நண்பர்களே,
சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும் விரும்பும் ஒரு விலங்கு உண்டென்றால், அது
யானையாகத்தான் இருக்கும்.
யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும்
இயல்புடையவை. யானைக் கூட்டங்களைப் பொறுத்தவரை குடியாட்சி கிடையாது.
மன்னராட்சிதான். மன்னராட்சி என்பதுகூட தவறு, மன்னி ஆட்சிதான், இராணி ஆட்சிதான்.
வயது முதிர்ந்த பெண் யானையே கூட்டத்திற்குத்
தலைமையேற்று வழி நடத்தும். ஒரு கூட்டத்தில் மூன்று சோடிகள் மற்றும் யானைக்
குட்டிகள் என பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.
ஒரு முறை, ஒரு பெண் யானை கூட்டத்திற்குத்
தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அப்பொறுப்பு, அப்பெண் யானை இறக்கும் வரை
தொடரும்.
