ஆண்டு 1991
அரசு உயர்நிலைப் பள்ளி, ஆவினங்குடி
ஒன்பதாம் வகுப்பு
கணிதப் பாட வேளை
கணித ஆசிரியர் கே.பி எனப்படும் கே.பாலகிருஷ்ணன்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மாணவர்கள் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருக்க,
ஒரு மாணவர் மட்டும் தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறார்.
மாணவரின் மடியில் திறந்த நிலையில் கணித நோட்டு
நோட்டிற்கும் கீழே ஒரு வயர் கூடை
வயர் கூடைக்கும் கீழே ஒரு புத்தகம்.
மணிமொழி
என்னை மறந்துவிடு
தமிழ்வாணன்
அவர்கள் எழுதிய அருமையான காதல் கதை
மணிமொழி
என்னை மறந்துவிடு
காதல் கதையில் முழுவதுமாய் மூழ்கித்தான் போய்விட்டார்
அந்த மாணவர்.
இந்த மாணவர் படிப்பில் சுட்டி
பாடப் புத்தகங்களைத் தாண்டிய புத்தகங்களைப் படிப்பதிலோ
படு சுட்டி
பள்ளிக்கு அருகிலேயே அரசு நூலகம்
இம்மாணவன் முதன் முதலாக நூலகத்திற்குள் நுழைந்தபோது,
நூலகர் சிறுவர் பகுதியை நோக்கி கை காட்டினார்.
இந்த மாணவரோ, கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் சில பாகங்கள் வேண்டும், இருக்கிறதா
என்றார்.
நூலகரோ இந்த மாணவரை மேலும் கீழுமாகப் பார்த்தார்.
வெள்ளை சட்டை, நீலக் கலர் டவுசர். பள்ளிச் சீருடை
நீ எதுக்கு அதைத் தேடற? அதைப் படிச்சு என்ன பன்னப்
போறே?
சட்டென்று மாணவரிடமிருந்து பதில் வந்தது.
பிடிச்சிருக்கு,
படிக்கிறேன்.
நூலகருக்கு இம்மாணவரின் தோற்றமும, பேச்சும் பிடித்துப்
போய்விட்டது.
உடனே, அம்மாணவரை, நூலக உறுப்பினராக்கி, கேட்ட
நூல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துக் கொடுத்தார்.
அப்படித்தான் தமிழ்வாணனை, இந்த நூலகத்தில் கண்டுபிடித்தார்
இந்த மாணவர்.
தமிழ்வாணனின் எளிமையான எழுத்து நடை, கதையைக்
கொண்டு செல்லும் விறுவிறுப்பு, சங்கர்லால், வகாப் போன்ற துப்பறியும் பாத்திரங்களின்
புத்திக் கூர்மை, இவையெல்லாம் இம்மாணவரைச் சுண்டி இழுத்தன.
தமிழ்வணனின் ஒவ்வொரு நூலாகத் தேடித் தேடிப் படிக்கத்
தொடங்கினார்.
மணிமொழி என்னை மறந்துவிடு
சிறு வயது
கதையோ அருமையான காதல் கதை
இம்மாணவர் சொக்கித்தான் போய்விட்டார்
புத்தகத்தை மூடவே, இம்மாணவருக்கு மனமில்லை
வகுப்பிலும் படித்தார்
ஆசிரியர் பாடம் நடத்த நடத்த, இவரோ, மணிமொழியிடம்
மயங்கி, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தார்.
கணித ஆசிரியர், இவர் பாடத்தைக் கவனிக்காமல்,
கதைப் புத்தகம் படிப்பதைப் பார்த்துவிட்டார்.
கடும் கோபம் வந்தது.
என் வகுப்பில் கதைப் புத்தகமா படிக்கிறாய், வெளியே
போ
வகுப்பை விட்டு வெளியே வந்த மாணவருக்கு என்ன
செய்வது, எங்கே போவது என்று புரியவில்லை
அருகிலுள்ள சிற்றூரான, திட்டக்குடியில் உள்ள
திரையரங்கில், அப்பொழுது ரகுவரன் நடித்த என்
வழி தனி வழி என்னும் படம் ஓடிக் கொண்டிருந்தது.
இதுதான் நமக்கு ஏற்ற படம் என்று நேராகப் படம்
பார்க்கச் சென்றுவிட்டார்
என்
வழி , தனி வழி
இம்மாணவரின் வழியும், தனி வழிதான்
மறுநாள் வகுப்பிற்கு வந்தபோது, கணித ஆசிரியர்
கே.பி அவர்கள் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
என்
வகுப்பிற்கு வரலாம், ஆனால் இனி கிளை நூலகத்தின் பக்கம், தலை வைத்துக் கூடப் படுக்கக்
கூடாது என்றார்.
முடியாது,
நான் நூலகம் செல்வேன்
இல்லை, நீ போகக் கூடாது
நான் போவேன்
ஆசிரியர் குரல் உயர, உயர, மாணவர் குரலும உயர்ந்து
கொண்டே சென்றது.
இனி
என் வகுப்பிற்கு நீ வரவே கூடாது.
இம்மாணவரோ, ஒன்பதாவது வகுப்பின், வேறொரு பிரிவிற்கு
மாற்றப் பட்டார்.
அந்த
வகுப்பின் கணித ஆசிரியர் எம்.எஸ் சார்
என அழைக்கப்படும் எம். செல்வராஜ்
மிகவும் கண்டிப்பானவர்
கண்டிப்பு காட்டினாலும், இம்மாணவரின் ஆர்வம்
அறிந்து, அன்பால் தன்வசப்படுத்தினார், நெறிப்படுத்தினார்.
இப்புதிய வகுப்பில், இம்மாணவருக்கு இரு நெருங்கிய
நண்பர்கள் கிடைத்தனர்.
அண்ணாதுரை,
மாணிக்கவேல் .
ஆசிரியர் எம்.எஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில்,
மூவருமே இலட்சியத்தோடு வளர்ந்தனர், உயர்ந்தனர்.
ஒன்பதாவது வகுப்பில், தமிழ் வழியில், ஒரே வகுப்பில்
படித்த இம்மாணவர்கள் மூவரும், இன்று உயர் பதவிகளில், உச்சானிக் கிளையில் அமர்ந்திருக்கின்றனர்.
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., அவர்கள்,
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்
திரு பா.மாணிக்கவேல், ஐ.ஆர்.எஸ்., அவர்கள்,
மண்டல இணை இயக்குநர், அமலாக்கத் துறை, சென்னை
மணிமொழி என்னை மறந்துவிடு
என்னும் நூலை
வகுப்பறை என்பதைக் கூட மறந்து படித்தவர்,
முனைவர் த.செந்தில்குமார், எம்.எல்.,பி.எச்டி.,
அவர்கள்
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
வியப்பாக இருக்கிறதல்லவா? ஒரே வகுப்பு மாணவர்கள்
மூவர், இன்று வாழ்வில் உச்சம் தொட்டிருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது
அல்லவா.
இவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தாலும், தங்கள் ஒன்பதாம்
வகுப்பு கணித ஆசிரியரை மட்டும் ஒரு நாளும் மறந்தார்கள் இல்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டில்,
திரு ஆ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., அவர்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும்,
முனைவர் த.செந்தில்குமார்,
எம்.எல்.,பி.எச்டி., அவர்கள்,
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்
ஒரே ஊரில் பணியாற்றியபோது,
26.1.2018 அன்று கொண்டாடப்பெற்ற,
குடியரசு தின விழாவிற்கு,
தங்களின் ஒன்பதாம்
வகுப்பு கணித ஆசிரியர்
திரு எம்.செல்வராஜ்
அவர்களை
விருந்தினராக அழைத்துச்
சிறப்பித்தனர்.
இதுமட்டுமல்ல, இவ்வாண்டு, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ.,
மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின்போது, 19.1.2020 ஞாயிற்றுக் கிழமையன்று
நடைபெற்ற,
முனைவர் த.செந்தில்குமார் அவர்களின்
பெரிதினும் பெரிது கேள்
நூல் வெளியீட்டு விழாவின்போது,
உழைப்பால் உயர்ந்த,
இம் மேனாள் மாணவர்கள் மூவரும்
தங்கள் ஆசிரியரை மேடையேற்றி,
ஆசிரியரின் திருவடிகளைத்
தொட்டு வணங்கிய காட்சி
காண்போரை நெகிழச்
செய்தது.
பெரிதினும் பெரிது கேள்
தன் சிறு வயது நினைவுகளை எல்லாம் எழுத்தாக்கி,
விருந்து படைத்திருக்கிறார்,
இந்நூலின் ஆசிரியர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்.
பெரிதினும் பெரிது
கேள்
அவரைப் பற்றிய உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பு.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஆசிரியரைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுகிறது நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபுத்தகப் பெயரும், ஆசிரியரின் விபரமும், படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குமறக்க முடியாத குரு...
பதிலளிநீக்குநட்பு சிறப்பு...
இவ்வாறு அமைவது என்பதானது மிகவும் அரிதே. அதனை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குமுனைவர் த.செந்தில்குமார் அவர்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் புதிய பதிவினைத் தொடங்கியுள்ளேன். அது சிறப்பாக அமைய நீங்கள் உதவியமைக்கு நன்றி. அதில் மேலும் பதியப்படவேண்டிய செய்திகளை உரிய சான்றோடு (வலைப்பூ, முகநூல் இணைப்புகள் தவிர) நண்பர்கள் அனுப்பினால் அவருடைய பதிவில் இணைக்கக் காத்திருக்கிறேன்.
காவல் கண்காணிப்பாளர் ஐயா அவர்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. உரிய சான்றாதாரங்களோடு செய்திகளை விரைவில் அனுப்பி வைக்கிறேன் ஐயா
நீக்குநன்றி
மிக அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குமாணவர் உய்ர்ந்தால் ஆசிரியருக்கு பெருமை.
உண்மை
நீக்குநன்றி சகோதரி
நான் எனாசிரியர்களைத் தேடிப்போனபோது ஏமாற்றமே மிஞ்சியது பலரும் பரலோகபதவி அடைந்து விட்டனர்
பதிலளிநீக்குதாங்கள் பள்ளிப் படிப்பை முடித்து, எப்படியும் 60 ஆண்டுகள் கடந்திருக்கும் அல்லவா.
நீக்குவயோதிகம் தங்களின் பல ஆசிரியர்களை இயற்கையோடு இணைத்திருக்கும்
நன்றி ஜெயக்குமார் !
பதிலளிநீக்குஎன்னுடைய "பெரிதினும் பெரிது கேள்" புத்தக ஆக்கத்திலும், தொடர்ந்து புத்தகத்தை படித்து கருத்துக்களை பதிவிட்டு வரும் நல்ல பணியையும் மனதார பாராட்டுகிறேன்.. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ..
உங்கள் எழுத்து நடை இனிமையாக எளிமையாக விறுவிறுப்பாக உள்ளது தொடர்ந்து எழுதவும் நன்றி வணக்கம்������
தங்களின் வருகை மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது ஐயா.
நீக்குதங்களின் நூலினை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் படிப்பதாய் ஓர் உணர்வு
அருமை . நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎன்கென்னவோ இந்தப் பதிவு ஏற்கெனவே படித்தது போலவே இருக்கிறது.
பதிலளிநீக்குநல்ல குரு அமைவதும் வரம்.
நூல் வெளியீட்டு விழா குறித்த பதிவில், ஆசிரியரை மேடைேயேற்றி சிறப்பித்த நிதழ்வு பற்றி குறிப்பிட்டுள்ளேன் நண்பரே
நீக்குஎழுதிய விதத்திற்கு நீங்கள் அருகில் இருந்தால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து இருப்பேன். அட்டகாசம்.
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்து வார்த்தைகள் பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
நீக்குகுருவை மறவாத நல்மாணவர்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோதரியாரே
நீக்குஇந்தப்பதிவு மனதை மிகவும் நெகிழச்செய்து விட்டது!
பதிலளிநீக்குஇம்மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான உறவு அனைவரின் மனதையும் நெகிழச் செய்துவிடக்கூடியதுதான்
நீக்குநன்றி சகோதரியாரே
ஆகா! நட்பும் ஆசிரியர் மீதான மரியாதையும் நெகிழச்செய்கின்றன.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குamazing!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான பதிவு நண்பரே. ஆசிரியப் பணி எவ்வளவு பேறு பெற்ற பணி இந்த பதிவு மற்றோர் எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குநல்லவாசிப்பு இன்றைய மாணவர்களுக்கு மிகவும் அவசியம் ஆனால் கல்வி முறையில் கற்பித்தல் செயல்பாடு புத்தகத்தை கண்டதும் வெறுப்பை மட்டுமே வளர்கின்றன
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குஇந்நிலை மாறவேண்டும்
பதிவு சிறப்பு.
பதிலளிநீக்குவாசிப்பு என்ன செய்யம் என்கிற தலைப்பில் உங்கள் கட்டுரையை பகிரலாம் தொகுக்கலாம்
பதிலளிநீக்குஅருமையான தகவல் அய்யா