கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்
என்று
முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய,
புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய்,
மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.
கரந்தை மண் இவரை, ஏடெடுத்து எழுத வைத்திருக்கிறது.
வெகு இயல்பாய், வெகு எளிமையானச் சொற்களால்,
தங்கு தடையற்ற, நீரோடையாய் தவழ்கின்றன, இவரது எழுத்துக்கள்.
நல்லதொரு குடும்பம்
நண்பர் வேலுவின் முதல் நூல்.
முதல் முயற்சி.
முதல் முயற்சியிலேயே, பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.
நிவேதிதா
என்னும் புனைப் பெயரில் இந்நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
நிவேதிதா, நண்பர் வேலுவின் அன்பு மகள்.
குடும்ப உறவை, மையக் கருவாய் கொண்டு, இவரது குறு
நாவல் உருவெடுத்திருக்கிறது.
குடும்ப உறவுகளும், கூட்டுக் குடும்பங்களும்
வெகு வேகமாய் சிதைந்து வரும், இக்கால கட்டத்தில், வேற்றுமைகளைக் களைந்து, உண்மை உணர்ந்து,
ஒரு குடும்பம், ஒன்றாய் இணையும் நிகழ்வுகளை, ஒரு திரைப்படம் போல், நம் கண் முன்னே ஓட
விடுகிறார்.
பெரியவர்கள்
சில நேரங்களில் தவறு செய்பவர்கள்தான், யார் இல்லை என்று சொன்னது? நீங்கள் சிறுவராக
இருக்கும் போது செய்யும் தவறுகளை, நாங்கள் பொறுத்துக் கொள்வது இல்லையா? வயது முதிர்ந்தாலே,
மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத்தான் திரும்புகிறோம். எனவே அந்தத் தவறுகளை பெரிது
படுத்தத் தேவை இல்லை. அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்றால், அனுசரனையான பேச்சும்,
அவர்கள் வரும்போது, இன்முகத்தோடு அழைத்து, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து
அனுப்புவதும்தான், அவர்களுக்கு வேண்டும்.
நண்பர் வேலுவின் முதல் நாவல் இது என்பதை,
மனம் நம்பத்தான் மறுக்கிறது.
ஒரு முதிர்ந்த படைப்பாளியின் திறமையோடும்,
ரசனையோடும், நம்மையும், கதைக்குள் இழுத்துப் பயணிக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்.
வெளியீடு
காகிதம் பதிப்பகம்,
விலை ரூ.60
நண்பர் திரு. வேலு அவர்களுடன் பேசி இருக்கிறேன் விரைவில் சந்திப்பேன் எமது வாழ்த்துகளை நேரில் சொல்ல...
பதிலளிநீக்குநண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கு நனறிகள்
த.ம.பிறகு...
புதிய எழுத்தாளர் மற்றும் நூல் அறிமுகத்துக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநூல் ஆசிரியர் சொல்லும் குடும்ப உறவுகள் மேம்பட சொல்லும் கருத்துக்கள் அருமை.
பதிலளிநீக்குநூல் அறிமுகத்திற்கு நன்றி.
நூல் ஆசிரியருக்கும் உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.
நல்லதொரு நூல் அறிமுகம். நூலாசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகம்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நல்லதொரு அறிமுகம்....வாழ்த்துகள் ஆசிரியருக்கு....
பதிலளிநீக்குநண்பர் வேலு குறித்து முன்பு எப்போதோ நீங்கள் எழுதி இருந்ததைப் படித்தது மங்கலாக நினைவில் சரியா சார்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநண்றி ஆசிரியரே. உங்கள் உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் புதிதாக எழுத தோன்றுகிறது...
பதிலளிநீக்குநூலாசிரியருக்கும், அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.
பதிலளிநீக்குதம +1
நீக்குநூல் அறிமுகத்துக்கு நன்றிகள்.நூலாசிரியர் வேலுவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல நூல் அறிமுகம் ,வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குஅருமை! த.ம 6
பதிலளிநீக்குநூல் ஆசிரியர் ஆக வளர்ச்சி பெற்று விட்ட k s வேலு அவர்களுக்கு வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅறிமுகத்துக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்!!
பதிலளிநீக்குநண்பர் வேலு மேலும் பல நாவல்களை எழுத வேண்டும். அவருக்கும் அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பரின் நூலை தங்கள் பாணியில் அறிமுகப்படுத்திய விதம் அருமை. அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதிரு.வேலு அவர்களுக்கு வாழ்த்துக்களும்...
பதிலளிநீக்குபகிர்ந்த தங்களுக்கு நன்றிகளும்...
வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநல்ல நூல் அறிமுகம்.
பதிலளிநீக்குஆசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
வேலு அவர்களின் நூலை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇரு பகுதியாருக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதமிழ் மணம் - 11
https://kovaikkothai.wordpress.com/