21 மே 2015

ஒளி பிறக்கட்டும்


சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.

பொறாமை இல்லை, மனிதரிடம் நம்பிக்கை இழப்பதில்லை
எப்போதும் சிறப்பாக செயல்படுவான்.
தன்னைவிடக் கீழானவர்களைக் கண்டு அவன் புலம்புவதில்லை.
புன்னகையுடன், நம்பிக்கையான வார்த்தைகளுடன்
போராடும் ஒவ்வொருவனுக்கும் உற்சாகமூட்டுவான்.

அவன் உன்னதமானவன்
உன்னதமான வாழ்வினால் விதியை வென்றவன்.
-          சாரா கே.போல்டன்


சார், நல்லா இருக்கீங்களா. நாளை நித்யாவிற்கு வளைகாப்பு.

     கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், ஓர் நாள், அலைபேசி அழைத்த போது, வகுப்பில் இருந்தேன்.

     வகுப்பறைக்கு வெளியே வந்து, அலைபேசியின் திரையினை வருடி, காதருகே கொண்டு சென்ற பொழுது, வெளிப்பட்ட வார்த்தைகளில் மகிழ்ச்சியும், நட்பும், குழைந்து இணைந்து இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     நண்பர்களே, அழைத்தவர் யார் தெரியுமா?


     தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் சந்நிதியில், ஒளிமயமான வாழ்விற்காக, இருளில் இணைந்த இந்த நல் உள்ளங்களை, உங்களுக்கு  முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நினைவிருக்கிறதா?

ஆம், அவர்களேதான்
வெற்றிவேல் முருகன் – நித்யா
தம்பதியினர்

     பிறவி முதல் விழிகள் பார்க்கும் சக்தியினை இழந்தபோதும், மூலையில் முடங்கி விடாமல், விதி விதி என்கிறார்களே, அந்த விதியினையும் வெல்லும், உத்வேகத்துடன் அயராமல் உழைத்து, விரல்களால் தடவித் தடவி, ஒவ்வொரு எழுத்துக்களாகப் படித்து, உயர்ந்து, அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இந்த வெற்றி வேல் முருகன்.

     நித்யா மட்டும் சளைத்தவரா என்ன? புறக் கண் போனால் என்ன, அகக் கண் இருக்கிறது, உள்ளத்தில் உறுதி இருக்கிறது, மனதில் நம்பிக்கை இருக்கிறது என தளராது படித்து, எம்.ஏ,. பி.எட்., பட்டம் பெற்றவர்.

     மகத்தான இவ்விருவரின் இல்லற வாழ்வின் பயனாய், நித்யாவிற்கு வளை காப்பு.

     என்னையும் ஒரு நண்பனாய் ஏற்று, மகிழ்வான செய்தியை, என்னிடமும் பகிர்ந்து மகிழ வேண்டும் என்று எண்ணி, அழைத்த வெற்றி வேல் முருகனின் நட்புக் குரல் கேட்டு, நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பர்களே, நெகிழ்ந்து போய்விட்டேன்.

     கடந்த 9.4.2015 வியாழக் கிழமையன்று, தம்பதியினர் இருவரும், தஞ்சை இரும்புத் தலை என்னும் கவின் மிகு சிற்றூருக்கு வந்திருந்தனர். நித்யாவின் சொந்த ஊர் இது.

      உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களிடம், இத் தகவலை தெரிவித்த போது, நானும் வருகிறேன் என்றார்.

     அன்று மாலையே, இருவரும், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம். இரும்புத் தலை சென்றடைந்தோம்.

     அன்றலர்ந்த மலர்களென, வெற்றி வேல் முருகனும், நித்யாவும் எங்களை வரவேற்றனர்.
     

நீண்ட நேரம் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

     நண்பர் வெற்றி வேல் முருகன் அவர்கள், கணினியைப் பயன் படுத்துவதில் வல்லவர். இதன் விளைவு என்ன தெரியுமா?

     பெங்களூருவில் உள்ள சிஸ்கோ (SISCO) என்னும் நிறுவனத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்  (Project coordinator) பணிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

     சமூகவியலில் டாக்டர் பட்டம் பெற்றவருக்கு, கணினித் துறையில் வேலை வாய்ப்பு.

     இன்னும் சில தினங்களில், பெங்களூரு பயணப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

     பெங்களூருவில் வீடு பார்த்து விட்டீர்களா எனக் கேட்டேன்.

      எனது இக் கேள்விக்கு, அவர் கூறிய பதிலைக் கேட்டு அசந்து போய்விட்டேன், நண்பர்களே, அசந்து போய்விட்டேன்.

      தற்சமயம் சிஸ்கோ நிறுவனம் வழங்கும் விடுதியில், தனியொருவனாகத் தங்கப் போகிறேன். மூன்று அல்லது நான்கு மாதங்கள் பணியாற்றி, பெங்களூருவில், வாடகை வீட்டிற்குத் தேவைப்படும், முன் பணத்தை, சேமித்த பிறகுதான், என் மனைவியை அழைத்துச் செல்லப் போகிறேன்
     

நண்பர்களே, நாம் அனைவருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்தான். நாம் அனைவருமே ஏதோ ஒரு நூலினையோ அல்லது செய்தித் தாட்களையோ, தினம் தினம், ஒரு சில நிமிடங்களாவது படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

       ஆனால் நம்மில் எவ்வளவு பேர் எழுதுகிறோம். எழுதுவது என்றால் ஏதோ ஓர் தயக்கம், உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது. கடிதம் எழுதும் பழக்கம் கூட, ஏறக்குறைய, இன்று இல்லாமலேயே போய்விட்டது

      வெற்றிவேல் முருகன், தினமும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் எழுதிக் கொண்டிருக்கிறார். கணினியில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

     என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் தெரியுமா? தனது வாழ்க்கை வரலாற்றினை எழுதிக் கொண்டிருக்கிறார். தான் பிறந்தது, தன்னை முதன் முதலாய் உணர்ந்தது, தவழ்ந்தது, படித்தது, அமெரிக்கா நோக்கிப் பறந்தது என அனைத்தையுமே எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்சமயம் நூறு பக்கங்களையும் தாண்டி, எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார். எங்களுக்குப் பேசவோ, பாராட்டவோ வார்த்தைகளே வெளிவரவில்லை. மகிழ்ச்சியில் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

     ஜெயக்குமார் சார், நான் எழுதி முடித்ததும், PDF ஃபைல் ஆக உங்களுக்கு, மின்னஞ்சலில் அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் வலைப் பூவில், எனது எழுத்துக்களையும் பதிவு செய்யுங்கள். நண்பர்கள் படிக்கட்டும்.

     நண்பர் வெற்றிவேல் முருகனின் எழுத்துக்களை இணைய ஊடகத்தில் ஏற்ற, எனக்கோர் வாய்ப்பு. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?

காத்திருக்கிறேன் நண்பரே.

     தன் மனைவி நித்யாவிற்கு, கடலூரில் உள்ள ஒரு மகப்பேறு பெண் மருத்துவரிடம், தொடர்ந்து ஆலோசனைகள் பெற்று வருவதாகக் கூறினார்.

     வெற்றிவேல் முருகனின் சகோதரியும், பிறவி முதலே, இவ்வுலகினைக் காணும் வாய்ப்பு இல்லாதவர்தான். ஆனால் இவரது குழந்தைகள் இன்று ஓடி, ஆடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்,

     தனது தங்கை கருவுற்றது முதல், தொடர்ந்து கவனித்து, கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி, குழந்தைகள். ஒளி படைத்த விழிகளுடன் இவ்வுலகினைக் காண, வழி வகுத்த, அதே மருத்துவர்தான், நித்யாவிற்கும் இன்று ஆலோசனைகளை வழங்கி கவனித்து வருகிறார்.

    தங்களுக்குப் பிறக்க இருக்கும், குழந்தையினைப் பற்றிப் பேசப் பேச, இருவரது முகங்களிலும் ஓர் ஒளி, ஓர் மகிழ்ச்சி, ஓர் எதிர்பார்ப்பு, ஓர் நம்பிக்கை.

நண்பர்களே,
வெற்றிவேல் முருகன் – நித்யா
தம்பதியினரின்
மழலை

நாளை,
இவ்வுலகினைக்
கண்ணாரக் காணவும்
தன் பெற்றோர்களை
கண்ணேபோல் போற்றிக் காக்கவும்
வேண்டுவோம்., வாழ்த்துவோம்

---------------------------------------


நண்பர்களே,

நலம்தானே. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் நண்பர்களின் எழுத்துக்களை, சுவாசிக்க இயலாத நிலை. தற்போது வீடு திரும்பிவிட்டேன். இனி நாளை முதல், நாள்தோறும் வலையின் வாசம்தான்.

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்



    


     

42 கருத்துகள்:

  1. அருமை நண்பரே பிரமிப்பாக இருக்கின்றது தங்களது விடயங்கள் வெற்றிவேல் முருகன் – நித்யாதம்பதியினர் நலன்கள் பல பெற்று நீடூழி வாழ இறைவனை கூட்டாக பிரார்த்திப்போம் சகோதரிக்கு நலமுடன் குழந்தை பிறக்க இறைவனை வேண்டுகிறேன் எமது வாழ்த்தினை அறிவிக்கவும்
    வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. சிறு சுற்றுலாவை பெரும் பதிவாக காண இருக்கின்றேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. வெற்றிவேல் முருகனின் தன்னம்பிக்கையைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  4. ஒளி பிறக்கட்டும் - பிறவி முதல் விழிகள் பார்க்கும் சக்தியினை இழந்தபோதும், மூலையில் முடங்கி விடாமல், விதி விதி என்கிறார்களே, அந்த விதியினையும் வெல்லும், உத்வேகத்துடன் அயராமல் உழைத்து, விரல்களால் தடவித் தடவி, ஒவ்வொரு எழுத்துக்களாகப் படித்து, உயர்ந்து, அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இந்த வெற்றி வேல் முருகன். - ஆம், அவர்களேதான்
    வெற்றிவேல் முருகன் – நித்யா
    தம்பதியினர் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை.திரு வெற்றிவேல் முருகன் அவர்கள் தன்னம்பிக்கையின் இலக்கணம்.வாழ்க பல்லாண்டு தவழ்க மழலை சூரியனாக!.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை.திரு வெற்றிவேல் முருகன் அவர்கள் தன்னம்பிக்கையின் இலக்கணம்.வாழ்க பல்லாண்டு தவழ்க மழலை சூரியனாக!.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வெற்றிவேல் முருகனின் எழுத்துக்களை வாசிக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.

    வெற்றிவேல் முருகன் – நித்யா தம்பதியினர் நலன்கள் பலவும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.

    இவர்களுக்குபிறக்கும்..குழந்தை நலமுடபிறக்க யாவரும் இறைவனை பிராத்திப்போம்... வெற்றி வேல் முருகனின் படைப்பை அடுத்த பதிவில் பதிவிடுங்கள் பார்ப்பதற்கு.. மற்றும் தங்களின் சுற்றுலா அனுபவத்தினை காண ஆவலாக உள்ளேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. அன்பின் சகோ, தாங்கள் இன்னும் என் பதிவுகளைப் பார்க்கவில்லையே என்று நினைக்கும் போதே சரி ஏதேனும் பள்ளியின் பணியாயிருக்கும் என்று தங்களைத் தொலைப்பேசியில் அழைத்துச் சொல்லலாம் என்று இருந்தேன் இன்று. தாங்களே வந்துவிட்டீர்கள்.
    வெற்றிவேல் முருகன் – நித்யா தம்பதியினர் பதிவு நெகிழச்செய்யும் பதிவு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தை நலமுடன் பிறந்து வளம் பல பெற்று சிறப்பாக தன் பெற்றோரைப் பாதுகாக்கனும். அவிரின் எழுத்துக்களை வாசிக்க நாங்கள் காத்து இருக்கிறோம்.
    அன்புடன்
    உங்கள்
    சகோ,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. போற்றுதலுக்குரிய செய்தியை பதிவாக்கி தந்தமைக்கு
    பாராட்டுக்கள் கரந்தையாரே!
    உயிரினும் ஓம்பப் படும் ஊக்கத்தை உரியவருக்கு உரிய நேரத்தில் அளித்த செயலை
    அனைவரும் பின்பற்ற வேண்டும்.
    வெற்றிவேல் முருகன் – நித்யா
    தம்பதியினரின்
    மழலை
    எல்லோரின் ஆசியையும் பெற்று,ஆரோக்கிய அருளோடு
    நாளைய உலகை காண்பதற்கு பிறப்பெடுத்து வர வேண்டும்!
    வாழ்த்துகள்!
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  11. மிகவும் பிரமிப்பூட்டும் தகவல்கள்.

    வெற்றிவேல் முருகன் – நித்யா
    தம்பதியினரின்
    மழலை

    நாளை,
    இவ்வுலகினைக்
    கண்ணாரக் காணவும்
    தன் பெற்றோர்களை
    கண்ணேபோல் போற்றிக் காக்கவும்
    வேண்டுவோம், வாழ்த்துவோம் !

    பதிலளிநீக்கு
  12. நிச்சயம் அவர்கள் ஒளியினைக் காண்பார்கள்

    பதிலளிநீக்கு
  13. வெற்றி வேல் முருகனின் எழுத்தை படிக்க ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறோம் ! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  14. இவரைப் பற்றி நாங்கள் நன்கு அறிவோம், தங்களின் பதிவுகள் மூலமாக. உங்களது பதிவுகளும் நமது பிரார்த்தனைகளும் அவர் இவ்வுலகைக் காண ஒரு தடமாக அமையும். அவருடைய எண்ணங்கள் ஈடேறவும், குடும்பத்தார் மென்மேலும் அனைத்து நலன்களைப் பெறவும் வாழ்த்திப் போற்றுவோம். இவரை நாம் ஒரு முன்னுதாரண மனிதராக ஏற்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. இணைய ஊடகத்தில் ஏற்ற உங்களுக்கு ஓர் வாய்ப்பு... அருமை ஐயா...

    வெற்றிவேல் முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. மகத்தான மனிதர்களை அறிமுகப்படுத்தும் உங்களின் பணியை வியக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான தனம்பிக்கை நிறைந்த மனிதர் வெற்றிவேல் முருகன் பற்றி பல செய்திகள் தந்த நண்பருக்கு நன்றி. நான் ஏற்கனவே தங்களிடம் கூறியது போல் இந்த பதிவையும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    த ம 8

    பதிலளிநீக்கு
  18. தனம்பிக்கை நிறைந்த மனிதர் வெற்றிவேல் முருகன் தம்பதியர் பற்றி பல செய்திகள் ! அறிந்து ஒப்பற்ற உவகை அடைந்தேன் அவர்கள் பல்லாண்டு பல்வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  19. வெற்றிவேல் முருகன் பெயருக்கேற்ப வாழ்வில் வாழ்ந்து காட்டுபவர் தம்பதிகளுக்கு எல்லா வகை வளங்களும் கிடைக்கப்பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. அவர் பெங்களூரு வந்தால் அவர் விலாசம் முடிந்தால் அனுப்புங்கள்/ முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
  21. மகத்தான மனிதர், மகத்தான பணி. பிரார்த்தனைகள், வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. முயற்சிக்கு எல்லாம் உண்டு.எல்லை இல்லை
    உடலுக்கு எல்லை உண்டு. கண் இல்லாவிட்டால் என்ன?bst ws to them

    பதிலளிநீக்கு
  23. ஒளி பிறக்கட்டும். வெற்றிவேல் முருகன் – நித்யா தம்பதியினருக்கு எனது உளங் கனிந்த வாழ்த்துக்கள்.

    தன்னம்பிக்கையாளர் வெற்றிவேல் முருகன் அவர்களது சுயசரிதை நூலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாறு (The Story of My Life by Helen Keller) போல மக்கள் மத்தியில் வலம் வந்து புகழ் பெற வேண்டும்.

    த.ம.11

    பதிலளிநீக்கு
  24. கண்ணுடையார் என்பவர் கற்றோர் எனில் இவர் கண்ணுடையோரே...!

    எழுத்துகளை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    த ம கூடுதல் 1

    நன்றி

    பதிலளிநீக்கு
  25. தன்னம்பிக்கை தரும் பதிவு :)

    பதிலளிநீக்கு
  26. வெற்றிவேல் முருகன் – நித்யா தம்பதியினரின் மழலையானது, ஒளிபடைத்த கண்ணினோடு விளங்கிட எல்லாம்வல்ல அரவிந்த அன்னையின் கருணையைக் கோருகின்றேன். -இராய செல்லப்பா சென்னை.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா23 மே, 2015

    மழலை சுகமாக வாழவும்
    பெற்றோர்களை
    கண்ணேபோல் போற்றிக் காக்கவும்
    வேண்டுவோம்., வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  28. தன்னம்பிக்கை மனிதர்! அவரது தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்! வெற்றி வேல் முருகனுக்கு எப்போதும் வெற்றி கிடைத்து ஒளி பிறக்கட்டும்!

    (இவரைக் குறித்து தாங்கள் எப்போதோ குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது....சரியா நண்பரே!)

    பதிலளிநீக்கு
  29. வெற்றிவேல் முருகன் ~ நித்யா தம்பதியை வாழ்த்துவோம்!
    அவர்களுக்குப் பிறக்கயிருக்கும் குழந்தை இவ்வுலகைக் கண்டு மகிழ வரவேற்போம்!!

    பதிலளிநீக்கு
  30. வெற்றிவேல் முருகன் ~ நித்யா தம்பதிக்கு வாழ்த்துகள்!
    பிறக்கயிருக்கும் குழந்தைக்கு வரவேற்பு!

    பதிலளிநீக்கு
  31. அகவிழி கொண்டே இவ்வளவு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வெற்றிவேல் நித்தியா தம்பதிக்கு என் வாழ்த்துக்கள் நாளைய உலகைக் காணவரும் அந்த மழலை எக்குறையும் இன்றி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. தம்பதியரைப் பற்றி முழுமையாக ஏற்கெனவே
    தங்கள் பதிவில் படித்தது இன்னும், நினைவில்
    பசுமையாக உள்ளது

    அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற
    ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறேன்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  33. இவர்கள்போன்றவர்கள் சோர்ந்து போகும் பலருக்கு முன்னுதாரணங்கள்.அவர்கள் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.உங்கள் மூலம் அவரது எழுத்துக்களைக் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. தன்னம்பிக்கையும் தளராத மனமும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நிகராக வாழ்ந்துகாட்டும் உத்வேகமும் உள்ள வெற்றிவேல் தம்பதியினருக்கு இனிய வாழ்த்துகள். ஒளிமயமான எதிர்காலம் இனிதே அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  35. அன்பின் ஜெயக்குமார்

    மழலை உள்ளீட்ட வெற்றி வேல் முருகன் மற்றும் நித்யா தம்பதியர் விரைவினில் ஒளி மயமான எதிர்காலத்தினைச் சந்திப்பார்கள் - வாழ்வில் மேன்மேலும் முன்னேறுவர்.

    தம்பதியருக்கும் மழலைச் செல்வத்திற்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  36. அன்பின் ஜெயக்குமார்

    மழலை உள்ளீட்ட வெற்றி வேல் முருகன் மற்றும் நித்யா தம்பதியர் விரைவினில் ஒளி மயமான எதிர்காலத்தினைச் சந்திப்பார்கள் - வாழ்வில் மேன்மேலும் முன்னேறுவர்.

    தம்பதியருக்கும் மழலைச் செல்வத்திற்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  37. அன்பின் ஜெயக்குமார்

    மழலை உள்ளீட்ட வெற்றி வேல் முருகன் மற்றும் நித்யா தம்பதியர் விரைவினில் ஒளி மயமான எதிர்காலத்தினைச் சந்திப்பார்கள் - வாழ்வில் மேன்மேலும் முன்னேறுவர்.

    தம்பதியருக்கும் மழலைச் செல்வத்திற்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  38. அன்பின் ஜெயக்குமார்

    மழலை உள்ளீட்ட வெற்றி வேல் முருகன் மற்றும் நித்யா தம்பதியர் விரைவினில் ஒளி மயமான எதிர்காலத்தினைச் சந்திப்பார்கள் - வாழ்வில் மேன்மேலும் முன்னேறுவர்.

    தம்பதியருக்கும் மழலைச் செல்வத்திற்கும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  39. வெற்றிவேல்-நித்தியா தம்பதிகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணம்...அவர்கள் வாழ்வு வளமாக அமைய இறைவனைப் பிரார்திப்போம்...உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு