வாழ்வு முழுவதும்
துன்பம், துன்பம், துன்பம். ஒரு நாள் கூட மகிழ்வினைச் சந்தித்திராத, வாழ்வாக
அல்லவா, என் வாழ்வு அமைந்து விட்டது.
பத்து வயதிலேயே தாய், தந்தையின்
மறைவு. உறவென்று மீதமிருந்தவர் பாட்டி மட்டுமே. அரை வயிற்றுச் சாப்பாட்டிற்குக்
கூட வழியில்லை.
பன்னிரெண்டாவது வயதிலேயே
வீட்டை விட்டு வெளியேறி, வேலை தேடித் தேடி, அலைந்து, அலைந்து, கலைத்ததுதான்
மிச்சம். வேலையும் வயிற்றிற்குச் சிறிது உணவும் எட்டாக் கனியாகவே இருந்தது.
தொழிலாளர்கள், உழவர்கள், சமூக
விரோதிகள், குடிகாரர்கள் என அனைத்துத் தரப்பினரோடும் பழிகியாகிவிட்டது.
மூட்டை தூக்கி, வேட்டையாடி,
செறுப்பு தைத்து, பழங்களை கூவிக் கூவி விற்று, மண் பாண்டங்கள் கூட செய்து
பார்த்தாகிவிட்டது. ஆனாலும் வறுமை விலகிச் செல்வதாகத் தெரியவில்லை. வயிறும்
நிரம்பியதே இல்லை.
ஏனிந்த வாழ்க்கை. வாழ்ந்து
என்ன சாதிக்கப் போகிறோம். வாழ்ந்தது போதும். சாவிலாவது வறுமை அடங்காதா? வயிற்றுப்
பசி தீராதா?
ஒரு முடிவுக்கு வந்தவனாய்,
துப்பாக்கியை எடுத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். உடலெங்கும் ஒரே வலி,
பசியையும் மிஞ்சும் வலி. சில நொடிதான். பின் உலகே இருளத் தொடங்கியது.
சில நாட்கள் கடந்த
நிலையில், அந்த இளைஞனுக்கு, கண் கூசியது. வெளிச்சத்தை உணர்ந்தான். வலி மெல்ல, மெல்ல
மீண்டும் தலை தூக்கிப் பார்த்தது.
படுத்திருந்தவன் மெதுவாய்,
தன் தலையைத் தூக்கிப் பார்த்தான். நான் சாகவில்லை. குண்டு துளைத்தும், என்
உயிர் போகவில்லையே. என்ன இடம் இது? பிறகுதான் புரிந்தது. மருத்துவ மனையல்லவா.
யாரோ என்னை இங்கே
கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். என்னைக் காப்பாற்றுவதாய் நினைத்து, வறுமை
என்னும் அரக்கனிடம், மீண்டும் பத்திரமாய் ஒப்படைத்திருக்கிறார்கள்.
குண்டு துளைத்த காயம் ஆறும்
வரை, மருத்துவ மனையில் படுத்தே கிடந்த, அந்த இளைஞனிடம், மெதுவாய், மிக மெதுவாய்
ஓர் எண்ணம். வாழ்ந்துதான் பார்ப்போமே. வறுமையை விட்டு விலகி, வேகமாய் ஓடித்தான்
பார்ப்போமே.
நான் மட்டுமா வறுமையில்
உழல்கிறேன். என் நாடே அல்லவா, வறுமையில், வறுமையில் மட்டுமா, பெரும் அடிமைத்
தனத்திலும் அல்லவா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
ஏதாவது செய்தாக வேண்டுமே.
உள்ளத்தில் ஓர் உறுதியோடு,
மருத்துவ மனையில் இருந்து வெளியேறினான். ஓர் வேலையும் கிடைத்தது. வேலை என்ன
தெரியுமா?
மயானத்தில், அதாவது சுடுகாட்டில்,
பிணங்களின் தலைமாட்டில், அமர்ந்து, விடிய விடிய பிரார்த்தனை செய்யும் வேலை.
ஓர் பிணத்தின் தலைமாட்டில், விடிய
விடிய அமர்ந்திருந்தால், விடிந்ததும் 25 ரூபிள் காசு கிடைக்கும்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஆறு
மாதங்கள் இதே வேலை. இதனால் வறுமை அகன்றதோ இல்லையோ, அந்த இளைஞனின் உள்ளத்தில்
இருந்த பயம் முழுவதுமாய் அகன்றது. மனதில் ஓர் உறுதி குடியேறியது.
இறந்தவர்களுக்காகப் பிரார்த்தித்தது
போதும், இனி உயிருடன் இருப்பவர்களுக்காக, ஏதேனும் செய்வோம் என்று எண்ணி,
பிரார்த்தனை புத்தகத்தை கீழே வைத்து விட்டு, எழுதுகோலை எடுத்து எழுதத்
தொடங்கினான்.
வாழ்வில் இதுவரை சந்தித்த
வேதனைகள், சோதனைகள் எல்லாம், எழுதுகோலின் முனை வழியே, வார்த்தைகளாய் வெளிப்பட்டு,
வெள்ளைத் தாட்களில் வழிந்தோடியது.
சமரா கெஜட் என்னும் நாளிதழில் பணியும் கிடைத்தது. ஊள்ளுர்
நிர்வாகத்தின் ஊழல்கள், இவ்விளைஞனின் பேனா வழியாக, வெளிப்பட, வெளிப்பட, அரசோ
கடுப்படையத் தெடங்கியது, கொதிக்கத் தொடங்கியது.
இளைஞனின் எழுத்தாற்றலை,
இலக்கிய அறிவை புகழ்ந்து பாராட்டியது மேல்தட்டு வர்க்கம். நமது உள்ளக் குமுறல்களை
வெளிப்படுத்த, இதோ ஒருவன் வந்துவிட்டான் என, தலையில் தூக்கி வைத்துக் கொண்டு,
ஆனந்தக் கூத்தாடியது, கீழ்த்தட்டு வர்க்கம்.
1902 இல் இவர் எழுதிய
அதல பாதாளம்
(The Lower Depths)
என்னும் நாடகம், ரஷ்ய எல்லைகளைக் கடந்தும், இவரது புகழினைப் பரப்பியது.
1905 இல் ஜார் மன்னருக்கு எதிராக,
அவர்தம் மாளிகையை நோக்கி ஓர் ஊர்வலம். பாதுகாப்புப் படையினர் கண் மூடித்தனமாகச்
சுட்டதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இக்கொடுமைமிகு செயல் கண்டு, கொதித்தெழுந்த,
இந்த இளைஞனின் உணர்வுகள், ஓர் நாடகமாக வெளிப்பட்டது.
சூரியப் புத்திரர்கள்
(Children of the Sun)
நாடகம் மேடையேறும் ஒவ்வொரு முறையும், இவ்விளைஞன்
கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப் பட்டார். நாடகம் மேடையேறிக் கொண்டே இருந்தது.
இவர் கைது செய்யப்பட்டுக் கொண்டே இருந்தார். சிறைக்குச் சென்று கொண்டே இருந்தார்.
ஒரு எழுத்தாளன், உழைக்கும்
மக்களிடம் இருந்து பிரிந்து, தன்னைத் தனிமைப் படுத்தி நிற்பதன் மூலமும், மக்களுடைய
போராட்டங்களில் இணையாமல், அந்தப் போராட்டங்களைப் பார்த்தும் பாராமல் இருப்பதன்
மூலமும், அவன் மக்களிடம் இருந்து அந்நியமாகி விடுகிறான். இதனால் அவன் தன்னுடைய
ஆளுமையை இழக்கிறான். அவனுடைய எழுத்துக்கள் வலிமையற்றுப் போய்விடுகின்றன
என்று கூறி, மக்களுக்காக, மக்களோடு இணைந்து நின்று போராடிய, எழுத்து என்னும்
பேராயுதம் ஏந்திப் போராடிய, இந்த எழுத்தாளர் யார் தெரியுமா?
மனித வாழ்வையும், மனித நேயத்தையும்
முதன் முதலாக எனக்குப் போதித்தவர்
எனது பாட்டிதான்
என்று கூறி,
தனது பாட்டியின் சாயலில்,
ஓர் தாயை உருவாக்கியவர்.
ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த
பெருமைக்கு உரிய நாவலைப் படைத்தவர். நாவல் என்பது கூட தவறு, ஓர் காவியம்
படைத்தவர். அந்த அமர காவிம்தான்
தாய்
மழைக்குக் கூட பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்,
வாழ்வின் அனுபவங்களை,
சோதனைகளை, வேதனைகளை
எழுத்தாக்கிக் காவியம் படைத்தவர்.
அலெக்ஸி மாக்ஸிமூவிச் பெஷ்கோவ்
இதுதான் இவரது இயற்பெயர்.
இவர், தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர்
கார்க்கி
மாக்ஸிம் கார்க்கி.
ரஷ்ய மொழியில் கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். வாழ்வில் வேதனைகளை
மட்டுமே சந்தித்தவர் அல்லவா.
1936 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம்
நாள், எழுதுகோலை கீழே வைத்துவிட்டு, இயற்கையோடு இரண்டறக் கலந்தார்.
மாக்ஸிம் கார்க்கியின்
மரணம்
இயற்கையானது அல்ல.
எழுத்தின் வலிமையை
உலகிற்கு உணர்த்திய
மாக்ஸிம் கார்க்கி அவர்களின்
நினைவினைப் போற்றுவோம்.
கார்கி மற்றவர்களின் வாழ்க்கையில் கசப்பை போக்கியவர்...யமனை பிறகு வா ஏன்றவர்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குகசப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு,
மற்றவர்களின் வாழ்க்கையில் கசப்பினைப் போக்கியவர்தான்
நன்றி நண்பரே
அலெக்ஸி மாக்ஸிமூவிச் பெஷ்கோவ் அவர்களின் எழுச்சியை என்னவென்று சொல்வது...? எழுத்தின் மகிமை... ஆகா...!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇவரது தாய் அண்மையில் எங்களது இல்ல நூலகத்தில் சேர்ந்துள்ளது. அறிந்த மனிதரைப் பற்றிய அறியாத பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி. செய்தியைத் தேடித் தொகுத்துத் தரும் தங்களது இவ்வாறான தங்களின் முயற்சி போற்றுதற்குரியது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபோராளிகளுக்கு இயற்கையான மரணம் இனிக்குமா? இத்தகைய மரணங்கள் தானே அவர்கள் போராட்டங்களுக்கு கிடைக்கும் வெகுமதி!
பதிலளிநீக்குஇத்தகைய மரணங்கள்தான்
நீக்குஅவர்களை அமரத்துவம் பெற்ற மனிதர்களாக மாற்றுகின்றது
நன்றி சகோதரியாரே
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மாக்ஸிம் கார்க்கி.பற்றி நான் அறிந்ததில்லை... எவ்வளவு துன்பப்பட்டும் தனது தன்நம்பிகையில் தளர்வு இல்லாமல் சாதித்த ஒரு மகா மனிதன்..இவருடைய வாழ்க்கை பற்றி தங்களின் எழுத்தில் அனைவரையும் கவரும் வகையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
அவர் மறைந்து விட்டாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குவாழ்க்கை முழுவதும் கசப்பான வறுமையையே அனுபவித்த ஒரு ரஷ்யப் போராளியின் வரலாறும் அதைத்தாங்கள் பகிர்ந்துள்ள விதமும் மிக அருமை. பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்குஎழுத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய மாக்ஸிம் கார்க்கி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.
நன்றி ஐயா
நீக்குமாக்ஸிம் கார்க்கி அவர்கள் படைத்த, தாய் எனும் காவியத்தை - பல ஆண்டுகளுக்கு முன்பே - புத்தகத் திருவிழாவில் வாங்கி வாசித்து எனது சேமிப்பில் வைத்துள்ளேன்.
பதிலளிநீக்குஎனினும் - அவரது வரலாற்றினைத் தங்கள் கைவண்ணத்தில் படிக்கும் போது பிரமிப்பு!...
நன்றி ஐயா
நீக்குஎழுத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய மாக்ஸிம் கார்க்கி அவர்களைப் பற்றிய தகவல்களை பதிவில் வைத்த தங்களுக்கு நன்றிகள் சகோ, அவரின் நினைவினைப் போற்றுவோம். நன்றி.
பதிலளிநீக்குதாய் என்ற நாவலை நான் என்னுடைய இளமைக் காலத்திலேயேர் படித்திருக்கிறேன்! அவர் வாழ்கை வரலாறு இன்றுதான் தங்களால் அறிந்தேன் நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஏற்றமிகு வரலாறு.
பதிலளிநீக்குஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாதவருக்கு, துப்பாக்கி எங்கிருந்து கிடைத்திருக்கும்?
சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி
நீக்குசமூக விரோதிகள் பலருடனும் பழகியவர்தான் இவர்
நன்றி நண்பரே
ஏற்றமிகு வரலாறு.
பதிலளிநீக்குஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாதவருக்கு, துப்பாக்கி எங்கிருந்து கிடைத்திருக்கும்?
சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி
நீக்குசமூக விரோதிகள் பலருடனும் பழகியவர்தான் இவர்
நன்றி நண்பரே
இப்படி ஒரு அருமையான பதிவு தந்ததற்கு முதலில் பாராட்டுகள் நண்பரே!
பதிலளிநீக்குகார்க்கியை பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அவரது வாழ்வு இத்தனை சோகம் நிறைந்தது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அருமையான நடையில் அழகான பதிவு நண்பரே! தொடரட்டும் இது போன்ற பதிவுகள்.
த ம 6
நன்றி நண்பரே
நீக்குஉங்கள் தகவலுக்கும், எழுத்துக்கும் நன்றியும் பாராட்டும் ..........
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமாக்ஸிம் கார்க்கி பற்ரிய சிறப்பான பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகார்க்கி குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. இயற்கையான மரணம் இல்லை எனில் பின் எப்படி இறந்தார்?
பதிலளிநீக்குகார்க்கியின் மரணம் ஒரு மர்மம் நிறைந்ததாகவே
நீக்குஅனைவராலும் பார்க்கப் படுகிறது
நன்றி சகோதரியாரே
உண்மை ஓங்கி உரைக்கப்பட்டால் அது ஒருகாலத்தில் பலன் தரும் என்பதை இவ்வரலாறு தெரிவிக்கிறது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகசப்பு மனிதனின் வாழ்க்கை, இனிமையான 'தாயை' உருவாக்கியதை நம்ப முடியவில்லை !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசிறந்த படைப்பாளி
பதிலளிநீக்குமாக்ஸிம் கார்க்கியின்
இனிய வரலாற்றை பகிர்ந்தமை
பலருக்கு நல் வழிகாட்டலாக
அமையுமென நம்புகிறேன்.
நன்றி ஐயா
நீக்குமாக்ஸிம் கார்க்கி அவர்களைப்பற்றிய முழு விபரங்கள் தங்களின் மூலமே அறிந்து கொண்டேன் அவரது நினைவினை போற்றுவோம்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 8
நன்றி நண்பரே
நீக்குகண்ணதாசன் சொன்னவரிகள் போல '' நீ வாழ நினைத்தாலும் வழி இருக்கிறது வாழ்வை விட்டு ஓட நினைத்தாலும் வழி இருக்கிறது '' என்பதுபோல் எல்லாவற்றுக்கும் வழிகாட்டும் இவ்வுலகில் சாக நினைத்து தப்பிய ஜீவனின் ஆற்றல்மிகு செயல்களை அள்ளித்தந்த நண்பரே தங்கள் பணி தொடரட்டும் எல்லோர்க்கும் மனதில் நம்பிக்கை பிறக்கட்டும் வாழ்ந்துதான் பார்ப்போமே !
பதிலளிநீக்குஅருமை தொடர வாழ்த்துக்கள்
தம +1
நன்றி நண்பரே
நீக்குtha.ma.10
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉன்னதமான ரஷ்ய எழுத்தாளர்கள் பலரின் இலக்கியங்களை மிக இளம் வயதிலேயே படிக்கும் நற்பேறு பெற்றவன் நான். அவற்றுள் மாக்சிம் கார்க்கியின் 'தாய் ' ஒன்று. தங்கள் நினைவூட்டலுக்கு நன்றி .
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉன்னதமான ரஷ்ய எழுத்தாளர்கள் பலரின் இலக்கியங்களை மிக இளம் வயதிலேயே படிக்கும் நற்பேறு பெற்றவன் நான். அவற்றுள் மாக்சிம் கார்க்கியின் 'தாய் ' ஒன்று. தங்கள் நினைவூட்டலுக்கு நன்றி .
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதாய் காவியம் படைத்த மாக்சிம் கார்க்கி பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇன்னும் எவ்வளவு இருக்கு தோழர் கார்க்கியைப் பற்றி அறிந்துகொள்ள
பதிலளிநீக்குதெரிந்தது ஒரு துளிதானே
நீக்குநன்றி தோழர்
மாக்ஸிம் கார்க்கி பற்றி கவரும் வகையில் எழதியுள்ளீர்கள்.மிகவும் ரசித்து வாசித்தேன். அவரை நினைத்து ஆச்சரியப் பட்டேன்.மிக்கமகிழ்ச்சி சகோ ! நீங்கள் தரும் ஒவோரு பதிவும் இப்படித் தான் உள்ளது. மிக்க நன்றி ! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ !
பதிலளிநீக்குகசப்பின் சுவை தெரிந்தால் மட்டுமே இனிப்பை கொண்டாட முடியும்..
பதிலளிநீக்குகார்க்கி கொண்டாட்டத்திற்கு உரிய எழுத்தாளார்.
தம +
நன்றி நண்பரே
நீக்குsuper introduction about the great writer Maxim karki:தாய் எழுதிய மாக்ஸிம் கார்கிக்கு இப்படி ஒரு அடையாளம்,அறிமுகம் தந்து படிக்காதவரையும் படிக்கத் தூண்டும் இந்த பதிவு உண்மையிலேயே பாரட்டத்தக்கது. பணி மேலும் மேலும் சிறக்கட்டும் வாழ்த்துகள்.அன்புடன் கவிஞர் தணிகை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகார்க்கிம் பற்றி அறியாத தகவல். அருமையான பகிர்வு .
பதிலளிநீக்குஅருமை . நீங்கள் எழுதுபவை ஒவ்வொன்றையும் பள்ளிகளில் துணைப் பாடமாக வைக்கலாம். அறிஞர்களின் வரலாறுகளை சுவை பல சொல்லும் கலை உங்களுக்கே உரித்தானது.வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமிக அருமை.திரு கார்க்கி பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமிக அருமை.திரு கார்க்கி பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅறிந்த மனிதரைப் பற்றிய அறியாத பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குமகிழ்ச்சி, FYI, Vairamuthu's elder son's name is கார்க்கி!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமாக்ஸிம் கார்க்கியின் எழுத்தாற்றல் பற்றிய பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன் ஐயா. சிறப்பான பதிவு!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅலெக்ஸி மாக்ஸிமூவிச் பெஷ்கோவ்/கார்கியின் வரலாறு எங்கள் பாடங்களில் ரஷ்ய புரட்சி பற்றி படித்த போது படித்த நினைவு....
பதிலளிநீக்குமக்களுடன் இணைந்து போராடுபவர்கள் தான் நல்ல போராளி. நமது சுபாஷ் சந்திர போஸ் போல் இவரது மரணமும் மர்மம்தான்....
அருமையான் பதிவு நண்பரே!
நன்றி நண்பரே
நீக்குகாலங்களையும் தேசங்களையும் கடந்து வாழும். காவியம் தந்தவர் கார்க்கி.............உடுவை
பதிலளிநீக்கு