தூத்துக்குடி,
திருநெல்வேலி, பாளையங் கோட்டை பகுதிகளிலே,
உணவுக்
கடை வைத்திருக்கிற உத்தமர்களுக்கு,
எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பசியால் வாடுகிறானாமே,
அங்கும், இங்கும் சற்றித் திரிகிறானாமே, அவனை வழியிலே பார்த்தால், விடுதியில் உட்கார
வைத்து, தயவுசெய்து, அவனுக்கு உணவளியுங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.
தன்னைச் சந்திக்கவரும் தூத்துக்குடி, திருநெல்வேலி
மற்றும் பாளையங் கோட்டையைச் சேர்ந்தவர்களிடம், மறவாமல், துண்டுச் சீட்டில், எழுதி,
எழுதி, இவ்வூர்களில் இருக்கும் உணவு விடுதி உரிமையாளர்களிடம் கொடுக்கச் சொல்லி, கொடுத்து
அனுப்பிக் கொண்டே இருக்கிறார் இவர்.
என் தம்பிக்கு உணவளியுங்கள்.
காப்பாற்றுங்கள்
கணக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
நான் பணம் கொடுத்துக் கடனை நேர் செய்கிறேன்.
படிக்கும்போதே மனதை, வேதனை கவ்வுகிறது அல்லவா,
இச்செய்தியினை மட்டுமல்ல, வேறொரு செய்தியினையும்
துண்டுச் சீட்டுகளில் எழுதி, கொடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார் இவர்.
அழுக்குப்
படிந்த கந்தல் உடையோடும், அழுக்குத் துணியோடும், அந்தப் பகுதிகளில், பைத்தியம் பிடித்த
நிலையில் திரியும், என் தம்பியை, யாரேனும் பார்த்தால், தயவு செய்து அவனை, துணிக் கடைக்கு
அழைத்துச் சென்று, நல்ல துணிகளைக் கொடுத்து அனுப்புங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.
இவ்விரு செய்திகளுமே, நம் மனதைக் கிழித்து ரணமாக்கி,
வேதனையால் வாட்டுகிறன அல்லவா.
நமக்கே இப்படியென்றால், அந்த அண்ணனுக்கு எப்படி
இருக்கும்.
அந்த அண்ணன், துண்டுச் சீட்டுக்களை,
எழுதி எழுதிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
தன்னால் வெளியில் செல்ல இயலாது.
விடமாட்டார்களே
சிறையில் அல்லவா வாடிக் கொண்டிருக்கிறார்.
சித்திரவதையை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
மிகப்பெரும் செல்வந்தர்.
வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வாரிக் கொடுத்த
வள்ளல்.
குடும்பம் மறந்து, நாடே பெரிதென்று எண்ணி உழைத்த
உத்தமர்.
நாட்டிற்காகத் தன் சொத்து முழுவதையும் இழந்தவர்.
இன்றோ, இவர்தம் தம்பியைக் காக்க ஆளில்லை.
அண்ணல் சிறையில்
தம்பி தெருவில்.
---
நீதிபதி பில்ஹேம், தன் அண்ணனுக்கு வழங்கிய தண்டனையை,
நீதிமன்றத்தின், ஒரு மூலையில் நின்று கேட்ட மறு நிமிடமே, உடலும், உள்ளமும் சுக்கு நூறாய்
வெடித்துச் சிதறியதைப் போன்ற ஓர் உணர்வு.
நாற்பதாண்டு
கால சிறைவாசத்தைத் தண்டனையாக வழங்குகின்றேன்.
ஐயோ, என் அண்ணனுக்கு நாற்பதாண்டுகால
சிறை தண்டனையா?
செவியில் இடியாய் நுழைந்த வார்த்தைகளால், அந்த
நொடியே, தம்பியின் மனது பேதலித்துத்தான் போனது.
பைத்தியம் ஆனார்
முழுப் பைத்தியம் ஆனார்.
---
தன் தம்பி மீனாட்சி சுந்தரத்திற்காகத் துடியாய் துடித்த,
இந்த அண்ணன் யார் தெரியுமா?
நமக்காக,
நம் நாட்டு விடுதலைக்காக
உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாகச் செம்மல்.
செக்கிழுத்தச் செம்மல்
வ.உ.சிதம்பரனார்.
மனதை உலுக்கிய அரிய செய்தி இன்றுதான் அறிந்து கொண்டேன் நண்பரே
பதிலளிநீக்குமனதை உருக்கும் செய்தி! அண்ணன், தம்பி பாசத்தை எப்ப்டி எப்படியோ அறிந்திருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு அற்புதமான பாசப்பிணைப்பை அறிந்ததில்லை!!
பதிலளிநீக்குஅறியாத தகவல். வருத்தம் அளிக்கிறது.
பதிலளிநீக்குஅறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குஇதுதான் பாசம் என்பதோ? மனம் நெகிழ்ந்துவிட்டது.
பதிலளிநீக்குமனம் கசிகிறது. படைத்திருக்கும் பாங்கு அருமை!
பதிலளிநீக்குகொடுமையடா சாமி. உண்மையில் நெஞ்சை நெக்குருக வைக்கும் நிகழ்வு.
பதிலளிநீக்குஇப்படிக்கு இவர்கள் ! தொலைக்காட்சி நிகழ்வு போன்று உள்ளது ! அறியாத செய்தி ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குசி.சிவக்குமார் மதுரை.
நெகிழ வைக்கும் பகிர்வு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஇத்தகவலை இன்றுதான்ண்ணே கேள்விப்படுறேன். இதுமாதிரி நம்ம ஆட்கள் நன்றிக்கெட்டத்தனமா நடந்துக்கிட்டதால்தான் இப்ப யாரும் பொதுவாழ்க்கைக்காக தன்னை முழுசா அர்ப்பணிக்க பயப்படுறாங்க.
பதிலளிநீக்குநெகிழ்வைத் தந்த பதிவு. எப்படிப்பட்ட இன்னல்களைச் சந்தித்திருக்கிறார் அந்த உத்தம அண்ணன்.
பதிலளிநீக்குதெரிந்த செய்தி. நீங்கள் சொல்லி சென்ற விதம் அருமை.
பதிலளிநீக்குநமக்காக,
நம் நாட்டு விடுதலைக்காக
உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாகச் செம்மல். அவரைப் பற்றியும் அவர் தம்பியைப்பற்றியும்
எல்லோருக்கும் தெரியும் படி பதிவு செய்தது நல்ல காரியம். நன்றி.
இதயம் வேதனையால்
பதிலளிநீக்குகணத்துவிட்டது ஐயா!
ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும்போது மனதை உறுத்துகிறது...இவரிடம் சேர்பிக்க கொடுத்த பணத்தை கட்சி நிதியில் சேர்த்துவிட்டதாக காந்தி சொன்ன நிகழ்வை அறிந்த பிறகுதான் காந்தி கணக்கு என்ற பதமே வந்தது.
பதிலளிநீக்குஇப்படியும் இருந்திருக்கிறார்கள்......
பதிலளிநீக்குநெக்குருக்கும் நிகழ்வு!
பதிலளிநீக்குமற்ற தேச தலைவர்களை விட எனக்கு நேதாஜி அவர்கள் மீதும் வ.வூ.சி அவர்கள் மீதும் மிகப் பெரும் மதிப்பு உண்டு . படிக்கும் போதே கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகலங்க வைத்த பதிவு. எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்கள் இத்தேசத்தில் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்....
பதிலளிநீக்குகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பற்றிய நெகிழ்வூட்டும் பதிவு.
பதிலளிநீக்கு//அண்ணல் சிறையில்
பதிலளிநீக்குதம்பி தெருவில்.//
கடவுள் எங்கே?
அரிய பதிவு . நான் இதுவரை அறியாத செய்தி . பாராட்டுகிறேன் .
பதிலளிநீக்குஇதுவரை அறியாத தகவல். மனம் கலங்கிவிட்டது. உயர்ந்த மனிதர் தியாகச் செம்மல்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
நெகிழ வைத்த பதிவு.
பதிலளிநீக்குLooking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railwayresult.in. So, keep yourself updated with RRB Result.
பதிலளிநீக்குநல்லவர்களுக்கு எத்தனை சோதனைகள் ? எவ்வளவு வேதனைகள் ? இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
பதிலளிநீக்கு