ஆட்டோவிற்கும்
ப்ரீசர்
பாக்ஸ் கொண்டு செல்லும்
டாட்டா
ஏசுக்கும்
நடுவே
சென்று
கொண்டிருக்கிறது
எனது
வாகனம் …..
பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வை இத்துனை எளிமையாய், இத்துனை வலிமையாய்
காட்சிப் படுத்தி, கவிதை வரிகளில் அடக்கிய, அந்த இளம் கவிக்கு, அப்பொழுது தெரிந்திருக்கவில்லை,
இன்னும் சில நாட்களில், தனக்கும் ஒரு ப்ரீசர் பாக்ஸ் தேவைப்படப் போகிறது, என்பது தெரிந்திருக்கவில்லை.
வாழ்வு என்பது எத்தனைக் கொடுமையானது என்பதை, இந்த
நண்பரின் பிரிவு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது.
சிறு சிறு வரிகளில் பெரும் பெரும் அவலங்களை உணர்த்திய
கவி இவர்.
குளு
குளு அறையில்
நீ
வாங்கிக் குடிக்கும்
குளிர்
பானங்களினடியே
செத்துக்
கிடக்கிறான் இள நீர் வியாபாரி
இந்த
அவசர உலகில், அடுத்த வீட்டில் இருப்பவறைக் கூட அறியாமல், உறவுகளின் மேன்மை உணராமல்,
பணம் நாடி ஓடும் கூட்டத்தைச் சாடுவதிலும், தன் கோபத்தை வெளிப் படுத்திய கவி இவர்.
மதிற்சுவர்
எழுப்பிய
செங்கல்
தீவுக்குள் வாழ்பவனே
வங்கிப்
புத்தகப் பக்கங்களிலும்,
கணினி
மேசைக்கடியிலும்
கைபேசி
தொடுதிரைகளுக்குள்ளும்
உதிர்ந்து
கிடக்கிறதுன் சாம்பல்.
அதையொரு
கலசத்தில் சேகரித்து
நீயே
கரைத்துக் கொள்
ஏதாவதொரு
ஆற்றில்.
ஆயிரம்
வேலையிருக்கக் கூடும்
அப்போது
உன் மகனுக்கும்.
மனித வாழ்வின் அவலங்களை வீறு கொண்டு
எழுந்து, கவி வரிகளில் பகிர்ந்து கொண்ட இக்கவி, தன் நிழல் போல் சேர்ந்தே பயணித்த வயிற்று
வலியினைத் தன் சக நண்பர்களிடமும் பகிராமல், மருத்துவரிடமும் சொல்லாமல், பறந்து போனதுதான்
கொடுமையிலும் கொடுமை.
சுய மருத்துவம் எத்துனை பயங்கரமானது
என்பதற்குத் தானே சாட்சியாகி கரைந்து போயிருக்கிறார் இவர்.
கணையக் கோளாரை, அல்சர் என அலட்சியப் படுத்தியதால்,
ஓர் மகன் தன் தந்தையையும், ஓர் சகோதரி தன் அன்புக் கணவரையும், தமிழுலகு ஓர் அற்புதக்
கவியையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது.
இருவரும் பகிர்ந்து கொண்டது ஒரு சில வார்த்தைகளாகத்தான்
இருக்கும்.
அந்த ஒருசில வார்த்தைகளிலேயே, உள்ளத்தை வென்று
நண்பராகிப் போனவர்.
வைகறை
என்றாலே அதிகாலைப் பொழுதல்லவா
அதிகாலைக் கதிரொளியாய், தன் கவி வரிகளைப் பாய்ச்சியவர்,
உதயத்திற்கு முன்னே, அஸ்தமனமாகிப் போனதை மனம் நம்பத்தான் மறுக்கிறது.
ஏன்?
ஏன்? நண்பரே
அதற்குள்
விடைபெற்றுக் கொண்டீர்.
எழுதுகோலைத்
திறந்து கவிமழை பொழிந்தவர், தன் வாய் திறந்து, தன் உடலின் நிலையினை, நண்பர்களோடு பகிர்திருப்பாரேயானால்,
ஈடு செய்ய இயலா, இழப்பினைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா.
கவிஞர் வைகறையின் பிரிவு, நமக்கு ஒரு பாடத்தை உணர்த்திவிட்டுப்
போயிருக்கிறது.
கவிதையினை மட்டுமல்ல, வாழ்வின் சுக, துக்கங்களையும்
நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மாபெரும் கவிஞனாய்
வளர்ந்து, தமிழுலகு போற்றும் கவியாய் உயர வேண்டியவரை, ஒர் கணையம் நம்மிடமிருந்து பிரித்து
விட்டதுதான் சோதனை.
கடந்த 4.5.2016 புதன் கிழமை மாலை,
புதுக்கோட்டை ஆக்ஸ்போடு உணவகக் கல்லூரியில்
கவிஞர்
வைகறைக்கு
ஓர் அஞ்சலிக் கூட்டம்.
கனத்த
மனதுடன் கலந்து கொண்டேன்.
கவிஞர் வைகறையின் அன்பு மனைவிக்கும், ஆருயிர்
மகனுக்கும் உதவிட, புதுகையின் வீதி அமைப்பினர், பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
நண்பருக்கு உதவுதல் நம் கடமையன்றோ.
நாமும் பங்கு பெறுவோம் நண்பர்களே
வைகறை நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்.
ஆனால் வைகறையின் எழுத்துக்கள்
என்றென்றும் நம்முடனே பாதுகாப்பாய் வாழட்டும்.
வீதியின் துயரில் தோள் கொடுத்த தோழமைக்கு நன்றிகள் நண்பரே...எங்கோ பிறந்தோம்...எங்கோ வாழ்வோம்..தமிழால் இணைவோம்...
பதிலளிநீக்குகவிஞர் வைகறையின் கவிதை வரிகளோடு ஒரு உள்ளார்ந்த நினைவஞ்சலி.
பதிலளிநீக்குகவிஞர் வைகறையின் கவிவரிகள்,,,
பதிலளிநீக்குகனத்த இதயத்தோடு,,, எம் அஞ்சலிகளும்,,,
#நண்பருக்கு உதவுதல் நம் கடமையன்றோ#
பதிலளிநீக்குஅனைவரின் நெஞ்சிலே வாழும் நண்பர்க்கு இயன்ற அளவு உதவுவோம் !
வேதனையான விடயம். நிச்சயம் அவரது குடும்பத்தை நாம் பாதுகாக்க வேண்டும்
பதிலளிநீக்குவேதனையான விஷயம்... அவர் குறித்த பகிர்வு மனம் கனக்கச் செய்தது.
பதிலளிநீக்குசகோதரரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.அவரின் நினைவுகள் ஒவ்வொரு வைகறையும் நம்மை விட்டு விலகாது.நன்றி.
பதிலளிநீக்குவந்து நெகிழ வைத்தீர்கள். எழுதி அழ வைக்கிறீர்கள்...
பதிலளிநீக்குவார்த்தைகள் ஊமையாயின கரந்தையாரே!...த.ம.4.
மனம் கனக்கிறது
பதிலளிநீக்குஅருமையான முயற்சி
பதிலளிநீக்குதங்கள் பதிவோ
கண்ணீரை வரவழைக்கிறதே
வைகறை
வாழ்ந்துகொண்டிருக்கிறார்
அவரது எழுத்துகளில்
நேரடியாக ஒரு சில வினாடிகளே பழக்கம் ஆனால் அவரது கவிதை வரிகள் மூலம் என்று தொடரும் நினைவு ஆழ்ந்த இரங்கல்கள் என்று சம்பிரதாயத்துக்குச் சொல்வதைவிட வேறென்ன செய்ய முடியும்
பதிலளிநீக்குan irreparable loss
பதிலளிநீக்குMay his soul rest in eternal peace
an irreparable loss
பதிலளிநீக்குMay his soul rest in eternal peace
வேதனையான நிகழ்வு. எங்கள் அஞ்சலிகளும்.
பதிலளிநீக்குமனம் கனக்கும் பதிவு அண்ணா...இனி இப்படி யாருக்கும் நிகழ வேண்டாம்..இந்தக்கொடுமை...ரோஸ்லினை தேற்றும் வழி தெரியாமல் தவிக்கின்றோம்.
பதிலளிநீக்குமனம் கனக்க வைத்த பகிர்வு. சென்ற முறை தமிழகம் வரும்போது வீதி இலக்கியக் கூட்டத்தில் தான் அவரை சந்தித்தேன். அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பெரிய இழப்பு.
பதிலளிநீக்குஇவ்வலைப்பூவில் இணைந்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் வணக்கங்கள்
பதிலளிநீக்குதமிழில் தட்டச்சு செய்வதற்கு மிக எளிமையாக மேன்பலகையினை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளேன். தமிழ் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திற்கும்..
உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விவரங்களுக்கு
http://easyhappylifemaker.blogspot.in/2016/04/umask-2015-easy-tamil-keyboard-layout.html
இராணுவ வாழ்வில் இரண்டு போர்க்களங்களையும் அதன் காரணமாக எராளமன உயிர்பிரிதலையும் பார்த்த பின்னும் நண்பர் வைகரையின் பிரிவு துக்கம் சேர்க்கிறது.எங்களது "அகத்தூண்டுதல் பூங்கா"அறக்கட்டளை மூலமாக நான் உதவுகிறேன்.சொல்லுங்கள் ராஜ்குமார் என்ன செய்யலாம்?
பதிலளிநீக்குஅனைவரும் சேர்ந்து கைகொடுப்போம்.
பதிலளிநீக்குஅஞ்சலிகள.
பதிலளிநீக்குமனது கனக்கிறது.
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபங்கள்! ஏற்கெனவே படித்தேன். உங்கள் பகிர்வும் மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குவணக்கம். தோழர் எட்வின் பதிவில் செய்தி அறிந்தபோது மனம் இடிந்துபோனேன். வலைப்பதிவர் மாநாட்டில் என்னைச் சந்தித்து நிறைய எழுதுங்க என்றார். பத்து நிமிடங்கள் பேசினார். ஆண்டவனுக்கு ஏன் இத்தனை கொடுமை. வைகறை விடியாமல் போய்விட்டது. எல்லோரையும் எழுப்பும் வைகறை ஏன் எழும்பாமல் போனது. மனது கசிகிறேன். என்ன செய்யவேண்டும் வைகறையின் குடும்பத்திற்கு என்று சொல்லுங்கள். என்னால் இயன்றதை அவசியம் செய்கிறேன். அவரின் மனைவிக்கும் பிள்ளைக்கும் குடும்பத்தாருக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கண்ணீர்த்துளிகள். மனது தாங்கமுடியவில்லை.
மனம் நெகிழ வைத்த பதிவு. கண்டிப்பாக நாம் அனைவரும் உதவ வேண்டும்.
பதிலளிநீக்குவைகறையின் மறைவு ஒரு கவியுலகு பேரிலப்பு! ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்! நாம் அவரின் குடும்பத்துக்கு ஏலுமான உதவி செய்வோம்!
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குகவிஞர் வைகறையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பினை எண்ணி வருந்துகிறேன். உதவி செய்ய தயாராக உள்ளேன்.
இந்த கவிஞரை நானறியேன்
பதிலளிநீக்குஇருப்பினும் துயரறிவேன்
அறிமுகமில்லா இவர்
மறைமுகமானதால் வருந்துகிறேன்...
அறிமுகமாகியிருந்தால் நான்
எப்படி தாங்கியிருப்பேன்...
வைகறையின் துயர் நிறைந்த கதை வாசித்தபோது மனதை ஏதோ செய்கிறது...உடுவை
பதிலளிநீக்குஅறிமுகமில்லாவிடினும் ஆழ்ந்த அனுதாபங்கள்
பதிலளிநீக்குஅறிமுகமில்லாவிடினும் ஆழ்ந்த அனுதாபங்கள்
பதிலளிநீக்குஅறிமுகமில்லாவிடினும் ஆழ்ந்த அனுதாபங்கள்
பதிலளிநீக்கு