அம்மையகரம்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.
ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச்
செல்லவேண்டும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக்
கடப்பதற்குப் பாலம் கிடையாது.
ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.
ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில்
இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.