27 ஏப்ரல் 2018

ஆசிரியரைப் போற்றியவர்





     ஆசிரியர் என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர் என்றுதான் பொருள்.

     எனவே ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

     ஒவ்வொரு ஆசிரியரும், தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும்.

21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்




      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.

      தோளில் ஒரு ஜோல்னா பை.

       பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.

       மனதில் வெறுமை

       வாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.

        ஆனாலும் சூழல் அமையவில்லை.

         வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.

14 ஏப்ரல் 2018

ஆகாய கங்கை




     பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.

     பூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி, உயிர்களுமின்றி காட்சியளித்த காலம்.

     விண்ணில் இருந்து புறப்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியைத் தங்கள் இலக்காய் கொணடு தாக்கத் தொடங்கின.

     ஒவ்வொரு நிமிடமும் இருபதிற்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியில் மோதி, பூமியையே அதிரவைத்தன.

07 ஏப்ரல் 2018

பொய்யெனப் பெய்யும் மழை




சிரிக்க வேண்டியவர்கள்
செத்துப் போனதும்
எரிக்க வேண்டியவர்கள்
உயிரோடிருப்பதும்

கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்பலாகிய கொடுமையினைக் கண்டபிறகு, மனம் வெந்து, மழை கூடப் பொய்யெனத்தானே பெய்யும்.

31 மார்ச் 2018

பஞ்சும் பசியும்





     ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.

     எழுதுவதற்கானக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டார் எனில், அனைத்துக் குறிப்புகளையும் ஒருமுறை படித்து, உள் வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கி விடுவார்.

      எழுத, எழுத பக்கத்திற்குப் பக்கம், எண்கள் கொடுத்து எழுதுவார்.

      எழுதி முடிக்க முடிக்க காகிதங்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும்.

       பதிப்பகத்தார் வந்து, அறை முழுவதும், பரவிக் கிடக்கும், தாட்களை எடுத்து,  வரிசைப் படுத்தி, அச்சிட எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான்.

       எழுதியதை மீண்டும் சரிபார்க்கும் பழக்கமோ, அடித்து அடித்துத் திருத்தம் செய்யும் வழக்கமோ இவரிடம் கிடையவே கிடையாது.

       அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்.

       கடந்த மூன்று நாட்களாய் பேனாவைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், சாய்ந்த வண்ணம் அமர்ந்தே இருக்கிறார்.