06 டிசம்பர் 2020

தஞ்சையார்



நம்பினா நம்புங்க

நம்பாட்டி போங்க

எனப் பாட்டின் பல்லவியைப் பாடலாசிரியர் கூற, இயக்குநர் பதறிப் போனார்.

     வாத்தியாரய்யா, பாட்டை கேட்டுட்டு, படத்தை யாரும் வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது? வேற ஒரு பாட்டு, ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக் கொடுங்க என்றார்.

  

30 நவம்பர் 2020

பண்டிதமணி நேருவும் பழந்தமிழும்

 


இலக்கியமும் இலக்கணமும்

   கல்வெட்டாய் செப்பேடாய்

   இருந்தினிக்கும்,

வலக்கண்ணாய் இடக்கண்ணாய்

   வாங்குவளி நுரையீரல்

   வகைபடல் போல்,

துலக்கமுறும் எந்நாளும்

   துல்லியமாய் மிகத் தெளிவாய்த்

   துய்த்தவற்றைச்

சொலத் தெரிந்த மிகச்சிறந்த

   காவிரிபோல் தலைச்சுரப்பு

   சொரியும் குன்றம்.

     குடகுமலையில் தோன்றி, தங்கு தடையின்றிப் பயணிக்கும் காவிரிபோல், தான் துய்த்தவற்றை, தான் கற்றவற்றை, தான் அறிந்தவற்றைத், தெளிவாய், மிகத் தெளிவாய், துல்லியமாய் வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர் இவர், எனப் பெருமகிழ்வோடு, தன் கவி வரிகளால், பாராட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன்.

   

24 நவம்பர் 2020

அபிராமி, அபிராமி

     நட்ட நடு ராத்திரி, முழிப்பு வந்துடுச்சா, மாடு வேற கத்துது, சரி, மாட்டுக்குப் பசிபோல, வைக்கோல் போடலாம்னுட்டு வெளியே வந்தேன்.

     வைக்கோல் போட்டுட்டு பார்க்கிறேன்.

      உங்க வீட்டு வாசல்ல, வெள்ளையா ஓர் உருவம், கால் இருக்கான்னு பார்க்கிறேன், இல்லை.

    

17 நவம்பர் 2020

தோரோ

 


     முடியாது.

     தீர்மானமாய் சொன்னார்.

     என்னால் வரி கொடுக்க முடியாது.

     தர மாட்டேன்.

     அரசு விதிக்கின்ற வரியைத் தரமுடியாது எனத் துணிந்து சொன்னார்.

   

11 நவம்பர் 2020

நேர்படப் பேசு



     பெண்ணே நீ யார்?

     உன் கணவன் யார்?

     இந்தச் சிறுவன் யார்?

     இவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?

     இவன் பெயர் என்ன?

     இவன் தந்தை யார்?

     எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?