நினைத்துவிட்டால்
நெஞ்செழுந்தே அடித்துக் கொள்ளும்
நீள்துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும்
நனைந்துவிடும்
இருகண்கள் துயரம் மொய்த்து
நட்புத்திரு வேங்கடத்தால் வேகும் நெஞ்சு
பேராசிரியர் முனைவர் பொன்னியின்
செல்வன்
ஐயாற்றுத்
தமிழிசைக்கும்
அரும்பாடு பட்டீர்
பொய்யாக
வாழுகின்ற
பூரியார்க்குள் ளேயும்
மெய்யாக
வாழ்ந்திட்டீர்
இன்றில்லை என்றாலும்
ஐயமின்றி
அவனியிலே
நிலைக்கும்நின் பேரே
கவிமாமணி
மெய்யடியான்
கற்பூரம்
தொட்டகரம்
கனவிலும் மணப்பதென
நற்பண்பின்
நல்லுறவே
காலமெல்லாம் மணப்பாய் நீ
தெற்கில்
குமரிமகள்
செம்மொழிபோல் எம்மனத்தில்
நிற்கும்
வேங்கடமே
நினையும் மறப்போமோ
கவிஞர் ப.திருநாவுக்கரசு
படிப்பில்
நுட்பமும் எழுத்தில் செப்பமும்
கற்றலில்
ஆர்வமும் கற்பித்தலில் உயர்வும்
காலம்
பாராது பேதம் பாராது
பிள்ளை
போல மாணவர் தம்மைப்
பேணி
நின்றவர், ஆசிரியர் எனும்
பெருமை
காத்தவர், பெரும்பணி என்றாலும்
பேர்
பெற்றவர், அண்ணன் உறவெனக்கு
அப்பா
போலஎன் மனங்கவர்ந்த தன்மையர்
திருவேங்கடத்துப்
பெருமை போல மண்ணில்
சிறந்து
நின்றவர் காலமும் காலனும்
கவர்ந்து
போனாலும் மனத்துள் என்றும்
மதிக்க
வாழ்பவர் வணங்கி நிற்பேன்
வாழ்நாள்
முழுக்க மனதில் விளக்கேற்றி
வாழ்க திருவேங்கடம் அண்ணா
பேராசிரியர்
முனைவர் க.அன்பழகன் (ஹரணி)
அன்பு
நண்பரா மறைந்தார், இல்லை
அவருக்கு மரணமில்லை
அழிவில்லை,
முடிவுமில்லை
அவர் வளர்த்த தமிழிசைக்கும்
அவர்தம்
புகழுக்கும் அழிவுமுண்டோ?
அரங்க.புருடோத்தமன்
தங்களின் பேரிழப்பை, மீட்க இயலாத
பெரு நட்பை, எழுத்தாக்கி ஏட்டில் இறக்கி வைத்து, கடந்தகால நினைவலைகளில் மூழ்கி, மூச்சுத்
திணறியக் கவிஞர்கள் பலர்.
கட்டுரைகள் வரைந்து, தங்களின் உள்ளக் கிடக்கையினைக்
கொட்டித் தீர்த்தவர்கள் பலர்.
எழுதாமல், உள்ளத்திலேயே உணர்வுகளுக்கு அணை கட்டி,
வார்த்தைகளால் வழியவிட்டு பெருமூச்சு விட்டவர்கள் பலர்.
கவிதைகளாலும். பொழிவுகளாலும் அரங்கேறியது
நல்லாசிரியர் சி.திருவேங்கடம் அவர்களின்
முதலாமாண்டு
நினைவு நாள்.
என் சித்தப்பா.
சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று,
இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய, என் அன்புச் சித்தப்பா, சுடுந் தணலில் கலந்து, காற்றில்
கரைந்து, ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
இந்த நல்லவரை நினைக்க,
நினைத்து, நினைத்து நினைவலைகளில் மிதக்க, ஒரு
நிகழ்வு.
நண்பர்களும், உறவினங்களும் ஒருங்கே கூடினர்
என் சித்தப்பா, பிறந்து, தவழ்ந்து., வாழ்வில்
உயர்ந்த திருவையாற்றில் விழா.
பாபு திருமண மண்டபத்தில் விழா
திருவுருவப் படத்திறப்பு
நினைவு மலர் வெளியீடு
செந்தமிழ்ப் பெருங்கடல்
முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்
சித்தப்பாவின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து,
சித்தப்பா
தன் வாழ்வின் கடைசி நாள், கடைசி மணித்துளி வரை
நிர்வாக அலுவலராக
என் சித்தப்பா பணியாற்றிய
ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியின்
அறங்காவலர்
திருமிகு எஸ்.கலியமூர்த்தி அவர்கள்
நூலின் முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.
திரு சி.கிருட்டிணமூர்த்தி
புள்ளியியல் துறையில், மண்டலத் துணை இயக்குநராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.
தம்பிக்கு அண்ணன் தலைமையில் விழா
தவத்திரு திருவடிக்குடிள் அடிகளார் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
திரு இரா.சுந்தர வதனம் அவர்கள்
முன்னிலை வகித்தார்.
திருமிகு துரை.சந்திரசேகரன் அவர்கள்,
இவ்விழாவின் நினைவாக,
சாதனையாளர்கள் ஆறுபேருக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இளங்கோ கம்பன் கழகச் செயலாளர்,
திரு இராம.செல்வராசு அவர்கள்
வரவேற்றார்.
இளங்கோ கம்பன் இலக்கியக் கழக நிறுவனர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
சித்தப்பாவின் நண்பர்கள், ஒவ்வொருவராய்
மேடையேறி, கடந்த கால நினைவலைகளை எடுத்துக்கூறி, அரங்கினையே நெகிழ வைத்தனர்.
வாழ்ந்தால்,
சித்தப்பா போல் வாழ வேண்டும்,
சித்தப்பா
போல்,
நண்பர்களை
நேசிக்க வேண்டும், உறவுகளைப் போற்ற வேண்டும்
என்னும்
அற்புதப் பாடத்தினை என்னுள் விதைத்திருக்கிறது இவ்விழா.
சித்தப்பா
நல்லாசிரியர்
சி.திருவேங்கடனார்
என்றென்றும்
தங்களின் நினைவலைகள்
எங்கள்
உள்ளத்தில் நிலைத்திருக்கும்.
நண்பர் திருவேங்கடத்திற்காக ஒரு நினைவு விழாவினை நடத்தவேண்டும்,
நினைவு மலர் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக, முன்வைத்து, அதற்காக,
தன் உடல் நிலையினையும் பொருட்படுத்தாது, சிறு பிள்ளைபோல், அயராது பாடுபட்ட,
என் சித்தப்பாவின் ஆருயிர் நண்பர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.
சித்தப்பாவிற்கு விழா என்றவுடன், அகம் மகிழ்ந்து, பாராட்டியதோடு,
நூல் அச்சாக்கம், விழா முன்னேற்பாடுகள் என
ஒவ்வொரு நிலையிலும் தகுந்த வழிகாட்டுதலை வழங்கி உதவிய,
என் அத்தான்
மேனாள் தமிழ் விரிவுரையாளர், சிங்கப்பூர்
கவிஞர்
ப.திருநாவுக்கரசு அவர்களுக்கும்,
இவ்விழாவிற்கான, ஏற்பாடுகளைச்
செய்யத் தொடங்கியபின்,
கடந்த ஐந்து மாத காலமாக,
என் முயற்சிகளுக்குச் சிறிதும் தடைசொல்லாமல்,
உடனிருந்து உழைத்து,
இவ்விழாவிற்கானச் செலவினங்களை
முழுமனதோடு செய்திட்ட
என் மனைவி
திருமதி
பிரேமா ஜெயக்குமார் அவர்களுக்கும்,
எனது
தந்தைக்கும், தாய்க்கும்
விழா
நாளன்று,
அரங்கில்
முழுமையாக உழைத்த
என் மகன்
கே.ஜே.பிரேம்
குமார் அவர்களுக்கும்,
என் மகள்
ஜெ.சுவாதி
அவர்களுக்கும்,
நண்பர்
திரு கே.பால்ராஜ் அவர்களுக்கும்
உறவினரும்,
நண்பருமான திரு மு.பத்மநாபன் அவர்களுக்கும்,
நண்பர்
திரு ஆர்.லெனின் அவர்களுக்கும்
உறவினர்
திரு தி.ரமேஷ் அவர்களுக்கும்
நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும்
என்
நன்றி,
நன்றி நன்றி
-----
வாழ்ந்து
முடித்தபின்னர் நம்மை யாரும மறக்கக் கூடாது
என்கிற
வாங்கியங்களுக்கு வரையறை வகுத்த திருவேங்கடா,
உன்னை
எப்படி மறப்பது என்பதை நீ எங்கட்குக் கற்றுத் தரவில்லையே.
மறைந்து
விட்டாயா, இல்லை, இல்லை.
எங்களது
இதய நாளத்திலே
இன்றும்
நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றாய்.
கே.எஸ்.கணேஷ்.
ஒரு மாமனிதரைப்பற்றி மேலும் அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே....
பதிலளிநீக்குநெகிழ்ந்தேன் ஐயா..
பதிலளிநீக்குபிரிவை எனும் துயரத்தை எனும் மருந்து நிச்சயம் ஆற்றும்
பதிலளிநீக்குநெகிழ்வான பதிவு.
பதிலளிநீக்குசுவாமிமலை சுவாமிநாதன் அவர்களும் வந்து இருந்தார்கள் போலும். பாராட்டு பத்திரம் பெறுகிறார்.
நெகிழவைக்கும் பதிவு.
பதிலளிநீக்குநினைத்துவிட்டால் நெஞ்செழுந்தே - கவிதை மிகவும் கவர்ந்தது. முனைவர் பொன்னியின் செல்வனுக்குப் பாராட்டுகள்.
திருவடிக் குடில் அடிகளாரா இல்லை குடிள் அடிகளாரா?
இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலமாக ஓர் அரிய வாய்ப்பினை உங்களால் பெறமுடிந்தது. உங்களின் எண்ணமும் செயல்பாடும் உங்களை தமிழகத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக உயர்த்திவருவதை நாங்கள் உணர்கிறோம். அவரை அடியொற்றி உங்கள் பயணம் தொடரட்டும்.
பதிலளிநீக்குஉணர்ச்சிபூர்வமான பதிவு. மனம் நெகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குபூத உடல் மறைந்தாலும் புகழ் மறையாது. சிறந்த மனிதருக்கான சிறந்த அஞ்சலிக் கவிதைகள், நெகிழ்வுகள்.
பதிலளிநீக்குசிறந்த மனிதருக்கான சிறப்பான அஞ்சலி! பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசித்தப்பாவின் நினைவு நாளில் அவர் பெயரில் நூல் வெளிக் கொஅர்ந்தமைக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குநெகிழ்ச்சி.
பதிலளிநீக்குபுத்தக வெளியீடு - வாழ்த்துகள்.
ஒன்றாம் வருடத்தில் சிறப்பான நினைவஞ்சலி.
தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது போன்ற விழாவில் கலந்து கொள்வது எங்கள் வாழ்வில் இதுதான் முதன்முறை என்று எண்ணும் விதமாக விழா நடைபெற்றது. சித்தப்பாவின் நினைவு நாள் நிகழ்வு அவருடைய அண்ணன் மகனால் மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருப்பது புதுமை.
பதிலளிநீக்குமறைந்தும்.. மனங்களில் வாழ்கிறார் என்பது இதுதானோ.. அருமையான நினைவுநாள் விழாவும் .. சிறப்பான புத்தக வெளியீடும்.
பதிலளிநீக்குநல்லாசிரியர் திரு.சி.திருவேங்கடம் அவர்களின் முதலாண்டு நினைவுநாள் நிகழ்வு பற்றிய இப்பதிவு என்னை நெகிழச் செய்துவிட்டது.
பதிலளிநீக்கு"நாம் வாழும் நம்மை யாரும் வெறுக்கக் கூடாது
வாழ்ந்து முடித்த பின்னர் நம்மை யாரும் மறக்கக்கூடாது."
வாழக்கையில் ஒவவொருவரும் குறிக்கோளாக ஏற்கத்தக்க பொன்மொழி இது. பதிவிற்கு நன்றி.
தங்களின் சித்தப்பாவின் மூலம் என் சித்தப்பனை அறிய வைத்தற்கு நன்றி!!!
பதிலளிநீக்குIt's really very great to know...
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஒரு சிலரின் பிறப்பு பல யுகங்களுக்கான பாடம் கற்றுக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயம் ! தங்கள் சித்தப்பா சிறந்த மனிதர் என்பதைக் காலமே சொல்கிறது நண்பரே வாழ்த்துகள் அன்னாரின் ஆன்மா என்றும் இறையடியில் இருக்கட்டும் வாழ்க நலம் !
சிறந்த அஞ்சலி. அவர் புகழ் என்றும் வாழும்
பதிலளிநீக்குஒரு மனிதன் வாழும்பொழுது சேர்த்து வைத்த சொத்து இதுதான் என்பார்கள்,(பொது மக்களின் அன்பு)
பதிலளிநீக்குமனம் நெகிழ்ந்தது
பதிலளிநீக்குகாலம்பல கடந்தாலும் நினைவுகளில் வாழும் மாமனிதர். காலம் கடந்தேனும் எனது அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றேன்.
பதிலளிநீக்கு