28 ஜூன் 2020

பள்ளிக்காக, ஆறாவது முதலாளி




நண்பர்களே, வணக்கம்.

     கொரோனா கால ஊரடங்கில், வீட்டிற்குள் முடங்கித் தவித்த எனக்கு, நேரத்தைக் கடத்துவதற்கானப் புது வழியினைக் காட்டியவர் வலைச் சித்தர் ஐயா அவர்கள்.

     அமேசான் தளத்தில் மின்னூல்களை வெளியிடுங்கள் என்றார்.

     வலைச் சித்தரின் வார்த்தையை சிரமேற்கொண்டு, நான் நான்கு மின் நூல்களை வெளியிட்டதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

     இதோ மேலும் இரு புது மின்னூல்கள்.

பள்ளிக்காக


கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிறுவனங்களுக்குத், தன் முதல் வருவாயில் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்த வள்ளல்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பயிலும் திக்கற்ற மாணவர்களுக்காகத், தன் சொந்த செலவில், திக்கற்ற மாணவர் இல்லம் கட்டிக் கொடுத்ததோடு, மாணவர்கள் பசியாற,  இருபத்து மூன்று ஏக்கர் நிலத்தினையும், அறக்கட்டளையாக்கி வழங்கிய, பசிப்பிணி மருத்துவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க முதற்றலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரின் வேண்டுகோளினை நிறைவேற்ற, தமிழ் இசை இலக்கண நூலினை எழுதி, இவ்வுலகிற்கு வழங்கியவர்.

     இம்மூவரின் சிறப்புமிகுப் பணிகளை ஒருங்கிணைத்துக் கூறும் நூல் பள்ளிக்காக.

ஆறாவது முதலாளி



     நான் படித்து ரசித்த, ரசித்துப் படித்த, ஏழு நூல்களின் சிறப்புக்களைக் கூறும் நூல் ஆறாவது முதலாளி.

     இவ்விரு நூல்களையும் இன்று (28.6.2020) முதல் செவ்வாய்க் கிழமை (30.6.2020) வரை கட்டணமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்



     படித்துப் பாருங்கள் நண்பர்களே.

     மின்னூல் உருவாக்கத்திற்கு வழி காட்டிய வலைச் சித்தருக்கும், மின்னூல் உருவாக்கத்தின்போது, தோன்றிய இடர்களைத் தகர்த்தெறிய உதவிய, முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவக்ளுக்கும், இமயத் தலைவர் திரு இராய.செல்லப்பா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

     வலைச் சித்தருக்கு ஜெ.







ஒலிப் பேழை

20 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா சிறப்பான பணி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் உங்கள் எழுத்துகளை நூல்களாக்க மேற்கொள்ளும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது. நம் பிற நண்பர்களுக்கு முன்மாதிரியாக உள்ளமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றி ஐயா...

    உங்கள் குரலில் ஒவ்வொரு பதிவும் ஒலிப் பேழையில் கேட்கும் போது அருமையாக உள்ளது... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் . நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஆகா வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
  7. ஆகா வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் நண்பரே எனது நூலையும் இணைத்திருப்பது கண்டு மகிழ்ச்சி.

    தொடரட்டும் தங்களது பணி

    பதிலளிநீக்கு
  9. இனட இனிய நண்பருக்கு, மின்னூலாக்கம் செய்வதற்கு தங்களிடம் வலைப்பூ பதிவுகள் ஏராளம் உள்ளன என்பதால் அவற்றை வகைப்படுத்தி தொகுத்து சிறப்புடன் வெளியிட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. என் இனிய நண்பருக்கு, இது ஒரு அருமையான செயல். தங்களின் வலைப்பூ பதிவுகள் ஏராளமாக உள்ளதால் அவற்றை வகைப்படுத்தி இது வரை வெளியிட்ட மின்நூல்கள் போன்றே சிறப்பாக வெளியிட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு !
    நானும் வலைச்சித்தருக்கு ஜெ சொல்லிக்கொள்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  12. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. இந்த இரண்டு நூல்களையும் தரவிறக்கம் செய்து கொண்டேன். விரைவில் படித்து விடுவேன். முன்பு வெளியிட்ட நூல்களில் ஒன்று படித்து முடித்து விட்டேன். விரைவில் அது பற்றி எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள்.நண்பர் திரு திண்டுக்கல் தனபால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாரட்டுகளும்!

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வீட்டில் முடங்கி கிடக்கும்போடு நாடகப் போட்டியில் பங்கு கொள்ளலாமே

    பதிலளிநீக்கு
  17. ஓ மின்னூல்களோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. கில்லர்ஜியும் தெரிகிறார் ஹா ஹா ஹா.. அத்தனை புத்தக அட்டைகளும் அழகு.

    பதிலளிநீக்கு
  18. அருமை நண்பரே.தங்கள் பணி மென்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு