23 மே 2025

அம்மை யகர அறிவு



      

      அம்மையகரம்.

     தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.

     ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.

     ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் கிடையாது.

     ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

     ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில் இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.

15 மே 2025

ஒலியும், ஒளியும்

 


     ஒலி, ஒளி.

     ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.

02 மே 2025

முனியம்மா



     ஆண்டு 2011.

     அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப் படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.

     பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்மணி.

     வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.

26 ஏப்ரல் 2025

மரண இரயில் பாதை

 

     ஆண்டு 1942.

     ஓராண்டுப் பணி.

     அப்படித்தான் சொன்னார்கள்.

     கை நிறைய சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.

     பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும் தருவோம்.

     இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.