30 ஜூலை 2014

கல்பனா தத்

         

ஆண்டு 1940. தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. மீண்டும், மீண்டும் அக்கடிதத்தை வாசிக்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்து வந்திருக்கிறது இக்கடிதம். உடனே பதில் கடிதம் எழுதுகிறார்.

     உனது கடிதம் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீ விடுதலை பெற்றிருக்கிறாய். நாள்தோறும் அமைதியும், ஆக்கமும் பெற்று வளர்வாயாக. நமது நாட்டில் இன்னும் எத்தனையோ காரியங்கள் நடைபெற இருக்கின்றன. அவற்றிற்குக் கலவரம் அடையாமல்  இருக்க, ஒழுங்கிய பயின்ற திண்ணிய மனது தேவை. நீ பெற்ற துன்பமயமான அனுபவம், உனது வாழ்க்கைக்குப் பூரணப் பொலியை அளிக்கட்டும். எனது ஆசீர்வாதம் இதுவே.


ஆண்ட்ரூஸ்
தாகூர் மட்டுமல்ல, ஆங்கிலேயப் பாதிரியாரும், கல்வியாளரும், சமூகச் சிந்தனையாளருமான ஆண்ட்ரூசும், அதே நபருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

     முந்திய பிறவியில் நீ எனக்கு மகளாய் இருந்தாய் என்று எண்ணத் தோன்றுகிறது. நான் முதுமை அடைந்திருக்கும் இப்போது, என் மகள், என் செல்ல மகள், திரும்பவும் என்னிடம் வந்து விட்டாள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், இந்தக் கிழவனை நினைப்பதற்கு மறந்துவிடாதே.

     
ஆண்ட்ரூசும் தாகூரும்
நண்பர்களே, படிக்கும்போதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா? தேசியக் கவியின் அன்பிற்கும், ஆண்ட்ரூசின் பாசத்திற்கும் உரிய, அப்பெண்ணை நினைக்கையில், மனதில் ஒரு மூலையில், மெதுவாய் ஒரு சிறிய பொறாமை கூட எட்டிப் பார்க்கிறதல்லவா?

      மாபெரும் பெரியவர்கள் இருவரின் அன்பைப் பெற, அப்பெண் என்ன செய்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? அப்பெண் அவ்விருவருக்கும் ஒன்றும் செய்யவில்லை. அப்பெண் செய்ததெல்லாம் நாட்டிற்காக, நம் தாய் நாட்டிற்காக.

     அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா? துப்பாக்கித் தூக்கினார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல், அடுப்பூதிக் கொண்டிருந்த காலத்தில், நாட்டிற்காகத் துப்பாக்கித் தூக்கினார். வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்தார்.

     நண்பர்களே, இவர்தான் கல்பனா தத்.

கல்பனா தத்
ஆங்கிலேயர்களால் மட்டும்தான் ஆயுதம் ஏந்த முடியுமா? அந்த ஆயுதங்களால் இந்தியர்களை மட்டும்தான் சுட்டு வீழ்த்த முடியுமா?

      ஆங்கிலேயர்களின் ஆயுதங்களை எடுத்து, ஆங்கிலேயர்களையே சுட்டால்?

     இன்றைய வங்க தேசத்தின், துறைமுக நகரங்களில் ஒன்றுதான் சிட்டகாங். ஆங்கிலேயர்கள், தங்களின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கை, இங்குதான் அமைத்திருந்தார்கள். இங்கிருந்துதான், இந்தியாவின் பல பகுதிகளுக்கும், ஆயுதங்கள் அனுப்பப் பட்டன. இந்த ஆயுதங்களைக் கொண்டுதான், ஆங்கிலேய இராணுவமும், காவல் துறையும், இந்தியர்களை வேட்டையாடியது.

சூர்யா சென்
சூர்யா சென்
இந்த ஆயுதக் கிடங்கையே கைப்பற்றினால்? சூர்யா சென் தலைமையிலான, இந்துஸ்தான் குடியரசு இராணுவம் இப்படித்தான் யோசித்தது. திட்டமிட்டது. மொத்தம் 150 இளைஞர்கள்.

     1930, ஏப்ரல் 19.

     ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

     ஒரு பிரிவினர் தொலைத் தொடர்பு நிலையத்தைக் கைப் பற்றினர்.

     ஒரு பிரிவினர் துறைமுகப் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

     ஒரு பிரிவினர், ரயில்வே தண்டவாளங்களைத் தகர்த்து, போக்குவரத்தை நிறுத்தினர்.

      நான்கு செயல்களும், முற்றுகைகளும், தாக்குதல்களும் ஒரே நேரத்தில். பத்தே நிமிடம். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு கைப் பற்றப்பட்டது. அள்ள அள்ள ஆயுதங்கள். துப்பாக்கிகள், தோட்டாக்கள், பிஸ்டல்கள், ரைபிள்கள், மிசின் கன் துப்பாக்கிகள், என அனைத்தையும் அள்ளிக் கொண்டனர். இறுதியில் ஆயுதக் கிடங்கையே கொளுத்தினர்.

     ஆங்கில இராணுவம் சற்று தாமதமாகத்தான் விழித்தெழுந்தது. ஆங்கில இராணுவத்தின் கூர்க்கா படை, புரட்சி வீரர்களைத் தாக்கியது. கூர்க்கா படையினர் 50 பேர் பலி. புரட்சிப் படையினர் 30 பேர் பலி.

    

சற்றேரக்குறைய மூன்று ஆண்டுகள், 1933 பிப்ரவரி 16 வரை, தாக்குதலும், எதிர்தாக்குதலும் தொடர்ந்தது. இரு தரப்பிலும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

      சொற்ப எண்ணிக்கையில் புரட்சிப் படையினர். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் ஆங்கிலேய இராணுவம். நாளுக்கு நாள் புதிய புதிய வீரர்களை, அதிக எண்ணிக்கையில் களமிறக்கிக் கொண்டேயிருந்தது.

       பாவம் எத்தனை நாள்தான் புரட்சி வீரர்கள் தாக்கு பிடிப்பார்கள். முடிவில் சூர்யா சென்னும் மற்ற புரட்சி வீரர்களும் கைது செய்யப் பட்டனர். விசாரனை நடந்தது.

      1934 சனவரி 11 இல், சிட்டகாங் மத்திய சிறையில், சூர்யா சென்னும், தாரகேஸ்வரி தஸ்தகீரும் தூக்கில் இடப் பட்டனர்.


     
சூர்யா சென் தூக்கில் இடப்பட்ட இடம்
இவர்களோடு கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கும், முதலில் மரண தண்டனைதான் விதிக்கப் பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. அப்பெண் அந்தமான சிறைக்கு அனுப்பப் பட்டார். அப்பொழுது அப்பெண்ணின் வயது 16.

      நண்பர்களே, இவர்தான், இப்பெண்தான் கல்பனா தத்.

     

சிட்டகாங்கில் பிறந்தவர். கல்கத்தா பெதூனே கல்லூரியில் பி.எஸ்ஸி., படித்துக் கொண்டிருந்தபோது, சூர்யா சென்னின் அறிமுகம் ஏற்பட்டது.


      பகலில் கல்லூரி, இரவில் புரட்சிப் பணி.

      படித்தவர் அல்லவா சமையல் செய்வதைப் போல், வீட்டிலேயே வெடிகுண்டு சமைப்பதைக் கற்றுத் தேறினார். இவர் வீட்டில் இருந்து, நாள்தோறும் வெடிகுண்டு தயாராகி, வெளியே வந்துகொண்டேயிருந்தது.

      இதோ, அந்தமான் சிறையில். அனைத்துக் கொடுமைகளையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். எனது தாய் நாட்டிற்காக, இதையும் ஏற்பேன்,  இதற்கு மேலும் இன்னல்கள் வந்தாலும் ஏற்பேன்.

    
மகாத்மா காந்தி, ஆண்ட்ரூஸ் ,தாகூர் சந்திப்பு
மகாத்மா காந்தி, அந்தமான் சிறைக்கே வந்து, கல்பனா தத்தைச் சந்தித்தார். அடுத்து கவர்னரைச் சந்தித்தார்.

கல்பனா தத்தை விடுதலை செய்யுங்கள்.

      தேவியக் கவி இரவீந்திரநாத் தாகூரும் கவர்னரைச் சந்தித்தார்.

கல்பனா தத்தை விடுதலை செய்யுங்கள்.

     யார் வேண்டி என்ன பயன்? அசைந்து கொடுக்கவில்லை ஆங்கிலேய அரசு. ஆறு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகே கல்பனா தத் விடுதலை செய்யப் பட்டார்.

கல்பனா தத்.
கல்பனா தத்
கல்பனா தத்

     சிட்டகாங்கின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் மந்திரச் சொல்லாய் மாறிப் போனார்.

     

67 கருத்துகள்:

  1. அறிந்து கொண்டேன். 1995 வரை வாழ்ந்திருக்கிறார். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. பாரதியார் காண விரும்பிய பெண் இப்படித்தான். நாட்டிற்காக தீரமாய்ப் போராடிய கல்பனா தத்தையும் சூர்யா சென்னையும் நினைக்கையில் மனம் சிலிர்க்கிறது. இதுவரை நானறியாத வரலாற்றின் ஒரு வீரம் நிரம்பிய பக்கத்தை கண்ணில் காட்டிய உங்களுக்கு இதயம் நிறைய நன்றி

    பதிலளிநீக்கு
  3. //முந்திய பிறவியில் நீ எனக்கு மகளாய் இருந்தாய் என்று எண்ணத் தோன்றுகிறது. //

    வாத்சல்யமான வரிகளுடன் கூடிய அழகிய கடிதம் பல்வேறு வீர வரலாறுகளைச் சொல்வதாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  4. பல்வேறு வீர வரலாறுகளைச் சொல்வது நன்றி

    பதிலளிநீக்கு
  5. கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம் என்று எழுதப்பட்ட இந்திய வரலாறு பல தியாகிகளை அப்படியே மறைத்து விடுகிறது. அப்படி இளைஞர்களின் க்ண்ணிலிரிந்து மறைக்கப்பட்ட கல்பனா தத்தின் தியாகத்தை பதிவு செய்தமையை பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா31 ஜூலை, 2014

      idhupondra vendiya/mukkiyamana padhivu(kalum) yeppo podap-pokireer thozhar?

      நீக்கு
    2. நன்றி நண்பரே
      நாட்டிற்காகத் தன்னலம் கருதாமல் பணியாற்றியவர்கள் அநேகர்
      வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விட்டனர்

      நீக்கு
  6. அருமையான வரலாற்றுப் பதிவு! பாராட்டுகள் நண்பரே! நல்லதொரு பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஐயா! கல்பனா தத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் ! இறக்கும் போதும் அவ்ர் கம்யூனிஸ்டாகவே இறந்தார் ! தகவலுக்காக .! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.

    அறிய முடியாத தகவலை தங்களின் கட்டுரை வாயில் அறிந்தேன் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல. த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. சுதந்திரப்போராட்டத்தின் வீர வரலாற்றை சிறப்பாக
    பதிவாக்கியமைக்குப் பாராட்டுக்கள். !

    பதிலளிநீக்கு
  10. அருமையான வரலாற்றுப் பதிவு! கல்பனாதத் பற்றி சிறிது தெரியும். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போராளி என்று! பல அறியாத தகவல்களை மிக அழகாக எழுதி உள்ளீர்கள். அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்தமைக்கு மனம் நிறைந்த நன்றி..

    வெங்காயமே சமையல் என்று கிடக்காமல் - வெடிகுண்டையும் சமைப்பதற்கு எத்தனை நெஞ்சுரம் வேண்டும்!..

    வீராங்கனை கல்பனா தத் சாகசங்களைச் செய்த போது பதினாறு வயது என்பது ஆனந்த அதிர்ச்சி!...

    மெய் சிலிர்க்கின்றது.. அந்த வீரமகளை எண்ணி கைகூப்புகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் போற்றி வணங்கத் தக்கவர்தான் கல்பனா தத்
      நன்றி ஐயா

      நீக்கு
  12. தெரிவித்தலுக்காக ........

    பதிலளிநீக்கு
  13. அழகிய ஒரு வரலாற்றுப் பக்கம். அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  14. மீண்டும் ஒரு அருமையான வரலாற்றுப் பதிவு. கல்பனா தத் பற்றி சிறிதளவே தெரியும். இன்று அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  15. சுதந்திரத்துக்கு பின்னால் இப்படியும் ஒருபெண்மணி இருந்திருக்கிறார் என்பதை அறியப்படுத்திய கரந்தை ஐயா அவர்களுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  16. நாட்டுக்காக பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தவர்களைப் பற்றி பள்ளி பாடப் புத்தகங்களில் மறைக்கப் படுகிறது .இளைய தலைமுறையினர்களுக்கு இந்த செய்திகள் தெரிந்தால் அல்லவா,நாட்டுப் பற்று வரும் ?
    வீரமிக்க இருவரைப் பற்றிய உங்கள் பதிவை போற்றுகிறேன் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  17. அருமையான வரலாற்றுப் பதிவு ஐயா!
    இப்படி இங்கே வந்து படித்திராதுவிடின் எனக்கு
    இவற்றை அறிந்திருக்க வாய்ப்பே கிடைத்திருக்காது.

    நல்ல பகிர்வு. நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  18. இப்படி நாட்டுக்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் எத்தனை பேர் !
    கல்பனாதத் அவர்களுக்கு வீர வணக்கம்.
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  19. எப்படி நன்றி சொல்ல...

    தியாக வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டிய கடமையை இத்தனை ஈர்க்கத் தக்க விதத்தில் சிலிர்ப்புறும் வண்ணம் சொல்லியிருக்கும் ஜெயகுமார் அவர்களுக்கு எனது பாராட்டுதல்கள்..

    காஸ்யபன் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பதில் முக்கியமானது. கம்யூனிஸ்ட் போராளி தோழர் கல்பனா தத். ப்ரீதி, அவருடன் போராடிய மற்றொரு போராளி, இவரது அன்புத் தோழி.

    கனவுக் கொடியில் கொய்ததல்ல சுதந்திரம் - பலர்
    தியாகம் செய்து பறித்துவந்த மலரிது - ஒரு
    தானமாகக் கிடைத்ததல்ல சுதந்திரம் - உயர்
    மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசிது

    என்கிற வரிகள் மாவீரன் பகத் சிங் குறித்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் இசைப்பாடலின் முத்தாய்ப்பு வரிகள்.எம் பி ஸ்ரீனிவாசன் அவர்கள் இசையமைத்து சேர்ந்திசை வரிசையில் இடம் பெற்ற இந்த வரிகள் எத்தனை பெருக்குகின்றன....

    விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா...தோழா...
    வீரர் உமக்கே வணக்கம் வணக்கம் தோழா.. தோழா..

    இந்திய நாட்டின் விடுதலைப்போரில் எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்
    இதயக் கனவுகள் ஈடேறும் சத்யம் தோழா...தோழா....
    -(விடுதலை வீராங்கனை கே பி ஜானகியம்மாள் வளர்ப்பு மகன் சங்கர் ராஜ் எழுதியது)


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      நீண்ட கருத்துரையிட்டதுடன், அலைபேசி வழி அழைத்துப் பேசியதும் மிக்க மகிழ்வினை அளித்துள்ளது ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே! நான் இந்த வரலாற்றை அறிந்திருக்கவில்லை, பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இந்தக் கதையை என் மகன்களிடம் சொல்லலாம் என்று ஆரம்பித்தால், என் பெரியவனுக்கு(9 வயது) சூர்யா சென்னை தெரிந்திருக்கிறது...ஏதோ புத்தகத்தில் படித்தானாம்..பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது சகோதரரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்காலத்துச் சிறுவர்கள் மிகவும் புத்திசாலிகள் சகோதரியாரே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு

  21. வணக்கம்!

    நாட்டின் விடிவெள்ளி! நன்மறத்தி கல்பனா
    பாட்டில் தொழுதேன் பணிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  22. நம்மால் இந்தக் காலத்தில் terrorists என்று கூறப்ப்டுபவர் பிற்காலத்தில் தியாகிகள் என்று போற்றப் படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆயுதம் ஏந்துபவர்களை நாம் இன்று எதிர்ப்பது ஒரு irony அல்லவா. ஏனோ வெகு ஜனக் கருத்துக்கு மாறாகச்சிந்திக்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  23. வரலாற்றுப் பெட்டகமே! வாழ்க நீவீர்!

    பதிலளிநீக்கு
  24. அறியாத தகவல்! அறிந்ததும் வியந்தேன்! அடிக்கடி இம்மாதிரி தலைவர்களின் வீரர்களின் வரலாறுகளை வெளியிடுவதற்கு மிக்க நன்றி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ப்லராய் அறியாமல் இருக்கிறோம்.கல்பனா தத்தின் வீரத்தை அறிந்தோம் . சிறப்பான வரலாற்றுத் தகவலை அறிய வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. மிக மிக அருமை.கல்பனா தத் பற்றி தெரிந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. உங்களது கட்டுரைகள் வாரத்திற்கு வாரம் மிளிர்கிறது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. ஐயா,

    இந்திய சுதந்திர போராட்டத்துக்கு பல முகங்கள் உண்டு ! அதனை அஹிம்சை வழியில் ஒன்றிணைத்த காந்தியை முன்னிறுத்திய‌ இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கற்பிக்கபடும் நேரத்தில் கல்பனா தத் போன்றவர்களின் தீரம் மறைக்கபடுவது சோகம்.

    உங்களின் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வராத பல வரலாற்று நாயக நாயகிகளை அறிகிறோம்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்பனா தத் போன்ற எண்ணற்ற தியாகிகளை மறந்தே போய்விட்டோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  29. சிறந்த வரலாற்றுப் பதிவு
    நாளைய தலைமுறை
    கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

    பதிலளிநீக்கு
  30. சிலரே இப்படிப் பிறக்கின்றார்கள் மடிகின்றார்கள். பதினாறு வயதிலேயே பி.எஸ்ஸி படித்திருக்கின்றார். அப்போதே கைது செய்யப்பட்டும் இருக்கின்றார். சுதந்திரம் பெற்றும் கொடுமைகளும் குறைவதை இல்லை. இன்னும் கல்பனா தத் போன்றவர்கள் பிறக்க வேண்டும். இன்னும் கொண்டு வாருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  31. இதுவரை இவரைப் பற்றி நான் அறியவில்லை. தாங்கள் வரலாற்றிற்கு செய்யும் காரியம் அளப்பரியது. தங்கள் முயற்சி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். ஒரு மிகச்சிறந்த போராட்ட வீரரைப் பற்றி இதுவரை தெரிந்திருக்கவில்லையே என்ற குறை மனதில் ஒரு மூலையில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  32. அரிய செய்திகளை அறியத் தந்தீர்கள் நண்பரே. அருமை.

    பதிலளிநீக்கு
  33. புரட்சிப் பெண் கல்பனாதத் பற்றிய பகிர்விற்கு நன்றி! கல்பனாதத் பற்றி NCBH புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகத்தில் சிறு குறிப்பாக படித்ததாக நினைவு.
    த.ம.12

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா01 ஆகஸ்ட், 2014

    இந்தப் பெயர் கேள்விப்படவில்லை.
    வீரத்தகவல்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  35. கல்பனா தத்தின் வரலாறு படிக்கையிலேயே சிலிர்கிறது அண்ணா!
    பொக்கிஷமாய் உங்கள் வலைப்பூ நாளும் பொலிவு பெறுகிறது!!

    பதிலளிநீக்கு
  36. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஒரு ஆவேசமான தைரியமான பெண்ணை பற்றிய இந்தப் பதிவு பலருக்கு கல்பனா தத் என்ற வீராங்கனையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களின் இந்தப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. கல்பனா
    ஒரு அற்புதமான் மனுசி...
    நல்ல பதிவு தோழர் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு