ஆண்டு 1907
அந்தப்
பெண் குழந்தைக்கு வயது ஐந்து அரை.
அன்று காலை முதலே வீடு அமர்க்களப்பட்டது
அந்தக் குழந்தையை குளிக்க வைத்து, புதிய பட்டுப்
பாவாடை அணிவித்தார்கள்.
தலையில் இருந்த கொஞ்ச முடியினையும் கொண்டையாய்
மாற்றினார்கள், பூச்சசூடி அலங்கரித்தார்கள்.
உடல் முழுவதும் விதவிதமாய் நகைகளை அணிவித்தார்கள்
குழந்தைக்கு மகிழ்ச்சி தாளவில்லை
வெளியில் இருக்கும் தன் தோழிகளிடம், புதுப் பாவாடையினையும்,
அலங்காரத்தையும் காண்பிக்க வேண்டும் என்ற ஆசை
வெளியே ஓடினார்
சித்தியோ தடுத்தார்
இப்படியெல்லாம்
வெளியில் ஓடக்கூடாது. மனைக்கு கூப்பிடும்வரை, அந்த அறையிலேயே, நல்ல பிள்ளையாய் அமர்ந்திருக்க
வேண்டும். புரிந்ததா?
போங்கோ
சித்தி, எவ்வளவு நேரம்தான் உள்ளேயே இருப்பது எனச் சிணுங்கினாள் அந்தச் சிறுமி.
அன்று அந்தக் குழந்தைக்குத் திருமணம்.
---
ஆண்டு 1925
அது ஒரு தொடர் வண்டி நிலையம்
கூட்டம் நிரம்பி வழிந்தது
தொடர் வண்டியில் ஏறிப் பயணிக்க வந்தவர்கள் அல்ல,
இவர்கள்.
ஜகன்
மோகினிக்காகத்தான் இவ்வளவு கூட்டமும்
ஜகன் மோகினி யார்?
நடிகையா?
நடிகையைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம்?
இல்லை
ஜகன்மோகினி நடிகையே அல்ல
பின் யார்?
யார் என்ற கேள்வியே தவறு
யார்? அல்ல எது?
ஜகன்மோகினி என்பது அக்காலகட்டத்தில் வெளியான,
மாதாந்திர இதழ்
ஆம்
ஜகன்மோகினியின் அம் மாதத்திற்கு உரிய இதழ், தொடர்
வண்டி மூலம் இவ்வூருக்கு வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு தொடர் வண்டி நிலையத்திலும், அன்று இதுதான் நிலை.
ஒவ்வொரு மாதமும் இதுதான் நிலைமை.
வைதேகி
துப்பறியும் தொடர்
அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற ஆவலைத் தூண்டும்
தொடர்
போன மாதம் படித்தது, வைதேகிக்கு என்ன நடந்ததோ,
ஏது நடந்ததோ என்பதை அறிய, பதைபதைப்புடன் இக்கூட்டம் காத்திருக்கிறது
வியப்பாக இருக்கிறது அல்லவா?
மக்கள் மனதில் இப்படி ஒரு ஆர்வத்தை, கிளர்ச்சியை
கிளறிவிடும் வல்லமை ஒரு தொடருக்கு இருக்குமா எனும் கேள்வி எழுகிறதல்லவா?
அக்காலத்தில், இந்தத் தொடருக்கு அந்த வல்லமை
இருந்திருக்கிறது
கதை அப்படி
கதையினை நகர்த்திச் செல்லும் எழுத்து அப்படி
சரி, யார் இதன் ஆசிரியர்?
ஆசிரியர் அல்ல ஆசிரியை
பெண் எழுத்தாளர்
என்ன? 1925 ஆம் ஆண்டில் பெண் எழுத்தாளரா?
ஆம், இப்படி ஒருவர் இருந்திருக்கிறார்
ஐந்தரை வயதில் திருமணமாகி, புகுந்த வீடு புகுந்த,
இந்தப் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே, பிறருக்குக் கதை சொல்லுவதில் ஓர் ஆர்வம்.
தான் புகுந்த வீட்டில் இருந்த சிறுவர்களுக்கும்,
அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும், தன் கற்பனையில் தோன்றிய கதைகளை, அருகில்
இருந்து பார்த்தது போல் சுவைபட எடுத்துரைப்பார்.
சிறுவர்கள் வாயைப் பிளந்தவாறு கதையை ரசிப்பார்கள்
ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்தப் பெண்ணுக்கு ஓர்
ஆசை
நாமே ஒரு கதையை எழுதினால் என்ன?
கதையை மனதிலேயே, ஒவ்வொரு காட்சியாக, தொடக்கம்
முதல், முடிவு வரை தயார் செய்தார்.
ஆனால் எழுதத்தான் வழியில்லை
ஏன்?
இந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியாது
தெரியவே தெரியாது
பக்கத்து வீட்டுப் பெண்ணாணப் பட்டம்மாளை உதவிக்கு
அழைத்தார்
இவர் சொல்லச் சொல்ல, பட்டம்மாள் எழுதினார்
இந்திர மோகனா
1924 ஆம் ஆண்டு நாடகக் கதையான இந்திர மோகனா அச்சு
வாகனம் ஏறியது
படித்தவர்கள் அனைவரும் பாராட்டினர்
அருமை, அற்புதம்
இரண்டாவது நாவல் மனதிலேயே தயாரானது
வைதேகி
ஆனாலும் உடனே எழுதிடவில்லை
இப்பெண்ணின் மனதில் ஒரு வைராக்கியம்
எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு, தன் கைபடவே,
தன் நாவலை எழுத வேண்டும் என்ற ஓர் உந்துதல்
மிகவும் குறுகிய காலத்திலேயே எழுதப் படிக்கக்
கற்றார்.
தன் கைபடவே, இரண்டாவது நாவலை எழுதினார்
வைதேகி
தொடராய் வெளிவந்து, மக்களின் மனங்களைக் கொள்ளை
அடிக்கத் தொடங்கியது
அதுநாள் வரை, அச்சிட்டும் விற்பனையாகாமல், தேங்கிக்
கிடந்த, ஜகன் மோகினி பத்திரிக்கையினை இவரே விலைக்கு வாங்கினார்.
அந்தப் பத்திரிக்கையினை மாத இதழாக மாற்றினார்.
தன் தொடர்கதையோடு அந்த இதழினை வெளியிட்டு, நிலைமையினை
தலைகீழாய் புரட்டிப் போட்டது
அச்சிட அச்சிட இதழ்கள் பறந்து கொண்டே இருந்தன
வியப்பினும் வியப்பாக இருக்கிறது அல்லவா?
ஆனாலும் உண்மை
இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
சற்று மூச்சை இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்
117
நூல்கள்
இவர் யார் தெரியுமா?
தமிழின் முதல் பெண் நாவலாசிரியர். துப்பறியும்
கதைகளை எழுதிய முதல் பெண் எழுத்தாளர். சுதந்திரப் போராட்ட வீரர். சிறை பல கண்டவர்.
சிறந்த மேடைப் பேச்சாளர்.
வெண்பா, விருத்தப்பா, குறட்பா யாப்பில் பாடல்
புனைவதில் வல்லவர்.
இவரது பெயரின் முன்னெழுத்து என்ன தெரியுமா?
வை.மு
நாமெல்லாம், தந்தைப் பெயரின் முதல் எழுத்தைத்தானே,
முன்னெழுத்தாய் எழுதுகிறோம்.
ஆனால் இவரோ, தான் புகுந்த வீட்டின் பெருமையைப்
பறைசாற்ற, தன்னை படிக்கவும், எழுதவும், மேடையேறிப் பேசவும், சிறைசெல்லவும் உற்சாகப்
படுத்திய, வைத்தமாநிதி முடும்பை குடும்பம்
என்று போற்றப் பெற்ற, தன் புகுந்த வீட்டின் பெயரையே, தன் முன்னெழுத்தாக வைத்துக் கொண்டார்.
வை என்றால் வைத்தமாநிதி
வைத்தமாநிதி என்பது இவரது புகுந்த வீட்டின் குலதெய்வம்
மு என்றால் முடும்பை
முடும்பை இவர்களது குல தெய்வம் வசிக்கும் தலம்.
இவர்தான்
வை.மு.கோதைநாயகி
நண்பர்களே, வை.மு.கோதைநாயகி பற்றியச் செய்திகளை,
ஒரு பெரு நூலின், ஒரு கட்டுரையில் கண்டெடுத்தேன்.
சங்ககாலம், காப்பிய காலம் தொடங்கி, இஸ்லாமியர்
தமிழ், கிறித்துவத் தமிழ் எனத் தொடர்ந்து, இன்றைய கவிதை இலக்கியம்,, நாவல் இலக்கியம்,
நாடக இலக்கியம், பயண இலக்கியம், சிற்றிதழ்கள், ஊடகத் தமிழ் வரை சுவைபட அலசுகிறது இந்தக்
கட்டுரை.
என்றுமுள தென்தமிழ்
கட்டுரையின் பெயரே, கவித்துவமாக இருக்கிறதல்லவா.
இதனை எழுதியவர் காவல் சீருடை அணிந்தத் தமிழறிஞர்.
முனைவர் த.செந்தில்குமார்
அவர்கள்
காவல் கண்காணிப்பாளர்
இவரது அற்புத நூல்
பெரிதினும் பெரிது
கேள்.
அந்த காலத்தில் இருந்த ஒரு பெண் எழுத்தாளரை தெரிந்து கொள்ள முடிந்தது. எழுத படிக்க தெரியாதவரால் எழுத்தாளராக ஆக முடிந்தது என்றால் அவருக்குள் இருக்கும் திறமையை என்னவென்று சொல்வது.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரிய திறமை படைத்தவர்
நீக்குநன்றி நண்பரே
அருமை ஐயா...
பதிலளிநீக்குஅந்த நூலில் பல பொக்கிசங்கள் உள்ளன போல...
உண்மைதான் ஐயா
நீக்குஅற்புதமான நூல்
நன்றி ஐயா
அப்பெண்ணின் வைராக்கியம் போற்றத்தக்கது.
பதிலளிநீக்குஅரிய எழுத்துப் பெண்மணியை அறியத் தந்த தங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி ஐயா
நீக்குவை மு கோதைநாயகி கேள்விபட்ட பெயர் ஆனால் தகவல்கள்கேள்விப்படாதது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவைமு - எத்தனை சிறப்பு அவரிடம்.
பதிலளிநீக்குஅற்புதமான விஷயங்களை உங்கள் வழி அறிந்து கொள்கிறோம். உங்களுக்கும் நூலாசிரியருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி ஐயா
நீக்குபெண் எழுத்தாளர் என்றவுடன் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி நினைவுக்கு வந்து விட்டார்.
பதிலளிநீக்குமிக அழகாய் படிக்க தந்தீர்கள்.
நூலாசிரியருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி
நீக்குதகவல் சுவாரஸ்யம். காவல்துறை நண்பர் எழுதிய புத்தகம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டது என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஉண்மை
நீக்குநன்றி நண்பரே
வைமு கோதைநாயகி அவர்களைப் பற்றியும் ஜெகன் மோகினி இதழ் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தாலும் வைமு விரிவாக்கம் அறியத் தந்தீர்கள். நூலாசிரியர் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா
இந்த புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும்
பதிலளிநீக்குஅவசியம் வாங்கி வாசியுங்கள் நண்பரே
நீக்குஒரு கலைக்களஞ்சியத்திலிருந்து சிறப்பாகப் பகிர்ந்து வருகின்றீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
நீக்குநன்றி
தங்களின் இந்த வார பதிவு மிகவும் அரிதான தகவல் பேழை நண்பரே.சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் எழுத்தாளர் அதுவும் துப்பறியும் கதை எழுதியிருக்கிறார் என்பதை நீங்கள் எழுதி சென்ற விதம் வழக்கம் போலவே அருமை.
பதிலளிநீக்குஎன் இளமையில் வை.மு.கோ.வின் ஒரு நூலை வாசித்த நினைவு இருக்கிறது . இரு நணபர்கள் என்பது தலைப்பு என நினைக்கிறேன். அவரைப் பற்றி ஒரு கட்டுரையை அண்மையில் தினமணி வெளியிட்டிருந்தது .நீங்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதமாய் எழுதியிருக்கிறீர்கள்>
பதிலளிநீக்குஅருமையான தகவல், ஒரு கதை படித்த ஃபீலிங்...
பதிலளிநீக்குஅருமையான அறிமுகம்
பதிலளிநீக்குவரவேற்கிறேன்
அருமை
பதிலளிநீக்குஆங்கில நாவலாசிரியர் சார்ல்ஸ் டிக்கென்ஸ் கதை புத்தகங்களுக்கு துறைமுகங்களில் அந்நாட்களில் காத்திருப்பர் எனவறிந்தவன்
தமிழுக்கும் அப்பெருமை.
பெண் எழுத்தாளரின் புதனத்திற்கு மக்கள் காத்திருந்தினர் எனும் செய்தி மிகவும் சிறப்பு
தங்கள் தேடல் தொடரட்டும்
வை. மு.கோதைநாயகி பற்றி அறிந்திருக்கிறேன். ஆனாலும் பல அறியாத தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி
அருமை...அருமை....தங்கள் மின்னஞ்சல்கள் கருத்துப் போட்டபின்பே அழிப்பேன்.
பதிலளிநீக்குஅத்தனையும் பொக்கிசமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.
மிக மிக அருமை. பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குஉடுவை.எஸ்.தில்லைநடராசா---இலங்கை