01 ஜனவரி 2016

பிச்சாவரம்




  கடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 2.30மணி. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எதிரே உள்ள கடை வீதியில், பூட்டப் பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நானும், என் மனைவியும் அமர்ந்திருக்கிறோம்.

   அன்று காலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டுக் கருத்தரங்கம். 350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.

     காலை நிகழ்ச்சி நிறைவுற்றதும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்டோம். என் மனைவி சிதம்பரம் நடராசரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். உத்தரவினை மீற இயலாதல்லவா. இதோ கோயிலின் வாசலில்.


    மாலை 4.00 மணிக்குத்தான் கோயிலின் கதவுகள் திறக்கும். அதுவரை பூட்டியிருந்த கடையில் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

     அலைபேசியில், நண்பரும், எம் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களை அழைத்தேன். புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகளைப் பகிரிந்து கொண்டேன்.

இப்பொழுது எங்கிருக்கிறீர்கள் எனக் கேட்டார்.

கடையின் வாசலே சரணம் என்று அமர்ந்திருக்கிறோம் என்றேன்.

எதற்காக பூட்டிய கடைக்கு காவல் இருக்கிறீர்கள். அருகில்தான் பிச்சாவரம் இருக்கிறது, சென்று வாருங்களேன் என்றார்.

பிச்சாவரம்

    பிச்சாவரம் சிதம்பரத்திற்கு அருகில் என்று தெரியும். மிக அருகில் என்று தெரியாது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் விசாரித்தேன்.

பதினைந்தே நிமிடம் என்றார்.

    எனது முன்னாள் மாணவர் திரு தினேஷ் என்பவர் வாடகைக் கார் நிறுவனம் நடத்தி வருபவர். அவருடன் அவரது காரில்தான் சிதம்பரம் வந்திருந்தோம்.

    அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் பிச்சாவரத்தில் இருந்தோம்.

பிச்சாவரம்.

       சிதம்பரத்திற்கு அருகில், மிக அருகில், வங்கக் கடலை ஒட்டிய பகுதி பிச்சாவரம்.

        முன்னாளில் பித்தர் புரம் என அழைக்கப் பட்ட, இப்பகுதி, பின்னாளில் மருவி பிச்சாவரமாகி இருக்கிறது.

    பிச்சாவரம் காட்டுப் பகுதியின் பரப்பளவு என்ன தெரியுமா?

    ஒரு ஏக்கர், இரு ஏக்கர் அல்ல, முழுதாய் 2800 ஏக்கர்கள்.

    வங்கக் கடலுக்கு முன், தனியொரு கடலாய் இப்பகுதி பரந்து விரிந்துள்ளது.

    அவ்வளவும் மண்ணும், நீரும், சேறும், சகதியும் நிறைந்த பகுதி. இப்பகுதியில் தண்ணீரின் ஆழம் ஒரு சில அடிகளே. ஆனாலும் இறங்கி நடக்க இயலாது. காரணம் சேற்றுத் தரை.

     இதுபோன்ற உவர் நீரும், சேறும் சகதியும் கலந்த பகுதியில், சில வகைத் தாவரங்களால் மட்டுமே பிழைப்பை ஓட்ட முடியும்.

      நமக்குத் தெரிந்து, சிறு செடியாகட்டும், உயர்ந்தோங்கி நிற்கும் பெரு மரம் ஆகட்டும்., இவற்றின் வேர்கள், மண்ணில், கீழே கீழே ஆழமாய் இறங்கி படர்ந்து பரவி மரத்தைக் காக்கும்.

       ஆனால் இப்பகுதியில் வளரும் தாவரங்களின் வேர்கள், பூமிக்குள்ளே சென்று, கொண்டை ஊசி வலைவில் திரும்புவதுபோல் ( U Turn ) திரும்பி, மீண்டும் மண்ணைப் பிளந்து கொண்டு, மேலே வந்து, தண்ணீர் மட்டத்திற்கும் மேலே, தலை நிமிர்ந்து நிற்கும் வல்லமை வாய்ந்தவை.

      இவ்வகைத் தாவரங்களால் நிறைந்த பகுதியே அலையாத்திக் காடுகள் ஆகும்.

     கடலில் இருந்து கரைநோக்கி வரும், கடும் அலையினையும், ஏன் சுனாமியைக் கூட, இது எங்க ஏரியா, உள்ளே வராதே என, நேருக்கு நேர் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும் உடல் வலு பெற்றவை இந்த அலையாத்திக் காடுகள்.

     அலைகளைத் திருப்பி அனுப்புவதாலேயே, அலையாத்திக் காடுகள் என்னும் பெயர் பெற்றவை.

       உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய அலையாத்திக் காடு பிச்சாவரம்.

       முதலிடம் எங்கு இருக்கிறது தெரியுமா? அதுவும் இந்தியாவில்தான். கங்கை ஆற்றுப் படுக்கையில் உள்ள, சுந்தரவனக் காடே, உலகின் மிக மிகப் பெரிய அலையாத்திக் காடுஆகும்.

       இதோ பிச்சாவரம்.
      

ஆங்காங்கே சிறு சிறு கட்டிடங்கள். பயணிகள் தங்கும் விடுதி. உணவு விடுதி. பிச்சாவர படகுத் துறை அலுவலகம். கரையில் வரிசை வரிசையாய் துடுப்புப் படகுகள். ஒன்றிரண்டு மின் மோட்டார் படகுகள்.

       மின் மோட்டார் படகில் பயணிக்க கட்டணம் ரூ.1500. இப்படகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் அமரலாம்.

       ஆனால் இப்படகானது, ஆழம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயணிக்கும். அலையாத்திக் காடுகளில் சந்து பொந்துகளில் நுழைந்துப் பயணிக்க இப் படகால் இயலாது.

        அலையாத்திக் காடுகளின் செல்லப் பிள்ளையே துடுப்புப் படகுகளதான். சுமார் ஒரு அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்தாலும், துடுப்புப் படகானது, அருமையாய் அசைந்தாடிச் செல்லும்.

       துடுப்புப் படகில் ஒரு நபருக்குக் கட்டணம் ரூ.80. மூன்று சீட்டு பெற்றோம். பயணச் சீட்டிலேயே, படகோட்டியின் எண்ணையும் குறித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

       பயணச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு, படகுத் துறைக்குள் நுழைந்தோம். படகுத் துறையில் பாதுகாப்பு அங்கியினை, வரிசை வரிசையாய் மாட்டி வைத்திருந்தார்கள்.

      கடலில் ஆழமே கிடையாது. இருப்பினும் பாதுகாப்பிற்காக ஓர் முன்னேற்பாடு. அணிந்துதான் பார்ப்போமே என்ற ஆசையில் அணிந்து கொண்டோம்.

       எங்களுக்கு உரிய படகு வந்தது. ஏறி அமர்ந்தோம். படிகோட்டித் துடுப்புப் போட, படகு, யானை போல் மெதுவாய் அசைந்தாடிப் புறப்பட்டது.

      

கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அலையாத்திக் காடுகள். மெதுவாக படகுச் செல்லச் செல்ல, அலையாத்திக் காடுகள், தங்களின் அனைத்துக் கரங்களையும் நீட்டி, மார்போடு அணைத்து, எங்களை உள் வாங்கிக் கொண்டன.

     திடீரென்று வானமானது மேகக் கூட்டங்களால் நிரம்பி, சூரியனை மறைத்து இருளைப் பரிசாக வழங்கிய ஓர் சூழலை, ஒரு சில நிமிடங்களில் கண்ணாரக் கண்டோம். அலையாத்திக் காடுகள் சூரிய வெளிச்சத்தினை முழுமையாய் மறைத்து, இருளை வழங்கின. இருளில் எங்களின் படகு மெதுவாய் ஊர்ந்து சென்றது.

       









அடர்ந்த காட்டுப் பகுதியில் நுழைந்த ஓர் உணர்வு. எந்த திசையில் இருந்து வந்தோம், எந்த திசையில் பயணிக்கிறோம் என்பது கூட புரியவில்லை. கரை எங்கே, கடல் எங்கே என எதுவுமே புரியாத நிலையில் எங்களின் பயணம்.

      அமைதி என்றால் அப்படி ஓர் அமைதி. இதுவரை உணர்ந்திராத, அனுபவித்திராத ஓர் அமைதி.

        இந்த அமைதியை அனுபவிப்பதற்காக மட்டுமாவது, அனைவரும் ஒரு முறை பிச்சாவரம் சென்று வரவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

        எங்களின் மூச்சு சத்தம் எங்களுக்கே கேட்டது. துடுப்பானது நீரில் மோதும் ஓலி கூட, தெளிவாக, துல்லியமாக செவிகளில் நுழைந்து அதிர வைத்த்து.

       உலகே அமைதியாய் சுற்ற, துடுப்புச் சத்தம் மட்டுமே, உலகின் ஒரே ஒலியாய், ஒற்றை ஒலியாய், ஓங்கி ஒலித்தால் எப்படியிருக்கும். அதை நேரே அனுபவித்தோம்.

       அலையாத்திக் காடுகளுக்குள், உள்ளே, உள்ளே செல்லச் செல்ல, புதியதோர் உலகில் பயணிக்கும் ஓர் உணர்வு.

       


நேரம் செல்லச் செல்ல, நாங்கள் சென்ற பாதையில் இருந்து, பல கிளைச் சாலைகள், பிரிந்து பிரிந்து சென்றன. சில வழித் தடங்களின் அகலம் வெறும் இரண்டு அல்லது மூன்று அடி மட்டுமே இருக்கும்.

      பல குறுகிய பாதைகளில் பயணித்தோம். படகின் இருபுறமும் துடுப்புப் போடுவதற்குக் கூட இடமில்லை. படகினை முன் பின் ஆகத் திருப்பி, ஒரு துடுப்பினைப் படகில் வைத்து விட்டு, மீதமுள்ள ஒரே ஒரு துடுப்பினை மட்டும் பயன்படுத்தி, தரையில் துடுப்பினை அழுத்தி, அழுத்தி படகினை முன்புறம் தள்ளினார்.

     படகில் அமர்ந்தவாரே, கைகள் இரண்டையும் நீட்டினால், இருபுறமும் வளர்ந்துள்ள தாவரங்களைத் தொட்டுக் கொண்டே செல்லலாம். அவ்வளவு குறுகிற பாதையில் எங்களின் பயணம்.

    


ஒவ்வொரு தாவரத்தையும் உற்றுப் பார்த்தோம். தாவரங்களின் வேர் பகுதி, நீர் மட்டத்திற்கும் மேலே, தலையை நீட்டி எங்களை வேடிக்கைப் பார்த்தது.

         குறுகிய நீர் பாதையில் பயணித்த நாங்கள், பல நிமிடங்கள் கடந்த நிலையில், ஓர் அகலமான பாதையில் சங்கமித்தோம்.

      நண்பர்களே, நீங்கள் நடிகர் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் பார்த்திருப்பீர்கள். அப்படத்தின் தொடக்கக் காட்சிகளில், இறைவன் நாராயணனைப் படகில் ஏற்றி. இருபுறமும் மரங்கள் சூழ்ந்த நதி வழியே கொண்டு செல்வார்களே, அக்காட்சி நினைவிருக்கிறதா?

      


அக்காட்சி படம் பிடிக்கப் பட்ட இடம் இதுதான். இதோ அகண்டு விரிந்து, பெரு நதிபோன்ற பகுதியினைப் பாருஙகள்.

      அலையாத்திக் காடுகளில் இரண்டு மணி நேரப் படகுப் பயணம். நேரம் சென்றதே தெரியவில்லை.

      நாமெல்லாம் பேருந்தில், தொடர் வண்டியில், கப்பலில், வானூர்தியில் என நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலும் பயணித்திருக்கலாம். ஆனால் அப்பயணங்களில் கிடைக்காத ஓர் புதுமையான அனுபவத்தினை அலையாத்திக் காடுகளில் பெறலாம்.

      இரு புறமும் வழி நெடுக மரங்கள், மேற்புறமும் குவிந்து வானத்தை மறைக்கும் மரக் கூட்டங்கள். கீழே துடுப்புப் படகில் ஒரு முறை பயணித்துப் பாருங்களேன்.


       வாழ்வில் என்றென்னும் மறக்க இயலாதப் பயணமாய், நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பயணமாய் இது அமையும்.



       

82 கருத்துகள்:

  1. தமிழகத்தில் நாம் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று பிச்சாவரம். நான் சென்றுள்ளேன். மறுபடியும் உங்களுடன் பயணித்தேன். நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. அழகான பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள கரந்தையாரே!

    ‘350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.’
    -கின்னஸ் சாதனையில் தங்களின் நூலும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. ‘அத நீங்க...சொல்லவே இல்லையே...!|

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருக்கிறேன். ‘பிச்சாவரம்’ பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. தங்களின் பயணத்தை அழகாக... வர்ணனையுடன்... அருமையாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். அவசியம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டீர்கள்.

    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை
      என்பது நூலின் பெயராகும் ஐயா
      இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சீர் மிகுச் செயலாளராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர்
      வானார்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே
      மண்ணிய மூவேந்தர்தம் மடிவளர்ந்த மகளே
      என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்
      நன்றி ஐயா

      நீக்கு
  4. பகிர்வு அருமை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. 2016 சிறக்க வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்
    பிச்சாவரம் பற்றி நிறைய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே.
    படித்துக்கொண்டே வரும் பொழுது தசாவதாரம் திரைப்படத்தில் இடமா ? என்று கேட்க வேண்டும் என நினைத்தேன் அதையும் தாங்களே பதிவில் சொல்லி விட்டீர்கள் இதற்கு முன் இதயக்கனி திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது
    நானும் போக வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காரணம் எனக்கு தனிமை பிடிக்கும்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  7. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

    அருமையான இடம் ...

    பதிலளிநீக்கு
  9. அருமையான பயணம் ஐயா...
    பிச்சாவரம் போகணும்ன்னு ஆசை வந்தாச்சு ஐயா...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. பலமுறை சிதம்பரம் போயும் பிச்சாவரம் போகணும்னு தோன்றியதில்லை. ஒரு முறையாவது போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  11. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பதிவு படித்தால் நாங்களும் உடன் பயணித்தது போல் அருமை !!

    பதிலளிநீக்கு
  13. அமைதிப் பயணத்தின் அழகிய வர்ணனை!

    பதிலளிநீக்கு
  14. அன்பின் இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

    பிச்சாவரம் சென்று வந்த அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!! உங்களின் அழகிய தமிழில் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது!!

    பதிலளிநீக்கு
  15. மனம் கனிந்த புத்தாண்டு நல வாழ்த்துக்கள் .
    நேரில் எங்களையே அழைத்துச் சென்றது போன்ற பதிவு .

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு.அற்புதமான அலையாத்திக் காடுகளை அற்புதமான மாலை வேலையில் அண்ணியாரோடு அமர்ந்து துடுப்பு ஓடத்தில் துல்லலாய் வலம்வந்த நினைவுகளை புத்தாண்ட்டில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு.அற்புதமான அலையாத்திக் காடுகளை அற்புதமான மாலை வேலையில் அண்ணியாரோடு அமர்ந்து துடுப்பு ஓடத்தில் துல்லலாய் வலம்வந்த நினைவுகளை புத்தாண்ட்டில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. அழகிய ஒரு பயணப்பகிர்வு. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  19. வருடத்தின் முதல் நாளில் இனிய சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றதற்கு மகிழ்ச்சி..

    எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  20. ஆசிரியர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்! இதுநாள் வரையில் பிச்சாவரம் என்பது சென்னைக்கு அருகில், திருவொற்றியூர் பக்கம் என்றே எண்ணி இருந்தேன். தங்கள் பதிவின் மூலம் சிதம்பரம் அருகில் என்றே தெளிந்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  21. அருமையான ஒரு பயண அனுபவம்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. Wishing you and your family a very happy 2016.Even people residing at Chidambaram would not have visited Pichhavaram.There had been few boat capsizing events because of over loading.one should be carefull about that.Welldone Mr.Jayakumar.

    பதிலளிநீக்கு
  23. பிச்சாவரத்திற்கு நானும் உங்களோடு வந்ததாகவே உணர்ந்தேன்.
    சரி நண்பரே, அன்று வெளியான உங்கள் நூலின் பெயர் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை
      என்பது நூலின் பெயராகும் ஐயா
      இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சீர் மிகுச் செயலாளராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர்
      வானார்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே
      மண்ணிய மூவேந்தர்தம் மடிவளர்ந்த மகளே
      என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்
      நன்றி ஐயா

      நீக்கு
  24. பிச்சாவரத்திற்கு போகத் தூண்டிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  25. நீண்ட நாளாக போக வேண்டுமென்று எண்ணிய இடம் பிச்சாவரம். அதன் அழகை வார்த்தைகளால் படம் பிடித்து காண்பித்ததில் அங்கே போகும் என்ற எண்ணம் வலுத்துவிட்டது.பகிர்வுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஐயா!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பயணப் பதிவு மலைக்க வைக்கின்றது ஐயா!

    பதிலளிநீக்கு
  27. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  28. //எங்களின் மூச்சு சத்தம் எங்களுக்கே கேட்டது.//
    இதுதாங்க வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். இது எப்போ நிக்குதோ அப்போ தகராறுதான்.

    பதிலளிநீக்கு
  29. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா!!

    பதிலளிநீக்கு
  31. தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  32. ஆகா.பிச்சாவரம் சென்றுவந்த உணர்வு கிட்டியது.பகிர்வுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  33. இதுவரை சென்றதில்லை! ஒருமுறை சென்று வர தூண்டிவிட்டது உங்களின் பதிவு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  34. # அலையாத்திக் காடுகளுக்குள், உள்ளே, உள்ளே செல்லச் செல்ல, புதியதோர் உலகில் பயணிக்கும் ஓர் உணர்வு.#
    நானும் அந்த புதிய உலகில் நுழையும் நாளுக்காக காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  35. பல ஆண்டுகளுக்குமுன் சென்று வந்திருக்கிறோம்...
    திரைப்பட ஷூட்டிங் நடத்தி நடத்தியே இடத்தை அதிகம் மாசுபட வைத்துவிட்டனர் என்று தோன்றுகிறது...குறிப்பாக வெடிகுண்டு வைத்து படம் எடுத்தவர்கள்...

    இயற்கை அழகு என்றும் அழகு...நீரில் நீண்ட நேரம் படகில் சென்றுவரும் இன்பம் தனி இன்பம்...

    வாழ்த்துக்கள் அய்யா


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  36. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    நான் நமது நண்பர் திரு.கண்ணன் அவர்களுடன் ஒரு முறை பிச்சாவரம் சென்று வந்த பொழுது எனக்கு ஏற்பட்ட இனிய நினைவு மறக்காமல் இருந்தது. அதனால்தான் தாங்கள் சிதம்பரத்தில் காத்திருந்த பொழுது உடனே பிச்சாவரம் செல்லுங்கள் என்று கூறினேன். அந்த உணர்வினை மிக அற்புதமான வார்த்தைகளால் நிரப்பி அசத்தலாக பதிவிட்டு அழகு செய்தது அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அருமையான இடத்தைப் பற்றிய தகவல்கள்! செல்ல வேண்டும்.

    கீதா: சென்றிருக்கின்றோம் சகோ! அந்தப் பயணத்தை வாழ்நாளில் மறக்கவே இயலாது. நிறைய தடவை சென்றிருக்கின்றோம். இவைதான் சுனாமியைக் கூடத் தடுத்து நிறுத்திய தாவர இனங்கள். அதனாலாயே இந்தக் காடுகளை கடலருகில் வளர்க்க வேண்டும் என்று சொல்லப்படுவதுமுண்டு. நல்ல பகிர்வு சகோ..படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  38. அழகான பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  39. அருமையான காட்சி பதிவுகள் மற்றும் அனுபவங்கள் புதுமை.
    நானும் சென்றிருக்கிறேன். மீண்டும் பயண அனுபவத்தை மனக் கண் முன் நிறுத்தி, பழைய நினைவுகளை திரும்ப பெற முயற்சிப்பதற்கு பாராட்டுக்கள். தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் சிறப்புகளை வெளி உலகிற்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  40. ஆஹா அருமையான பயணம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  41. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  42. first shoot was in Idhaykkani.M.G.R's film.I too visited in my young age in 80s. Yes your post is right and valueful

    பதிலளிநீக்கு
  43. இரண்டுமுறை சென்று இருக்கிறோம் பிச்சாவரத்திற்கு. நன்றாக இருக்கும். பயண அனுபவம் அருமை.

    //350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.//

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. அழகான பயணப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்..
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  45. அருமை..உங்களிடம் எனக்கு பிடித்தது முழுமை...எதிலும் இருக்கும் இதிலும் பல தடவை சிதம்பரம் போனாலும் தவறவிட்டதை இனி ஒருமுறை வாய்த்தால் போவேன்...நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  46. கரந்தையார் அவர்களுக்கு,

    சிறப்பு புத்தக வெளி ஈட்டில் உங்கள் புத்தகமும் இடம் பெற்றமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

    பிச்சாவரம் போய் நேரில் பார்த்து தான் தெரிந்துகொள்ளவேண்டுமா இனியும் எனும் சிந்தையை விதைத்துவிட்டது உங்கள் அருமையான வர்ணனையும் விளக்க படங்களும்.

    அருமை அருமையான பயண கட்டுரை.

    கோ

    பதிலளிநீக்கு
  47. வணக்கம்
    ஐயா.

    பயணங்கள் பற்றி அற்புதமான விளக்கம்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு