13 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 17


    

என் தங்கை திருமணம் செயது கொண்டார். யாருக்கும் தெரியாமல்.

     எம் மனம் உடைந்து சுக்கு நூறானது.

  என் அன்புத் தங்கையே, ஏன் இப்படிச் செய்தாய்? நிம்மதியிழந்து தவித்தேன்.

  அக்டோபர் 2011இல் இந்தியாவில், எனது தாய் மாமா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டார். ஏறக்குறைய மரணப் படுக்கைக்கே சென்று உயிர் பிழைத்தார்.

    அது மட்டுமல்ல, என் தாயாரின் உடல் நலமும் மிகவும் பாதிப்படைந்தது. எனது தங்கையின் பிரிவு, என் தாயாரை படுக்கையில் தள்ளியது. பாவம், என் தந்தையார், தனியொருவராய் பட்ட சிரமத்திற்கு அளவே இல்லை.

    இந்நிலையில் நான் என் தந்தையின் அருகில் இல்லாதது, மிகப் பெரிய தாக்கத்தையும், மிகப் பெரிய மாற்றத்தையும் என்னுள் ஏற்படுத்தியது.

     இந்நிலையில் ஒரு நாள் தமிழ் இணையதள வானொலியில் அப்பாடலைக் கேட்டேன்.

உன்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.

சொந்த வீடு உன்னை
வா என்று அழைக்குதடா தமிழா

அயல் நாடு உன்தன் வீடு அல்ல
விடுதியடா தமிழா

தேசம் என்னும் படத்தின் பாடல் இது. என் தேகத்தில், என் உள்ளத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மாற்றத்தை மேலும் வலுப்படுத்தியது.

     அன்று வரை வட அமெரிக்க உயர் கல்வித் துறையில் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, முடிவு செய்திருந்த நான், என் முடிவை மாற்றிக் கொண்டேன்.

        முனைவர் படிப்பிற்கான, ஆய்வுக் கட்டுரைக்கான நேர்முகத் தேர்விற்கு மட்டும் தற்காலிகமாக, அமெரிக்கா வருவது என்றும், இனி மீதம் உள்ள என் வாழ்வு இந்திய மண்ணில்தான் என்பதை உறுதி செய்து கிளம்பினேன்.

       லகுவார்டியா மற்றும் மேன்ஹாட்டன் கல்லூரிகளில் இருந்து என்னை விடுவிக்க மறுத்தனர். இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பணியாற்றினால் போதும், உங்களது பணியை நிரந்தரம் செய்து விடுகிறோம்.

      பணி நிரந்தரமாகிவிட்டால், உங்களின் ஊதியம் வெகுவாய் உயரும் என வற்புறுத்தினர். ஆனாலும நான் நன்றி கூறி விடைபெற்றேன்.

      இந்தியா திரும்பினேன். என் குடும்பத்துடன் அடைக்கலமானேன்.

      இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே என் திருமணம்.

     

நித்யா என் வாழ்வில் இணைந்தார்.



பாடகன் பாடியதற்கு மேலான இன்பம் இருக்கிறது
இருவரும தெய்வீக அருளால் ஒன்றிணைந்து
இதயம் மாறாதிருந்தால் நென்றி சுருங்காதிருத்தல்
எல்லா இன்னல்களிலும் அன்பாய் சாகும்வரை இருத்தல்
ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது
பல யுகங்கள் இதயமற்றுத் திரியும் இன்பத்திற்கு ஈடானது
மண்ணுலகில் சொர்க்கம் இருக்குமானால்
அது இதுதுன் அது இதுதான்
-    தாமஸ் மூர்


           நண்பர்களே, என் அன்பு மனைவி நித்யா பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.

    என் மனைவியும் பார்வை அற்றவர்.

    ஆனாலும் ஒளிமயமான வாழ்வு எங்களுடையது.

      நித்யா என் வாழ்வில் இணைந்த நேரம், வசந்தமும், வளமும் என் வீடு தேடி வந்தது.


பெங்களூரில் இயங்கும்
பன்னாட்டு நிறுவனமான
சிஸ்கோ நிறுவனத்தில்
திட்ட ஒருங்கிணைப்பாளராய் பணியாற்றி வருகின்றேன்.

      எங்கள் வாழ்வில் வசந்தமும், வளமும் மட்டுமல்ல, ஒளியும் வீசத் தொடங்கியுள்ளது.

எங்களின் அன்பு மகன்
முத்துக் குமரன்
ஒளி வீசும் கண்களோடு
பிறந்து
எங்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட்டுள்ளான்.


வெற்றிவேல் முருகனின் தாய், தந்தை

வெற்றிவேல் முருகனின்மாமனார் கண் பார்வை அற்றவர்,அவரது முனைவர் பட்ட ஆய்வு மாணவரான அவரது மைத்துனரும் கண் பார்வை அற்றவர்









நன்றி நண்பர்களே,
தங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையிலும்,
நேரம் ஒதுக்கி,
எனது வார்த்தைகளை செவி கொடுத்துக் கேட்டதற்கு
நன்றி நண்பர்களே
மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்
அவசியம் சந்திப்போம்.


24 கருத்துகள்:

  1. good bye vetri vel murugan sir. thanks jeyakumar sir.

    பதிலளிநீக்கு
  2. கண்முன் விரிந்த சாதனையாளரின் உலகம்,,,/

    பதிலளிநீக்கு
  3. அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவரின் வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். மனதை மிகவும் தொட்ட தொடர். அதுவும், அவர் இரயிலில் ஏறமுடியாமல் விழுந்தது நானே விழுந்ததுபோல் தோன்றியது. இப்படிப்பட்டவர்கள் உயர்வதற்கு உதவும் உள்ளங்களும் மிகவும் பாராட்டுக்குரியன. எங்கிருந்தாலும் அவர் இன்னும் இன்னும் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கு எல்லோரின் ப்ரார்த்தனைகளும் உண்டு.

    நல்லனவற்றை எப்போதும்போல் பகிர்ந்துகொண்டதற்கு கரந்தையாருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  4. வெற்றிவேல் முருகனுக்கும் கரந்தை ஜெயக்குமாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். மகத்தான தன்னம்பிக்கை கொண்ட மனிதருக்கு தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உளம் நெகிழ்ந்தேன். அவரைப்பற்றி உரிய ஆவணங்களை விக்கியில் உருவாக்குவேன்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்வில் வெற்றி பெற்று
    உச்சம் தொட்ட, தொடர்ந்து தொட்டுக்கொண்டிருக்கிற
    வெற்றித் திருமகனின் வாழ்க்கைச் சித்திரம்
    படிக்க படிக்க உத்வேகம் ஊட்டுவதாக உள்ளது
    மகிழ்வூட்டும் படங்களுடன் பகிர்வை
    முடித்த விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  7. வெற்றிவேல் முருகனுகனுடைய விடாமுயற்சியும்,
    தன்நம்பிக்கைக்கும், அருமையாக தொகுத்தளித்த கரந்தை ஜெயக்குமாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. புறக் கண்களை மட்டுமே பார்த்துப் பழகிய மனிதர்களுக்கு அக கண்களை அறிமுகப்படுத்திய நண்பர் வெற்றிவேல் முருகனுக்கும் திரு ஜெயக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மழலை இன்பத்தில் மூழ்கித் தவிக்கும் சாதனை தமபதிகளுக்கு வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  10. மிகவும் நம்பிக்கையூட்டும் வெற்றிவேலின் சாதனைப்பகிர்வுக்கு வாழ்த்துக்கள் கரந்தை ஐயா.

    பதிலளிநீக்கு
  11. சாதனையாளர்.... அவரது தன்னம்பிக்கையும் மனோதைரியமும் பலருக்கும் எடுத்துக்காட்டு.

    நல்லதொரு பகிர்வு. தொடராக இங்கே வெளியிட்டதற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. பல சோதனைகளை எதிர்கொண்டு வாழும் ஒரு அபூர்வ நண்பரைப் பற்றிய தங்களின் பதிவு படிக்கும் அனைவரையும் நெகிழவைத்திருக்கும். சிறந்த தன்னம்பிக்கைத் தொடராக அவரது முன்னுதாரண வாழ்க்கையினை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மகத்தான சாதனையார் திருமிகு வெற்றிவேல் முருகன் அவர்கள்..
    அவரது தன்னம்பிக்கை மனதில் ஊக்கத்தை விதைக்கின்றது..

    தாய் மண் மீது கொண்டிருக்கும் பாசமும் நேசமும் சிறப்புக்குரியன.

    அவரைப் பற்றி இனிய நடையில் வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  14. வெற்றிவேல் முருகன் அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்.

    வாழ்வில் தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்ற பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

    அவர் மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்.
    அவரைப் பற்றி அறிய தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  15. பெங்களூரில் வசிக்கும்வெற்றிவேல் முருகனை சந்திக்க ஆவல் பார்ப்போம் முடிகிறதா என்று.

    பதிலளிநீக்கு
  16. வெற்றிவேல் முருகனுக்கும் கரந்தை ஜெயக்குமாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்.
    தமிழ் மணம் 4
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  17. சுபம். இனியெல்லாம் சுகமே.... நன்றி.

    பதிலளிநீக்கு
  18. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    பெயரில் வெற்றியைக் கொண்டிருக்கும் திரு.வெற்றிவேல் முருகன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் மிகப் பெரிய போராட்டங்களை எதிர்கொண்டு உறுதியான போராட்டக் குணத்தினால் வெற்றி பெற்று நம் அனைவருக்கும் தன்னை ஒரு வழிகாட்டியாக காட்டியவர். அவருடைய வாழ்க்கையை மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் பதிவு செய்த தங்களின் உயர்ந்த குணத்தினையும் திறமையையும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வெற்றிவேல் முருகனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான தொடர்., நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. தன்னம்பிக்கையின் மறுவடிவம்...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு