26 அக்டோபர் 2013

இவருக்கு எப்பொழுதும் மனிதம் என்றே பெயர்


இல்லாமை என்னும் பிணி
இல்லாமல்  கல்வி நலம்
எல்லார்க்கும் என்று சொல்லி
கொட்டு முரசே
என்று முரசறைவார் பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்கள், பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப, ஜீவனுள்ள கல்வி முறையை உருவாக்குவதிலும், கல்வி கற்க வரும் இளம் மாணவர்களை, அன்பின் மொழி பேசி, நன் மக்களாய் உருவாக்குவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருபவர்.
 
தோழர் இரா.எட்வின்
     தான் பணியாற்றும் பள்ளியிலாகட்டும், தான் வசிக்கும் இடத்திலாகட்டும், பூமிப் பந்தின் எந்தவொரு மூலையிலாகட்டும், எங்கெல்லாம் மனிதம் காயமடைகிறதோ, எங்கெல்லாம் மனிதம் சேதமடைகிறதோ, அதைக் காணும் பொழுதெல்லாம், கேட்கும் பொழுதெல்லாம், சீறியெழுந்து, நாவன்மை மிக்கப் பேச்சாலும், உள்ளங்களைக் கிளர்ந்தெழச் செய்யும் எழுத்தாலும் எதிர்வினை புரிபவர் இவர்.

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
என்று விழிப்பூட்டுவாரே பாரதிதாசன், அதுமட்டுமா

கொலைவாளினை எட்டா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா
என்றுக் கொதித்தெழுந்து கொலை வாளினை எட்டா என்று வீர முழக்கமிடுவாரே புரட்சிக் கவி, அப்புரட்சிக் கவியின் ஆணைக்கு இணங்க, கொலை வாளினை அல்ல, அதனினும் வலிமை மிக்க எழுது கோலினை ஏந்தி, நெஞ்சம் நிமிர்த்திப், போர்க் களத்தின் முன்னனியில் நின்று போரிடுபவர்தான் தோழர் இரா.எட்வின்.
கவிஞர் முத்து நிலவன்
     நண்பர்களே, கடந்த 6.10.2013 அன்று, கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக்கில் நடைபெற்ற, கணினி பயிலரங்கில்தான், தோழர் இரா.எட்வின் அவர்களை முதன் முதலில் நேரில் சந்தித்தேன்.

    நேசத்துடன் பேசினார். மிகவும் மென்மையான மனிதராகத்தான் தோன்றினார். ஆனால், அவர் எழுந்து, ஒலிப் பெருக்கியின் முன் நின்ற சில நொடிகளிலேயே, அவ்விடம், பெய்லின் புயல், மையம் கொண்ட புள்ளியாக மாறியது.

விடைபெற்றுச் செல்லும் பொழுது,
இவனுக்கு அப்போது மனு என்று பேர்
என்னும் தன்னுடைய நூலை அன்பளிப்பாய் வழங்கிச் சென்றார்.


     நண்பர்களே, நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை என்பது இவரது வலைப் பூவின் பெயர். மிகச் சரியாகத்தான் பெயரிட்டுள்ளார். நோக்குமிடங்களில் எல்லாம் காணும், சமூக அவலங்களைக் கண்டு எழும், தனது உள்ளக் குமுறல்களை சின்னச் சின்ன வாக்கியங்களில் வடித்துத் தருகிறார்.

     தனது வலைப் பூ கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். இந்நூலின் முகப்பு அட்டையே நமக்குச் சொல்கிறது, இது மேலோட்டமான வாசிப்பிற்கு உரிய, சராசரி நூல் அல்ல என்பதை.

     மகப்பேறுவிற்காக மருத்துவரிடம் ஒரு பெண் வருகிறார். குழந்தை பிறந்தவுடன், அப் புத்தம் புது குழந்தையைப் போர்த்திக் கொடுக்க, ஒரு புதுத் துணியைக் கேட்கிறார் மருத்துவர். அப் புதுக் குழந்தையின் தகப்பன் தருவதோ, கிழிந்த பனியன் துணி. ஏழ்மை.

       அக்கிழிந்த பனியன் துணியை, அம் மருத்துவரின் முகநூலில் காண்கிறார் தோழர் எட்வின்.

      பிறந்த தனது குழந்தையை, கிழிந்த பனியன் துணியால்தான் போர்த்திப் பெற முடியும் என்றால், இந்த மண்ணில் என்ன இழவுக்கு உயிரோடு இருக்கிறோம்? எனப் பொங்கி எழுகிறார்.

     ஒரு மழை நாளில், மதுராந்தகம், வீராணம், செம்பரம் பாக்கம் முதலான ஏரிகள் நிரம்பி வழிவதையும், எந்நேரத்திலும், ஏரிகளின் கரைகள் உடையலாம் என்பதையும், தொலைக் காட்சியில் காட்டுகிறார்கள்.

     எட்வின் அவர்களுடன் சேர்ந்து, அவரது அன்பு மகள் கீர்த்தனாவும் தொலைக் காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறார். கீர்த்தனாவிற்கு, அடுத்த நாள் பள்ளி உண்டா? அல்லது விடுமுறையா? என்பதை அறிந்து கொள்ளும் ஆவல்.

      வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நூற்றுக் கணக்கான குடிசைகள், ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சின்னா பின்னமாய், சிதறுண்டு கிடக்கும் காட்சி தெரிகிறது. உயிர் சேதத்திற்கு, கால் நடைகள் சேதத்திற்கு என நிவாரணங்கள் அறிவிக்கப்படுகின்றன.

      கீர்த்தனாவிற்கு ஒரு சந்தேகம்.

      ஏம்பா, இப்ப இந்த தண்ணி எல்லாம் எங்கே போகும்?

      கடலுக்கு.

      வருஷா வருஷம் இப்படித்தானா?

      ஆமாம்.

       ஏம்பா, அப்ப இப்படிக் கொடுக்குற காசுல புதுசா ஒரு ஏரி வெட்டி விட முடியாதா?

       எதுக்குக் கேக்கற? வெட்டப் போறியா?

       லூசு மாறி உளறாம, கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா.

       வெட்டலாம்தான்

       அப்ப ஏன் அரசாங்கம் வெட்ட மாட்டேங்குறாங்க?

      கன்னத்தில் ஓங்கி அறைந்தாற் போன்று இருக்கிறதல்லவா நண்பர்களே? நதி பயணப்படும் பாதை என்னும் கட்டுரையில் நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.

     ஒரு முறை இவரது மகள் படிக்கும் பள்ளியில் பேச்சுப் போட்டி. கீர்த்தனா பேச வேண்டிய பேச்சை எழுதிக் கொடுத்து விட்டு, மகள் படித்துப் பார்க்கும் முன், பள்ளிக்கு புறப்பட்டு விட்டார். மாலை விடு திரும்பியவுடன், மகளைப் பார்த்துக் கேட்கிறார்.

       பேச்சு நல்லா இருந்துச்சா?

       சரியான லூசாப்பா நீ?

       ஏன்டி பாப்பா?

       பின்ன என்னப்பா. அவருக்கு, இவருக்கு, நிக்கிறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு,  வரவருக்குன்ற ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியே.

       வேற எப்படி செல்றது?

        எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?

       இடையில் நுழைகின்றான், அப்பொழுது யூ.கே.ஜி படித்துக் கொண்டிருந்த, எட்வின் அவர்களின் செல்ல மகன் கிஷோர்.

        எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டா போதாதா?

     கற்றுக் கொள்வதற்குப் பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கிறது என்கிறார், தக்காளி என் அசான் என்னும் ஓர் கட்டுரையில்.

     நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால், எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து, சந்தோஷமா படிப்பேன். ஆனா, தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா.

       நண்பரின் மகனின் பேச்சைக் கேட்டு, அம் மாணவனை, கண்ணில் கண்ணீர் மழ்க, இறுக்கமாக அணைத்துக் கொண்ட நிகழ்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் குழந்தைகள் எப்போதும் தவறாய் பேச மாட்டார்கள் என்னும் கட்டுரையில்.

     மதிய உணவுத் திட்டத்தையும், சீருடையினையும் கொண்டு வந்து, கல்விக் கண் திறந்த கர்ம வீர்ர் காமராசரை இவர் நினைவு கூறும் விதம், நம்மைக் கண் கலங்க வைக்கும்.

     ஒரு கையெழுத்தில் எங்கள் வாழ்க்கையை வெளிச்சப் படுத்திய உங்களைக் கை எடுத்துக் கும்பிடா விட்டால் நான் மனிதனல்ல.

     நான் மனிதன்.

     இரண்டு சொட்டுக் கண்ணீரும், வணக்கமும் தலைவரே.


     உச்சங்களின் முதல் சந்திப்பு என்னும் ஓர் கட்டுரையில், மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்ட சந்திப்பைக் கண் முன் நிறுத்துகிறார்.

     தமிழ் வாசிச்சிருக்கீங்களா?  இது பாரதி.

     கொஞ்சம்.

      அடக்கமாய் பதில் கூறுகிறார் பாரதிதாசன். நண்பர்களே, நீங்களும் இந்நூலை வாசித்துப் பாருங்கள். உச்சங்களின் சந்திப்பில் உங்களையே மறப்பீர்கள்.

      பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்த உடன், தேர்ச்சி பெற்றவன் இனிப்பு வாங்கவும், தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும் ஓடுகிறானே. குறைந்த பட்சம் இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும், தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?

     ஆசிரியர் சங்க மண்டல மாநாடு ஒன்றில், கல்வித் துறையின் இணை இயக்குநர் திரு கார்மேகம் அவர்கள் எழுப்பிய இந்தக் கேள்வி, ஒரு வாரத்திற்குத் தூங்க விடாமல் துரத்தியதை எது செய்யக் கல்வி? என்னும் தலைப்பில் பதிவு செய்து,

01.   பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம்
02.   பதினொன்று மற்றும் பன்னிரெண்டம் வகுப்புகளில், இப்போது உள்ள முறையை மாற்றி, செமஸ்டர் முறையினை அறிமுகப் படுத்தலாம்
என்ன, ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கலாமா? என நம்மையும் விவாதத்திற்கு அழைக்கிறார் தோழர் இரா.எட்வின்.

     பிரம்படிச் சத்தம் கேட்காதப் பள்ளிக் கூடங்களையே விரும்பும் தோழர் எட்வின், திறந்து வைக்கும் சாரளங்கள் வழியே பார்த்தால், ஒரு உன்னத உலகு தென்படுகிறது.

      நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்களது இந்நூல், யதார்த்த சமூகப் பிரச்சனைகளை நம் கண் முன்னே, கதைபோல் காகிதத்தில் ஓட விடுகிறது.

      வாருங்கள் நண்பர்களே யோசிப்போம். வாருங்கள் விவாதிப்போம். வாருங்கள் ஒரு முடிவெடுப்போம் என நம்மையும், ஒவ்வொரு பக்கத்திற்கும், ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு எழுத்திற்கும், கை பிடித்து உடன் அழைத்துச் செல்கிறார்  தோழர்.

     சமூக அக்கறையுடனும், கொண்ட கொள்கையில் உறுதியுடனும், தொடர்ந்து இயங்கி வருபவர் எட்வின் என்பதையும், பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாதவர் எட்வின் என்பதையும், பாசாங்கு இல்லாத அவருடைய எழுத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

      வாருங்கள் நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்களை வாசிப்போம். வாசித்தால் நிச்சயம் நேசிப்பீர்கள்.
இவர்
மனிதரல்ல
மனிதம்
என்றே
போற்றுவீர்கள்.



78 கருத்துகள்:

  1. இவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவரின் உயரம் எனக்குத் தெரியாது. இப்போது உங்களின் தளத்தில் படிக்கையில் இன்னும் இவரின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற அவா எழுகிறது. அவசியம் படிக்கிறேன் நண்பரே! அருமையானதொரு அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன. நன்றி நண்பரே

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டச்சின் போது சில எழுத்துப் பிழைகள் எனவே நானே நீக்கி விட்டேன்.

      நீக்கு
  3. ஆசிரியர் இரா எட்வின் பதிவுகளைப் படித்து வருபவர்களில் நானும் ஒருவன். உணர்ச்சி பூர்வமான சிவப்பு எண்ணங்களை அவருடைய எழுத்துக்களில் ஆங்காங்கே காணலாம். அவரது ஒன்றிரண்டு பதிவுகளுக்கு கருத்துரையும் எழுதி இருக்கிறேன். திருச்சியிலிருந்து பெரம்பலூர் பக்கம் ஆசிரியர் பணிக்கு சென்று வருகிறார் என்று நினைக்கிறேன். நீங்களும் ஆசிரியர் மற்றும் வலைப்பதிவர். அவரும் அப்படியே. இரா எட்வின் பற்றிய உங்கள் பதிவு உங்கள் அன்பின் வெளிப்பாடு. ஆர்வத்தில் உங்களது கட்டுரையில் அவரது "நோக்குமிடமெல்லாம் நாமன்றி ...www.eraaedwin.com என்ற வலைத் தளத்தின் பெயரை சுட்டிக் காட்ட மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறைதான் சந்தித்தேன், எனினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார் ஐயா. நோக்குமிடமெல்லாம் என்னும் பெயரிலேயே, அவரது வலைப் பூவிற்கான லிங்க் கொடுத்துள்ளேன் ஐயா.தங்கள் தொடர்ந்த வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன நன்றி ஐயா

      நீக்கு
  4. எட்வின் அவர்களை பார்த்ததில்லை ! வாசித்திருக்கிறேன் ! கை பேசிமூலம் தொடர்பு உண்டு! பெசியிருக்கிறேன்! உறுதியான கோட்பாடுகளைக் கொண்டவர்-பிடிவாதக்காரரோ என்று மறுகும் அளவுக்கு ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழுத்தம் திருத்தமாக தனது கருத்துக்களை முன் வைப்பவர் ஐயா.தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  5. அன்பின் ஜெயக்குமார்

    மதுரையில் கூழாங்கற்கள் என்னும் அழைப்பு நடத்திய இலக்கியச் சிந்தனை என்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது தான் எட்வினைச் சந்தித்தேன் - இருவரும் அதிகம் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் மேடையில் அவர் பேசிய ஒரு மணீ நேரப் பேச்சில் கூட்டத்தினைக் கட்டிப் போட்டு விட்டார். அருமையான உரை.

    ” இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற அவர் எழுதிய புத்தகத்தினை அன்புடன் அளித்தார்.

    தொடர்ந்து இலக்கியச் சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.

    நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  6. திரு.எட்வின் அவர்களைப் பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது .அவரது பதிவுகளையும் புத்தகங்களையும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் படிக்க வேண்டிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் எட்வின். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  7. பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்த உடன், தேர்ச்சி பெற்றவன் இனிப்பு வாங்கவும், தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும் ஓடுகிறானே. குறைந்த பட்சம் இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும், தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?

    யுகங்கள் எதற்கு?

    இப்போதே இன்றே
    இதை தொடங்க முடியும்

    விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதி நேரம் ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் மாணவன் மனதில், நம்பிக்கையையும், மன உறுதியையும் ,தோல்வி என்பது போதிய முயற்சி இன்மை என்பதையும், முயன்றால் தோல்விகளை வெற்றிபடிக்கட்டுக்களை எவர் வேண்டுமானாலும் எட்டலாம் என்பதையும் ,அவ்வாறு தோல்விகளை வெற்றி படிக்கட்டாக மாற்றி உலக புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கை சரிதத்தை அவர்கள் நெஞ்சில் பதியவைக்க ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களோடு இணைத்து அனுதினமும் விதைத்தார்களேயானால் இந்த மாற்றம் இன்றே நடக்கும்.

    ஆனால் எத்தனை ஆசிரியர்கள் இதற்க்கு தயார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையினை மாணவர்கள் மனதில் ஆழ விதைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியவர்களையேச் சாரும் ஐயா.ஆனாலும் இன்றைய அவசர உலகில், தேர்ச்சி விழுக்காடே பள்ளியின் தரத்தினை நிர்ணயம் செய்யும் அளவீடாக எடுத்துக் கொள்ளப் படுவதால், தேர்ச்சி ஒன்றே குறிக்கோளாய் மாறி, மற்றதெல்லாம் பின்தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது ஐயா. இந்நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்

      நீக்கு
    2. தேர்விலே தோல்வியடைபவர்கள்
      அனைவரும் தப்பான முடிவை எடுப்பதில்லை.

      ஏதோ ஒரு சிலர்தான் அந்த முடிவை
      எடுக்கும் நிலைக்கு அவர்களின்
      பெற்றோர்களால் தள்ளப்படுகிறார்கள்.

      ஆசிரியர்கள் கல்வியில் கவனக்குறைவான
      மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து
      அவர்களின் குறைபாட்டை போக்கினால் போதும்
      .இது போன்ற அவலங்களை தவிர்க்கலாம்.

      மேலும் அவர்களின் பெற்றோர்களையும்
      அழைத்து அவர்களையும்
      தெளிவுபடுத்துவதும் அவசியம்.

      நீக்கு
  8. பின்ன என்னப்பா. அவருக்கு, இவருக்கு, நிக்கிறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு, வரவருக்குன்ற ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியே.

    இதெல்லாம் ஆதாயத்திற்காக துதிபாடிகள் ஆடும் நாடகம். அரசியலில் இதுதான் வழிபாட்டு முறை.
    வாழையடி வாழையாக அந்த பண்பாடு எல்லாவற்றிலும் அழையா விருந்தாளியாக நுழைந்துவிட்டது.

    ஆனால் பட்டிமன்ற ஏச்சுக்களில் இந்த நடைமுறை
    பட்டி தொட்டிகளிலும் பயன்படுத்தபடுகிறது. காரணம் கேட்டால் மேடையிலே உட்கார்ந்திருப்பவர்களை பேச்சைக் கேட்க வந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக அவ்வாறு செய்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவிர்க்கப் படவேண்டிய நடைமுறை ஐயா. ஆனால் இன்று காலத்தின் கட்டாயமாகிவிட்டது.தங்களின் வரவும், கருத்துரைகளும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. மிக்க நன்றி

      நீக்கு
  9. ஆசிரியர் எட்வின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  10. நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால், எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து, சந்தோஷமா படிப்பேன். ஆனா, தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா.

    நண்பரின் மகனின் பேச்சைக் கேட்டு, அம் மாணவனை, கண்ணில் கண்ணீர் மழ்க, இறுக்கமாக அணைத்துக் கொண்ட நிகழ்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் குழந்தைகள் எப்போதும் தவறாய் பேச மாட்டார்கள் என்னும் கட்டுரையில்.//
    அருமையாக சொல்லி இருக்கிறார்.
    திரு.எட்வின் அவர்கள் வலைத்தளம் சென்று படிக்க ஆவல். படிக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் படிக்கப்பட வேண்டிய வலைத் தளம் எட்வின் அவர்களுடையது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  11. வணக்கம் அய்யா,
    திரு.இரா.எட்வின் அய்யா அவர்களைப் பற்றிய அழகான அறிமுகத்தினை நண்பர்களுக்கு தந்திருக்கிறீர்கள். தாங்கள் கூறியது போல் பார்க்கும் போது பசுவாகத் தெரிந்தார். ஒலிப்பெருக்கியைப் பிடித்ததும் புயலென மாறியதை நானும் புதுக்கோட்டை கணினித் தமிழ் பயிலரங்கத்தில் கண்டு வியந்தேன், இடி முழக்க பேச்சில் மூழ்கிப் போனது உண்மை. அவரது படைப்பையும் படித்து அழகான மேற்கோள்கள் காட்டியிருப்பது சிறப்பு அய்யா. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க...

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  13. திரு.எட்வின் அவர்களைப் பற்றி சிறப்புகளுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்... கைபேசியில் பலமுறை பேசி இருக்கிறேன்... "தோழரே தோழரே" என்று அவர் சொல்லும் போது, மனதில் நட்புணர்வு தானாக வந்து விடும்... விரைவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் சந்திக்க வேண்டிய தோழர் அவர். தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  14. குழந்தைகள் எப்போதும் தவறாய் பேச மாட்டார்கள் ...

    குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது ..!

    பதிலளிநீக்கு
  15. திரு.எட்வின் அவர்களைப் பற்றிய அறிமுகம் அருமை!.. அவரது வலைத்தளம் சென்று வாசிக்கும்படித் தூண்டியது தங்களின் கை வண்ணம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன நன்றி ஐயா

      நீக்கு
  16. கடந்த பதிவர் சந்திப்பின் போது அந்த கருப்பு சட்டை தோழரை சந்தித்தேன் என்றாலும் ,உங்கள் பதிவின் மூலமே முழுமையாக அவரை உணர முடிகிறது ...எட்வின் அவர் ஏற்கும் பணியில் வின் பண்ண வாழ்த்துக்கள் !
    த.ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  17. வணக்கம் நண்பரே. “சிறந்த நண்பர் ஒருவரைச் சிறப்பாக அறிமுகம் செய்வது எப்படி?“ என்று உங்களுடைய இந்தப் படைப்பைப்பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்னும் அளவிற்குச் சிறப்பாக உள்ளது. ஒருவரது படைப்புகளைப் படிக்காமலே பேட்டி எடுக்க வந்துவிடும் இளைய இதழாளர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். தீபாவளி எனக்கும் என் தம்பி எட்வினுக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் அதைக் கொண்டாடும் மக்கள் வாழ்வோடு ஏகப்பட்டு உடன்பாடு உண்டு. கடவுளை நாங்கள் நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்பும் மக்களை நம்புகிறோமே! எனவே உங்களின் அன்பான சரியான அறிமுகத்திற்கும் -அதில் என்னையும் சேர்த்துக்கொண்டமைக்கும்- மிக்க நன்றி. நமது பயிலரங்கை நடத்தித் தந்த கல்லூரித் தாளாளர் உங்கள் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கினார். பயிலரங்கம் பற்றிய தங்களின் கட்டுரை அவரைப் பெருமிதப்படுத்தியதாகச் சொன்னார். (அடுத்த பயிலரங்கம் நடத்தவும் இடம் தயார்!) நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. புதுக்கோட்டை கணினி பயிலரங்கில் கலந்து கொண்டதன் மூலம், தங்களையும் , தங்களது நண்பர்களையும், தோழர் இரா.எட்வின் அவர்களையும் சந்திக்கும் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிட்டியது ஐயா.அதற்காக தங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
      கல்வி நிறுவனங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வரும், இன்றைய சூழலில், பயிலரங்கிற்கு இடம் தந்து உதவுவதோடு, வந்திருந்தும் வாழ்த்துவதற்கு ஒரு உயர்ந்த நெஞ்சம் வேண்டும். கல்லூரித் தாளாளரின் தமிழ் நெஞ்சம் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது ஐயா.

      நீக்கு
  18. எட்வின் அவர்களின் சிந்தனைகள் கொக்கி போன்றவை.
    புத்தக அறிமுகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  19. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். தோழர் இரா.எட்வின் குறித்த அறிமுகமும் அவரது புத்தகம் குறித்த அறிமுகமும் அருமையாக இருந்தன.

    அவரின் முதல் அறிமுகத்திலும் அவரது முதல் பேச்சிலும் நான் காதலானவன். இன்றுவரைதொடர்கிறது. அவரது எந்தப் பேச்சும் தேவையில்லாத சொற்கள் புழங்காத பேச்சு. சரியாகப் பேசுவார். தரமாகப்பேசுவார். கேட்போர் பிணிக்கப் பேசுவார்.

    குழந்தைகள் குறித்த அவரது பதிவுகள் வெகு முக்கியமானவை. ஏனென்றால் நான் குழந்தைகளிடம் ஒவ்வொருமுறையும் புதிதாகக் கற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.
    மனிதாபிமானத்தின் பிரதிநிதியாகவே அவர் செயலிலும் படைப்புலகிலும் இயங்கிவருகிறார்.

    மகிழ்ச்சியாக உள்ளது.

    இதுபோன்ற மனிதநேயப் படைப்பாளிகளை அறிமுகம் செய்வதுகூட இலக்கியப் பணியின் ஒரு பங்களிப்பும் கடமையும்தான்.

    வர்ழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தங்களின் கருத்து மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது. நன்றி

      நீக்கு
  20. நண்பர்கள் அறிமுகம், நூல் வாசிப்பு என்ற நிலைகளில் தாங்கள் பெறும் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்வதறிந்து மகிழ்கின்றோம். இந்த அளவுக்கு நேரம் ஒதுக்குவதோடு பகிர்ந்துகொள்வதற்கும் பெரிய மனது வேண்டும். அந்த மனது உங்களுக்கு உள்ளது. உங்களது பகிர்வுகளைக் கண்டு பெருமைகொள்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. மிக்க நன்றி

      நீக்கு
  21. நண்பர் எட்வினின் பதிவுகளைத் தொடர்பவன் நான். ஒரு முறை நான் திருச்சிக்கு போக இருந்தபோது சந்திக்க விருப்பம் தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். ஏனோ பதிலேதும் வரவில்லை. இவரது எழுத்துக்கள் ஏதோ ஒரு ism சார்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது. பதிவுகள் படிக்கச் சுவையானவை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  22. அவர் பணி மேலும் சிறக்கட்டும் அண்ணா...

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா26 அக்டோபர், 2013

    அறிமுகம் அருமை. சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஐயா!...
    திரு.எட்வின் ஐயா அவர்களைப் பற்றிய உங்களின் அறிமுகம் மிகமிக அருமை!..
    நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லச் சொல்ல எம்மையுமறியாமல் மனம் அவர் தளம் நோக்கி ஓடத்தொடங்கிவிட்டது...!

    நல்ல பதிவும் பகிர்வும் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    த ம.5

    பதிலளிநீக்கு
  25. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன.

    நல்லதொரு பதிவு - பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  26. பெயரில்லா26 அக்டோபர், 2013

    வணக்கம்
    ஐயா
    திரு.எட்வின் ஐயா அவர்களைப் பற்றிய பதிவு மிகமிக அருமை!..
    அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  27. கல்வியாளர் எட்வின் அவர்களைப் பற்றி சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
    கவிஞர் முத்துநிலவன் அவர்கள் சொன்னது போல ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது என்பதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.
    இத்தகைய பெருந்தகையாளர்களை சந்திக்க ஆவல் கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வினையும், புத்துணர்ச்சியினையும் அளிக்கின்றது. நன்றி ஐயா. என்றும் வேண்டும் இந்த அன்பு.

      நீக்கு
  28. திரு எட்வினை பற்றியும் அவரது நூலினை வாசித்து பகிர்ந்தமையும் சிற்ப்பு! அவரது வலைதள இணைப்பு வழங்கியமைக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்! வாழ்க அவரது சமூக பணி! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  29. இவருக்கு எப்பொழுதும் மனிதம் என்றே பெயர்
    திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் திரு இரா எட்வின் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு.
    20.3.13 அன்று மதுரையில் கூழாங்கற்கள் இலக்கியச்சந்திப்பில் இரா எட்வின் அவர்கள் வருவதாக இருந்ததால் அவரைப் பார்க்க, அவரது பேச்சு கேட்க சென்றோம். அவருடன் பதிவின் மூலம், தொலைபேசி மூலம் கடந்த 3 வருடங்களுக்கு மேல் தொடர்பு இருக்கிறது. சந்தித்தோம். அற்புதமான, மனித நேயம் மிக்க மனிதர், நண்பர், தோழர். அவரது "இவனுக்கு அப்போது மனு என்று பேர்" என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டேன். அவரது பதிவுகள் அடங்கிய புத்த்தகம். எல்லோரும் படிக்க வேண்டிய, அருமையான புத்தகம்.
    இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  30. மிக மிக அருமையாக
    அருமையானவரை
    அவசியம் பதிவுலகில் அனைவரும்
    அறிந்திருக்கவேண்டியவரை
    அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  31. அய்யா அருமை... ரொம்ப விரிவான அறிமுகம் ...

    முடிக்கும் இடத்தில ஒரு பன்ச்

    உண்மை தான் தோழர் எட்வின் மனிதம் தான்..
    நன்றி

    பதிலளிநீக்கு
  32. நண்பர் எட்வின் அவர்களை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்திவிட்டது இந்தக்கட்டுரை. (2) பத்தாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு வேண்டாம், பின்னர் அடுத்த இரு ஆண்டுகள் செமிஸ்டர் முறையில் வைக்கலாம் என்ற யோசனை, மாணவர்களுக்குப் பயனாகுமோ என்னவோ, ஆசிரியர்களுக்குப் பாதகமாகும் என்பது என் கருத்து. ஏனெனில் ஆசிரியர்களின் தகுதியும் திறமையும் அவர்கீழ்ப் படிக்கும் மாணவன் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே பெற்றோர்களால் கணிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் தொடர்ந்து தேர்வு நடத்தப்படாவிட்டால் மதிப்பெண் குறித்த சரியான விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படாமல் போகலாம். அதன்றியும், மனப்பாடம் செய்து வெற்றி பெற முடிகிற நமது தேர்வு முறைக்கு, அடிக்கடி தேர்வு நடத்தப்படுவது தான், ஏற்கெனவே மனப்பாடம் செய்த பகுதி மறந்துவிடாமல் இருக்கு உதவும் என்பது கண்கூடு. (3) எனினும் இத்தகைய சோதனை முயற்சிகள் செய்யப்பட்டு தான் உண்மை அறியப்பட முடியும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் படுகிறது ஐயா.
      மேனிலையில் செமஸ்டர் தேர்வு என்பது மாணவர்களின் சுமையினை குறைக்க உதவும்,
      நன்றி ஐயா

      நீக்கு
  33. அவர் பணி மேலும் சிறக்கட்டும் ஐயா!

    பதிலளிநீக்கு
  34. THIS WEEK VERY NICE.YESTERDAY I WROTE THE TAMIL NOT UPDATE. SORRY FOR LATE COMMENTS. THANKS.

    பதிலளிநீக்கு
  35. உங்கள்வரிகள் நூலின் ஆழத்தைக் காட்டுகிறது. எட்வின் அவர்களில் மதிப்பைக் கூட்டுகின்றது. அவர் நூலைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. இது உங்களுக்கே உரிய தனிப் பண்பு.

    பதிலளிநீக்கு
  36. எட்வின் ஐயாவை பற்றிய அறிமுகமும் ,புத்தகம் குறித்த விளக்கமும் மிகவும் அருமை .ஆசிரியர்களுக்கு ஒரே சிறந்த வழிகாட்டியாக அந்த புத்தகம்,முன்னுதாரனமாக எட்வின் அய்யா.அருமையான பதிவு சகோதரரே !

    பதிலளிநீக்கு
  37. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு,
    திரு.எட்வின் அய்யா அவர்கள் பற்றிய தங்களின் அறிமுகப் பதிவு அவர் மீது அவருடைய நண்பர்களும் உறவினர்களும் வைத்திருக்கும் மதிப்பினை நிச்சயம் பல படிகள் உயர்த்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.உண்மையில் தங்களின் பதிவு அந்த அளவிற்கு மிக அற்புதமாக உள்ளது. வளர்க தங்களின் தன்னிகரில்லா தொண்டு.

    பதிலளிநீக்கு

  38. வணக்கம்!

    அமிழ்தமென ஆக்கத்தை அள்ளிக் குடித்தேன்
    தமிழ்மண வாக்கினைத் தந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு