும் எழுத்துக்கள்
கூட, எத்தனைப் பேரைச் சென்றடைகின்றன. சில நூறு பேர்களைச் சென்றடையலாம்.
சில நூறு பேர்கள் மட்டும்
நமக்குப் போதுமா?
நமது எழுத்துக்கள் நூல் வடிவம்
பெறும் பொழுது, பதிப்புரிமை நம் வசமாகிறது என்பதும் உண்மைதான்.
பதிப்புரிமையால் நமக்குக்
கிடைப்பது என்ன? பொருளாதார ரீதியிலான பயன் மட்டுமே.
பதிப்புரிமையின் காரணமாக, இலாபம்
கிடைத்தாலும், அறிவு விருத்தியும், அறிவு பரவலும் பெருமளவில் தடைபடுகின்றன என்பதே
உண்மை.
சமூக நலம் கருதிய படைப்புகள் கூட, அவை சென்றடைய
வேண்டிய மக்களைச் சென்றடையாமல் பாதி வழியிலேயே, திசை மாறிச் சென்று விடுகின்றன.
நமது எழுத்துக்களும், நமது
சிந்தனைகளும், பெருவாரியான மக்களைச் சென்றடைய ஒரே வழி,
கிரியேட்டிவ் காமன்ஸ்
படைப்பாக்கப்
பொதுமங்கள்.
இது படைப்பாளர்களுக்கும்,
பயனாளர்களுக்கும் இடையேயான, ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகின்றது.
நமது எழுத்துக்களைச் சட்டப்படி,
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதையும், ஊக்குவிப்பதையும், விரிவு படுத்துவதையும்
நோக்கமாகக் கொண்டு, 2001 ஆம் ஆண்டில் லோறன்ஸ் லெசிக் என்பவரால் தொடங்கப்
பெற்ற அமைப்பு இது.
இந்நிறுவனமானது, இதற்காக ஆறு
வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம்,
படைப்பாளனின் படைப்பை, வாசகர் அனைவருக்கும் பகிரும் உரிமை உள்ளதால், உலகெங்கும்
உள்ள வாசகர்களை, நம் எழுத்துக்கள் சென்றடையும்.
ஒவ்வொரு முறை பகிரப்படும் பொழுதும், நமது
பெயரும் சேர்ந்தே உச்சரிக்கப்படும். இது நம்முடைய எழுத்து, நம்முடைய எண்ணம்
என்பதையும் உலகு அறியும்.
வாசகர்கள் தாம் படிக்கும்
நூல்களை, தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், தங்களது வலைப் பூவிலும்
வெளியிடலாம். ஆனாலும் நமது பெயரினைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பகுத்துண்டு பல்லுயிர்
ஓம்புதல் என்பர் நம் முன்னோர்.
பகிர்தல் என்பது மனித
குலத்தின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்றல்லவா. நாம் விரும்பும் எதையும், எவர்
எழுத்தையும், இதன் மூலம் பகிரலாமே.
உங்களுக்கு ஒரு படம்
தேவையா, கூகுள் தேடுபொறியில் தேடி, உங்களுக்கு உரிமை இல்லாத படத்தினைப்
பயன்படுத்துவதைவிட,
என்னும் வலையில் தேடிப் பகிரலாம். இங்குள்ளவை அனைத்தும், அனைவருக்கும் சொந்தம்.
நமது சொத்தல்லவா.
நண்பர்களே, இதற்காக நாம்
செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
என்னும் வலையில் நுழையுங்கள்
01.
Creative
Commons Attribution By ( CC – BY)
02.
Creative
Commons Attribution – Share Alike ( CC – BY – SA )
03.
Creative
Commons Attribution – No Derivs ( CC – BY – ND )
04.
Creative
Commons Attribution- Non Commercial ( CC – BY – NC )
05.
Creative
Commons Attribution – Non Commercial – Share Alike ( CC – BY – NC – SA )
06.
Creative
Commons Attribution – Non Commercial – No Derivs ( CC – BY – NC – ND )
என ஆறு உயரிய ஒப்பந்தங்களைக் காணலாம். நீங்கள்
விரும்பும் ஒப்பந்தத்திற்கு எதிரே, ஒரு நிரலி இருக்கும்.
<a rel="license"
href="http://creativecommons.org/licenses/by/4.0/"><img alt="Creative
Commons License" style="border-width:0"
src="https://i.creativecommons.org/l/by/4.0/88x31.png"
/></a><br />This work is licensed under a <a
rel="license" href="http://creativecommons.org/licenses/by/4.0/">Creative
Commons Attribution 4.0 International License</a>
இந்நிரலியை copy செய்து கொள்ளுங்கள்.
HTML / Java Script என்பதற்குப் பக்கத்தில், வலது புறமாக இருக்கும் + குறியை கிளிக்குங்கள்.
மீண்டும் ஒரு ஜன்னல்
திறக்கும்.
Content பெட்டியில், தாங்கள்
ஏற்கனவே Copy செய்து
வைத்திருக்கும் நிரலியை Paste செய்யுங்கள். பின் Save பட்டனை அழுத்துங்கள்
அவ்வளவுதான். லே அவுட்டில்
இருந்து வெளியேறி, உங்களின் வலைப் பூவைப் பாருங்கள்.
நண்பர்களே, கிரியேட்டிவ் காமன்ஸ்
உரிமையில், உங்கள் படைப்புகளை வெளியிட்டு, உங்கள் வாசகர்களுக்கும் பகிரும்
உரிமையைக் கொடுத்துத்தான் பாருங்களேன்.
வாசகர்கள் உங்களை வாழ்த்திக்
கொண்டே படிப்பார்கள். பகிர்வார்கள். உங்கள் படைப்புகள் சாகா வரம் பெறும்.
எதைக் கொண்டு வந்தோம்
அதைக் கொண்டு செல்ல.
தொடர்படைய இணைய தளங்கள்
மெலும் விவரம் அறிய
திருமிகு தகவலுழவன்
90 95 34 33 42
மின்னஞ்சல்
tha.uzhavan@gmail.com
விரிவான விளக்கத்திற்கும், தங்கள் தளத்தை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டமைக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...? முழுவதும் படியுங்கள்...
பதிலளிநீக்குCopy and WIN : http://ow.ly/KfYkt
///சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில்///
நீக்குஎன்ன நண்பரே இது.
சமூக வலை தளங்கள் எவ்வளவோ உயரிய உன்னத செய்திகளைத் தாங்கி வருகின்றன நண்பரே
அதில் செலவிடும் நேரம், வீனானது அல்ல.
சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...? முழுவதும் படியுங்கள்...
பதிலளிநீக்குhttp://www.mukavare.com/2015/01/blog-post.html
///சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில்///
நீக்குஎன்ன நண்பரே இது.
சமூக வலை தளங்கள் எவ்வளவோ உயரிய உன்னத செய்திகளைத் தாங்கி வருகின்றன நண்பரே
அதில் செலவிடும் நேரம், வீனானது அல்ல.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்கள் தளத்தில் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை பெற்றமைக்கு பாராட்டுக்கள் நாங்களும் நிச்சயம் செய்கிறோம் விரிவான விளக்கம் விளக்கத்தை படித்த போது உணர்ந்து கொண்டேன் இதன் பயன் பாட்டை. பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குபடங்களுடன் விளக்கம் அசத்தல் ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி ஐயா
நீக்குதமிழ் மணம் 3 பிறகு வருவேன்.
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு2 வது http://creatuvecommons.org/licences/ என்பதை http://creativecommons.org/licenses/ என்று மாற்ற வேண்டும் ஐயா...
பதிலளிநீக்குதிருத்தம் செய்துவிட்டேன் நன்றி ஐயா
நீக்குவிளக்கமாக, படம் போட்டு காட்டி இருப்பது சிறப்பு. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல பயனுள்ள கருத்தாக்கம்.பயன் படுத்திக்கொள்கிறேன்,பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல செய்திதான்! ஆனால் என்னால் முடியாதே!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குpaanulla pathivu ayya.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவிளக்கத்திற்கு நன்றி. எனக்கு எங்கள் குழுமம் வாயிலாக இது குறித்து முன்னரே தெரியும். எனினும் என்னுடைய சில வலைப்பக்கங்களில் எழுதுபவைக்குத் தனிப்பட்ட காப்புரிமை இருப்பதால் என்னுடைய வலைப்பக்கத்தை க்ரியேட்டிவ் காமன்ஸில் இணைக்க முடியாது. ஆனால் ஒரு சில படைப்புக்களை க்ரியேட்டிவ் காமன்ஸின் காப்புரிமையில் மின்னூலாக்கி இருக்கிறேன். உங்கள் விரிவான தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குபயனுள்ள தகவல். நன்றிங்க சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குதமிழ்கூறும் நல்லூலகத்திற்கு பயனுள்ள தகவலைத் தந்த தாங்களும், செய்திகளை வெப் பேஜ்ஜாக மாற்ற உழைத்து வரும் தகவல் உழவன் அவர்களும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதிரு தகவல் உழவன் அவர்கள் 2011 டிசம்பர் 18,19 தேதிகளில் விக்கிபீடியா நடத்திய மாநாட்டிற்கு வந்தார். மேடையில் ஏறி தகவல் தந்தார். அவரை தமிழகம் செல்ல இரயில் நிலையத்திற்கு வழிகாட்டினேன். சிறந்த உழைப்பாளி. நாளில் பாதிநாள் வெப் தொடர்பான வேலைகளை செய்து வருவதாகக் கூறினார். பணி தொடர வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குஎளிமைப்படுத்தி, படங்களுடன் கூடிய விளக்கங்களுடன் புரிய வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
நன்றி நண்பரே
நீக்குபயனுள்ள தகவலை படங்களுடன் விளக்கியமைக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவிரிவான விளக்கத்துடன் அருமையான தகவல் பகிர்வு. நன்றி..
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான தகவல். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅருமையான விரிவான படங்களுடன் கூடிய விளக்கம். எளிமைப் படுத்தி தந்துள்ளீர்கள் நன்றி. முயற்சிக்கிறேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு! நல்ல விளக்கங்களுடன், தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி! அதற்காக உழைக்கும் தகவல் உழவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! இதை அறியத் தந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்லதொரு தகவல் நண்பரே விளக்கவுரை அருமை முயற்சிக்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல சிந்தனை. நல்ல யோசனை. ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.6
நன்றி ஐயா
நீக்குவாசித்துப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு//வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில்//
பதிலளிநீக்குஇந்த vilpatti Muthalraj ஆளை வேறு எங்காவது சென்று விளம்பரம் செய்யச் சொல்லுங்களேன். இங்கே அவரது வார்த்தைகளை, அதுவும் இந்தப் பதிவில் வாசிக்கும் போது மிகுந்த எரிச்சலாக இருக்கிறது. அவரது விளம்பரத்தை இங்கேயிருந்து நீங்களே தூக்கி விடுங்களேன்.
வருந்தத் தக்க செய்தி ஐயா
நீக்குவினாக்கும் பொழுது என்பது சரியானது அல்லதான்.
நேரத்தை செலவிடுவதே பொருளாதார ரீதியிலான இலாபம் ஈட்டத்தான் என சிலர் நினைப்பதால் வரும் வினை இது
நன்றி ஐயா
நல்ல வழிகாட்டியுள்ளீர்கள் ,அந்த தளத்தைப் பற்றி ,பொறுத்திருந்து பார்க்கிறேன் :)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபயனுள்ள தொழில்நுட்ப தகவல்களுக்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குதம 9
thanks. noted content.new effort. wishes
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபயனுள்ள தகவல்கள் .. மிக்க நன்றி
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு அதைச் செயல்படுத்த முயல்கிறேன்
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு அதைச் செயல்படுத்த முயல்கிறேன்
பதிலளிநீக்குதகவல் உழவன் அவர்களைத் தங்கள் மூலமாக அறிந்து விக்கிபீடியா கட்டுரைகளுக்காகத் தொடர்பு கொண்டுள்ளேன். தாங்கள் கூறியுள்ள இம்முறையை கடைபிடிக்க முயற்சிப்பேன். நன்றி.
பதிலளிநீக்குஏற்கெனவே திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் தமது பல நூல் களை இவ்வகை கிரியேட்டிவ் காமன்ஸ் பொதுமைப்படுத்தல் மூலம் பகிர்ந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியும் கூட. இப்போது தாங்களும் வழிகாட்டுகிறீர்கள். விரைவில் நானும் வந்துவிடுவேன்.- இராய செல்லப்பா
பதிலளிநீக்குஏற்கெனவே திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் தமது பல நூல் களை இவ்வகை கிரியேட்டிவ் காமன்ஸ் பொதுமைப்படுத்தல் மூலம் பகிர்ந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியும் கூட. இப்போது தாங்களும் வழிகாட்டுகிறீர்கள். விரைவில் நானும் வந்துவிடுவேன்.- இராய செல்லப்பா
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குதங்களின் இந்தப் பதிவினை தாங்கள் பதிவிட்ட தினமே வாசித்துவிட்டேன். ஒரு அருமையான கணினி ஆவணக் காப்பகத்தினை எங்களுக்கு காட்டியதற்கு கோடி நன்றி.
அவசியமான ஒன்றை மிக தெளிவாக விளக்கி பதிவிட்டதற்கு நன்றி அய்யா
பதிலளிநீக்குசாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிகவும் பயனுள்ள பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது. முயற்சிப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஎழுத்துக்களைப் பொதுவில் வைப்போம் என்ற தலைப்பில் தாங்கள் கூறியபடி எனது வலைப்பூவை இணைத்துள்ளேன். தங்களின் முயற்சிக்கும் இவ்வாறான பகிர்வுகளுக்கும் மறுபடியும் என் நன்றி.
பதிலளிநீக்குஉண்மை தான் ! படைப்பு வெளியாகும் வரை படைப்பாளியின் உரிமை..வெளியான பின் அது உலகத்தின் உடைமை.........உடுவை
பதிலளிநீக்கு