14 ஏப்ரல் 2016

வள்ளல்

   
 ஆண்டு 1901.

     நகர் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது.

     ஊரெங்கும் ஒரே பேச்சு,

     மன்னர் வந்திருக்கிறார்.

     மக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களிடம் இதே செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

     மன்னர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்.

    தொலைவில் நின்றாவது மன்ன திருமுகத்தைப் பார்த்தாக வேண்டும். அவர்தம் காந்தக் குரலினைக் கேட்டாக வேண்டும். மக்கள் ஆசைப் படுகின்றனர்.

      மன்னர்

      சிறந்த கல்விமான்.

      தமிழாய்ந்த பெருமகன்.

      சொற்பொழிவாற்றுவதில் வித்தகர்

     ஊர் பெரியவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சென்று, மன்னரைப் பார்க்கிறார்கள். ஒரு வேண்டுகோளினையும் முன் வைக்கிறார்கள்.


     தங்களைக் கண்ணாரக் காண வேண்டும், தங்களின் சொற்பொழிவினைக் காதாரக் கேட்க வேண்டும், வாழும் காலம் வரை இதை மனம் குளிர எண்ணி எண்ணி மகிழ வேண்டும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

      மன்னரும் தன் இசைவினைத் தெரிவித்தார்.

      செய்தி நகர் முழுவதும் சூறாவளியாய் இறக்கைக் கட்டிப் பரவுகிறது.

      இன்னும் இரண்டு நாளில், மன்னர் சொற்பொழிவாற்ற இருக்கிறார். நகரே ஒன்று திரண்டாக வேண்டும்.
---

      மாளிகையில், தன் அறையில், மன்னர் உலாவிக் கொண்டிருக்கிறார். மனதிற்குள்ளாகவே சொற்பொழிவிற்கானச் செய்திகளை, ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே இருக்கிறார்.

      சில நிமிடங்கள் கடந்த நிலையில், மன்னரின் முகத்தில் ஓர் சிந்தனை, வந்து அமர்ந்ததை முகம் தெளிவாய் காட்டுகிறது.

      யாரங்கே

      பணியாளரை அழைக்கிறார்.

      அடுத்த நொடி பணியாளர், பணிவுடன் வந்து நிற்கிறார்.

      மேசையில் இருந்து ஒரு துண்டுத் தாளினை எடுத்து, இரு வரிகளை எழுதுகிறார்.

      இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு இப்பொழுதே வேண்டும். இவ்வூர் பெருமக்கள் யாரிடமிருந்தாவது, உடனே வாங்கி வாருங்கள்.

      மாளிகையில் இருந்து பணியாளர்கள் பலர், நகரின் நாலா திசைகளிலும் பிரிந்து சென்றனர்.

      அன்று மாலையே பணியாளரை அழைத்தார் மன்னர்.

மன்னிக்க வேண்டும் மன்னா, தாங்கள் வேண்டிய இரு புத்தகங்களும், இதுவரை கிடைக்கவில்லை. இன்னும் சிலரைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படியும் நாளை கிடைத்து விடும்.

    மன்னரின் விழிகள் வியப்பால் விரிகின்றன.

    சரி, நாளை எப்படியும் வாங்கி வாருங்கள்.

    மறுநாள் மாலை, பணியாளர், மன்னர் முன் தலை குனிந்து நிற்கிறார்.

    மன்னிக்க வேண்டும் மன்னா, இவ்வூரில் உள்ள படித்தவர்கள் அனைவரிடமும் விசாரித்து விட்டோம். யாரிடமும் தாங்கள் கேட்ட புத்தகம் இல்லை.

என்ன, என்ன யாரிடமும் இல்லையா?

    நேற்று வியப்பை வெளிப்படுத்திய விழிகள் ,இன்று வேதனைச் சிந்துகின்றன.

   


நாளை, நான் நிகழ்த்த இருக்கினற சொற்பொழிவின்போது, மேற்கோள்களைக் காட்டிப் பேச, புத்தகங்களைக் கேட்டால், படித்தவர்கள் அனைவரும் இல்லை என்கிறார்களே,

    தமிழின் நிலை இப்படியா தாழ்ந்து போக வேண்டும்

    தமிழன் பிற மொழி மோகத்தில், இப்படியா வீழ்ந்து போக வேண்டும்

    வேதனை, வேதனை

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, இந் நகரில் வள்ளுவரையும், கம்பரையும் படிப்பார் யாருமில்லையா? வெட்கம், வெட்கம்

    மன்னரின் உள்ளம் வேதனையில் குமுறுகிறது.

     தாயே, அன்னைத் தமிழே, உலகின் முதல் மொழியே, உனக்கா இந்நிலை.

     ஐயகோ, என் செய்வேன்.

    மன்னருக்கு வேதனையில் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. மெதுவாய் இருக்கையில் அமர்கிறார்.

     முகத்தில் சிந்தனை ரேகைகள் வெகுவேகமாய் பரவுகின்றன.

     ஏதாவது செய்தாக வேண்டும்

     இந்த இழிநிலையைப் போக்கியாக வேண்டும்.

     மின்னலாய் வெட்டுகிறது ஓர் எண்ணம்.

    அடுத்த நொடி, மன்னரின் முகம் மெதுவாய் மலர்கிறது.

    இருக்கையை விட்டு வேகமாய் எழுகிறார்.

    யாரங்கே

---

     நண்பர்களே, ஒரு நகர் முழுவதும் சல்லடை போட்டுச் சலித்தும், திருக்குறளும், கம்பராமாயணமும், ஒரு பிரதி கூடக் கிடைக்கவில்லை, கிடைக்கவே இல்லை என்பது வியப்பைத் தருகிறது அல்லவா.

    ஆயினும் உண்மை.

    நூறாண்டுகளுக்கு முன் நம் நாட்டின் உண்மை நிலை இதுதான்.

    மன்னர் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் வலை வீசித் தேடிய நகரம் எது தெரியுமா?

   சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

   சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகரம்.


ம து ரை.

   என்ன? ,எனன? மதுரையிலா திருக்குறளும், கம்பராமாயணமும் கிடைக்கவில்லை.

     ஆம், மதுரையில்தான் கிடைக்கவில்லை.

     உண்மை.

     வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப் பெற்ற உண்மை.

     மன்னர் மட்டும் மதுரைக்கு வராமல் இருந்திருப்பாரேயானால்?

     வள்ளுவரையும் ,கம்பரையும் தேடாமல் இருந்திருப்பாரேயானால்?

     நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

     நம்மைப் போலவே நெஞ்சம் நடுங்கிய மன்னர், அன்று என்ன செய்தார் தெரியுமா?

     சங்கம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

     தமிழ்ச் சங்கம் ஒன்றினைத் தோற்றுவித்தார்.

    முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின், அடுத்த நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14.

மதுரைத் தமிழ்ச் சங்கம்
தோற்றம் பெற்றது.

தமிழ் எழுச்சி பெற்றது.

தமிழ் முழக்கம் வளர்ச்சி பெற்றது

தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம்
தமிழ் உணர்வு கிளர்ச்சி பெற்று எழுந்தது.

இம்மன்னர் யார் தெரியுமா?

தாம்வேறு, தமிழ்வேறு என்று எண்ணாது தமிழின்றி
தான் இல்லை என நினைந்து தமிழ்த்
தொண்டாற்றுவதே தனது வாழ்நாட் கடமை
என்றுஎண்ணி செயல்பட்ட
இம்மன்னர் யார் தெரியுமா?
இவர்தான்


தமிழை, தமிழ் உணர்வை மீட்டெடுத்த
இம் மன்னர்
இராமநாதபுர அரசர்

வள்ளல் பாண்டித்துரை தேவர்
வள்ளல் பாண்டித்துரை தேவர்
பிறந்த
150 வது ஆண்டு இவ்வாண்டு.

வள்ளலின் நினைவினைப் போற்றுவோம்
வள்ளல் காட்டிய வழி நடப்போம்.

50 கருத்துகள்:

  1. அருமை அருமை . பாடப் புத்தகத்தில் படித்திருந்தாலும் உங்கள் உணர்வு பூர்வமான வரிகளால் வள்ளல் பாண்டித் துரைத் தேவரின் பெருமை சிறக்கிறது

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு நண்பரே
    படிக்கையில் தேகம் சிலிர்க்குது....
    அருமை நண்பரே ....
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி. நான்காவது தமிழ் சங்கம் ஆரம்பித்ததின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல தகவல்.

    பதிலளிநீக்கு
  4. புதிய செய்தி அண்ணா....நல்லவேளை அவரால் தமிழ் உலகிற்கு ஒளியானது...

    பதிலளிநீக்கு
  5. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    கம்பனும் திருவள்ளுவனும் தான் தமிழுக்கு
    கதி என்று எனது தமிழாசிரியர் குலசேகரன் அவர்கள்
    சொல்லி இருந்தது என் நினைவுக்கு வருகிறது. பள்ளி: இ. ரெ .உயர்நிலைப்பள்ளி. திருச்சி. அவரிடம் நான் படித்த காலம்.: 1953 -1955

    தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று,
    தமிழர் பெருமை கொள்ளும் இரு பெரும் இலக்கியப் படைப்புகளையும்
    நினைவூட்டியது சாலச் சிறந்தது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தங்கள் விரிந்த நண்பர் உலகத்திற்கும்
    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. மதுரை பெருமை கொள்ளும்
    விஷயத்தில் தலையாயது
    வள்ளல் அவர்கள் துவக்கிய
    நான்காம் தமிழ்ச் சங்கமே என்றால்
    அது மிகையில்லை

    மனதில் பதியும் வண்ணம்
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அன்னைத் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் இனிய பதிவு..

    அனைவருக்கும் அன்பின் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  8. வள்ளலைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் தங்கள் எழுத்தின் மூலம் ரசனையாக மீண்டும் ஒருமுறை அறிய முடிந்தது.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    த ம 4

    பதிலளிநீக்கு
  9. மறக்க இயலாத மாமனிதர் பற்றிய தங்கள் பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  10. மன்னர்கள் இப்படியும் இருந்துள்ளார்கள்
    என்பது குறித்து ஆச்சரியப்படாமல்
    இருந்து விட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு.மன்னரைப்பற்றி அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி.தமிழ் கற்றார் தலைநிமிர்வார்.வாழ்க தமிழ்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மெய்சிலிர்க்கவைக்கும் விவரிப்புகள்.அருமையான விள்க்கம் ஜெயகுமார்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
    தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழ்த்தாய்க்கான வணக்கங்களாகவும் வாழ்த்துக்களாகவும் இந்தப்பதிவு அமைந்தது மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  14. நான்காவது தமிழ் சங்கம் ஆரம்பித்ததின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல தகவல். தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. நான்காவது தமிழ் சங்கம் ஆரம்பித்ததின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல தகவல். தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. ஓ! இதுதானா நான்காவது தமிழ் சங்கம் ஆரம்பித்ததின் பின்னணி . தெரியாத தகவல். நன்றி

    பதிலளிநீக்கு
  17. அருமையான தகவல். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாகிய கரந்தைத் தமிழ்ச் சங்கதமிழ்ப்பற்றாளரிடமிருந்து நான்காம் தமிழ்ச்சங்கம் எடுப்பித்த வளளல் பாண்டித்துரை தேவர் பற்றி அருமையான கட்டுரை. 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நூல்கள் இருந்த நிலையை தெளிவாகக் காட்டியுள்ளீ்ர்கள். இந்த சான்றோர்களை நினைவு கூறாமல் இருந்தால் நாம் தமிழர்கள் என்று சொல்லி்க்கொள்வதில் அர்த்தம் இல்லை. ஓங்குக வள்ளல் பெருமான் புகழ்!
    -மும்பை இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  19. Sorry there is some problem in my key board it sometimes does not copy , since it has not copied if we press it once more ,it appears twice

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. வள்ளல் பாண்டித்துரை வளர்த்த தமிழ் பற்றிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அறியாத தகவல் பகிர்ந்தவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  23. தமிழ் புத்தாண்டில் தமிழ்வளர்த்த பெருமான் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். பள்ளி பாடத்தில் இவரை பற்றி படித்து இருக்கிறேன். இவ்வளவு விளக்கம் இல்லை.
    நன்றி.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. வள்ளலின் நினைவினைப் போற்றுவோம் .

    பதிலளிநீக்கு
  25. தெரிந்த செய்தி. அருமையாகக் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. பெருமைக்குறிய விடயம் தமிழன் என்றும் மறக்ககூடாத விடயமும் கூட தங்களின் விவரிப்பில் வார்த்தைகள் அழகு வாழ்த்துகள் நண்பரே இந்நாளை போற்றுவோம்.
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
  27. இன்றைய தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிவா இது ?படித்து ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  28. பள்ளியில் படித்தது. இப்போது உங்கள் பதிவு மூலம் நிறைய செய்திகளுடன். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. தமிழ் வளர்த்த ஒரு மிகச்சிறந்த மன்னரைப் பற்றிய பதிவுடன் தமிழ் புத்தாண்டை நீங்கள் வரவேற்றிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  30. அய்யா...

    நான் அறியாத ஒரு பெருமகனாரை பற்றிய அருமையான பதிவு.

    கால இயந்திரத்தில் பயணித்த உணர்வை தரும் எழுத்து நடை !

    தங்களின் வலைதளம் நாங்கள் அறியாத வரலாற்று பக்கங்களின் கருவூலம்.

    நன்றி
    சாமானியன்
    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  31. அட்டகாசமான சேதி. அருமையான பதிவு. உங்களுக்கு ஒரு கூடை பாராட்டுக்கள் சார்.

    பதிலளிநீக்கு

  32. இவ்வாறான வரலாற்று உண்மைகள்
    எவ்வாறாயினும் நூலுருப்பெற வேண்டும்
    நாளைய தலைமுறை தவறாது
    நாளும் கற்றுத் தமிழ் பேணவே!

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கரந்தை மைந்தா !


    அதரமே தமிழைப் பேச
    அகத்துளே ஆங்கி லத்தை
    இதமுறப் படிக்கும் மக்கள்
    இருந்ததை சொல்லும் போதில்
    மதுரையில் தமிழைத் தேடி
    மயங்கிய வள்ளல் போலே
    சதுரமே ஆடக் கண்டேன்
    சரித்திரக் கதைகள் கேட்டு !

    தேடற்கரிய பதிவுகள் திறம்படத் தொகுக்கும் உங்கள் பணி இன்னோர் வள்ளலாய் ஆக்கும் வாழ்த்துகள் நண்பரே வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு
  34. புதிய தகவல் அழகாய் தொகுத்தவிதம் ரசித்தேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  35. நற்பதிவு. மன்னரின் தமிழ்ப்பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
  36. நற்பதிவு. மன்னரின் தமிழ்ப்பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
  37. நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த வள்ளல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி! என்னைக் கவர்ந்த பதிவுகள் - 3 நேரமிருக்கும் போது பார்க்க அழைக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  38. நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.. தமிழ் வளர்த்த மதுரையிலா இப்படியொரு அவலம்.. நல்லவேளையாக மன்னருக்கு நல்லதொரு யோசனை உருவானதும் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் பாராட்டுக்குரியது. அந்நிகழ்வை அப்படியே மனக்கண் முன் கொணரும் தங்கள் எழுத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  39. அறிந்த செய்திதான் என்றாலும் உங்கள் தமிழ் அழகு நடையில் வீறு நடை போடுகிறார் மன்னர்!!

    இன்று நாம் தமிழ் அழியும் நிலையில் உள்ளது என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில். அன்றும் இதே நிலை தோன்றியிருக்கிறது. ஆனால் பாருங்கள் மன்னர் உடனே அதற்காகச் சங்கம் அமைத்து வளர்த்தது எத்தனை போற்றுதற்குரியது!! அருமை அருமை! போற்றுவோம் தமிழையும், மன்னரையும்!! அருமையான பதிவை மன்னருக்குச் சம்ர்ப்பிக்கும் விதத்தில் அவருக்கு மனதிற்குகந்த அழகிய தமிழில் கொடுத்தமைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் நண்பரே!/ சகோதரரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே எண்ணம்தான் தோன்றியது என் மனதிலும்...தமிழ் அழியாது என்ற நம்பிக்கையும் ஓங்குக.
      பகிர்விற்கு நன்றி அண்ணா.

      நீக்கு
    2. இதே எண்ணம்தான் தோன்றியது என் மனதிலும்...தமிழ் அழியாது என்ற நம்பிக்கையும் ஓங்குக.
      பகிர்விற்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  40. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்த மன்னர் வள்ளல் பாண்டித்துரை அவர்களின் மொழிப்பற்றினை போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  41. அருமை. இப்படி யாரோ எங்கோ தமிழை நினைப்பதால் தமிழ் இன்றும் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
  42. நன்றி. நான்காவது தமிழ் சங்கம்
    நல்ல தகவல்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  43. உங்கள் பக்கம் வந்தால் வெறும் கையுடன் ஒருநாளும் போவதில்லை. 4 ஆவது தமிழ்ச்சங்கம் உருவானதும் உருவாக்கியவரையும் அறிந்தேன். பின் எங்கிருந்து இந்நூல்களைப் பெற்றார்கள்.

    பதிலளிநீக்கு
  44. நல்ல தகவல்,மறக்க இயலாத மாமனிதர் பற்றிய தங்கள் பதிவு அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு