ஏப்ரல் 23 ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை
பகல் 1.30 மணி
பசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து,
உண்ணத் தொடங்கினோம்.
நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான
திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப்
பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன்
இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.
நாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்,
இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
சாப்பிடுவது புதிதல்ல.
சாப்பிடும் இடம் புதிது.
நாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும்
வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.