15 பிப்ரவரி 2017

ஹரணி


தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி –மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

என்னும் பாரதியின் பாடல் வரிகளையே, தனது வாழ்வியல் மந்திரமாகக் கொண்டு, வாழ்ந்து, எதிர் வந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, வாழ்வில் உயர்ந்து வருபவர் இவர்.

     இவர் இல்லத்திற்கும், இவர் பணியாற்றும் இடத்திற்குமான தொலைவு மிகவும் குறைவுதான்.

     வெறும் 120 கிலோ மீட்டர்கள்தான்.


     தினமும் அதிகாலையில், கோழி கூவும் முன்னே புறப்பட்டு, தொடர் வண்டியில் 120 கி.மீ பயணம், மீண்டும் மாலையில் 120 கி.மீ பயணம்.

     மனிதர் அசராமல் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

    பயணத்தின் போது இவரது உற்ற நண்பராய், உடன் பிறவாச் சகோதரராய், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதுப் புதுப் புத்தகம். இவரரோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது.

     நாள் ஒன்றுக்கு 300 பக்கங்களுக்கும் குறையாமல் இவர் வாசித்துக் கொண்டே இருக்கிறார்.

      இவர் வீட்டி மாடியில், அமைந்திருக்கும் நூலகத்தில், நூல்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே இருக்கிறது.

      சற்றேறக்குறைய இருபதாயிரம் நூல்கள், இவர் வீட்டி அலமாரியில், இடமின்றி, முண்டியடித்துக் கொண்டு, ஒன்றோடு ஒன்று நெருக்கியபடி, விழி பிதுங்கி நிற்கின்றன.

     பயணத்தின் போது வாசிப்பு, வீட்டிற்கு வந்தவுடன் எழுத்து, இதுவே இவரது வாழ்வாய், தினசரி நிகழ்வாய் மாறித்தான் போய்விட்டது.

     400 க்கும் மேற்பட்டச் சிறுகதைகள், 10 ற்கும் மேற்பட்ட குறு நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 நாடகங்கள், மொழி பெயர்ப்புச் சிறுகதைகள், ஆங்கிலக் கவிதைகள் என இவரது எழுதுகோல், அட்சயப் பாத்திரம் போல் படைத்துக் கொண்டே இருக்கிறது.

     குடும்பமும், மானுடமுமே இவர்தம் எழுத்தில், இரத்தமும் சதையுமாய் பின்னிப் பிணைந்து தவழ்ந்தோடுகிறது.

புரண்டு படுக்கும் வாழ்க்கை
என்னும் இவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பு போதும்,
நம்மை முழுவதுமாய் புரட்டிப் போட.

     மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என அனைத்திலும் இவரது எழுத்துக்கள் பாடங்களாய் பயிற்றுவிக்கப் படுகின்றன.

     தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும், இவரது எழுத்துக்களை ஆய்ந்து, ஆய்ந்து, இவர்தம் எழுத்திலேயே தோய்ந்து, தோய்ந்து, எம்.ஃ.பில்., பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர்கள் ஏராளம், ஏராளம்.

     வாழ்வென்பதே வாசிப்பதற்கும், இதயத்து எண்ணங்களை எழுத்தாய் ஏட்டில் இறக்கி வைப்பதற்கும்தான், என்னும் உன்னத, உயரிய குறிக்கோளுடம் வாழ்ந்து வரும் இவர் அமைதியின் மறு உரு.

     அன்பு தவழும் முகம். நேசத்தைப் பொழியும் கண்கள், உதடுகளில் நிரந்தரமாய் ஒரு மெல்லிய புன்னகை. சிந்தாமல் சிதறாமல் இளந் தென்றலாய் வெளிவரும் வார்த்தைகள்.

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      என் வலையுலக குருநாதர்.

      ஐந்தாண்டுகளுக்கு முன்னர், வலைப் பூவினைத் தொடங்கியச் சில மாதங்களிலேயே, கைவசம் இருந்த சரக்கெல்லாம் தீர்ந்துபோன நிலையில், எதை எழுதுவது, எப்படித் தொடர்வது, எனப் புரியாமல், தெரியாமல் தத்தளித்தபோது,
பார்த்ததை எல்லாம் எழுதுங்கள்
படித்ததை எல்லாம் எழுதுங்கள்
கேட்டதை எல்லாம் எழுதுங்கள்
பாசமிகு நண்பர்களை எழுதுங்கள்
நேசமிகு உறவுகளை எழுதுங்கள்
வாழ்வில் அனுபவங்களை எழுதுங்கள்
என எனக்கு ஞானமூட்டிய போதிமரம் இவர்.


கவிஞர் ஹரணி
எனத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும்,
முனைவர் க.அன்பழகன்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர்.

இத்தகு ஆற்றலாளர்
எழுத்தாளர்
கவிஞர்
மனித நேயர்
கரந்தை மண்ணின் மைந்தர்
ஒரு விருது பெற்றிருக்கிறார்.


குறள் நெறிச் செல்வர்
என்னும் சீர்மிகு விருது பெற்றிருக்கிறார்.

உலகத் திருக்குறள் பேரவையின்
சார்பில்,
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின்
திருக்கரங்களால்
விருது பெற்றிருக்கிறார்.

குறள் நெறிச் செல்வர் ஹரணி அவர்களை
வாழ்த்த வேண்டியது, நமது கடமையல்லவா,
போற்ற வேண்டியது நமது பொறுப்பல்லவா.

வாழ்த்துவோம்,      போற்றுவோம்.


30 கருத்துகள்:

  1. கவிஞர் ஹரணி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி.. ஹரிணி அவர்களின் பணி சிறக்க அன்பின் நல் வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  3. தமிழ் ஆன்றோர்களால் ‘குறள் நெறிச் செல்வர்’ என்ற விருதினை பெற்ற முனைவர் க.அன்பழகன் (ஹரணி) அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள். தகவலை ஆவணப்படுத்திய தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. குறள் நெறிச் செல்வருக்கு வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  5. பேராசிரியர் ஹரணி என்ற அன்பழகன் அவர்களுக்கு,
    வாழ்த்துகள்.
    அண்ணாமலை பல்கலைக்கழகம் பற்றி பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறதே.
    தாங்கள் நலம்தானே?

    பதிலளிநீக்கு
  6. எழுத்தாளர் ஹரணி உயிர்சார் எழுத்தாளர். அவருடைய எழுத்து மனித நேயத்தைத் தூக்கிப்பிடிக்கக் கூடியது.அவருக்கான விருது கொண்டாடத் தகுந்தது.

    பதிலளிநீக்கு
  7. எழுத்தாளர் ஹரணி உயிர்சார் எழுத்தாளர். அவருடைய எழுத்து மனித நேயத்தைத் தூக்கிப்பிடிக்கக் கூடியது.அவருக்கான விருது கொண்டாடத் தகுந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரா உங்கள் எழுத்தே மரியாதைக்குரியது
      நீங்கள் ஹரிணி அவர்கள் குறித்து சொல்வது கூடுதல் மரியாதையைத் தருகிறது

      நீக்கு
  8. இத்தனை புகழும் பெற்ற ஒருவர் என் சிறுகதைத் தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கினார் என்பதை நினைத்தே மகிழ்கிறேன் மேலும் அவரை அவர் வீட்டில் உங்கள் துணையோடு சந்தித்ததும் நினைவிலாடுகிறது கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு, வாழ்த்துகள் ஹரணி ஐயா. ஆவணப்படுத்திய உங்களுக்கும் என் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  9. ஹரணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  10. கவிஞர் ஹரணி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  11. குறள் நெறிச் செல்வர் மரியாதைக்குரிய ஹரணி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். வயதில் இளையவர் என்றாலும் பண்பில் மூத்தவர். நெகிழ்ந்துபோகிறேன் தங்களின் அன்பு வரிகளில். விருது வழங்கப்பட்டு தவத்திரு பொன்னம்பல அடிகளார் திருக்கரங்களால் பெற்றபேறு என் வாழ்வின் மறக்கவியலா வரம்பெற்ற தருணமது. விருது வாங்கியவுடன் அது நம்மை ஆளுமைப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துவதோடு மேலும் நம்மை இயக்கவேண்டிய இலக்கை உறுதிப்படுத்துகிறது. தொடர்ந்து இதனைத் தக்கவைக்கவேண்டும என்று அறிவுறுத்துகிறது. அதற்காக இன்னும் வேகப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

    திருமிகு ஜிஎம்பி ஐயா அவர்களின் பதிவுகளைப் படிக்கிறபோது ஒருவித பொறாமை எழும். எத்தனை விஷயங்களை நினைவிலிருந்து மாலை கோத்ததுபோல எழுதுகிறார். எத்தனை அனுபவச் சாரங்கள் அவை. அவரின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. உங்களின் வலைப்பக்கத்தில் என்னைக் கௌரவப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துரைத்த அத்தனை உள்ளங்களுக்கும் பணிவும் மகிழ்வும் கலந்த நன்றிகள்.
    உங்களிடத்தில் அந்த ஆற்றல் இருந்தது. அதை சுட்டிக் காட்டினேன் அவ்வளவுதான். குருநாதர் நிலைக்குஇன்னும் உயரவேண்டும். உங்களின் அன்பிற்குப் பணிகிறேன் ஜெயக்குமார்.

    நன்றிகள் பல. அன்பின் உள்ளங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும்.

    பதிலளிநீக்கு
  13. குறள் நெறிச் செல்வர் ஹரணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. திரு ஹரணி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. ஹரிணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் அதை பகிர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுகளும் ஹரணியின் பதிவுகளை படித்து இருக்கிறேன் கருத்துக்களும் சொல்லி இருக்கிறேன் என நினைவு . இப்போதும் அவர் எழுதுகிறாரா?

    பதிலளிநீக்கு
  16. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கரந்தை மண் அது கந்தக மண் என்று கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் மெய்சிலிர்த்து கவிதையாக்கப்பட்ட இந்தக் கரந்தை மண்ணில் பிறந்து எழுத்துலகில் சாதனை செய்து வருகின்ற நம் அன்பு சகோதரர் குறள் நெறிச் செல்வர் விருது பெற்ற முனைவர் ஹரணி அய்யா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 20 வருடங்களுக்கு முன்பு ஹரணி அய்யாவின் சகோதரியின் மகன் நமது மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பொழுது வேதியியல் பாடம் போதித்து வந்த எனக்கு அய்யாவின் கவிதை புத்தகத்தினை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட எனக்கு அய்யாவுடன் இத்தனை வருடங்கள் தொடர்புடன் இருப்போம் எனவும் அவருடைய மகன் செல்வன் குகன் அவர்களுக்கும் வேதியியல் பாடம் போதிப்பேன் எனவும் அந்த நேரத்தில் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நல்லோர் நட்பு நீண்ட நாள் தொடரும்,நம் வளர்ச்சிக்கு உதவும் என்ற அனுபவத்தினை நான் அடைந்த நல்லவர்களின் பட்டியலில் அய்யாவும் உள்ளார் என்பதை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அன்பால் உயர்ந்தவர், பண்பால் உயர்ந்தவர், தமிழுக்குத் தொண்டு செய்வதில் உயர்ந்தவர், எமது நண்பர், பேராசிரியர் ஹரணி அவர்கள். மென்மேலும் விருதுகளும் பரிசுகளும் அவரை அலங்கரிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  18. தங்களின் குருநாதரை தெரியப்படுத்தியமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்......

    பதிலளிநீக்கு
  19. தங்களின் குருநாதரை தெரியப்படுத்தியமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்......

    பதிலளிநீக்கு
  20. கவிஞர் ஹரணி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துகள். ஹரணி அவர்களை அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துகள். ஹரணி அவர்களை அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. திரு ஹரணி அவர்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  24. ஆசானை வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  25. குறள் நெறிச் செல்வர் ஹரணி அவர்களுக்கும்
    தங்களிற்கும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு