11 மே 2016

இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம்


   
ஆண்டு 1780,

    ஐப்பசி மாதம்.

    விஜயதசமி, இரவு நேரம்.

    அந்தக் கோயில் முழுக்க முழுக்கப் பெண்களால் ததும்பி வழிகிறது.

   அர்ச்சகர்கள் மற்றும் ஒரு சில கோயில் பணியாளர்களைத் தவிர ஆண்கள் யாருமே இல்லை.


    அன்று இரவு ஆண்களுக்கு அனுமதியும் இல்லை.

    எனவே எங்கு நோக்கினும் பெண்கள், பெண்கள்.

    ஆலயத்தின் கருவறைக் கதவுகள் திறக்கப் படுகின்றன.

    தீப ஆராதனை காட்டப் படுகிறது.

    தீப ஒளியில் அம்மன் ஜொலிக்கிறார்.

    தாயே, தாயே என்று பெண்கள், இறைவியை நோக்கிக் குரல் கொடுத்து வணங்குகின்றனர்.

   கூட்டத்தோடு கூட்டமாய் அவரும், கண்களை மூடி, இறைவியை வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     முகத்தில் வீரமும், இராஜ களையும் நிரம்பி வழிகிறது.

     உதடுகள் மென்மையாய் முனுமுனுக்க, அமைதியாய் இறைவியை வணங்கிக் கொண்டிருக்கிறார்.

   அப்பொழுது கூட்டத்தைப் பிளந்து கொண்டு, ஒரு பெண், மெல்ல மெல்ல முன்னேறி, இவரின் அருகே வருகிறார்.

     காதருகே குனிந்து, மெதுவாய் அந்தச் செய்தியைக் கூறுகிறார்.

திருப்பத்தூர் கோட்டையை சின்ன மருதுவும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்து விட்டதாக செய்தி வந்துள்ளது தாயே.

    மௌனமாய் துடித்துக் கொண்டிருந்த உதடுகள், துடிப்பை நிறுத்துகின்றன. மெதுவாய் உதடுகள் விரிந்து ஓர் புன்னகை, ஒரு நொடி, ஒரு நொடிதான். அடுத்த நொடி உதடுகளில் ஓர் இறுக்கம்.

    கண்கள் மெல்லத் திறக்கின்றன.

    திறந்த கண்கள் மெல்ல மெல்லச் சிவக்கின்றன.

    வலது கை மெல்ல, மெலெழும்பி, உடையினுள் மறைத்து வைத்திருந்த, உடை வாளை வெளியே உருவி எடுத்துத் தலைக்கு மேலே உயர்த்துகிறது.

    உதடுகள் விரிகின்றன.

    கோயிலின் அத்துனை ஒலிகளையும் மீறி, அத்துனை ஓசைகளையும் கடந்து, இவரது குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    வீரர்களே, தாக்குங்கள்…….

    அடுத்த நொடி, ஒவ்வொரு பெண்ணின் உடைக்குள் இருந்தும் ஆயுதங்கள் வெகுவேகமாய் வெளியே வருகின்றன,

     தாக்குங்கள், தாக்குங்கள் ……

     உருவிய ஆயுதங்களுடன், வெறி கொண்ட கூட்டம், கோயிலுக்கு வெளியே வந்து, எதிர்பட்ட வீரர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறது.

    கோயிலைக் காவல் காத்த வீரர்களுக்கு அப்பொழுதுதான், ஓர் உண்மை மெல்ல மெல்ல உறைக்கிறது.

     கோயிலில் பெண்கள் உடையில், போர் வீரர்கள், நிரம்பி இருப்பது மெல்ல மெல்லத்தான் புரிகிறது.

     தெருவெங்கும் தலைகள் உருண்டோடகின்றன.

    இதோ வெளியே வருகிறார் அந்தப் பெண்.

    சிவந்த விழிகளுடன், சீறும் சிங்கமாய், இரு கரங்களிலும் வாளேந்தி வெளியே வருகிறார்.

     வாள் சுழன்ற திசையெங்கும், தலைகள் தெறித்துச் சிதறுகின்றன.

     ஒரே நிமிடம்தான், கோயிலின் மணி ஓசை, வாயை மூடிக் கொள்ள, மரண ஓலம் விண்ணைப் பிளக்கிறது.

---
 
    நண்பர்களே, வீறு கொண்ட வேங்கைப் போல், சினம் கொண்டு, சீறி எழுந்து, சுற்றிச் சுழன்றுத் தாக்கும், இப்பெண், இவ்வீர மங்கை யார் தெரியுமா?

    ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு, இழந்த நாட்டை மீட்டெடுத்த இந்த வீர மங்கை யார் தெரியுமா?

       ஜான்சி ராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்னமே, ஆங்கிலேயர்களை, தமிழ் மண்ணில் அடக்கி ஒடுக்கிய, இந்த வீர மங்கை யார் தெரியுமா?


இவர்தான்
சிவகங்கைச் சீமையின்
ஒப்பற்ற அரசி
வீர மங்கை வேலு நாச்சியார்.

---
    
     விஜயதசமி நான்னாளில், பெரும் போரினைக் கண்ட, இந்தக் கோயில் எது தெரியுமா?

சிவகங்கை அரண்மனையின்
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம்.

---

     இப்போர் நடைபெற்று 236 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த மாதம், ஏப்ரல் 14 ஆம் நாள், நண்பகல் 12.00 மணியளவில், இதோ, இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

   




உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பி.சேகர் திரு பா.கண்ணன் ஆகியோரோடு நானும்  சேர்ந்து, ஐவராய் இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

      இதோ இங்கு நின்றுதானே, வீர மங்கை வேலுநாச்சியார், இறைவியை வழிபட்டிருப்பார்,

    


இதோ, இந்த இடத்தில்தானே வாளினை உருவி எடுத்து, வீரர்களே தாக்குங்கள், என போரினை துவக்கி வைத்திருப்பார்.

     பேச்சற்று கண் மூடி நிற்கிறோம்.

     போர்க்களக் காட்சி மனத் திரையில் ஓடுகிறது. மரண ஓலம் காதுகளைத் தாக்குகிறது.

       மெய் சிலிர்த்துப் போய் நிற்கின்றோம்.

    எத்துனை பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் இது.

    சிறிய கோயில்தான் எனினும் மிகப் பெரிய போரை, மிகப் பெரிய வெற்றியை வழங்கிய இடம் அல்லவா.

    ஆங்கிலேயர்களை முதன் முதலில் புற முதுகு காட்டி ஓடச் செய்த இடமல்லவா.

   மனம் எங்கும் மகிழ்ச்சி அலை பரவ, வீர உணர்வில் மனம் விம்முகிறது.





தாயே,
வீர மங்கை வேலுநாச்சியாரே
நின்னைக் காணத்தான் கொடுத்து வைக்கவில்லை,
ஆயினும்
நீ வாளை உருவி, சூறாவளியாய் சுழன்று போரிட்டு,
தாய் மண்ணை, தமிழ் மண்ணை
மீட்ட இடத்தில்
இதோ நாங்களும் நிற்கிறோம்.

இது, இது போதும் எங்களுக்கு.

வாழ்க வேலு நாச்சியார்.

    

37 கருத்துகள்:

  1. என்னவொரு உடனடி தாக்குதல்...! அருமை அய்யா...

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கட்டுரை ஜெயகுமார்.சிறியவர்,பெரியவர் என்று எல்லாப் பெண்களும் கட்டாயம் காண வேண்டிய இடம்,படிக்கவேண்டிய கட்டுரை.ஆசிரியரான தாங்கள் மாணவ மணிகளை அழைத்துச்செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. கோடை பயணச்சுற்றுலாவால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் மகிழ்ச்சிதான். தொலைவில் உள்ள காண இயலாத வேலுநாச்சியார் நினைவு இடத்தை எங்களாலும் காண முடிந்ததே!
    தொடரட்டும் பயணங்கள்....!
    தொய்வில்லாமல் கட்டுரைகள் கிடைக்கட்டும் வாசகர்களுக்கு...!!

    பதிலளிநீக்கு
  4. வியக்கவைக்கும் சரித்திரத்தை மெய்
    வியர்க்கவைக்கும் புல்லரிக்கும்
    விதத்திலே
    வர்ணித்து இருக்கிறீர்கள் .

    சரித்திரம் சுவையானதே.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. ஜான்சி ராணியைத் தெரிந்த அளவுக்கு ,வீர நாச்சியாரை எத்தனை பேருக்கு தெரிகிறது ?இந்திய சுதந்திர சரித்திரத்தில் ஏன் இந்த இருட்டடிப்பு ?மத்திய அரசின் கவனத்துக்கு , இங்குள்ள அரசியல்வாதிகள் இதை கொண்டு சென்றால் நல்லது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் வாதிகளா?? ஹா ஹா ஹா அதில் ஏதூம் ஆதாயம் இருக்குமா? அவர்களுக்கு பகவானே.....

      நீக்கு
  6. சரித்திரக் காட்சி கண் முன் விரிந்தது. அருமை

    பதிலளிநீக்கு
  7. அனைவரும் அறிய வேண்டிய சரித்திரம் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. அருமையான பயணம் சகோ,, நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் கர்னல் சொன்னது போல்,,, எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வது போல் இருக்கலாமே,,
    ஒவ்வொரு முறையும் அவரைப் பற்றி படிக்கும் போதும் உணர்ச்சி பொங்கும் வீரம்,,,
    பகிர்வுக்கு நன்றி சகோ,,

    பதிலளிநீக்கு
  9. வேலு நாச்சியார் பற்றி முன்பே எழுதி இருக்கிறீர்கள் இல்லையா இப்போது அவர் தொழுத கோவிலும் அதன் பின்னான நிகழ்வுகளும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எப்போதும் பயனுள்ள தகவல்களை சுவையான தமிழில் தருபவர் நீங்கள். இன்றைய பதிவும் அத்தகையதே. வேலு நாச்சியாரின் கதை அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்று. பெரியவர்கள் தத்தம் குழந்தைகளுக்கு சொல்லிவைக்கவேண்டிய ஒன்று. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று நிகழ்வினை தற்காலத்தோடு பொருத்தி எங்களுக்கு அங்கு செல்லும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அவசியம் செல்வோம்.

    பதிலளிநீக்கு
  12. சம்பவம் தெரியுமே தவிர அந்தக் கோயில் இருப்பதை இன்று வரை அறிந்தேன் இல்லை. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மெய்சிலிர்க்கவைக்கிறது

    பதிலளிநீக்கு
  14. வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  15. வீரமங்கை வேலு நாச்சியாரை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.
    நான் இந்த கோவில் பார்த்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  16. அருமை நண்பரே வேலு நாச்சியாரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அறியத்தந்தமைக்கு நன்றி
    த.ம. 4

    பதிலளிநீக்கு
  17. வீரம் விளைந்ந பூமி தொகுப்பு நன்று!

    பதிலளிநீக்கு
  18. வேலு நாசியாரின் வீரம் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  19. நல்லதோரு பகிரவு. எத்துணை என்பதே சரி. //எத்துனை// அல்ல. நன்றி!!

    பதிலளிநீக்கு

  20. வியர்க்க வைக்கும் சரித்திரம்

    பதிலளிநீக்கு
  21. கண்முன்னே விரியும் காட்சி......

    மீண்டும் ஒரு முறை உங்கள் வார்த்தைகளில் படிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  22. உணர்ச்சிப்பூர்வமான எழுத்து நடையில் காட்சியை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  23. அறியாத தகவல் ஐயா.அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  24. மிகச்சிறந்த வரலாற்றுப்பதிவு

    பதிலளிநீக்கு
  25. மிகச்சிறந்த வரலாற்றுப்பதிவு

    பதிலளிநீக்கு
  26. வேலு நாச்சியாரின் வீரம் சிலிர்க்க வைக்கிறது. அருமையான விவரிப்பு

    பதிலளிநீக்கு
  27. வேலு நாச்சியாரின் வீரம் சிலிர்க்க வைக்கிறது. அருமையான விவரிப்பு

    பதிலளிநீக்கு
  28. சரித்திரக் காட்சி
    அருமை.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  29. thanks vanakkam.good register about historical events

    பதிலளிநீக்கு
  30. அன்றைய வரலாற்றை இன்றைய மனத்திரையில் காட்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  31. வீரமங்கை வேலுநாச்சியாரைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்தேன். அவரது பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  32. உணர்ச்சிப் பதிவர் என்னும் விருதினை உங்களுக்கு வழங்குகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.
    வேலு நாச்சியார் புகழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  33. இனிய வரலாற்றுப் பதிவு
    இவ்வாறான
    பதிவுகளைத் தொகுத்து நூலாக்கி
    நாளைய தலைமுறைக்கு
    படிப்பித்தே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. அருமை நண்பரே! வேலுநாச்சியார் பற்றிய தொடரை நீங்கள் எழுதியது நினைவில் இருக்கிறது...மீண்டும் உங்கள் வரிகளில்.இப்போது அவர் தொழுத கோயில் பற்றிய பதிவு. பல தகவல்கள் அறிந்தோம். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  35. வீரமங்கையின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைக்கும் எழுத்துக்களால் பதிவு செய்துள்ளீர்கள்...பாராட்டுக்கள்....உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு