07 ஜூலை 2015

மகா கலைஞன்

     

ஆண்டு 1895. இலண்டன் மாநகர். அது ஒரு விழா அரங்கு. அந்த ஆறு வயதுச் சிறுவன், சுவற்றிற்கும், இருக்கைகளுக்கும் இடையேயான, நடை பாதையில், ஒண்டி ஒடுங்கி அமர்ந்திருக்கிறான்.

     கலையான முகம். ஆனாலும் குழி விழுந்த கண்கள். உணவினையே மறந்து போன வயிறு. இன்று எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, அச்சிறுவனின் முகத்தில் தெரிகிறது.


      காரணம். மேடையில் பாடிக்கொண்டிருப்பது அவனது தாய். நிச்சயம் நிகழ்ச்சி முடிந்ததும் ஏதேனும் சன்மானம் கிடைக்கும். அதைக் கொண்டு எப்படியும் இன்று உணவு உண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் அச்சிறுவன் அமர்ந்திருக்கிறான். அவனது தந்தையும் மேடை இசைக் கலைஞர்தான்.ஆனாலும் குடிப்பது என்பதே, அவரது முழுநேர அலுவலாகி பல மாதங்கள் ஆகிவிட்டது.

     மேடையில் பாடிப் பாடிச் சம்பாதிப்பது தாய், குடித்துக் குடித்தச் செலவழிப்பது தந்தை.

     சிறுவன், மேடையில் படிக் கொண்டிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். மலர்ந்த முகம். கண்களில்தான் எவ்வளவு சோகம். ஆனாலும் குரலில் இனிமை வழிந்தோடுகிறது. அரங்கே, பாடலினை வாய் பிளந்து ரசித்துக் கொண்டிருக்கிறது.

      தன் தாயையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவன், தன் தாயின் முகத்தில், திடீரென ஒரு வேதனை, ஒரு வலி பரவுவதை உணர்கிறான். அடுத்த சில நொடிகளில், குரலில் ஒரு வித நடுக்கம் ஊடுருவி பாட இயலாமல், தன் தாய் தவிப்பதைக் காண்கிறான்.

     சாப்பிட்டுத்தான் பல நாட்கள் ஆகிவிட்டதே. பாடுவதற்கு உடலில் ஏது வலிமை. பாட இயலாமல் தவிக்கிறார் அவர். கண்களில் கண்ணீர் வழிகிறது.

     அரங்கு முழுதும் நிரம்பியிருந்த கூட்டமோ, நிலைமை உணராது, கூச்சலிடத் தொடங்குகிறது. ஏன் நிறுத்தி விட்டாய்? பாடு, பாடு என வெறிக் கூச்சலிடுகிறது. பாட இயலாமல் அழுது கொண்டே மேடையை விட்டு ஓடுகிறார், அச்சிறுவனின் தாய்.

     சுவரோரத்தில் சுவரோடு சுவராக ஒண்டி ஒடுங்கி உட்கார்ந்திருந்த, அந்த ஆறு வயதுச் சிறுவனின் மனதில், அவனையும் அறியாமல் ஓர் கோபம், ஓர் ஆற்றாமை, ஓர் ஆத்திரம், தன் வாழ்வின் மேல், தன் தந்தையின் மேல், மெதுவாய் மிக மெதுவாய், சிறு பொறியாய் தோன்றி, பெரு நெருப்பாய் கொழுந்து விட்டு எரியத் தொடங்குகிறது.

     தளர்ந்திருந்த அச்சிறுவனின் உடல், மெல்ல மெல்ல இறுகுகிறது. மெதுவாய் எழுந்தவன், அடுத்த நொடி வேகமாய், மிக வேகமாய், மேடையை நோக்கி ஓடுகிறான்.

     இரண்டிரண்டாய் படிகளைத் தாவி ஏறி, மூச்சிறைக்க ஒலிப் பெருக்கியின் முன் நின்றான்.

     கூச்சலிட்ட கூட்டம், சிறுவனை வியப்போடு பார்க்கிறது. யார் இந்த சிறுவன்? ஒலிப் பெருக்கியின் உயரம் கூட இல்லாத, இச்சிறுவனுக்கு மேடையில் என்ன வேலை?

     சிறிது சிறிதாய் கூச்சல் குறைகிறது. சிறுவன் மெதுவாய், மிக மெதுவாய், இனிமையாய், மிக இனிமையாய் பாடத் தொடங்குகிறான். நினைவு தெரிந்த நாள் முதல், தன் தாய் கற்றுக் கொடுத்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறான்.

    தன் பிஞ்சுக் கைகளை, தன் மழலைக் கால்களை ஆட்டியவாரே, நடனமாடிக் கொண்டே சிறுவன் பாடுகிறான். சிறுவன் பாடப் பாட, சிறுவன் ஆட ஆட, அரங்கே வியந்து போனது. அனைவரும் மலைத்துத்தான் போனார்கள்.

     சிறு பொடியன் என்ன ஆட்டம் ஆடுகிறான், என்ன பாட்டு பாடுகிறான்.

     இதுவரை கேட்டறியாத ஓர் குரல், இதுவரை பார்த்தறியாத ஓர் நடனம்.

     சிறிது நேரத்திற்கு முன் கூச்சலிட்டவர்கள், மகிழ்ச்சியில் கை தட்டத் தொடங்குகிறார்கள். தங்களையும் அறியாமல், தங்கள் பைகளில் இருந்த சில்லறைக் காசுகளை மேடையை நோக்கி வீசி பரவசமடைகிறார்கள்.

     மேடையில் ஆடிப் பாடிக் கொண்டிருந்த சிறுவனின் மேல் காசு மழை.

     அடுத்த நொடி, அச்சிறுவன் பாடலை நிறுத்தி விட்டு, மேடை முழுவதும் ஓடி ஓடி சில்லறைக் காசுகளைப் பொறுக்கத் தொடங்குகிறான். இரு கைகள் போதவில்லை. நமக்கு முன் வேறு யாராவது காசுகளை எடுத்து விட்டால் என்ன செய்வது?

      மிகுந்த பரபரப்புடன் காசுகளைப் பொறுக்கி, தன் சட்டைப் பையிலும், கால் சட்டைப் பையிலும் நிரப்பத் தொடங்கினான். இன்று வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட வேண்டும்.

       அரங்கில் நிரம்பியிருந்த கூட்டம், மீண்டும் கூச்சலிடத் தொடங்குகிறது. ஆடு, ஆடு, பாடு, பாடு என கூச்சலிடத் தொடங்குகிறது.

      காசுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த சிறுவன், ஒலிப் பெருக்கியின் முன் வந்து நின்று, அமைதியாகக் கூறினான்.

      கொஞ்சம் பொறுங்கள். சில்லறைகளைப் பொறுக்கிய பின் பாடுகிறேன். என்னால் ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளைச் செய்ய முடியாது.

     கூட்டமே வாய் விட்டு சிரித்தது.

     நண்பர்களே, இச்சிறுவன் யார் தெரியுமா?

     இவர்தான், பின்நாளில், உலக மக்களை எல்லாம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த மகா கலைஞன்.

      ஊமைப் படங்கள் மட்டுமே, வெளி வந்த அக்கால கட்டத்தில், தன் உடல் அசைவுகளால், செய்கைகளால், உலகையே வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தவர்.




சார்ளி சாப்ளின்



36 கருத்துகள்:

  1. தான் அழுதாலும் மற்றவரை சிரிக்க்வைத்தவன் அல்லவா.? சொன்ன விதம் அருமை

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
    திறமை இருக்கு மறந்து விடாதே

    என்னும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிக்கு இலக்கியமாய் வாழ்ந்து
    காட்டிய மாமனிதருக்கு இப்பதிவு ஒரு மகத்தான புகழஞ்சலி.

    பதிலளிநீக்கு
  4. மகா கலைஞர்களின் பின்பாய் கதை ஒன்று கனமாய் இருக்கிறதுதான்,ஆனாலும் அவர்கள் ஜெயிப்பதை யாராலும் தடுத்துவிட முடிவதில்லை,காலத்தின் அடையாளமாய் அவர்கள் நிற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. சார்லி சாப்ளின் எனும் மகா கலைஞனின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் இருந்ததை இன்று தான் அறிகின்றேன்..

    பதிலளிநீக்கு
  6. ஒரு மகா கலைஞர்... எல்லாரையும் சிரிக்க வைத்தவர்... அவரது வாழ்வின் சோகத்தினை எல்லாரும் அறியும்படி பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் அறிமுகம் செய்வது ஒரு திரைப்படத்தின் திரைக்கதை போல அருமை..

    பதிலளிநீக்கு

  8. சிரிப்புக்கு வலைப் பதிவின் மூலம் சிவப்பு கம்பள விரிப்பு
    விரித்துள்ளீர் கரந்தையாரே!
    சார்ளி சாப்ளின் பதிவு நெகிழ வைத்தது! நன்றி!
    த ம2
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    அறிய முடியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் சொல்லும் விதமே அழகு ஐயா... மெகா கலைஞன்...

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான கலைஞனைப் பற்றிய தகவல்கள் சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  12. மிகசிறந்த உலக கலைஞ்சர் பற்றிய இடுகை ...பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு. சார்ளி சாப்ளின் நடிப்பை ரசிகாதவர்கள் கிடையாது. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. wow அடேங்கப்பா அவரா இது, எனக்கு கையும் ஓடல காலும் ஓடல கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. அதை எவ்வளவு அழகாக கூறி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி அவர் பற்றி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  15. சார்லி சாப்ளின் பற்றிக் கேள்விப்படாததகவல். பகிர்வுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

    பதிலளிநீக்கு
  16. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கலையுலகம் பெருமை கொள்ளும் மனிதரைப் பற்றி.

    பதிலளிநீக்கு
  17. I read many times of this story;even though it is very new always.

    பதிலளிநீக்கு
  18. அறிந்த செய்தியைச் சுவையுடன் கொடுத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  19. பதிவின் தொடக்க வரிகள் கண்ணீர் வரவழைத்தது.
    சார்லி சாப்லின் பற்றிய சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோ,
    தாங்கள் சொல்லும் விதமே தனி,
    அருமை
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. தெரியாத வரலாறு! தெரிந்தது உங்களால்!

    பதிலளிநீக்கு
  22. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    ஒவ்வொரு கலைஞனின் வாழ்க்கையிலும் உள்ள துயரத்தினை நம்மில் பலரும் உணர்வதில்லை. சார்லி சாப்ளின் அவர்களின் சோக செய்தியினை நெற்றி பொட்டில் அறைந்தது போல சொல்கிறது தங்கள் பதிவு. கலங்கிய கண்களுடன் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. மிக மிக அருமையான கலைஞர்! எல்லா கலைஞர்களுக்கும் ஏதேனும் ஒரு சோகம் இருக்குமோ...அதுவும் நகைச்சுவைக் கலைஞர்களின் வாழ்வில்? மிஸ்டர் பீனாக நடித்த ரோவர் அட்கின்ஸன் அவர்களின் வாழ்விலும் சோகம் உண்டு என்று கேட்டதுண்டு...ஆனால் இவை யாவும் அவர்களைக் கட்டிப் போடுவதில்லை. வாழ்க்கையைல் வெற்றி கண்டு தங்களை இந்த உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள்...

    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா08 ஜூலை, 2015

    இந்தத் தகவல் பதிதாக உள்ளது.
    வேறு தகவல்கள் வாசித்துள்ளேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. படிப்பினை தரும் பதிவை தந்தமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  26. இவரது சுயசரிதையைப் படித்துள்ளேன். சோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு நம்மை சிரிக்கவைத்தவர்.

    பதிலளிநீக்கு
  27. அற்புதமான கலைஞர். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அந்த கலைஞனைப் பற்றி வெகு அழகாக சுவைபட பதிவு எழுதியுள்ளீர்கள். அருமை நண்பரே!
    த ம 14

    பதிலளிநீக்கு
  28. தங்களின் மொழிநடை அசாத்தியம்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களுக்கு தந்து செல்வம் அத்துணையும் இழந்தவர்.
    நல்ல பதிவு அய்யா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. ஏற்கெனவே கேள்விப்பட்ட கதையென்றாலும் உங்கள் எழுத்து நன்கு ரசிக்கும் படியாக உள்ளது..பக்கத்தில் இருந்து பார்ப்பது போல ஒர் உணர்வு எழுத்தாக்கம். நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு